எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 மார்ச், 2010

கம்பர் விழாவில் தினமணி ஆசிரியர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாடும்” என்றால் கம்பனை சிறுவயது முதல் நேசிக்கும் ஒருவரின் வாக்குமூலம் கேளுங்கள் .,”கம்பர் விழாவுக்குப் போவதற்காக புத்தகத்தை எடைக்குப் போட்டுவிட்டு என். சி. சி .காம்ப் போவதாக சொல்லிவிட்டு கம்பர் விழா பார்க்க வந்ததாக சொன்னவர் வேறு யாரும் அல்லர் .. தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தேடிப் போக வேண்டும் என்ற உந்துதல் பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டுவிட்டதால் .....இங்கும் (அதாவது கம்பர் விழாவிலும்.). இப்போதும் இருப்பதாக சொன்னவர் ...தமிழை இன்றும் நேசித்துக் கொண்டிருக்கும்., நமது தினமணியின் ஆசிரியர் ..திரு வைத்யநாதன் அவர்கள் ..

இருப்பு என்பது வலை

நிலவு பொழிவது போல் ஆளை விழுங்க.,
மழை பொழிவது போல் தழுவிக்கொள்ள.,
சட்டை உரித்த பாம்பாய் சுயம் உரிந்து கிடக்க.,
பச்சோந்தி போல சேர்ந்த வர்ணம் அடைந்தேன்..

அன்றிலைப்போல் அல்ல., கவரிமானும் அல்ல.,
அன்றன்று அடிக்கும் அலையில் கரை கடந்தேன்..
நிலையாமை யாக்கை அறிவேன்..
நிலையற்ற நிலை அடைந்தேன்..

திங்கள், 29 மார்ச், 2010

காரைக்குடியில் கம்பன் விழா

கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க ..!!
கன்னித் தமிழ் வாழ்க..!!!

இந்த ஓங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் கம்பன்
அடிப்பொடி சா .கணேசன் செட்டியார் அவர்கள்...

தமிழை ஊனாய் உயிராய் உணர்வாய் உணவாய்க்
கருதும் எவரும் கம்பனில் தோயாதவரல்லர்..
காரைக்குடியில் 72 ஆவது கம்பன் விழா கடந்த
சனிக்கிழமை ஆரம்பித்தது.. மகத் திருநாளில்..
கவிக்கோ அவர்களின் தலைமையில்...
நேற்று பூரத்திருநாளில் ”கம்பனில் கணியன்” என்று
திரு சோ. சத்தியசீலன் அவர்களின் உரையும்.,

வியாழன், 25 மார்ச், 2010

அன்பு அனைத்தும் ஆக்கும்

உன் மூச்சுக் காற்றும் உருவமும் உலவும் வீட்டில்
நானும் அருவமாய் உள்நுழைந்து
உன் உணர்வையெல்லாம் சுவாசித்து
எழுத்துருவில் என்னையும் நீ உணர.,
மயிலைப் போலக் கண்களும்
முயலைப் போலக் கன்னங்களும்
கலைந்த தலையழகும் எடுப்பான நாசியும்
வடிவான மோவாயும் கரங்களில் பதித்து
குழந்தையாய் அமர்ந்து இருப்பாய்..

செவ்வாய், 23 மார்ச், 2010

ஈசல்களும் இறகுகளும்

மழை பொழிந்த மாலை
மனம் குழம்பும் வேளை
மொழி விளங்காத பாட்டு
இனம் புரியாது சுற்றுவதாய் ..

பாய்விரித்து அமர்ந்து ரசித்த
கூத்தும் கோமாளிகளும்
ஊர்த்திருவிழாவில் ..

வெப்பமும் புழுதியும்
புழுக்கமும் நிறைந்த
கருவேல நிழல்..

திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீர்,,! தண்ணீர்..!!

நா வரண்டு விட்டது
நான் பாலையாகிக் கொண்டு..
உப்புறைந்த மண் அள்ளிக் குடியுங்கள்
மேகங்கள் கூட இல்லா வாழ்வில்...

கிணற்றையும்., குளத்தையும் .,
நதியையும்., ஏரியையும் முடித்து...
இப்போது கடலையும் தூர்த்து...

சோதனைச் சாலையில்
உருவாக்க முடியுமா ..,
நதிக்கரையோர நாகரீகம்...?

சனி, 20 மார்ச், 2010

சந்திர காந்தக்கல்

சிரிக்கிறாய்..
கிறுக்காகிறேன்...!
என் சந்தோஷத்
தின்பண்டமே ...!!

சர்க்கரைப் பாகாய்
சிரிப்புறைந்த
உன் புகைப்படத்தில்
சாரிசாரியாய் எறும்புகள்...

வெள்ளி, 19 மார்ச், 2010

அமுதே..! தமிழே..!!எனதுயிரே..!!!

அதென்ன கையில் பூங்கொத்து..?
வாசலில் நின்று கண்ணில் மிரண்டு
உடையைத் திருகியது போதும்.. உள்ளே வா..
என் வீடு எப்போதும் உனக்காய்...
எப்போதோ பார்த்தோம்...
எப்படியெல்லாம் பழகினோம்..
ஏதும் நினைவிலில்லை.,
நீ உன் விட்டை பூட்டிவிட்டு அல்ல..
புதைத்துவிட்டுச் சென்ற அன்று...

வியாழன், 18 மார்ச், 2010

ஐந்தொகை ..2

எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...

அழகான பெண்ணை., பொறாமைக் கண்கள்
எள்ளல் பார்வையில் அலங்கோலமாக்கி..

எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...

