எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தியானம் என்பது..


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 29 செப்டம்பர், 2011

செந்தீ..

செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..

புதன், 28 செப்டம்பர், 2011

மழையாய் இருந்தபோது..

எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..

அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,

எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிலையாய் நீ. பூவரசியில்.

சிலையாய் நீ..
*************************

காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ

வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒற்றை ஆள்.. தயாபாய். சமூகப் புரட்சியாளர். OTTAYAL. DAYABAI SOCIAL ACTIVIST.




ஒத்தை ஆள்.. என்னவெல்லாம் செய்ய முடியும்.. எல்லாம் முடியும் என்கிறார் தயாபாய். உலகையே புரட்டிப் போட முடியும். நீதி, நியாயம், நேர்மை, உழைப்பு, எளிமை, சமூகப் போராட்டம் என பல பரிமாணங்கள் உண்டு 60 வயது தயாபாய்க்கு. இவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் ஷைனி ஜேக்கப் பெஞ்சமின்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

பங்குச் சந்தையில் கலக்கும் திருமதி முத்துசபாரெத்தினம் ஆச்சி அவர்கள் பேட்டி.

”அந்த பேங்க் என்ன ஆச்சு? இன்னிக்கு ஏறுமா.. வச்சுக்குவோமா, வித்திருவோமா?”


இந்த ஷேர் மார்க்கெட் குரலுக்குச் சொந்தக்காரர் 65 வயதான முத்துக்கருப்பாயி ஆச்சி. ஆண்களே அஞ்சி ஒதுங்கும் பங்குச் சந்தையில் அநாயாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் ஆச்சி.

புதன், 21 செப்டம்பர், 2011

குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

குமுதம் .. எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெயர். வங்கிகள்., பல்கலைக்கழகங்கள்., கோயில் திருப்பணிகள்., தமிழிசைச் சங்கம்., சினிமா., எனப் பல துறைகளிலும் வேரோடிய நகரத்தார் பதிப்பங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். நிறைய புத்தக நிறுவனங்கள் ( வானதிபதிப்பகம்., மணிமேகலை., மணிவாசகர்., செல்வி ) என பதிப்பங்களுக்கு நடுவில் தேவி ப்ரஸ் என்பதும் குமுதம் ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடமாகும். இன்றைய குமுதம் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் தேவி ப்ரஸ் இருந்திருக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ராஜ குடும்பத்தில் ஒரு மாண்புமிகு மத்திய மந்திரி ப. சிதம்பரம் அவர்கள். ..

செட்டிநாட்டு அரச குடும்பத்தில் பெண் வழிப் பேரனாக லெட்சுமி ஆச்சி., பழனியப்ப செட்டியார் அவர்களுக்கு மைந்தனாக செப். 16 .,1945 இல் பிறந்தவர் நம் மத்திய உள்துறை அமைச்சர்., திரு ப . சிதம்பரம் அவர்கள். இவர் மனைவி நளினி., மகன் கார்த்திக். மருமகள் ஸ்ரீநிதி. ஸ்ரீநிதி ஒரு மருத்துவராகவும் டான்சராகவும் பரிணமிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.



செட்டிநாடு என அழைக்கப்படும் கானாடுகாத்தானில் செட்டிநாட்டு அரசரின் அரண்மனை இருக்கிறது. எங்கள் சொந்த ஊரான செட்டிநாட்டில் ஒவ்வொரு விஷேஷத்துக்கும் ( அனுவலுக்கும்) வரும் உறவினர்கள், நண்பர்களின் கட்டாய விசிட்டிங் ஸ்பாட் அது. ஹெரிட்டேஜ் வீடுகள் அருகி வரும் இந்தக் காலத்தில் செட்டிநாட்டுப் பகுதியில் அந்தக் காலப் பாரம்பரியத்தோடு இன்னும் பாதுகாக்கப்பட்டு விசிட்டர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் அரண்மனை இது.

சனி, 17 செப்டம்பர், 2011

கழுமரம்.

கழுமரம்.:-
**************

பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி

முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்

வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்

வியாழன், 15 செப்டம்பர், 2011

முகஸ்துதி..

முகஸ்துதி..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..

என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..

புதன், 14 செப்டம்பர், 2011

வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..

முதலீடு பற்றி நிறைய எழுதி வருகிறோம். நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம். நிறைய சம்பாதிப்பாங்க ஆனா சின்ன சின்னதாக கூட சேமிக்க மாட்டாங்க.. அதுக்கு நம்ம அவள் விகடனில் வழிகாட்டும் ஒலி வழிகாட்டுது.

போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது..

திங்கள், 12 செப்டம்பர், 2011

வலைத்தளங்களின் வரலாறு...

நம்மில் பெரும்பாலோர் கூகுளின் உதவியுடன் ப்லாகுகள்., வேர்ட் ப்ரஸ்., ஆகியவற்றில் எழுதி வருகிறோம். வலைத்தளங்களுக்கு என்று ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என நினைக்கிறேன். இது சாமான்யர்களையும் சிருஷ்டிகர்த்தாக்களாக உலவ விட்டிருக்கிறது.

முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .

வியாழன், 8 செப்டம்பர், 2011

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்- அட்சயா ஃபவுண்டேஷன் -- அரும்பாக்கம் மிடில் ஸ்கூல்


ATCHAYAA FOUNDATION
CHENNAI

INVITES YOU TO HONOUR THE CORPORATION SCHOOL TEACHERS
ON THE OCCASION OF AMBEDKHAR BIRTH DAY
ON 8TH APRIL 2011

VENUE : CORPORATION HIGH SCHOOL
ARUMBAKKAM, CHENNAI
TIME : 9 TO 10 a.m.
FRIDAY

WELCOME ADDRESS BY M. LOURDH RANI
HEAD MISTRESS/ARUMBAKKAM
CORPOATIONN MIDDLE SCHOOL
CHENNAI
&

CHIEF ADDRESS AND HONOURING THE TEACHERS
BY SMT. THENAMMAI LAKSHMANAN
FREELANCER FOR 3 TAMIL MEGAZINES
&
VOTE OF THANKS
BY SMT. P.SUSEELA
FOUNDER ATCHAYAA FOUNDAION
CHENNAI.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று( அதற்கு முன்பாகவே ஏப்ரல் 8 அன்று ) அட்சயா பவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியைகளை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

துறைமுகத்தில் மகளிர் தினத்தில்..

மகளிர் தினத்தில் போர்ட் ட்ரஸ்டில் சிறப்புப் பேச்சாளராய்ப் பேச அழைத்தார் அதன் செகரட்டரி தனலெக்ஷ்மி. முதலில் தயக்கமாய் இருந்தாலும் என்னை சஜஸ்ட் செய்தவர் என் அன்பிற்கினிய தோழி விஜயலெக்ஷ்மி ஜெயவேலு என்பதால் சம்மதித்தேன். ஏஜிஸ் ஆடிட்டிங்கில் பணிபுரியும் இவர் ஃபேஸ்புக்கில் கீதாஜீவனுடனான லேடீஸ் ஸ்பெஷல்( குமரன் கல்யாண மண்டபம்) சுய உதவிக்குழுவில் பேசியது., கவிதைச் சங்கமத்தில் ( தேவநேயப்பாவாணர் அரங்கம்., ) பேசியது., கலைஞர் தொலைக்காட்சி செய்தியில் கவிதைச் சங்கமம் பற்றி கருத்துக் கூறியது., சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில் பேசியது., கான குஹா ( இசைப்பள்ளி ) ஆண்டு விழாவில் பேசியது என மைக் மோகன் ரேஞ்சுக்கு மைக்குடன் இருக்கும் ஃபோட்டோக்களைப் பார்த்து நான் கட்டாயம் வரவேண்டும் என கூறினார்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

தெரிஞ்சுக்க..

தெரிஞ்சுக்க..:-
********************
ன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”

”ம்.. இல்லை..”

”ராம்தேவ் பத்தி..”

”ம்ஹூம்..”

”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”

வியாழன், 1 செப்டம்பர், 2011

YOU R SO SWEET.. இனிப்பான மக்களுக்கு ஒரு சேதி.. டாக்டர் அஞ்சனா.




YOU R SO SWEET .. அப்பிடின்னு சிலர் புகழ கேட்டிருப்பீங்க.. இது பாராட்டுக்காக சும்மா சொல்றது.. அதென்னங்க ஸ்வீட்.. நிஜமாவே இனிப்பு அதிகமானா அதுக்கு பேர் டயபடிக் என்கிற சர்க்கரை வியாதி. நீரிழிவு நோய்னும் சொல்றாங்க. தற்காலத்துல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்கிறதால இது பத்தி விழிப்புணர்வு தரும்படி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் அஞ்சனாவிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக ஸ்பெஷலா ஒரு பேட்டி கேட்டேன். . டாக்டர் அஞ்சனா சொன்னவைகளைத் தொகுத்துள்ளேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...