எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 பிப்ரவரி, 2014

நங்கூரம்.


தத்தளிக்கிறது கடல்.
தடுமாறுகிறது படகு.
மெசையாவோ ஆணிகளுக்குள்.


பூக்கும் ரத்தத் துளிர்களைக்
கூந்தலில் துடைத்தபடி மகதலேனா.,
மாசுமறுவற்ற பாசத்தோடு.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழ் இந்துவில் அன்ன பட்சி.

தமிழ் இந்து செய்தித்தாளில்  39 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ( 2014 ) என்ன புத்தகங்கள் வாங்கப் போகின்றீர்கள் எனப் பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு  வெளியிட்டிருந்தது.

சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள்  எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

சனி, 22 பிப்ரவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் நாராயணனுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்.

முகநூலில் அருமைத் தம்பிகள் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சதீஷ் நாராயண்.

நான் எழுதுவதை எல்லாம் அவ்வப்போது படிப்பார். அதனால் பல்லவபுரம் லயன்ஸ் கிளப் செகரட்டரியான அவர் தங்கள் க்ளப் ஸ்பான்சர் செய்யும் ராம்குவார் தேவி கன்வர் வித்யாலயாவில் ஆசிரியர் தினத்துக்காக கிட்டத்தட்ட 120 ஆசிரியைகளின் முன் உரையாற்ற அழைத்தார். அது சிபிஎஸ்ஸி திட்டத்தின்படி இயங்கும் பள்ளிக்கூடம் என்பது சிறப்பு. 

அவருக்குக் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.

////உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர் யாரு.  ஏன்.?///

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.

வலைப்பதிவராக அறிமுகமான திரு. இரத்தின வேல் ஐயா என்னுடைய கவிதைகளைப் படித்து வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிறந்ததைப் பகிர்வார்கள்.

என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே  உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.


/////நான் படித்த புத்தகம்.

சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

புத்தகத்தைப் பற்றி:

திங்கள், 17 பிப்ரவரி, 2014

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.

பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா என்பது திருவிளையாடல் காலத்துக் கேள்வி.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஆயில் உபயோகித்தாலும்  கூந்தலின் ஆயுள் என்பது டி என் ஏ தீர்மானித்ததுதான் எனத் தோன்றுகிறது.  கூந்தலுக்கு நறுமணம் உண்டா எனக் கேட்க வேண்டாம். முதலில் கூந்தலே உண்டா எனக் கேட்கலாம். எல்லாருமே அநேகமா குட்டையாக முடி வெட்டிங். பேபி கட், பாய் கட் என.

சனி, 15 பிப்ரவரி, 2014

சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

இணையத்தில் வாங்க. 

www.aganazhigaibookstore.com

சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

சுபஸ்ரீ ஸ்ரீராம் துபாய் கோயில்


முகநூல் அன்புத் தங்கைகளில் ஒருவர் சுபஸ்ரீ ஸ்ரீராம். இவரின் கவர் பிக்சரில் போட்டு இருக்கும் கோலம் கண்கவரும் அழகு கொண்டது. அழகான காவி பார்டர் போடப்பட்டு தீபங்கள் வைக்கப்பட்டு ஒளிசிந்தும்.

இவரின் கைவண்ணத்தில் மின்னும் கோலம் பற்றியோ அல்லது துபாய் வாழ்க்கை பற்றியோ பகிரச் சொன்னேன். அவர் துபாயில் இருக்கும் கோயிலைப் பற்றிப் பகிர்ந்து இருக்கிறார்.ஆன்மீக ஒளி சிந்துகிறது பதிவில்.

 சுபா உங்கள்  துபாய் வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்///
///


அமீரகம்..ஏழு மாநிலங்களை கொண்டது. ஆங்கிலத்தில் யுனைட்டடு அராப் எமிரேட்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.(United Arab Emirates short
form U.A.E).Capital Abu Dhabi(7 states Abu Dhabi, Ajman, Dubai, Fujairah, Ras al-Khaimah, Sharjah,
Umm al-Quwain.)

முழுக்க முழுக்க அரபுமுஸ்லீம் மக்கள் வசிக்கும் நாடு. இங்கு பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்கள் இருக்காங்க.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

11. எனக்கென ஏற்கனவே..

எனக்கென ஏற்கனவே இருப்பவள் இவளோ.. இந்தப் பாடலில் பிரசாந்த் சிம்ரனுக்காக லைலாவைக் காதலிப்பார். அதனால் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் நகரும்போது ஓடிவந்து ஃபுட்போர்டில் ஏறிப் பார்த்துக் கொண்டே வருவார். இருவரின் கண்கள் பேசும் பாஷையும் அழகு.

