எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

உயிரற்றும் இருப்பது.

ஒற்றைக் கோப்பையில்
இனிப்புத் திரவம்
வசீகரித்தது.

இதமான சூட்டில்
ஆடை மேலமர்ந்ததும்
கால் வழுக்கியது.

தலைகுப்புற விழுந்ததும்
ஞாபகம் வந்தது
நீச்சல் தெரியாதது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இடறல்.

ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.

வியாழன், 27 செப்டம்பர், 2012

சகிப்பு

கர்ண குண்டலங்களைப் போல
கனமாக இருந்தாலும்
கழட்டி வைத்துவிட
முடிவதில்லை அவைகளை.

அறுத்தெறிந்தாளாம்
மறத்தமிழச்சி
பால்குடித்தவன்
வீரனில்லை என்பதால்.

புதன், 26 செப்டம்பர், 2012

ஜ்வெல் லோன்.

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி..

“என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?”

“ஆமாம். நீங்க நலமா..”

பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

”சாதனை அரசிகளு”ம், ”ங்கா”வும் மயிலாடுதுறையில்.

”சாதனை அரசிகள்” மற்றும் ”ங்கா” புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகி வருகின்றன. சாதனை அரசிகள் புத்தகம் வெளிவரும் முன்பே சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அதன் முழு விநியோக உரிமை - டிஸ்கவரி புக் பேலஸ் என்று போட்டு வெளியிடவேண்டுமென்று சொன்னார்.

வள்ளல்.

வேலை செய்பவளுக்கு
முதல் தேதியே சம்பளம்..
பிச்சை கேட்பவனுக்கு
ஒற்றை ரூபாய்.
அநாதை ஆசிரமத்துக்கு
பழைய துணிகள்.
உறவினர் குழந்தையின்
கல்விச் செலவில் ஒரு பங்கு

திங்கள், 24 செப்டம்பர், 2012

வீடும் வீடு சார்ந்த இடமும்..சமுதாய நண்பனில்

அடி பம்பு.,
முக்குச் சந்து.,
மிரட்டும் வண்டிகள்.,
பெட்டிக் கடை,
தண்ணீர் லாரி.,
சிதறிய குப்பைத்தொட்டி.,
வறுபட்ட பஜ்ஜிகள்.,
மழைச்சேறு
மனித முகங்களைச்
சுமந்து கிடந்தது
எனக்கான வீடு..

சங்கடம் . ( ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..)

வெள்ளையடித்தபின்னும்
மின்னும் க்ரேயான் பொம்மைகள்.
மிச்ச தேதிகளோடு
தொங்கும் நாட்காட்டி
பால்கனிக் கொடியில்
காற்றிலாடும் கிளிப்புகள்.
சுவற்றலமாரியில் கிடக்கும்
பாச்சை உருண்டைகள்
தாளிதத்தின் தெறிப்புகளை
சுமந்திருக்கும் சமையலறை மேடை.

சனி, 22 செப்டம்பர், 2012

இணையத் தமிழால் இணைவோம்.. இனிய செயலால் வெல்வோம்..(ஃபெட்னாவுக்காக எழுதியது)

இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் இவை அறிவோம். இணையத்தமிழும் இனிமையாக இருக்கிறது.முத்தமிழும் முக்கலையும் மூவேந்தர் காத்த நாட்டில் இணையத்தில் தமிழ் வளர்க்கும் இனிய தமிழர் நாம். உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இயல்பாய் ஆக்கியுள்ளது இணையத்தமிழ் மற்றும் வலைப்பூக்கள் என்றால் மிகையாகாது. இணையத்தமிழர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கேற்றாற்போல இணையத்தமிழ்ப் பகிர்வுகளும் படைப்புக்களும் ஆக்கங்களும் மெருகேற வருகின்றன.

