எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கோதுதல்...



கோதுதல்..:-
*******************
ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சிகரத்துக்கு ஸ்க்ரிப்ட்...


நான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)

சனி, 27 ஆகஸ்ட், 2011

கடிதங்களின் காலம்..

கடிதங்களின் காலம்..:-
*************************************
குறுந்தகவல்களைப் போல
எளிதாயில்லை
கடிதங்களின் காலம்..

பரிமாற்றங்களுக்கு முன்னான
பரிபாஷைகள் பயங்கள்
தயக்கங்கள் மிகுந்து..

புராதனக் கல்வெட்டோ.,
சிற்ப வினோதமோ.,
டிரங்குப் பெட்டிகளில் புதைந்து..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராசக்ரீடை...



ராசக்ரீடை..
********************
எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..

புதன், 24 ஆகஸ்ட், 2011

வீடென்பது..

வீடென்பது...
********************
இறக்கைகள்
அடுக்கியபடி
எனக்கான பறவை
காத்திருந்தது..

நீல வானம்
மஞ்சள் வெய்யில்
அந்திச் சிவப்பு
மழை வானவில்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தாய் மரம்...



தாய் மரம்..
********************
முலைகளும் யோனியும்
முளைத்த மரங்கள்
யோசித்ததே இல்லை
தாம் ஏன் சுமப்பதென..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

விளையாட்டு..

விளையாட்டு.
**************************
கிச்சு கிச்சு தாம்பூலம்
விளையாடத் தொடங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
கொலை கொலையாய்
முந்திரிக்காயை பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

முகமற்ற முகங்கள்.. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கான படைப்புகள்..

முகமற்ற முகங்கள்..:-
******************************
என்னைச் சுற்றி
அவர்கள் இருந்தார்கள்..
இவர்கள் இருந்தார்கள்..
உலாவ பெயர் வைத்த
நிறைய தெருக்களும்..

எவரும் யாரையும்
அறிந்திருக்கவில்லை.
வாலற்ற விந்தண்ட
கோசங்கள் சுற்றின
எல்லா நிறங்களிலும்
எல்லா வடிவங்களிலும்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

சமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்..


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


நம்ம ஜீவா சாரோட திரைச்சீலையின் விமர்சனக்கூட்டம்தான் இது. வழக்கம்போல் டிஸ்கவரியில்தான். ராஜன் அவர்கள் சில எதிர் கூறுகளை எடுத்து வைத்தார்.. அதற்கு நம்ம நண்பர் இது எழுதப்பட்ட சூழலை அழகா சொன்னார்.. ஜீவா யதார்த்தமா எழுதியதே தேசிய அவார்டு வாங்கினா இன்னும் சிரத்தையோட எழுதி இருந்தா இண்டர்நேஷனல் அவார்டு வாங்கி இருப்பீங்க.. வாழ்த்துக்கள் ஜீவா..


டிஸ்கவரியி நடந்த அடுத்த முப்பெரும் விழா இது சாக்பீஸ் சாம்பலில் புத்தகத்துக்கு ( நான் விமர்சனம் எழுதிய நூல் ) நாணற்காடனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து விருது கிடைச்சிருக்கு . அதை கௌரவிக்கும் கூட்டம் இது. அடுத்து பூமித்தொட்டில் என்ற ஆவணப்படம் நம்ம தோழர் தகிதா மணிவண்ணன் எடுத்ததை எங்களுக்காக ஸ்பெஷலாக வெளியிட்டுத் திரையிட்டார். மூன்றாவது அவரது மாணவர் குழந்தை வேலப்பன் ( ஆண்மை தவறேல் இயக்குனர்) கவுரவிக்கப்பட்டார். இந்தப் படம் நன்கு இருப்பதாக அனைவரும் சொன்னார்கள்..


பூமித்தொட்டிலில் மணிவண்ணன் ( அவர் எது எழுதினாலும் கவித்துவமாகவே சொல்வார்) ., பூமி என்னும் உண்டியலில் உள்ள சத்துக்களை எல்லாம் நாம் எடுத்துக்கொண்டே இருக்கிறோம் ..சேமிக்கவே இல்லை .. என்றார். க்ளோபல் வார்மிங். பற்றிய வார்னிங் படம் இது.. வாழ்த்துக்கள் மணி ., வேலப்பன்., சரவணன். ( நாணற்காடன் சரா). !

