எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 அக்டோபர், 2011

சதுரங்கம். எனது பார்வையில்.




செஸ் விளையாட்டில் எங்கெங்கெல்லாம் ராஜாவுக்கு செக் வர சாத்யக்கூறுகள் உண்டு. எதிர்பார்க்கும் இடத்தைத்தவிர மறைந்திருக்கும் எதிரிகளும் இருப்பார்கள். பலமுனைத்தாக்குதல்கள் இருக்கும். ராணி, குதிரை, யானை, தேர் என எல்லாம் இருக்கும். இது மூளை விளையாட்டு என்பதால் எல்லாப்பக்கமும கவனமாக விளையாட வேண்டும். இந்த மூளை விளையாட்டில் யார் யாரையெல்லாம் காவு கொடுத்தும் கடைசியில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. பொதுவா ராணி எல்லாப்பக்கமும் சுழன்று ராஜாவைக் காப்பாற்றுவது சதுரங்கம். இந்தச் சதுரங்கத்தில் ராஜா எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று ராணியைக் காப்பாற்றுகிறார்.


ஹீரோ ஸ்ரீகாந்த பத்ரிக்கையாளர். இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிசம் என்பதன் முழுமையான பணி செய்கிறார். அதன் விளைவுகள் கதை. கதை பழகி இருந்தாலும் சொல்லி இருக்கும் களனும் வேகமும் புதுசு. ஆறுவருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட கதையாம். இன்றும் பொருந்தி வருகிறது. இன்றும் எதுவும் மாறவில்லை. இதை நச் நச் என்ற வசனங்களிலும்புள்ளி விவரங்களிலும் தனக்கே உரிய பாணியில் படபடவென்று கரு பழனியப்பன் கொட்டி இருப்பது அழகு.

ஸ்ரீகாந்த கொஞ்சம் கரடுமுரடாக உதட்டில் காயத்தோடு கொஞ்சம் டெரர் பத்ரிக்கையாளர் லுக் கொடுக்கிறார். நான் எதிர்பார்த்தபடி தன் காதலி கடத்தப்பட்டதும் சாராயம்காய்ச்சுவோர், ப்ராத்தல் செய்பவர்கள், கள்ளக்கடத்தல் செய்பவர்கள், திருட்டு லாரியை உடைத்து விற்பவர்கள் எல்லாம் அவர் கண்ணில் படவில்லை. நம்முடையது ஒன்று தொலைந்தால் அதைத் தேடுவதிலேயேதான் நம் குறிக்கோள் இருக்குமே தவிர வேறு எந்த உலக அவலமும் கண்ணில் படாது. எந்தச் சீர்திருத்தத்துக்கும் நாம் போக மாட்டோம் என்பதும் உண்மைதான்.

ஹீரோயின் சோனியா ஸ்லிம் அழகி. அந்த மஞ்சள் டீஷர்ட், ப்ளூ ஜீன்சில் அசத்தலாக இருக்கிறார். நிறைய இடங்களில் மஞ்சள் உடை. மிஷ்கின் பட டான்சர் போல ஒரு பாட்டிலும் மஞ்சள் உடை. தன் காதலனின் தோளில் கை போடும் குறும்பு அழகு. அம்புலி மாமா, கன்னித்தீவு பாடல் மிக அழகு. வில்லன் மிரட்டும் இடங்களில் நல்ல நடிப்பு. இப்போ எங்கே இவர்.? மிக நல்ல நடிகைகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஆண்கள் இன்னும் பெண்கள் சொல்வதை நிறைவேற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெண்களுக்கு -- காதலிகளுக்கு, மனைவிகளுக்கு -- என்ன தேவை, அவள் ஆசைகள் என்னென்ன என்பதை வாழும் காலம்வரை புரிந்து கொள்வதில்லை என்பது உண்மை. அவள் காத்திருப்பதுபோலும்., ஆசை வைப்பதுபோலும்., முழுமையாக தன்னை சரணாகதி செய்வது போலும் அவளுடைய ஆண் செய்வதில்லை. அந்த காற்றிசைச் சிணுங்கி போல அவள் தானே பேசிக்கொண்டும், மகிழ்ந்துகொண்டும் என்றாவது தன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற எண்ணத்தோடும் வாழ்கிறாள்.இதை நன்கு உறைக்க, உரக்க சொன்ன கரு. பழனியப்பனுக்கு HATS OFF.

பாடல்கள் போடும்போது ஆண்கள் பலர் வெளியே ஓடுகிறார்கள். பெண்மை., மென்மை., மலர்கள்.,பாடல்கள் எல்லாம் ஆண்களுக்கு அவ்வளவு அலர்ஜி. இனி படங்களில் 4 வரி பாடல்கள் போதும் என தோன்றுகிறது.