தமிழ் கூறும் நல்லுலகில் பத்ரிக்கைகளால் அறியப்பட்டவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்பட்ட காலத்தில் இணையம் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பதிவு செய்ய தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. தமக்கு தாமே ஆசிரியர்கள், தம்முடைய கருத்துக்களைத் தங்கள் வலைத்தளம், வலைப்பூ ஆகியவற்றில் முழுமையாக பகிர்வு செய்து உடனடியாக விமர்சனங்கள் பெற முடிகிறது. தங்கள் கருத்தை ஒட்டிய கருத்தோ அல்லது மறுப்புக் கருத்துக்களோ உடனேயே அறிய முடிகிறது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சிப்பியின் ரேகைகள்..

கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்..

கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை

அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

நல்ல மனம் வாழ்க.

தேனே,நலமா? என்ற கேள்விகளோடுதான் துவங்கும் இவரது கடிதம். முகம் பார்த்ததில்லை. லேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுகத்துக்காக ( நிஜமாவே பெண்களை மட்டுமே அறிமுகப்படுத்தணும்னு ஆரம்பிக்கட்டது அது. )சுயவிவரப் படம் பார்க்கப் போனால் ஒரு கறுப்புப் பூனைக்குட்டி முகம் மறைத்து மியாவ் என ஒலி எழுப்பியது. யாருடா இந்த அப்சரஸ் என நினைத்தேன் ( ஹாஹாஹா கறுப்பு தேவதை என நினைத்தால் இவர் ஒரு வெண்ணிற தேவதையேதான். )

உரையாடல்..

மீன் சுவாசம் போல்
உள்ளிருந்து வெடிக்கும்
ஒற்றைப் புள்ளியில்தான்
துவங்குகிறது
ஒவ்வொரு உரையாடலும்.

குளக்கரையின் எல்லைவரை
வட்டமிட்டுத் திரும்புகிறது.,
ஆரோகணத்தோடு.

புதன், 19 செப்டம்பர், 2012

மழையாய் பாடுதல்

மழையை உறிஞ்சிச்
சுவைத்துக் கொண்டிருந்தேன்..

நீர்ச்சுவை என் மொட்டுக்களில்
தாமரைத் தண்டாய்.

குழந்தையின் எச்சில் போல
சுவையற்றிருந்தது அது.

நீர்க்கதிரைச் பாய்ச்சி
நிலத்தை உழுது கொண்டிருந்தது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க.இது நான் பல நாளா ஜி மெயில்ல வந்த ஸ்பாம் மெயில்ஸப் பார்த்துக் கேட்க நினைச்ச கேள்வி.

என்ன மட்டுமில்லாம எல்லாரையும் கோடீஸ்வரர்களா ஆக்கணும்னு நிறைய கோக்கு மாக்கு கம்பெனிகள் முடிவு செய்துட்ட மாதிரி இருக்கு. உங்ககிட்ட ஒரு செல்ஃபோன் இருந்தா போதும். நீங்க கோடீஸ்வரர் ஆக சான்ஸ் எக்கச்சக்கம். இப்பவெல்லாம் அட்வான்ஸ்டா செல்ஃபோனிலேயே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கிடணும்னு ஏகப்பட்ட பேர் துடிக்கிறாங்க.

1. +************ YOUR GSM NUMBER WON 2.5000,000.00GBP, EQUIVALENT TO 221,963,239.52 INR, FOR PAYMENT EMAIL YOUR BIO-DATA TO UNITED BANK LIMITED VIA:UBLTD@LIVE.COM

வயது ஒரு தடையல்ல..

”மங்களா சிமிண்ட் 100 வாங்கிரு..அப்புறம் கேவீபீ என்ன ஆச்சு.. இன்னைக்கு ஏறுமா.. வைச்சுக்குவோமா வித்திருவோமா..” என்ற குரலுக்குச் சொந்தக்காரர் .. 65 வயதான முத்துக் கருப்பாயி ஆச்சி.. இது பங்குச்சந்தையில் அவர் முதலீடு செய்து ஏறினால் விற்பது.. இறங்கினால் வைத்துக் கொள்வது என்ற பாலிசியில் செய்யும் பங்கு வர்த்தகம்.

எந்த வயதானால் என்ன .. வட்டித்தொழில்., பங்குச்சந்தை என்பது எல்லாம் ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும்.. இது ரிஸ்கானதாச்சே .. அதை செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..

