எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அத்திப்பூ

தொழில் நுணுக்கத்தோடு
ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
நலமா .? எப்படி இருக்கிறீர்கள் .?.உங்கள் அன்பு
தோய்ந்து நானும் நலம் அம்மா...

உங்கள் எழுத்துப்பயணத்தில் எங்கேனும் இளைப்
பாற வேண்டுமெனில் எங்கள் இதயம் இருக்கிறது
அம்மா.. அருவி போல அணைத்து ஓடி கூழாங்
கற்களாய்க்கிடந்த எங்களை ( நான்., உமாமகேஸ்.,
சிகப்பி., இன்னும் பலர்) சாளக்கிராமமாய்
மாற்றினீர்கள்...கனவுச் சிறகு பொருத்தி திசை
யற்றுத்திரிந்த பறவைகளான எங்களை புலம்
பெயர் பறவைகளாக்கி பெயர் பெறும் பறவை
களாக்கினீர்கள்..நிமிர்ந்த நன்னடை., நேர்கொண்ட
பார்வை.,கம்பீரக்குரலால் எங்களை ஆட்சி செய்த
பேரரசி ...!!!குறைவொன்றுமில்லை அம்மா.
உங்களின் நிறைவான அன்பில் நான் ...!!!
.

புதன், 24 பிப்ரவரி, 2010

நாராயணன் O M S

சில பேரை நாம் சந்திக்கும் போது தெரியாது .,
இவர்கள் நம் வாழ்வில் சில நாட்கள் உடனிருந்து
உதவி செய்து நீங்காது நினைவிலிருப்பார்
களென்பது. .அவர்களுள் ஒருவர் திரு நாராயணன்
அவர்கள்.. நடைப்பயணமாக 36 ஆண்டுகள் சென்று
வந்த பின் தன்னுடைய அனுபவமும் வழிகாட்டு
தலும் பிறருக்கு உதவட்டுமென சேவை செய்பவர்
களுள் இவரும் ஒருவர். "ஓம் சேவகா சர்வீஸ்"
என்பது இவரது சேவை அமைப்பு..
இவர் ஏற்பாடு செய்த வேனில் எங்கள் பொருட்
களை எல்லாம் எடுத்து ஒரு ட்ரைவர் .,ஒரு
உதவியாளர் உடன் வந்தார். கிளம்பும்போது
நம்முடைய படுக்கை .,உடைகள்., பை போன்ற
சாமான்களை ஏற்றிவிட வேண்டும்.. கையில்
ஒரு ஜோல்னா பை போதும்..

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

என்னவளே

என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

உன் புன்னகையையும் பார்வையையும்
தரையில் வீசி மிதித்து
காணாதது போல் புறந்திரும்பி..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..

சனி, 20 பிப்ரவரி, 2010

ஒற்றைப்பூ

கூடி வாழ்கிறோம் ..
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொகுப்பு



இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


வியாழன், 18 பிப்ரவரி, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ... ஒரு வாசகியின் பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சங்கீதக்கடை

சகோதரிகள் வருகிறார்கள்
மாதமொருமுறை அருகிலிருந்தால்
வருடமொருமுறை தொலைவிலிருந்தால்..
சங்கீதக்கடையாகிவிடுகிறது வீடு...
சந்தோஷத்தாலும் சத்தத்தாலும்..
நிலாவில் பிசைந்த சோற்று உருண்டைகள்
கிடைக்கிறது குழந்தைகளுக்கு கதைகளுடன்...
ஆகும் ஆகாது என்ற
கணக்கில்லாமல் எல்லாம் உண்டு...
புது விளையாட்டுத்தோழியராய்..
எங்கும் இரைச்சலும் பழங்கதைகளும்..
புது சமையலோ .,சந்தோஷமான பேச்சோ
அள்ளி வீசுகிறார்கள் சகோதரன் மேல் சந்தனமாய்..
ஒருவருக்கொருவர் போட்டியில்
சகடைச்சத்தமும் கீச் கீச்சென்று ...
மனைவி கூட போட்டியாய்
அன்பு செலுத்துகிறாள் ..!!!
சீர் பெற்றுச்செல்வது போல்
சீரோடும் செய்கிறார்கள் ..
உவப்பாய் பார்த்துப் பார்த்து
வகை தொகையாய்...
பேருந்து நிறுத்தமோ புகைவண்டித்தடமோ
கொண்டு செல்லவிடும்போது
கணவனை குழந்தைகளைப்பற்றிய
ஆதங்கம் கோபத்தைப் பகிர்ந்து..
சிறுவயது பள்ளிக் கதைகள் பேசி..
வரவும் செலவுமான வாழ்வில்
பற்று வரவு இது ...
வாழ்நாள் முழுமைக்குமான
அன்புத்துலாபாரம் ...!!!
கையசைத்து பேருந்திலோ புகைவண்டியிலோ
அவர்கள் ஏற ஓடும்போது
வண்ணத்துபூச்சிகளின் இறகசைப்பாய்
நிரம்பித்ததும்புகிறது மனது
அடுத்த சத்தத்துக்காய் ஏங்கி...!!!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

