எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 செப்டம்பர், 2009

முருங்கை மரம்

காலையின் பசுமை வணக்கம்...
காக்கைகளின் ஊஞ்சல்...
வண்டுகளின் சாமகானம்...

கிளைக்கரங்களால் தழுவுவது
போல் ஆரவார வரவேற்பு..,
பூக்களெனும் புன்னகையும்,
காய்கள் எனும் கனிவும் காட்டி..

இலைகளும் காய்களும்
இரத்த விருத்தி புரத விருத்தி..
பூக்களையும் புசிப்போம்
உதாசீனமும் செய்வோம்..

வாய்க்கு உணவாகலாம்..
வாசலில் மட்டும் ஆகாது...
பசுமைக்கும் உண்டோ பகை...

வேதாளம் உண்டோ
வேண்டிய மட்டும் தேடினேன்..
தட்டுப்படவேயில்லை....
எந்த வழியாகவும்
மூதேவியும் வரவில்லை...

காற்றின் அசைவில்
தனக்குத்தானே தாலாட்டலும்,
தலையாட்டலுமாய்...

நடுஇரவில் விழிக்கும்போதும்,
ஜன்னல்வழி நிலவொளியில்,
ஆதரவாய் கரமசைத்து...

பறித்தாலும் உடைத்தாலும்
வெட்டினாலும் மீண்டும்
எழுந்து கம்பீரமாய்...
எல்லாவற்றுடனும் சமரசம்...

கிடைத்த இடத்தில்
வேர் பாவி..
தண்ணீரைத்தானே
கண்டடைந்து...
சூல்கொண்டு ப்ரசவித்து...

மனிதருக்கும்
மாக்களுக்கும் உணவாகி...
வசந்த ருதுவில்
புஷ்பித்துக் காயாகி..
இலையுதிர் காலத்திலும்
இலையாவது ஈந்து...

உருவிக்கொள்ளும்
மனிதக்கரத்துக்கும் உரமாகி..
ஒற்றைக்கால் தவமாகி..

கூடவே வசிக்கின்ற
ஓர் உயிராய்...
இன்பத்தில் கூத்தாடி
துன்பத்தில் அமைதியாய்
கன்னம் வருடி...

உபயோகித்து வெறுத்தாலும்..,
ஒறுத்தாரைப் பொறுத்து..,
உன் போல் தன்னையே பிறர்க்கீந்து
வாழ வரம் கொடு...!!!

3 கருத்துகள்:

  1. ஆகா..

    முருங்கைக்கு இவ்வளவு அழகாய் ஒரு கவிதையா...

    வாழ்க

    பதிலளிநீக்கு
  2. நன்றி கதிர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...