சென்ற மாதம் அம்பாசிடர் பல்லவாவில் நடந்த வண்ணமும் வாசமும் ஓவியக் கண்காட்சி. தோழி மீனாக்ஷி மதன். தன்னுடைய படங்களில் பூக்களையே தேர்வு செய்கிறார். அவர் நிற்பது அவருக்குப் பிடித்த அனிச்ச மலரின் பக்கத்தில். கிட்டத்தட்ட 25 நாளில் 33 படங்களை வரைந்திருந்தார். HUES OF HEART STUDIO நடத்திவரும் அவரின் இன்னொரு படம் IHI .. பேல் விவாஹ் எனப்படும் இந்தப்படமும் ஸ்பெஷலான ஒன்று. நேபாளில் மேவார் வம்சத்தில் பெண்களுக்கு முதலில் வில்வமரத்துடன் பால்யத் திருமணம் நடைபெறும். அதன் பின்தான் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.


பழனியப்பன் வைரம்ஸ் என்பவரின் ப்லாக் பார்த்து பல பூக்களின் விவரம் சேர்த்து இவற்றை வரைந்ததாகக் கூறினார். மிக அருமையான படங்கள் மீனாக்ஷி .பூக்களை வரையும் பூவையே ! வாழ்த்துக்கள்.!

என் இன்னொரு தோழி அனுராதா நிகேத். மாடலிங். படங்கள் வரைதல் ., பெண் தொழிலதிபர் என கலக்குபவர். அவர் வரைந்த ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை. மிக வித்யாசமான ஃப்ரேம்களில்., க்ளேசியர்., கடல்., நதி முகத்துவாரம்., என அற்புதமாக வரைந்திருந்தார். இரண்டு ஆடுகள் குறித்த ஒரு படம் எனக்குப் பிடித்திருந்தது.


அம்பாசிடர் பல்லவா ஹோட்டல் இந்த மாதிரி ஓவியக் கண்காட்சிக்குன்னு இலவசமா காலரி தர்றாங்க.. வாழ்த்துக்கள் கலைகளை வளர்க்கும் அம்பாசிடர் பல்லவாவுக்கு. !


சித்ரகலா அகாடமியின் தலைவர் ஜீவாதான் தொடங்கி வைத்தார். அவர் ஒரு ஓவியம் வரைய அதை நாங்கள் எல்லாரும் கலந்து கட்டி வரைந்து எங்கள் கைத்திறமையையும் காண்பித்திருக்கிறோம்.. ( பள்ளிக்கூடத்துல வரைஞ்சது மறக்கலன்னு சந்தோஷமா இருந்துச்சு..) .. வீடியோ ஆரம்பிச்சு 9.50 க்கு மேலதான் நான் வரைஞ்சேன்.. ஆக்டர் சிவாஜி சந்தானம் சார் ., “ தேனம்மைலெக்ஷ்மணன்.. ஒரு கவிதை வரைகிறது.. ” என்று கமெண்ட் அடிப்பார்.. பின்னல் வரைந்தேன்.. பார்த்துட்டுச் சொல்லுங்க..
என் அன்புத்தோழி வசுமதிவாசன் கூச்சுப்பிடியில் கலக்கிய நிகழ்ச்சி இது.. போன வாரம் கோடம்பாக்கம் டி ஏ வி ஸ்கூலில் அரங்கு நிறைந்த நிகழ்ச்சியா நடந்துச்சு இது.. சின்ன வேம்படி சத்யம் அவர்களை குருவாகக் கொண்டு அவர்களின் சிஷ்யையின் சிஷ்யை மாதுரியை ஆசிரியையாக அமைய வசு 3 மாதங்களில் கற்றுக் கொண்டு ஆடிய நிகழ்ச்சி இது. ஏற்கனவே பரத நாட்டிய டான்சரா இருந்ததாக கொஞ்சம் ஈஸியா கத்துக்கிட்டதா சொன்னாங்க வசு.. இதில் ஆடிய அனைவரும் மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியையும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு விடும்போது சந்தித்து இந்த மதுரா டான்ஸ் கிரியேஷனை உருவாக்கி இருக்காங்க..!


நாட்யாஞ்சலி., பிரம்மாஞ்சலி., ஜாவளி என்ற மூன்று நடனங்கள். முதன் முதல் சலங்கை பூஜை என்பதால் கொஞ்சம் டென்ஷனோடு இருந்த வசு நடனமாட ஆரம்பித்த பின் அபிநயனங்களிலும் பாவங்களிலும் கலக்கி விட்டார்.. செமையா என்ஞாய் செய்த நிகழ்ச்சி இதுதான். செல்வகுமார்., சுகன்யா., விஜயானந்த்., ஷீலா தாமஸ் ரத்னம் ., என் கணவர்., என் அக்கா பெண்ணும் ஆடியதால் அவர்கள் குடும்பம் என கலந்து கட்டி சந்தோஷமாக இருந்தது.


அடுத்தும் லயனஸ் வசு அவங்க ப்ரோக்ராமில் கலக்கப் போவதால் அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள் வசு.. !

உனக்கான வாழ்வில் நான்....

