எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜூலை, 2012

காரணங்கள்..

காரணங்கள்:-
***************

செய்யும் அனைத்திற்கும்
செய்யாத எல்லாவற்றுக்கும்
செய்ய விரும்பும் இன்னவற்றிற்கும்
காரணம் சொல்ல
வேண்டியதிருக்கிறது..

ஏன் செய்தோம்.
ஏன் செய்யவில்லை..
ஏன் செய்ய முடியாமல் போனது
ஏன் செய்திருக்கக் கூடாது..
எது தடுத்தது.
ஏன் செய்ய வேண்டும்
எதற்காக செய்ய வேண்டும்
யாருக்காக செய்ய வேண்டும்.


அல்லது ஏன் செய்து
கொண்டிருக்கிறொம்.
என்ன விழைகிறோம்
என்னவாக ஆகிறோம்
என்ன நடக்கிறது.
எதற்காக செய்து
கொண்டிருக்கிறோம்
யாருக்காக செய்து
கொண்டிருக்கிறோம்.

விளம்பிக்கொண்டே
இருக்கிறோம்.
விளக்கம் கேட்கப்படாமல்
போகும் இடங்களிலும்.

காரணம் கேட்டு
தண்டிக்கப்படும் தருணங்கள்
அற்புதமானவை.
நம்மின் இருப்பை
அங்கீகரிப்பவை..
காரணமே கேட்காமல்
ஏன் தண்டிக்கப்படுகிறோமென
காரணம் தெரியாமல்
உயிர்ப்பற்று இருப்பதை விட.

டிஸ்கி:- இந்தக்கவிதை ஜூன் 15, 2012, அதீதத்தில் வெளியானது. 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...