எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

டேபிள் ரோஸ்

என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....

நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

வேப்பம் பூ

சூடிக்கொள்பவன் இல்லாமல்
மழையில் கரைந்து
நிலவு....

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

புதன், 28 அக்டோபர், 2009

போகன் வில்லாப் பூக்கள்

மாண்டிஸோரியின் குடில்களில்
வளைந்து பரவி இருந்தது
போகன்வில்லா....

தினம் ஒரு பூப்பறித்து
உதட்டில் வைத்துத் தேய்ப்போம்
ரைம்ஸில் வரும் ரோஸி லிப்ஸ்
ஆகுமாவென்று....

வியாழன், 22 அக்டோபர், 2009

நீலோத்பவம்

பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...

யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...

செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறிஞ்சிப் பூ

ஊட்டியிலும் கொடையிலும்
ஏற்காட்டிலும் இடுக்கியின்
ஸ்டெர்லிங்கிலும்....

பனிதூவிய பாலேரூமில்
பில்லியர்ட்ஸ் டேபிளில்
நீ மும்முரமாய்....

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தெட்சிப்பூ [இட்லிப் பூ]

அட்லாண்டிஸின் பனைமரத்தில்
காட்டர்பில்லர் போல்
ஊர்ந்த மோனோவில்....

அசைவற்ற கடல் சார்ந்த
வீடுகளின் ஊடாக
நாம் பயணித்தோம்....

வாட்டர் தீம் பார்க்குகளில்
சிவந்த தெட்சிப் பூக்களாய்
வெளிநாட்டு மங்கையர்....

சனி, 17 அக்டோபர், 2009

மத்தாப்பூ

'""என் வலைத்தளத்துக்கு வருகை தந்து என்னை
ஊக்குவித்தும் தவறுகளைத் திருத்தியும்
ஆலோசனைகள் கூறியும் ஆற்றுப் படுத்தும்
அன்பு உள்ளத்தினர் அனைவருக்கும் என் மனம்
கனிந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ...... '""

தீப ஒளித்திருநாளில்
உள்ளமெல்லாம் பெருந்தீபம்
மகர ஜோதியும்
அண்ணாமலைஜோதியுமாய் ...

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பவள மல்லி

ரேஸ்கோர்ஸின்
கவர்மெண்ட் காலேஜ்
வாசலில்...

நண்பர்களுடன்
கடலைகளைக்
கிண்டல் செய்து
கொண்டிருந்தேன்....

திங்கள், 12 அக்டோபர், 2009

லில்லிப்பூ

ப்ளூ க்ரீன் அல்கே
போல் தண்ணீருக்குள்...
உடல் மறைத்த
லில்லிப் பூவாய்...

வெண்மையாய்க் குவிந்து
மென்விரிந்த முகத்துடன்...
கருப்புச் சிப்பியில்
வெண்முத்தாய்...

சனி, 10 அக்டோபர், 2009

பூசணிப் பூ

தீப்பெட்டித் தொழிற்சாலையின்
வேன்களின் அதிகாலைப்
பொறுக்குதல்களிலும்...

அந்தி மாலை
வீசியெறிதல்களிலும்
குழந்தமையைத்
தொலைத்த நீ ...

வியாழன், 8 அக்டோபர், 2009

எள்ளுப் பூ

காற்றின் திசையில்
தெறித்து விழுந்த
கறுப்பு விதையில்...

வெடித்துக் கிளைத்து
வளர்ந்த பசுமை இலைகள் ..
புல் பூண்டு கூட
களையத்தயங்கும்
என் முன் ...

புதன், 7 அக்டோபர், 2009

துலிப் பூக்கள்

ரஷிதியாவிலிருந்து
எமிரேட் மால்வரைக்கும்
மெட்ரோவில் வந்தேன்...
உன்னைப் பார்க்க...

ஷூமுதல் தலை வரை
சிக்கென உடை அணிந்த
பூவாய் நீ...

திங்கள், 5 அக்டோபர், 2009

கோழிக்கொண்டைப் பூ

மீனாக்ஷி திருக்கல்யாணம்
முடிந்து அழகர் தேனாற்றில்
இறங்கிக் கொண்டிருந்தார்...

சிவப்பு வெல்வெட்
செண்டுகளைச் சுற்றிக்
கட்டியதான கோழிக்கொண்டை
மாலை அணிந்து....

வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆர்க்கிட்

என் முதல்
விமான பயணத்தில்
ஜிலீரென்று குளிர்வித்த
ஆர்க்கிட் நீ...

அநேக இதழ்களால்
நீ சிந்திய
அழகுப்புன்னகையில்
வசமிழந்தேன்...
Related Posts Plugin for WordPress, Blogger...