திங்கள், 17 செப்டம்பர், 2012

நெல்லை சந்திப்பு. எனது பார்வையில்.

மீரா கிருஷ்ணன், மேகா நாயர், தேவிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், யுவஸ்ரீ என பெண்கள் அனைவரும் நடிப்பில் அசத்தியும் புவனை ஸ்ரீ நடிப்பில் மிரட்டியும் இருக்கும் படம் இது. அதே சமயம் பாபிலோனா கவர்ச்சியில் மிரட்டுகிறார். ரோஹித், பூஷண், தேனப்பன், சரவணன் சுப்பையா, இவர்கள் நடிப்பும் அருமை.

 நெல்லை சந்திப்பில் ஒரு சில முறை ட்ரெயின்கள் வந்து போகின்றனவே தவிர இது நெல்லையில் நடந்த ஒரு தவறான என்கவுண்டரைப் பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியதுமான கதை

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.

சனி, 15 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1980 இல் விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20,000 உறுப்பினர்கள் கொண்டது. 4000 க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளது.

மூடநம்பிக்கைகளை ஒழித்திட அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரமும் செய்து வருகிறது இந்த இயக்கம். மேலும் கணக்கும் இனிக்கும், அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி காகிதக்கலை, அறிவியல் பாடங்கள், விளையாட்டுக்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

விழுதுகள்.. ( 9 குறுங்கவிதைகள்..)

மரக்கிளைகளின் வழி
வெளிச்ச விழுதாய்த்
தொங்குகிறது சூரியன்...

 ****************************************

வெளிச்ச விழுதுகளில்
குருவிகளாய் ஊஞ்சலாடியபடி
இறங்குகின்றன இலைகள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

போபால், சிவகாசி மற்றும் கூடங்குளம்.

போபால் விஷவாயுவில் எந்தப் பெண்ணும் சாகவில்லை என சகோதரன் நியோ ஒரு இடுகையிட்டிருந்தார். அது பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருந்தேன்.

தற்போது சமூக அக்கறை இல்லாமல் சுயதம்பட்டம் மட்டும் அடிக்கும் பணக்காரப் பதிவர்களால் சமூகத்துக்கு என்ன பயன் என்று ஒரு சகோதரர் ( நிருபர்) முகநூலில் வினவி இருந்தார்.

சமூக அக்கறை என்பது என்ன.? சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி அக்கறை கொண்டு கருத்துப் பதிவு செய்வது. அது முகநூலாயினும் சரி, வலைத்தளமாயினும் சரி. உங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் செய்திகளைக் கொண்டு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள். அடுத்தவர் அவருக்குக் கிடைத்ததைக் கொண்டு பதிவிடுகிறார்.

பிறந்தநாள் பொம்மைகள்..

பிறந்தநாள் குழந்தைக்கு
அணிவகுத்து வருகின்றன
கரடி பொம்மைகள்..
கலர் சாக்குகளில்
பொட்டலமாய் முடியிட்ட
முடிச்சைப் பிடித்து
கைபோன திசையெல்லாம்
அசைக்கிறது குழந்தை.

புதன், 12 செப்டம்பர், 2012

மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்.

ஜாதிமதங்களைப் பாரோம் என்று எழுதிய பாரதியே கலந்து கொண்ட விழா என்றால் அது 9.11.1919 இல் காரைக்குடியில் நடைபெற்ற ஹிந்து மதாபிமான சங்கத்தின் விழாதான். இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அ.மு.க.கருப்பன் செட்டியார், தமிழ்க்கடல் ராய.சொ. , மகாகவி பாரதியார், சொ.முருகப்பன் செட்டியார், ரெங்கநாதன் செட்டியார்.

மலர்மன்னன் திண்ணையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

/// தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நலப் பணிக்கான அமைப்பைத் தோற்றுவித்திருந்தனர்.

நதிகளில் நீந்தும் நகரங்கள்

தொங்கும் தோட்டங்கள்.,
மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்.,
நதிகளில் நீந்தும் நகரங்கள்
இவற்றில் சேகரமாகிறது ஆசை.