ஸ்க்ரூட்ரைவர் கத்தியால் குத்தி ரத்தம் வரும் இடத்திலும் அடிக்கடி ஹீரோ சிகரெட் பிடிக்கும் இடத்திலும் கொஞ்சம் கோபம் ஏற்பட்டது உண்மை. இவ்வளவு வன்முறை, ரத்தம் எதிர்பார்க்கவில்லை. டென்ஷன் ஆகும் ஆண்கள் சிகரெட் புகைப்பது ஏன்.? அது இஞ்சூரியஸ் டு ஹெல்த் என அடிக்கடி திரையிலும் காட்டப்படவேண்டும்.

சந்தியாகாலம். சந்தியா புஷ்பம்., சந்தியா வேளை என எழுதிப்பார்ப்பது கவிதை. அதுபோல் கேக் முத்தமும். ஒரு கட்டத்தில் கமலை விட அதிக முத்தம் கொடுத்தவர் என்ற போட்டியில் ஸ்ரீகாந்த அதிக முத்தம் கொடுக்கிறாரோ எனத் தோன்றியது.:))

திமிருதான் என சோனியா சொல்வது, தரம் பார்த்துத்தான் நட்பு வச்சுக்குவேன், தகுதிபார்த்துத்தான் எதிரியை வச்சுக்குவேன். அந்தத் தகுதி உங்களுக்கு இல்லை என மகாதேவன் சொல்லுமிடம்., நல்லது ஜெயிக்கும் என நம்புங்கள் என சொல்லுமிடம் ரசிக்க வைத்தன. முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் கடைசியில் மாமூலாகி விட்டது.




பத்ரிக்கை ஆசிரியர் மணிவண்ணின் சப்போர்ட் மெச்சத்தக்கது.

மகாதேவன் சொல்வது போல கெட்டவன் நம்புகிறான் தான் ஜெயிப்போம் என. அதன்படியே ஜெயிக்கிறான். நல்லவன் நாம் ஜெயிப்போம் என நம்புவதில்லை. உண்மைதான். நாம் ஜெயிப்போம் என நல்லது எதற்காவது நாம் நினைக்கிறோமா. நல்ல பாசிட்டிவ் திங்கிங்கை க்ரியேட் செய்த வார்த்தைகள். படத்தின் மைய நாடியும் இதுதான்.

நல்ல படத்தை தந்த தயாரிப்பாளர் துரைராஜுக்கும் , மாஸ் மூவி மேக்கர்ஸுக்கும், வித்யா சாகரின் இசைக்கும், திவாகர், ராஜீவனுக்கும்., ( மழை நடனம் நைஸ்) டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கும்., சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயனுக்கும் ( நிறைய இடங்கள் நமக்கே அடிபட்டது போல வலித்தது. ப்ளாட்ஃபார்மிலிருந்து ட்ராக்கில் ஒரு ஆள் விழுவார் பாருங்கள் அந்த இடம் வெலவெலக்க வைத்து விட்டது.) திறமையாக எடிட் செய்திருக்கும் சுரேஷ் அர்ஸுக்கும் வாழ்த்துக்கள். மனோ பாலா, ஸ்ரீமன், வினோதினி, சரண்யா, இளவரசு, கணேஷ் யாதவ், மகாதேவன் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



முகப்புத்தக நண்பர் அமர சிகாமணி சாரும் நடித்திருக்கிறார். மிக யதார்த்தமான நடிப்பு.





வாழ்க்கை என்னும் செஸ் கேமில் எங்கு செக் எந்த ரூபத்தில் காத்திருக்கிறது எனத் தெரியாமல் பயணப்படுகிறோம். எதையும் நேர்மையாகவே ஜெயிப்போம் என நம்பிக்கை கொள்ளுங்கள் எனக் கூறிய கரு பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்.

சொல்ல மறந்துவிட்டேன்., இந்தப் படத்திலும் எங்கள் முகப்புத்தக நண்பர் நிதிஷ்குமார் நடித்திருக்கிறார். ( சொல்லவே இல்லையே நிதீஷ்). வாழ்த்துக்கள் நிதீஷ்., உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பார்ட்டை கச்சிதமாகச் செய்தீர்கள்.

பழனியப்பன் படங்களை அவரின் வசனத்துக்காகவே ரசிப்பேன். இந்தப் படத்தில் சில இடங்கள் மட்டுமே எதிர்பாராத அந்த அழகிய சந்தோஷத்தைத் தந்தன. அடுத்த படங்களில் இன்னும் எதிர்பார்க்கிறோம் கரு பழனியப்பன்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 

9 கருத்துகள்:

  1. உங்கள் விமர்சனம் அருமை,பாராட்டுக்கள்!! படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது!!

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்புக்காக படம் பாத்துடனும் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  3. நல்லவிதமான விமர்சனத்தை கொடுத்திருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  4. மிக நடுநிலையில் நின்று விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பாஸிட்டிவ்வாகப் பார்ப்பது என்ற ஒரு விஷயத்தை சொன்னதற்காகவே ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி தேனக்கா...

    பதிலளிநீக்கு
  5. சுவையான உங்கள் விமர்சனத்துக்காகவே படம் பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி மேனகா

    நன்றி கோபால்

    நன்றி ராஜா

    நன்றி கோகுல்

    நன்றி கணேஷ்

    நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...