எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

வலைப்பதிவ சகோதரர்களின் புத்தக வெளியீடும் அகநாழிகை புத்தக உலகமும்.

அகநாழிகை புத்தக உலகம் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வலைப்பதிவர் சகோ . தேவன் அதன் ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிறிய அழகான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார். அங்கே  வலைப்பதிவர் மாநாட்டுக்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வலைப்பதிவ சகோதர்கள் சதீஷ் சங்கவி மற்றும் வீடு திரும்பல் மோகன் குமாரின் புத்தகங்கள் வெளியிடப்படுகிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

திருப்பூர் பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தில் (கருத்துக்களத்தில்) சிறப்பு விருந்தினராக.

டாலர் தேசமான திருப்பூரில் இயங்குகிறது பார்க் கலை அறிவியல் கல்லூரி. 1993 இல் ( ஜுலை 14 - என் பிறந்தநாள் இது ) ஆரம்பிக்கப்பட்டுள்ள இது 1600 மாணாக்கர்களைக் கொண்டு இயங்குகிறது. 1,100 இளைஞர்களும், 500 யுவதிகளும் பயில்கிறார்கள்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கற்பகம்.. வாழ நினைத்தால் வாழலாம். ..

காரைக்குடியில் ஒரு முறை செல் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. நேரம் ஆக ஆக பேசிப் பேசி பாலன்ஸ் குறைந்துகொண்டே வந்ததால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கடையில் ரீசார்ஜ் செய்யலாம் என யோசிக்கையில் வழியில் ஒரு கடையின் வெளிப்புறத்தில் ரீசார்ஜ் செய்யப்படும் என எழுதி இருந்தது. பார்த்தால் துண்டுகள் விற்கும் கடை. நுழைந்தால்.. இந்தக் குட்டிப் பெண் அமர்ந்திருந்தாள்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நூலிழைகள்...

நூலிழைகள்;-
**********************
கழட்டிய உடைகளின் மேல்
நிர்வாணமாய் மிதந்தேன்..
நைந்த உடையை
உருவிச் சென்றார்கள்,
நீரில் துவைப்பதற்கு,
பின் நெருப்பில் எரிப்பதற்கு.

புதன், 21 ஆகஸ்ட், 2013

சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENNAI EXPRESS - REVIEW )

BISCUIT ஐ நாம் பிஸ்கட் என்போம். டெல்லிக்காரர்கள் பிஸ்குட் என்பார்கள். FRIDGE ஐ நாம் ஃப்ரிட்ஜ் என்போம். அவர்கள் ஃப்ரீஈட்ஸ் என்பார்கள்.  என் சொத்தைப் பல்லை டெல்லியில் டாக்டர் பாலியிடம் எடுக்கச் சென்ற போது அவரும் அவர் மனைவியும்  தமிழர்களின் ஹிந்தி உச்சரிப்பைக் கிண்டலடிக்கும் விதமாக ஹிந்தி பேச இந்த டிஸ்கஷனில் நான் அவரிடம் என் கருத்தை வலிய சொன்னேன். ( தேவையா பல்லைப் பிடுங்கினோமா வந்தோமா என்றில்லாமல் என்கிறீர்களா.. :) அவர்களோ அசால்டான புன்னகையுடன் என் பதில் கேலியை எதிர் கொண்டார்கள்.

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி.

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி..

கொப்பனாபட்டியில் அ. மெய்யப்பச் செட்டியார் , நாச்சம்மை ஆச்சி அவர்களால் ஆரம்பித்து நடத்தபட்டது கொப்பனாபட்டி கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட வருஷம் 5040.  அதாவது 1937 இல்  கட்டப்பட்டது.

திருமதி மெய்யம்மை ஆச்சி காரைக்குடியைச் சேர்ந்தவர். திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்களின் புதல்வி. திரு மாணிக்கம் செட்டியாரின் மனைவி. அவர் அந்தக் காலத்திலேயே அங்கே படித்துக் கலைச் செல்வி பட்டம் பெற்றவர். எனவே அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்.

”தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் கொண்டு வர முடியல.. நீங்க ஆஸ்த்ரேலியாவுக்கே தண்ணீர் கொண்டு வந்திட்டீங்க “ இந்த வசனத்தைக் கேக்கும்போதே விஜயின் பலம் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு.

 படத்தில் டைட்டில் கார்டு போடும்போதே உலகத் தலைவர்கள் பத்தின சிறுகுறிப்பு மற்றும் படத்தோட( ஃபோட்டோவோட)  தலாய் லாமாலேருந்து லெனின், மாசேதுங், சே குவாரா வரைக்கும் காமிக்கிறாங்க. விஜயும் உலகத் தலைவர்களில் அடுத்த தலைவராயிட்டாரோன்னு தோணுச்சு.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரப் போராட்ட வீரர் பாலையூர் தீரன் ஆ. நெல்லியான்.

காரைக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் நினைவுச் சின்னத்துக்கு எதிரில் கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனந்த் என்று தற்போது சொல்லப்படும் அருணாசலா தியேட்டருக்கு எதிரில்தான் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது.

புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் பெற்றோமே.. தன்னிறைவு பெற்றோமா.


ல்லரசு நாடாகும் தகுதி பெற்றிருக்கிறது இந்தியா.. ஆனால் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டதா. மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் தேசம் நம்முடையது.

 “government of the people by the people and for the people,”டெமாக்ரடிக் கண்ட்ரி. அரசை நாம்தான் தேர்வு செய்கின்றோம். ஒவ்வொரு லெஜிஸ்லேடிவ் மெம்பரையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். வாக்குச் சீட்டு என்னும் வலிமையான துருப்புச் சீட்டு நம் கையில் இருக்கு. ஆனால் நமக்கு பொதுவான அரசியல் ஆர்வமோ அறிவோ இல்லை. நமக்கு யார் பணம் கொடுப்பாங்கன்னு ஓட்டுப் போடுறாங்க மக்கள். தற்காலிகமான பலன்களில் மூழ்கி நிரந்தர பலன்களை இழக்கிறார்கள். காமராஜ் மாதிரி, கக்கன் மாதிரி சேவை செய்யும் அரசியல்வாதிகள் நம் இளைஞர்களில் இருந்து வரவேண்டும். 

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

என் வீட்டுத் தோட்டத்தில்..

என் வீட்டுத் தோட்டத்தில்..

வீட்டைச் சுற்றி இருந்த சின்னஞ்சிறு தோட்டத்தில் 15 வகைப் பூ, 6 வகை மரங்களும், 25 வகையான செடிகளும் இன்ன பிற கொடிகளும்.. வளர்த்தேன். சுவற்றிலிருந்து காம்பவுண்டு சுவர்  எட்டடி இடம் இருக்கும். முன்பக்கம் பன்னிரெண்டு அடி இருக்கும்.

செடிகள் வாடினாலோ, மழையில் காற்றில் விழுந்தாலோ யாரும் கிளையை வெட்டி விட்டாலோ தாங்காது எனக்கு. தினமும் கூட்டி, புல் , களை எடுத்து பாத்தி கட்டி இத்தனை செடியா வளர்த்திருந்தேன் எனத் திகைப்பாய் இருக்கிறது இப்போது ஃப்ளாட்டுகளில் இருக்கும் போது.


முன்பு குடியிருந்தவர் பலா, கொய்யா வைத்திருந்தார். கொய்யா காய்த்ததும்  ஊரோடு கொடுத்தோம். இப்போது மரமே இல்லை. காம்பவுண்டை அசைக்குதுன்னு அடுத்துக் குடியிருந்தவர் வெட்டி விட்டுட்டார்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.

நான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நான் யாரென்று. அதுவரை நான் எக்ஸ்தான். ஒரு ஒய் க்ரோமோசோமால் ஆணாகிவிட்டேன்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சுடச் சுட சுடோகு & எண் விளையாட்டு .( SUDOKU CRAZY & KAKURO & HITORI) .. ROMANCING THE NUMBERS.

பெங்களூரு செயிண்ட் ஜான் பள்ளியில் சென்ற வாரம் ஜூலை 30 சுடோகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்றுள்ளன. தினம் பேப்பர் படிக்கும் நான் அதன் அறிவிப்பைத் தவற விட்டு விட்டேன். ( ஒரு வேர்ல்ட் சாம்பியனை இந்த ப்லாகர் உலகம் இழந்து விட்டது.. :)

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சாந்தாம்மாவிடம் பேட்டியும், பரிசும்.

அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் சாந்தாம்மாவை 2011 இல் லேடீஸ் ஸ்பெஷலுக்காக மகளிர் தினத்தில் பேட்டி எடுத்தேன். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரையாக அது லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நன்றி நறும்புனல்.

கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்
2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மாற்றமில்லாத நான்..

மாற்றமில்லாத நான்.
************************
யூக்கலிப்டஸ் சுமந்தகாற்று
சுவாசம் ஸ்தம்பித்தது..
யூடி கோலான் முடியசைய
வருகிறாய் நீ..

வெள்ளிமீனாய்த் துள்ளியநிலவு
கலங்கி ஒளிந்தது.
தங்கமீனாய்ப் பாய்ந்து
நீரில் தவழ்கிறாய் நீ.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டதா.

ஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டதா.

இந்த மகளிர் தினத்தன்று புதுக்கோட்டையில் உள்ள கற்பகவிநாயகர் ட்ரஸ்ட் குழுமத்தைச் சேர்ந்த  ஜெ ஜெ கல்லூரிகளில் ( ஆர்ட்ஸ் & சயின்ஸ், எஜுகேஷன், நர்சிங், டீச்சர் ட்ரெயினிங் )உரையாற்ற அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட 1200 மாணவிகள், 150 ஆசிரியைகள் கொண்ட கூட்டத்தில் எனது கருத்துக்கள் பலவற்றையும் வளரும் தலைமுறைப் பெண்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

சனி, 3 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு

சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

”வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!”





//// சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஆகாயத் தாமரையிலிருந்து மண்புழு உரம்.

ஆகாயத் தாமரையிலிருந்து மண்புழு உரம்.

நீர்நிலைகள்,குளம்குட்டைகள், ஏரிகள் என்று எங்கு எடுத்துக் கொண்டாலும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு அதிகம். இதனால் நீரோட்டம் தடைபடுவதுண்டு. கோவையில் திருச்சி ரோட்டின் ஆரம்பத்தில் உள்ள ஏரியிலும் , சிங்கா நல்லூரிலிருந்து திருச்சி ரோடு வரும் வழியில் உள்ள ஏரியிலும் ( இதனால் இங்கே படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளது. )

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

நன்றி கழுகு.

கழுகு கொஞ்சம் லேட்டாக வந்ததற்கு முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே சொன்னது... எல்லா நேரமும் ஃப்ரியா இருக்க முடியுமா? சில நேரங்களில் வேலைப்பளு அதிகம் சலித்துக் கொண்டது கழுகு அதன் பிண்ணனியில் உண்மை அதிகம்... ஜில்லென்று பருகிய குளிர்பானத்துக்கு பிறகு... சும்மா உக்காந்துகிட்டு இருக்காம... சும்மா ஜம்முனு பேட்டியை போடுங்க.. சும்மா கலக்கலா இருக்கும் பாருங்க.. பேட்டியை வாங்கி சும்மா பார்த்தோம்.............



கவிதைகளிலும் கருத்துக்களிலும் தெளிவான பார்வை கொண்ட...தேனம்மை லெக்ஷ்மணன் .. தன்னுள் பரவியிருக்கும் கருத்துக்களை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்...! எல்லோரையும் குறைவில்லாமால் நேசிக்கும் தேனம்மையின் கவிதைகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பவை. புதியாய் வந்து எழுதுபவர்கள் கண்டிப்பாய் தேனம்மையின் தளத்தில் கற்றுக் கொள்ள நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை... தேனம்மையின் பேட்டி இதோ உங்களுக்காக...

1 )
சும்மானு எப்படி ஒரு தலைப்பு வச்சீங்க...உங்க வலைப்பக்கத்துக்கு ?

சும்மா வீட்டுல வெட்டியாதானே இருக்கோம்னு சிம்பாலிக்கா வைச்சேன் கழுகாரே.
Related Posts Plugin for WordPress, Blogger...