புகைப்படங்களில்., திரைப்படங்களில்
தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும்.
பசிய., கனிய தோட்டங்களும்
தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும்
நகரங்களையும் காண சேர்கிறது விழைவு

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆச்சியும் அய்த்தானும்

வழக்கமான தங்கமணி ரங்கமணி கதைதான். ஒரு உப்பு சப்பில்லாத கதைன்னு நீங்க சொல்லிடக் கூடாதுல்ல.. அதுனால ஒரு ஒட்டுதலா செம ஆய்லியான கதைங்க.

ஒண்ணுமில்லங்க.. ஆச்சி சமையல் எக்ஸ்பர்ட். ஒரு நாள் ஆச்சி எலுமிச்சம்பழச் சாதம் பண்ணுனாங்க. சாதத்த குக்கர்ல வச்சிட்டு ஒரு கப்புல கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,கொஞ்சம் வெந்தயம், வர மிளகாயும், இன்னொரு கப்புல பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சியும், இன்னொரு கப்புல உப்பு, மஞ்சப் பொடி போட்டு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு வைச்சிருந்தாங்க.

இந்த சாதத்துக்கு தாளிக்கிற நேரத்துலயா வரணும் சோதனை. ஒண்ணுவிட்ட பெரியத்தாவோ, ரெண்டு விட்ட சித்தப்பாவோ, பள்ளிக்கோடம் படிச்ச சிநேகிதியோ, இல்ல செல்லப் புள்ளங்களோ தெரியல., யாரோ ஃபோனைப் போட்டுருக்காங்க ஆச்சிக்கு. ஆச்சியும் செல்லங்கொஞ்சிக்கிட்டே இருப்புச் சட்டியில சாதம் தாளிக்க எண்ணெய் ஊத்துறப்ப சும்மா நாலு ஸ்பூன் ஊத்தாம ஜார்லதான் எண்ணெய் கம்மியா இருக்கது போல இருக்கேன்னு எண்ணெய் ஜாரை கவித்துட்டாங்க.

மல்லிகை மகள் குழந்தைக்கவிதைகள்

வெளியேறும் நேரம் வந்தும்
வெளியேறவில்லை நீ
வெட்டித்தான் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்.
******************************

எத்தனை விளம்பரங்கள்
எத்தனை உடைகள் கண்டாலும்
அத்தனையிலும்
உன்னைப் பொருத்தி
அழகுபடுத்தி ரசிக்கிறது மனது.

திங்கள், 10 செப்டம்பர், 2012

மல்லிகை மகளில் உலா வரும் முத்தம்..

காலையில் அலுவலகம்
செல்லுமுன்
வாயிலின் பின்புறம்
கணவன் ஒரு முத்தத்தை
மனைவிக்குப் பரிசளித்துச் செல்கிறார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

புழுவா.. புலியா.:

செங்கற்கள் வீடு கட்ட அடுத்த காம்பவுண்டில் வேலியற்று அடுக்கப்பட்டிருந்தன. வருடக்கணக்காய் பாழடைந்து கொண்டிருந்த அந்தச் செங்கல்கள் திடீரென ஒரு நாள் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டு இடம் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. செங்கல்கள் குவிக்கப்படுவதும் அடுக்கப்படுவதுமான சத்தத்தில் அது அடுக்கப்பட்டிருந்த பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்த அம்மா தன் இரு பெண்களுடன் வந்து எங்கள் பக்கப் படிக்கட்டுக்களில் அமர்ந்து அந்தச் சித்தாள்களிடம் ஒரே விசாரணை. பூச்சி பொட்டெல்லாம் எங்க வீட்டுக்குள் வந்துடப் போகுது . பார்த்துப் பிரிங்கண்ணா என்று.

சனி, 8 செப்டம்பர், 2012

சன்ஷைன் ப்லாகர் விருது.

திரு கோபால் சார் அவர்கள் கொடுத்த விருது.