லைம் ட்ரீயும் டைரிக்குறிப்பும்

இன்றும் அதே டிஸ்கவரி புக் ஹவுஸ் ..அதே
புத்துணர்ச்சியோடு சகவலைப்பதிவர்களும்.,
நண்பர்களும் .,சகோதரர்களும்....!!!

கேபிள் சங்கர் ஜி மற்றும் பரிசல்காரனின் மலர்ந்த
புன்னகையோடு ஆரம்பித்தது விழா.. சகோதரர்
அப்துல்லாவைத்தான் முதன்முதல் பார்த்தேன்..
அடையாளம் கண்டு கொண்டேன்.. என் சின்ன
மகனுடன் சென்று இறங்கியபோதுதான் சீப் கெஸ்ட்
பிரமிட் நடரஜன் அவர்கள் வந்தார்கள்.. நேரமாகி
விட்டதோ என்று நினைத்து போக நிம்மதி
ஆகிவிட்டது ..போனமுறை நடந்த வெளீயீட்டு
விழா ஹாலின் மேல் மாடியில்.. இன்றைய
வெளீயீடு நடந்தது.. நல்ல கூட்டம்.. ஒரே
காமிரா வெளிச்சம்..

சனி, 13 பிப்ரவரி, 2010

ஒரு மரம் ஒரு நதி

ஒரு நந்தவனத்தில் பெயர்த்து நட்ட மரமாய்
கரையோரம் அவள்...
என் அழுக்குகளையும் குப்பைகளையும்
சுழற்றிக்கொண்டு அவள்
வேர்க்காலைத்தழுவியபடி நான்...
சிலசமயம் அவளும் என் மேல்
குப்பை போடுவாள்., இலையாய்.,
கிளையாய்., பூவாய்., காயாய் .,

வெய்யில் நேரம் தலை காய
வைக்கும் ராட்சசியாய்...
சாயங்காலம் பறவைச்சத்தத்துடன்
சலசலப்பாய்ப் பேசுவாள்...
நானும் சலசலப்போடு
பதில் சொல்லுவேன்...

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பொம்மை

சாவி கொடுத்தால்
தேன்கூட்டில் கைவிட்டுத்
தேன் உண்ணும்
கரடி பொம்மை ஒன்றை
மலயாவிலிருந்து தாத்தா
வாங்கி வந்து இருந்தார்..
பறக்கும் தட்டும்..
விமானமும் கூட..
குழந்தைகள் பொம்மைகளை
விளையாடுவது போல நானும்
ஒன்றை மாற்றி ஒன்றைத்தூக்கி
மற்றதை கீழ் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தேன்...

புதன், 10 பிப்ரவரி, 2010

சொல்லிக்கொள்வது

ஒரு பெண்ணின் வாழ்வில் சொல்லிக் கொள்வது
என்பது திருமணத்தில் ஆரம்பமாகிறது.. எங்கள்
வழக்கில் கும்பிட்டுக் கட்டிக் கொள்வது என்பார்கள்.
அதன்பின் சொல்லிக் கொள்வது ..உற்றார் .,
உறவினர் .,நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு செல்லும் போது புது வாழ்வும்
ஆரம்பமாகி விடும் .. பின்பு முதல்வீடு., மறுவீடு.,
பின்பு சூலுற்ற ஐந்தாம் மாதம் தீர்த்தமாடும் போது
மகப்பேறுக்கு., பிரசுபத்துக்குப்பின் என எப்பவும்
யாரிடமாவது பெண்கள் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது ...இந்தப் பாத
யாத்திரையின்போதும் அது தன்னையறியாமல்
நிகழ்ந்தது ...பழக்க தோஷமாய் இருக்கலாம்..

