எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 ஏப்ரல், 2012

சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்..

சிகண்டியாய் இருப்பது
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.

வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.

புதன், 25 ஏப்ரல், 2012

அந்த இரவு..

அந்த இரவு மிகவும்
நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

அவள் ஆடைகளைக் கழற்றாமலேயே
நிர்வாணமாகிக் கொண்டிருந்தாள்.

பூட்டிய பொக்கிஷ அறையை
வார்த்தைச் சாவியால் திறந்திருந்தாள்.

சுமக்க முடியா லட்சம் பொன்னை
பாதாள அறைகளில் அடைத்து வைத்திருந்தாள்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மெழுகு..

மெழுகு..:-
***********
முதுமையுற்றவரின் கண்கள்
நீரால் நிறைந்திருக்கின்றன.
கசியக் கசியத் துடைத்துக்
கொண்டேயிருக்கிறார்.
பழுதடைந்த கண்களின்
பலவீனத்தாலும் இருக்கலாம்.

இந்தியாவின் காலடியில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
ரத்தச்சொட்டாய்த் துளிர்த்துக்
கொண்டேயிருக்கிறது அது.
அதைப்போலச் சுண்டி
எறியமுடியவில்லை இதை.

திங்கள், 23 ஏப்ரல், 2012

சொர்க்கவாசி.

சொர்க்கவாசி;-
****************
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.

அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.

சனி, 21 ஏப்ரல், 2012

மோனநிலை..

மோனநிலை..:-
*****************

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.

புதன், 18 ஏப்ரல், 2012

விளிம்பற்றவை..

விளிம்பற்றவை:-
**********************
விளிம்பு மடிக்கப்படாதவை
பாதுகாப்பானவை அல்ல.
தம்ளர்களில் தட்டுக்களில்
கீறக்கூடிய அபாயமுடையவை

மலைப்பிரதேசங்களில்
பாதுகாப்பு விளிம்புகளைப் போல
திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பள்ளி நினைவுகள்..( நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி)

காரைக்குடி அழகப்பா மாண்டிசோரி( ப்ரிப்பரேட்டரி)தான் முதன் முதலா நான் போன பள்ளிக்கூடம். அங்கே பள்ளிக் கூடம் குடில் குடிலாக இருக்கும். ஏப்ரல் பூ அங்கேதான் எனக்கு அறிமுகம். போகன் வில்லா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எங்க ஸ்கூல் ஞாபகம் வந்துடும். அப்புறம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எல்லாம் பாட ஆரம்பிச்சுடுவேன்னா நம்பவா போறீங்க..:)

அங்கே படிச்சனோ இல்லையோ ஆண்டுவிழாவுல ஒரு பாட்டுப் பாட சொன்னாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு இருக்க பிள்ளைங்கள எல்லாம் மேடையில ஏத்தி ரைம்ஸ் சொல்ல சொல்வாங்கள்ள அதுதான். அந்தப் பாட்டு

“ தங்கம் போல பளபளவென்று ஆப்பிள் இருக்குது
தங்கைப் பாப்பா கன்னம் போல ஆப்பிள் இருக்குது
எங்க ஊரு சந்தையிலும் ஆப்பிள் விக்குது
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது”

திங்கள், 16 ஏப்ரல், 2012

கோமாளி ராஜாக்கள்.

கோமாளி ராஜாக்கள்..
**********************
ராஜாக்களாய்க்
கற்பிக்கப்பட்டவர்கள்
ராணிகளாய்த் தெரியும்
சேடிகளின் கைப்பிடித்து.,
ரகசியக்காமத்துள்
சுற்றி வந்து..

பட்டத்து ராணீக்கள்
அடகு நகை மீட்கவோ.,
அலுவலகத்துக்கோ
அழும் பிள்ளைக்கு
பால் வாங்கவோ
சென்றிருக்கலாம்..

வியாழன், 12 ஏப்ரல், 2012

மூலக்கூறுக் கோளாறுகள்.

மூலக்கூறுக் கோளாறுகள்..:-
*******************************
ஒன்றறியாமலே
ஒன்றின் கால்
ஒன்றறியும்..

எண்டோசல்பான் கலந்த
கார்பன் ஹைட்ரஜன்
மூலக்கூறுக் கோளாறில்

புதன், 11 ஏப்ரல், 2012

என்ன வாசிப்பது.

என்ன வாசிப்பது..
********************
 கண்களின் வழியோ
கண்ணாடி வழியோ
பிரதிபலிக்கிறது
நீ வாசிப்பது....
எழுத்துக்களோ., கோப்புக்களோ.,
அங்கங்களோ., ஆராய்ச்சியோ..

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

களங்கமில்லாமல்..

மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.

சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ஆகஸ்ட் 24  , 2011 அன்று குழந்தைகளுக்கான நடனப் போட்டி நடந்தது. அதில் என்னையும், டி சி எஸ்ஸில் பணிபுரியும் வைஷ்ணவியையும், டி நகர் பெங்கால் அசோஷியேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் லலிதாவையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.மிக அருமையாக ஆடினார்கள் குழந்தைகள். மூன்று நடனப் போட்டிகள் 3 ஆம் வகுப்பு வரை, 8 ஆம் வகுப்பு வரை ப்ளஸ்டூ வரை ஒரே நாளில் வெவ்வேறு தளங்களில் இடங்களில் நடைபெற்றன. இதில் தொலைக்காட்சி நடிகர் கமலேஷும் வந்திருந்தார் இன்னொரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ( விஜய் டிவி நீயா நானாவில் சந்தித்திருக்கிறோம்.) நலம் விசாரித்தார். எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ..எங்கள் எதிர்டீமில் பேசியவர்களை மறக்க முடியுமா. என்றார். !
ஜட்ஜம்மாக்களே :)
நாட்டுப்புற நடனங்கள் தான் தலைப்பு . அருமையாக ஆடினார்கள் அனைத்துக்குழந்தைகளும். மதிப்பெண் வழங்குவதில் நாம்தான்
 தாராளமாச்சே.. சும்மா அள்ளி அள்ளி வழங்கினோம் . மற்ற இருவரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஏன்னா ஒருத்தங்க அதுல ஹெட்மிஸ்ட்ரஸ்.. எனவே ரொம்ப கறாரா மதிப்பெண் போட்டாங்க. 
Related Posts Plugin for WordPress, Blogger...