உரத்த சிந்தனை அமைப்பில் கடந்த வருடம் விருது வாங்கியவர். தமிழ் மணம் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது சுமார் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கதை வீதம் 27 கதை எழுதி அமர்க்களப்படுத்தியவர்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள்.
மனதில் அவர் அருந்தியதும்
நிரம்பிய ரத்தச் சகதியில்
அழுந்தத் தயாராகுங்கள்.

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி
ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள்.
உங்கள் உரையாடல்
ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது.

ஓட ஓட அழுக்கடைகிறீர்கள்.
உணவுச் சத்துக் கொடுத்து
உப்புச் சக்கையைப் பிரித்து
மாசுச் சொல் சுமந்து..

வியாழன், 6 செப்டம்பர், 2012

சீகன் பால்கும் தொல்காப்பியமும்.:-


முதன்முதலில் தமிழில் விவிலியத்தை மொழிபெயர்த்தவர் சீகன் பால்கு எனத் தெரியும் ஆனால் அவர் படித்த முதல் தமிழ் நூல் எது தெரியுமா.? அது தொல்காப்பியம்தான். அதை அவரே குறிப்பிட்டுள்ளதாக சா. கந்தசாமி அவர்கள் தினமணியில் குறிப்பிட்டுள்ளார்.

சா. கந்தசாமியின் கட்டுரைகள் சிலவற்றை சூரியக் கதிரில் படித்ததுண்டு. ஜனரஞ்சகப் பத்ரிக்கைகளில் சா. கந்தசாமியின் இலக்கியம் சார்ந்த எழுத்துக்கள் ஒரு புதுமையான இலக்கியப் பரிச்சயத்தைக் கொடுத்ததுண்டு.

சுவீகாரம்.

இரட்டைப்புள்ளிக்
கோலங்களாய் ஆரம்பிக்கிறது.,
ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை.

குழந்தைப் புள்ளிகளைப்
பெருக்கிக் கொண்டே
போகிறார்கள் ஊரளவு.

பேரக்குழந்தைகளும்
கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய்
புள்ளிகள் விரிகின்றன.

எள்ளுப் பேரன்களின்
வீரியக் குறைச்சலால்.,
எள் தெளித்தபடி வர..

சோற்றைத் தேடும்
காக்கைகளாகின்றனர்
முன்னோர்கள்.

புதன், 5 செப்டம்பர், 2012

பெரிதினும் பெரிது கேள்.மகேஸ்வரி

வேலை செய்யும் ஒரு சாதாரணப் பெண்  எப்படி ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக முடியும். கிடைத்த வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டா எல்ல உச்சங்களையும் எட்ட முடியும் என்பதற்கு மகேஸ்வரி ஒரு சாட்சி. 39 வயதாகும் மஹேஸ்வரி ஜெ.எம் ட்ரெஸ்ஸஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கம் ஃபாஷன் எம்ப்ராய்டர்ஸ் என்ற நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறார்.இது சீருடைகளை மொத்தமாகத் தயாரித்து மிகப் பெரும் கம்பெனிகளுக்கும் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யும் நிறுவனம். டிவிஎஸ் சாஸ்த்ரிபவன் ப்ராஞ்ச், ஜேஎஸ்பி ஹோண்டா, அமிர்தாஞ்சன், ஹோட்டல் ரெசிடன்சி, ஹோட்டல் மெரினா, அனுக்ரஹா ஃபெசிலிட்டீஸ் - ஹவுஸ் கீப்பிங் ஐட்டம், ப்ரசாத் ஸ்டூடியோஸ் ஆகியவற்றுக்கு சப்ளை செய்கிறார்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

செஸ் அர்ஜுன்.. CHESS ARJUN.

மிகச் சிறு வயதிலேயே மிகச் சிறப்பாக செஸ் விளையாடி சர்வதேச  விருதுகள் பெற்றுள்ளான் அர்ஜுன். அர்ஜுனின் முன்னேற்றத்தில் அவனது அம்மாவின் பங்கு நிறைய. மகன் விளையாட வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவனது அம்மாதான் ஊக்கசக்தியாக இருந்து அவனை அழைத்துச் செல்வார். படிப்பு மட்டும்போதும் என எண்ணாமல் மகனின் திறமைகளையும் ஊக்குவிக்கும் அர்ஜுனின் அம்மாவிடம் சில கேள்விகள்.