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சில்லு... ச்சில்... ஜில்...!!!

சில்லாய்க் கிடந்தேன்
புல் முளைத்து... சிலையாய்..
ரூப்கண்வர் அல்ல...
அக்கினியின் அவிர்ப்பாகமாய்...
அரூபமாய் மாற ...
உனக்கு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமா..?
வாழ்வும் .,உயிரும் ...விதவை ....

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஜில்... ச்சில்...சில்லு

எனக்கும் வேண்டும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..

எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ந(டை)ட ராஜா நட

உபவாசமும் பாதயாத்திரையும் ஒருவரின் ஆன்மீகப்
பாதையில் மட்டுமல்ல.. இகலோக வாழ்வுக்கும்
உகந்தது..

முதல்முறை பாதயாத்திரை செல்பவர்களுக்கு
சில அறிவுரைகள்
*வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்தால் காரில்.,
வண்டியில் அல்லது ஆட்டோவில் தான்
கால்வைப்பேன் என்பவர்கள்...
*வீட்டுக்குள்ளே கூட ஹவாய்., பாத்ரூமுக்கு
ஒரு ஹவாய்., தோட்டத்துக்கு ஒரு செருப்பு .,
ட்ரெட்மில்லுக்கு ஷூ., பார்ட்டிக்கு கோலாப்புரி.,
கட்ஷூ .,ஸ்லிப் இன் என்று ஏழு செருப்பு
வைத்து இருப்பவர்கள்...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சுயமும் சுயம் போன்ற ஒன்றும்

இறுக்கச்சாத்திய கதவிற்குள்ளும்
முழுக்க முளைத்த தூசி
அப்பிக் கிடக்க...
துடைக்கத் துடைக்க அழுக்கு..
செந்தாமரையோ., வெண்டாமரையோ.,
கதவின் மரைக்குள்ளும்
மரை கழலும் நிலையில்...
ஹிஸ்டீரியாவா .,ஃபிட்ஸா .,
செலக்டிவ் அம்னீஷியாவா .,
அல்ஸீமர் வேண்டும் வெற்றுப் பிடிவாதம்..

புதன், 3 பிப்ரவரி, 2010

ராமனின் மனைவி

முகமற்றவள் ..மண்ணில் பிறந்தவள்..
மண்ணால் விழுங்கப்பட...
சிவதனுசை நீ எடுத்த நொடி..
உன் கைவசம் முடிவு.. என் வாழ்வு..
அம்புறாத்துணியோடுதான் பார்த்தேன்..
நானே எய்யப்படுவது அறியாமல்...

வனவாசத்திலும் மரவுரியுடன்
உன் பின்னே சுற்றித்திரிய விழைவில்..
உன் மனவாசத்தில் இருந்தாலும்
என்னைத் தவிர்த்துச் செல்லும் விழைவில் நீ..

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் நண்பன்

அவன் அம்மாவின் செல்லக் கடைக்குட்டி..
அவ்வப்போது கதைப்பதும்., அவளின்ட மடியில்
படுப்பதுவும் அலுக்காத ஒன்று...
வளர்ந்தகுழந்தைகளுக்குத் தகப்பன்... வளராமல்..
பால்யத்தில்... கேட்டால்....
எப்போதும் எனக்கு 23 என்பான்...
அவன் கண்ணுக்குள்ளும்.. ஆகிருதிக்குள்ளும் ..
அவ்வப்போது பதுங்கு குழிகளும்., ஷெல்களும்.,
கண்ணிவெடிகளும்., அம்மாவுக்கான பாசமும்
படபடப்புடன்....
Related Posts Plugin for WordPress, Blogger...