எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்


ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும் சமயங்களில் சக்தியை புதுப்பித்துக் கொள்வதுபோல் பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் போவது வழக்கம்.. இந்தமுறை நெருங்கிய உறவின் திருமணம் என்பதால் சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரமும் செல்லவேண்டி சிறுகூடல் பட்டி விஜயம்.. சென்றபின்தான் தெரிந்தது .. பக்கத்திலேயே கவியரசர் இல்லம் இருப்பது... பார்வை நேரம் அல்ல என்பதால் உள் சென்று பார்க்க இயலவில்லை.. ஆனால் ஒரு கவிதை கருக்கொண்ட கனவு போல அந்த இல்லம் என்னை மயக்கியது... எப்பேர்ப்பட்ட வீச்சு அவருடையது .. ஆசுகவி..அறம் பாடினால் பலிக்கும். மகாகலைஞனின் இல்லம் தொட்ட காற்று என் உள்ளம் புகுந்து உருவேற்றியது.. இன்னும் இன்னும் சிறக்க எழுது ..முன்னேறு என்று.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எய்தது என்ன....?

அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..

குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...

பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நட்பும் ..துணையும்..

அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழாய் தமிழுக்காய்..


கூழுக்காய்., பாலுக்காய்.,
வேலைக்காய்., வெட்டிக்காய்.,
அலையாய் அலைந்ததில்லை.,
தமிழாய் தமிழுக்காய்..
ஆங்கிலமா ..அரபியா
அனைத்துக் கலப்பிலும்
அணையாமல் காத்துவிடு
தமிழாய் தமிழுக்காய்..

சனி, 21 ஆகஸ்ட், 2010

மாயாவி..

நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..

எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..

நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பெயர்ச் சங்கீதம்..

தினமொருமுறை என் பெயரை
உரைத்துச் செல்கிறாய்..
உள் உவப்ப...

இசைக் கெடிகாரமாயும்.,
சீன வாஸ்துவின்
காற்றிசைச் சிணுங்கியுமாய்
ஒலித்துக் கிடக்கிறது அது..

எடுத்து ஒளிக்கும் ப்ரயத்தனத்தில்
உன் வார்த்தைகளைத்
திரும்பத் தவறவிட்டு.,

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..

உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கண்கட்டு

நட்டுத் தண்ணீர் ஊற்றி
நாம் வளர்த்த சிறுவிதை
கட்டுக்குள் இருப்பதாய்
சட்டாம்பிள்ளைத்தனம்..

எங்குசென்று நீருரியும்.,
யாரிடம் பூத்தூவும்.,
எவருக்குக் கனி கொடுக்கும் என
அறிந்திராமல் உடன்..

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஒரு வெறுத்தலின் முடிவில்..

பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை.,
அகங்காரத்தை ., ஆணவத்தை.,
எள்ளலை ., கோபத்தை..
தேவையோ .,தேவையற்றோ.,
பூதக் கண்ணாடி கொண்டு விரித்து..
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்..
நீ கீறியது ஒரு முறை..
நான் கிளறிக் கொண்டது பலமுறை..

புதன், 11 ஆகஸ்ட், 2010

திரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தம்பி மக்கள்

கரும்புச்சாறோ., கன்னல் பாகோ
இரும்பு கூட உருகும் சிரிப்பு..
தேவதைகள் கூப்பிடும்
தேனத்தை அமிர்தமாய்..

வாசம் பொதிந்த
வளையல் துண்டுகளும்.,
கழுத்து மணிமாலைகளும்
வந்து சென்ற பின்னும்
வீடு கூட்ட ஏலாமல்...

சீட்டுக் கட்டில் சிதறிய ஜோக்கரும்
வாய் வைத்துக் குடித்த
குளிர்பானக் கோப்பைகளும்..
சுவற்றோரம் அப்பிக் கிடக்கும்
கோகோ கோனின்
குளிர் பனிக்குழைவுகளும்..

சனி, 7 ஆகஸ்ட், 2010

பாலை...

ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்...

வேம்பும் குயிலுமாய்
வேதனையில் கழிந்த இடம்
கழுகுகளும் வல்லூறுகளும் அமர...

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...

விதூஷும் தமிழ்மகனும் ஒரு தொடர் பதிவெழுத அழைத்து இருந்தார்கள்.. விதி யாரை விட்டது .. அட மக்காஸ் உங்களைத்தான் பார்த்து பரிதாபப் படுறேன்.. ம்ம் என்சாய்ய்ய் ...!!!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் என்ன..?
Thenammai Lakshmanan என்று இருந்தது.. உங்கள் கேள்வி பார்த்து தமிழுக்கு மாறிட்டேன்.. இப்போ நான் உஜாலாவில் ...மன்னிச்சுக்குங்க உவர்மண்ணில் போட்ட சுத்த தமிழச்சி தேனம்மை லெக்ஷ்மணன்..

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா ? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன..?
அப்பா அம்மாவைதான் கேக்கணும் தவிட்டுக்கு வாங்கும் போது வேறு பேர் இருந்துச்சான்னு.. ( எங்க வீட்டுல அப்போ வேலை செய்த சிகப்பி அக்கா அப்பிடி சொல்லியிருக்கு .. உன்னை தவிட்டுக்கு வாங்கி இருக்குன்னு) ..
தேனம்மை என்பது என் அப்பத்தா பேரு.. அப்பிடி இனிப்பா இருப்பேன்னு வைச்சு ஏமாந்து இருக்கலாம்.. லெக்ஷ்மணன் என்பது என் கணவர் பேரு .. அவரோட பேரு காரணம் எல்லாம் சொல்லணுமா.. !!

புதன், 4 ஆகஸ்ட், 2010

நன்றி மறப்பது நன்றன்று..



என் அன்பு அம்மா..எம். ஏ. சுசீலாம்மா.. நான் தேனீ என்றால் இவர்கள் தமிழ்த் தேனீ... இன்று நான் எழுதும் தமிழுக்குக் காரணமானவர்கள்.. ஃபாத்திமா கல்லூரியில் எங்கள் வசந்தம்.. என் நன்றி முழுவதும் இவங்களுக்குத்தான்..

இவர்களுடைய வலைத்தளம் ஆகஸ்ட் மாத லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமாகி இருக்கு.. (கல்வி) பெற்ற மகளை சான்றோள் எனக் கேட்ட தாயாய் என் அம்மா நெகிழ்ந்த போது நான் பிறந்த பயனை அடைந்தேன்.. என் அம்மாவின் மொழி பெயர்ப்பில் இடியட்டை(அசடன்) படிக்கும் ஆவலில் நான்.. சீக்கிரம் கிடைக்கும் அந்த சந்தோஷம் ...!!!

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நான் சிவகாமி....!!!

நான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..

எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..

என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நட்பூ

நானுமற்று நீயுமற்று
வலியிழந்து வலுவுற்று
நாமான காலம்..
என்றும் நிகழ்காலம்..

கைகோர்த்து விளையாடி
கைதூக்கி நிலைநிறுத்தி..
கிளியாந்தட்டாய்..
ஒருவரிடத்து ஒருவரை இழுத்து..

பள்ளி சென்றோமோ
பாடம் படித்தோமோ
நன்கு துயின்றோமோ
நாளெல்லாம் நட்பால் பூத்தோம்..
Related Posts Plugin for WordPress, Blogger...