1.அர்ஜுனின் செஸ் ஆர்வத்தை முதலில் கண்டுபிடித்தது யார்.

அவர்களுக்குப் பின்.... மெல்லினத்தில்

அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்கள் வெளியேறியபின்
யாருடன்.

அவர்கள் இருக்கும்வரை
அவர்களுடன்.
அவர்களைக் கொன்றபின்
யாருடன்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

ஜட்ஜ் அம்மாக்களே.. தீர்ப்பை சொல்லுங்க..

கலா மாஸ்டர்தான் ஜட்ஜுன்னு ரொம்ப நாளா நெனைச்சுகிட்டு இருந்தேன். நடுவுல சிம்புதான் ஜட்ஜோன்னு கூட தோணுச்சு. இப்ப புதுசா ரெண்டு ஜட்ஜுங்க டிவியில வர்றாங்க. வாதியோட வக்கீல், ப்ரதிவாதியோட வக்கீல், நீதிபதி எல்லாமே இவங்கதான். தற்காலிக தமிழகத்துல இருக்குற விவாகரத்து, திருமணம் தாண்டிய பிரச்சனைகளுக்கெல்லாம் இவங்கதான் தீர்ப்பு சொல்றாங்க.

ரொம்ப கீழ்மட்டத்துல இருக்க மக்களோட வாழ்க்கையை சீரியல் லெவலுக்கு காமிச்சு சேனல்களோட டி ஆர் பி ரேட்டிங்கை ஒசத்துறதுதான் இவங்க பணி. சீரியலைப் பார்த்து மக்கள் கெட்டுப்போறாங்களா, மக்களைப் பார்த்து சீரியல் எடுக்குறாங்களாங்குறது கோழிக்குள்ளேருந்து முட்டையா, முட்டையிலேருந்து கோழியா அப்பிடிங்கிற மாதிரியான விஷயம்.

இரை தேடி.. தேவதையில்..

அலுவலகங்கள் மாறுவதும்
வேலைகள் மாறுவதும்
ஊர்கள் மாறுவதும்
புதிதல்ல அவளுக்கு.

அங்கி., காவி அணியாமல்
சிலுவை சூலம்
சுமப்பதைக் காண்பிக்க
விரும்பாதவள் அவள்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கும்பகோணம் குழந்தைகள் நினைவு ஜோதி..மதுரை மாணவர் மாநாட்டுக்குப் பயணம்

கும்பகோணம் காசிராமன் தெரு, கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த 94 இளம்தளிர்கள் கருகிப் போயின. அந்தத் தளிர்களின் நினைவாக அவர்கள் பெற்றோர் அந்தப் பள்ளியின் வெளிப்புறத்தில் குழந்தைகளின் புகைப்படங்களோடு கூடிய நினைவஞ்சலிப் பலகையை 2011 ஆம் ஆண்டு வைத்துள்ளனர். பார்க்கும்போதே நெஞ்சம் பதைக்கின்றது.

சனி, 1 செப்டம்பர், 2012

கவனகக்கலை செழிக்கும் கலைசெழியனின் ஃபெட்னா அனுபவங்கள்.

கவனகக்கலையில் சிறப்பாக ஜொலித்துவரும் கலைசெழியன் அவர்கள் சமீபத்தில் ஐக்கிய அமெரிக்க குடியரசில் நடைபெற்ற ஃபெட்னாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் சிறப்பு நிகழ்வுகளை நிகழ்த்தித் திரும்பி இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்.

1, கவனகக் கலையில் எப்போதிருந்து ஈடுபட்டு வருகிறீர்கள். அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள் ஒரே சமயத்தில் நீங்கள் எத்தனை விஷயங்களை கவனகப்படுத்தி இருக்கிறீர்கள் .
Related Posts Plugin for WordPress, Blogger...