புதன், 17 மார்ச், 2010

இனி இது சேரி இல்லை (A SLUM NO MORE)


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி.:- வாராவாரம் நடக்கும் அந்த மீட்டிங்கில் புதுப் புத்தகங்கள்மட்டுமல்ல பழைய புத்தகங்களின் விமர்சனமும்நடை பெறுவதால் விரும்புவோர் கலந்து கொள்ளலாம் .....அனுமதி இலவசம்....
நன்றி:-எனக்கு மேலதிக விபரங்களைத்தந்துதவிய திரு .வெற்றி விடியல் ஸ்ரீநிவாசனுக்கும் திரு .சேவாலயா முரளிக்கும் நன்றி

வெளிவந்து இருக்கு ..

திங்கள், 15 மார்ச், 2010

சொற்கப்பல் ..தமிழ் அலை ..டிஸ்கவரி

சொற்கப்பல்
-----------------
சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....

சனி, 13 மார்ச், 2010

காயின் ருசி

கரித்துக் கொட்டிய
துப்புரவுப் பெண்
வாரிச் செல்கிறாள்,
இலைத் துகள்
இல்லாத நடைபாதையை...

ஒடித்துப் போட்ட
பக்கத்து பால்கனிக்காரர்கள்
முகத்தில் இடிக்காது
என்ற நிம்மதியில்...

முறித்துப் போட்ட
கீழ்வீட்டுப் பெண்
காயும் துணிகளில்
பூச்சி விழுவதாய்...

வெள்ளி, 12 மார்ச், 2010

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள் ...

அன்பு சகோதரி திவ்யாஹரியின் அழைப்புக்
கிணங்க இந்த இடுகை ..

நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?

புதன், 10 மார்ச், 2010

மருதாணிசெடிக்கு

இதுவும் 1986 கவிதை கோபியை சேர்ந்த நண்பர்
பா.மா. மனோகரன் நடத்திய பூபாளம் இதழுக்காக
எழுதியது ..

எனக்குள்ளேயும் கப்பு வெடித்துப்
பூச்சொரியும் பய மரங்கள்
பிரசவிக்கும்..

நீ இருந்தது என் வீட்டின்
வடக்கு மூலையில்..
என் மனதின் வசந்த மூலையில்..

செவ்வாய், 9 மார்ச், 2010

செவிலி... யாதுமான சக்தி நீயுமாகி!

செஞ்சிலுவை சுமந்துவரும்
வெள்ளுடை தேவதையே...

சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...

வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...

ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல்)




மகளிர் தினத்திற்காக நண்பர் ,"அவர்" பட இயக்குனர்
திரு. செல்வகுமார் அவர்கள் ஒரு பாடல்...--
"தாய்மையும் பெண்மையின் பெருமையும்" மிகுந்த
ஒரு பாடல் ..--எழுதும் படி கூறினார்.
அதை ,"அவர்" படத்தின் இசை அமைப்பாளர்
திரு. விவேக் நாராயணன் இசை அமைத்துப் பாடி
இருக்கிறார்..அன்பு சகோதரிகளே... உங்களுக்காக
நானும் சகோதரர் திரு. செல்வகுமாரும் .,
திரு.விவேக் நாராயணனும் வழங்கும் பாடல் .
கேட்டு மகிழுங்கள் ....பின்னூட்டத்துல உங்க
பதில் அன்பைத் தெரிவியுங்க மறந்துடாம...!

வெள்ளி, 5 மார்ச், 2010

சாயம் போன வானவில்கள்

1985 மார்ச் புதிய பார்வைகள் இதழில் வெளி
வந்தது ..இது என்னுடைய 150 ஆவது இடுகை...

நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்..
எங்களுடைய ஒட்டகங்கள்
எலும்புக்கூடுகளாய்
நின்று போயின..
சித்தன்ன வாசல்கள்
எலிப்பொந்துகளால்
வவ்வால்களால் சீழ் பிடித்து..

வியாழன், 4 மார்ச், 2010

நதி மூலம் ரிஷி மூலம்

"பார்... நீ எவ்வளவு மோசமான ஆசாமியின்
எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து இருக்
கிறாய் பார். அந்த பிம்பத்தை உடைக்கிறேன்
பார்.... ஒரு நடிகை என்பவள் எந்த சமயத்திலும்
எல்லார் பார்வைக்கும் விருந்தானவள்.. அவளை
இப்படியெல்லாம் காட்டலாம்.. ஈனப்பிறவி...."
என்று எந்த விஷயத்தைப் போட்டாலும் நாலு
நாள் ஆனாலும் கூடத்தில் அமர்ந்து அதை
ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்து எதற்
காகவோ சந்தோஷப்பட்டு மகிழ ஆட்கள்
இருக்கிறது .. என்னுடைய டி ஆர் பி ரேட்டிங்
ஏற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற ஊடகம் .. எல்லாவற்றிலும் ஒரு பொறுப்
பற்ற தன்மை.. இதை மார்பிங்க் என்று சொல்ல
ஒரு கூட்டம். அடுத்த பிரச்சனை ஆரம்பம்..

புதன், 3 மார்ச், 2010

ஆ..! "சாமி"

பார்க்க ரிஷபம் போலவே
பரிசுத்தமாய்..
கம்பீரக் கொம்புகள்..
கழுத்தில் மாலைகள்..
நெற்றியில் குங்குமம்..
சைவத்தின் தொகுப்போ...
எழுத்தெல்லாம் செங்காவி...

செவ்வாய், 2 மார்ச், 2010

உபரி

பூட்டின பக்கத்து வீட்டின்
தென்னை முதிர்ந்து காய் உதறியது
எல்லைசுவர் தாண்டி...
எடுக்கவா .,உபயோகிக்கவா.,
தூக்கித் திரும்ப எறியவா.,
மண்ணிலேயே கிடந்தழியட்டுமா.,
Related Posts Plugin for WordPress, Blogger...