எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 மே, 2011

உபநயனத்தில் உரத்தசிந்தனை..



கடந்த வெள்ளியன்று நமது பெரும் ப்லாகர்.,எழுத்தாளர்., பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்ற ருக்கு அம்மாவின் ( ருக்மணி சேஷசாயி. -- பாட்டி சொல்லும் கதைகள்) பேரன் உதய்சரணுக்கு உபநயனம் நடந்தது மிதிலாபுரி கல்யாண மண்டபத்தில். சில இலக்கிய ஆர்வலர்கள் வந்திருப்பதாக அம்மா சொன்னார்கள்

திங்கள், 30 மே, 2011

ஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட்டறை

ஐஸ்வர்யா ராகவ்... எம் ஓ பி வைஷ்ணவாவில் விஸ்காம் மாணவி. மங்கையர்மலர் சிநேகிதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் மருமகள். மிக அருமையான சமையல் நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் நிகழ்த்துகிறார். மாமியாருக்கு உதவியாக சிநேகிதியிலும் சப் எடிட்டராக இருக்கிறார். கலைஞர் டிவி ஒலிபரப்பிய -- நாங்கள் கலந்து கொண்ட “யுத்தம் செய்” கலந்துரையாடலில் மிக இனிமையான குரலில் அழகாய் தன் கருத்துக்களை எடுத்துவைத்தவர்.

சனி, 28 மே, 2011

இறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள் ( 9).




இறந்தும் இறவாப் புகழ் பெற்ற ஒருவரை பற்றி இந்த மாதம் பார்ப்போம்.. வாழும் போது போராடியவர் உண்டு.. வாழ்விலும் போராடி., இறந்த பின்னும் மனித குலத்துக்கு தன் உடலையும் ., கண்ணையும் தானமாய் வழங்கி இருக்கும் அனுராதாதான் அவர்.

வியாழன், 26 மே, 2011

வௌவால்கள்...பூவரசியில்.



புலனாய்வு., விசாரணை
மேல்முறையீடு ..
நீதியின் தாமதங்களால்
பாழடைந்த மண்டபங்களில்
பதுங்கித் தலைகீழாய்த்
தொங்கிச் சிறுத்துக் கிடந்த
உயிர் தின்னி வௌவால்கள்

புதன், 25 மே, 2011

பரிசோதனை எலிகளும் பரதேவதையும்..

ஆய்வுக் கூடத்தில் எலிகள்
அன்பாய் வளர்க்கப்பட்டு..
அடுத்த சோதனைகள் வரை
அன்பு உணவு கொடுக்கப்பபட்டு..

சிரிஞ்சால் குத்திப்பார்ப்பது
மூஞ்சியில் ஆல்கஹால் தேய்ப்பது
பஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது
எல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்

சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..

சமச்சீர் கல்வி .. இந்த வாசகம் கடந்த மூன்று நாட்களாக முகப்புத்தகத்தில் படும் அடி வேறு எதற்கும் பட்டிருக்காது.. யார் கைதானதும் கூட..இவ்வளவு பெரிதாய் விவாதிக்கப்படவில்லை..

தங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.

செவ்வாய், 24 மே, 2011

புற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..



புற்றை இனம் காணுங்கள்..:-
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.

திங்கள், 23 மே, 2011

தொற்று...

தொற்று..
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...

வியாழன், 19 மே, 2011

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..


திரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.

வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..





கோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....

புதன், 18 மே, 2011

அடுத்த கோர்ஸ்.




அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..

செவ்வாய், 17 மே, 2011

நதி.. மலை..

1.தாய்மை ததும்பும்
பசிய மார்பகத்திலிருந்து பாலாய்
கசிந்து கொண்டிருந்தது நதி..
*********************************************

செவ்வாய், 10 மே, 2011

தேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.

கொசுவத்தி., ஊதுவத்தி எல்லாம் சுத்தாம ஒரு விஷயம் சொல்லணும் . முடியுமா பார்க்கிறேன்.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லுற ஒரு புதன் கிழமை இந்த பூமியில ஒரு பெண் குழந்தை பிறக்க போகுது ( அட அஞ்சலி பாப்பா இல்லப்பா) அது அன்பான குழந்தை. தேன் போல பேசும்( சமயத்தில் தேளும் கூட) அதுக்கு நாம எல்லாம் நல்ல பெயர் வைக்கணும்னு தேவதை எல்லாம் பேர் தேடுச்சாம். சரி அவங்க பெரியப்பத்தா பேரே அழகா இருக்கு. அவங்கள மாதிரி பொறுமையா இருக்கட்டும்னு அப்பத்தா வீட்டு ஐயா தேனம்மைங்கிற பேரை வச்சாங்களாம்.

சனி, 7 மே, 2011

என் பெயர் அருணா..

சுவாசம் மெல்லியதாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்போதும் மெல்லியதுதானே. இன்றென்ன புதிதாய்..

எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக மிட்டாய்களை வாயில் போட்டு என்னை பாதுகாத்துவிட்டதாக உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

வியாழன், 5 மே, 2011

மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))

மே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .

புதன், 4 மே, 2011

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..

திங்கள், 2 மே, 2011

நெசவு...

நெசவு..
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..

இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி
Related Posts Plugin for WordPress, Blogger...