எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 அக்டோபர், 2012

சங்கமம்..

நதியாய்ப் பெருகி
கரைகளைப் புணர்ந்து
புற்களையும் விருட்சங்களையும்
பிரசவித்திருந்தாள்.

வரத்து வற்றிய கோடையிலும்
நீர்க்காம்பைச் சப்பியபடி
பருத்துக் கிடந்தன
வெள்ளரிகள் கம்மாய்க்குள்.



காட்டுக் கொடிகளும்
தூக்கணாங்குருவிகளும்
குடக்கூலி கொடுக்காமல்
வேடிக்கை பார்த்தபடி
விலகிச் சென்றன
அவளை விட்டு.

வறண்ட கணவாயாக
தூர்ந்திருந்த போது
எங்கிருந்தோ ஒரு மேகம்
மழையாய்ப் புணர்ந்து
சென்றது அவளை.

எதிர்க்கமுடியாமல்
ஏற்றுக் கொண்டு
காட்டாறாகி வேகமெடுத்தவள்
வீழ்ச்சியில் விழுங்கத்
தொடங்கி இருந்தாள்
மனிதர்களை..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 12 செப்டம்பர் 2011  திண்ணையில் வெளிவந்தது

3 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...