உனக்கான வாழ்வில் நான்..
***************************************
சிறகுகள் உதிர்த்தேன்
நீ என்னை சுமக்கிறாயென..
சிந்தனைகள் அற்றேன்
நீ எனக்காய் சிந்திக்கிறாயென..
தேவனான காட்சியில்
தேவதையாய் கைகோர்த்து
நினைப்பே இல்லை
நீயும் மனிதன்தானென..

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கண்கள் உதிர்த்துச் சென்றவனுக்கு...

மீளுதலற்ற பாதைகளில்
உலா சென்றன கண்கள்.

கார்னியா கிரணங்களை விழுங்க
யத்தனித்தன கிரஹணங்கள்.

கவ்வுதலும் விடுவித்தலும்
பலநூற்றாண்டுகளுக்கு
விழி தப்பியபடி.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

நோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. போராடி ஜெயித்த பெண்கள் (11)




ஒருவருக்கு உடல்நலக்கோளாறுன்னா என்னவெல்லாம் நீங்க நினைப்பீங்க.. டயபடிஸ்., ப்ளட் பிரஷர் இது மாதிரிதானே.. ஆனால் அரும்பாக்கம் பள்ளித்தலைமை ஆசிரியை லூர்து ராணி அவர்களுக்கு கிட்டத்தட்ட 31 வருடமாக ஹீமோக்ளோபின் கவுண்ட் கம்மி.. பொதுவா இரத்தச்சிவப்பு அணுக்கள் எல்லாருக்கும் 12 இருக்கணும்னா இவங்களுக்கு 4 தான் இருந்தது. அவங்க இதை எதிர்கொண்டு தன்னுடைய ஆசிரியப்பணியையும் செவ்வனே நிறைவேத்தி இருக்காங்க..

புதன், 10 ஆகஸ்ட், 2011

மழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.? டாக்டர் முகமது ஆசிஃப்..

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியவுடனே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு வியாதிகள் ஆரம்பிக்கத் தொடங்கும். அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கொஞ்சம் காய்ச்சல்., சளி என்று நை நை என்று அழ ஆரம்பிக்கும். பெரியவர்களுக்கு வந்தாலே கஷ்டம் எனும் போது குழந்தைகளுக்கு வந்தால் எப்படித்தாங்குவார்கள்.. ?குழந்தைகளுக்கு இதுபோல மழைக்காலம் ஆரம்பித்தபின் வரும் உடல் நலக் கோளாறுகளுக்காக என்ன செய்யவேண்டும்., எப்படிக் குழந்தைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சுபம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆசிஃப் அவர்களிடம் நம் வாசகியருக்காக நோய்த்தடுப்பு முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஹுசைனியின் பேச்சிலர் சமையல்...


வீட்டில் பெண்களே சமைக்கிறார்கள்.. ஒரு மாறுதலுக்கு ஆண்கள் சமைத்தால் என்ன? வாயில் வைக்க முடியுமா என்கிறீர்களா.. இந்த ஷோவை பார்த்தா அப்பிடி சொல்ல மாட்டீங்க.. நீங்களும் சின்ன பொண்ணா இருந்தப்ப இப்படித்தானே நிறைய பொருளை கெடுத்து கத்துக்கிட்டு இருப்பீங்க.. உங்களை சொல்லச் சொன்னா லிஸ்ட் போட்டு கூட சொல்வீங்க.. உங்க மலரும் நினைவுகளை..

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கலம்பகம் விரும்பி....

கலம்பகம் விரும்பி..
******************************
மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..

இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..

புதன், 3 ஆகஸ்ட், 2011

இறக்கைப் பயணத்தினூடே...

இறக்கைப்பயணத்தினூடே..
******************************
அல்லாவுதீன் பூதமாய்
அடுத்து அடுத்து
என்கிறது..
என்ன கொடுத்தாலும்..

இரை எடுக்கிறேன் அலகில்..
கூட்டுக் குருவிகளுக்காய்..
எனக்கான எதிர்கால
சேமிப்பாய்..

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வி ஐ பியுடன் நான். ...

ஒருநாள் முகப்புத்தகத்தில் ஒரு நண்பரை சேர்த்தேன். அது சேரன்பாண்டியன் என்ற டைரக்டர் சேரன். ஒரு முறை என்னோட ப்லாக் ஐடியை அவருக்கு அனுப்பினேன். உடனே அடுத்த நாள் ஆச்சியின் தீபாவளி பலகாரங்கள் அட்டகாசம் என்ற ஒரு பதில் வந்தது. ஒரே சந்தோஷம்தான். அதன் பின் அவர் ஸ்டேடசுக்கு பதில் போடுவதும்., படங்களுக்கு கவிதை எழுதுவதுமே எங்களைப் போன்ற ரசிகர்களின் பொழுதுபோக்கு. பலர் சென்று பார்த்துவிட்டு வந்து அது பற்றி ஃபோட்டோ போடுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...