எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

கும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம் ”ங்கா”வும்.

கும்பகோணத்தில் ஃபிப்ரவரி 10, 2013  லிருந்து மார்ச் 10, 2013  வரையில் பவளம் ஹாலில் ( பரணிகா தியேட்டர் அருகில் ), பக்தபுரி தெருவில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.


அதில் என்னுடைய புத்தகங்கள் ”சாதனை அரசிகளு”ம்  ”ங்கா”வும் இடம் பெற்றன. கவிதை நூல்களுடன் “ங்கா”வும், தன்னம்பிக்கை நூல்களுடன் ( கு. ஞானசம்பந்தன், மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோரின் நூல்களுடன்) என் புத்தகம் சாதனை அரசிகளும் இடம் பெற்றது.

”சாதனை அரசிகள்” 3 புத்தகங்களும் ( தன்னம்பிக்கை நூல்கள் தற்போது விற்பனை ஆகிவிடுவதாக கூறினார்  வி ஏ அபிநயா புக்ஸின் ( சேத்தியாதோப்பு) உரிமையாளர்.) “ங்கா” 6, 7 புத்தகங்களும் விற்பனை ஆகியுள்ளன. 

சுஜாதா நூல்கள் கொட்டிக் கிடந்தன. 5,000 தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களோடு எனது புத்தகமும் இடம் பெற்றது சந்தோஷமளித்தது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருந்தது. புத்தகங்களைத் தேடிப் பார்க்க ஏதுவாக வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளதாக இருந்தது பவளம் ஹால். ஞாயிற்றுக் கிழமைகளில் ஓரளவு கூட்டமும் மற்ற நாட்களில் அங்கங்கே சிலருமாக இருந்தது மக்கள் வருகை.

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் வாசகர்களுக்கு நன்றி.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...