12. மலர்களே மலர்களே..

பிரபுவும் நக்மாவும் பாடும் பாடல். நக்மாவின் கண்களில் ஒளிவிடும் காதல் ஏக்கம் இந்தப் பாடலுக்கு மிகுந்த அழகூட்டும். மேலும் காட்சியமைப்பும் இரு இரு பிரபுதேவாக்கள் மாற்றி மாற்றி வருவதும் நக்மாவைச் சூழ்ந்து எந்தத் திசையிலும் பிரபுதேவாவே இருப்பதுமாக சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். கால்கள் வைக்கும் தடங்களில் எல்லாம் தாமரை மலர்வது எக்ஸ்ட்ரா அழகு. 

13. புத்தம் புதுக் காலை.

எப்பக் கேட்டாலும் புத்துணர்வை ஊட்டக் கூடிய பாடல்.  கார்த்திக்கும் ராதாவும் அறிமுகமான படம்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஒரு கோபுர (நி)தரிசனம்:-

ஒரு கோபுர (நி)தரிசனம்:-

ஆழ்கடல் தன்னுள்ளே
கரை தேடும்
அலைத் தலை நிமிர்த்தி.

செங்கால் நாரைகள்
நுரைப் பூவிலிருந்து
கால் எவ்விப் பறக்கும்.

மின்சாரக் கம்பிகளில்
கரிச்சான் குருவிகள்
தேன்நிலவு கொண்டாடும்.

சனி, 8 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். திரு.வெற்றிவேல் .தேசியமா.. மாநிலமா..

முகநூல் நண்பர் திரு. வெற்றிவேல் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். அரசியலில் கூர்நோக்குப் பார்வை உள்ளவர். 

ரஜனி படத்துக்கு சிவாஜி என்று பெயர் வைத்ததில் கோபமடைந்த அதி தீவிர ( நடிகர் திலகம் ) சிவாஜி கணேசன் ரசிகர்.


சௌதியில் வசிக்கும் அவர் இசை அரசியல் பற்றி எழுதி இருக்கிறார்தமிழக அரசியலில் அவரின் ஆதரவு எப்பொழுதுமே யாருக்கு எனத் தெரியும். (நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ) தேசிய அரசியலில் யாரை ஆதரிக்கிறார் என்பதற்காக இந்தக் கேள்வி.

 /// தேசிய அளவுல எந்தக் கட்சியை ஆதரிக்கிறீங்க.. ஏன். . ///


வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.


1. அழகே வா --  ஆண்டவன் கட்டளை.

ஆண்டவன் கட்டளையில் வரும் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம்  பார்க்கும்போதெல்லாம் என்னை என்னவென்று தெரியாத இனம் புரியாத மயக்கத்திலும் சோகத்திலும் ஆழ்த்திவிடும் . தேவிகாவின் அழகும், சிவாஜியின் தவிப்பும் சொல்லொணா எண்ணங்களை விதைத்துச் செல்லும்.

2. கொஞ்சும் சலங்கை ஒலி நடனங்கள். -- கொஞ்சும் சலங்கை.

மிக அருமையான நடனப் பாடல். இதன் காட்சியமைப்பும் அந்த சபையும் குமாரி கமலாவின் நாட்டியமும் கண்முன்னே விரிகிறது.

3. ஒளியிலே தெரிவது தேவதையா -- அழகி.

மோனிகா நடித்த படங்களிலேயே மிக அழகான படமும் பாடல் காட்சியும். பத்தாயம்/ நெல்லுக் குதிரும் அந்த இருட்டும்  சாணி அப்பிய தரையும் மெழுகு வெளிச்சமும் உள்ளபடியே ஒரு தேவதையைப் பேரழகியாகக் காட்டிய பாடல். 

வியாழன், 6 பிப்ரவரி, 2014

நண்பர் நரேந்திர குமாரும் தோழர் மபாவும் வாங்கிய நூல்கள்.

நம் தோழி எடிட்டர் முருகேஷ் பாபு அவர்கள் குடும்பத்தோடு பின்னணியில் இருப்பவர் நண்பர் நரேந்திர குமார்.
ஒரு முறை காரைக்குடி வள்ளல் அழகப்பர் பதிப்பகத்தைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள் என் கணவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தக் காலத்தில் மாசத்துக்கு 3000/- ரூபாய்க்குக் கூட  உடைகள்  வாங்குகின்றார்கள் இளைஞர்கள். ஆனால் வருடத்துக்கு 300 ரூபாய்க்குக் கூடப் புத்தகம் வாங்குவதில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார். 

புதன், 5 பிப்ரவரி, 2014

அன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.

என் வதனப் புத்தகத் தங்கை புவனேஷ்வரி மணிகண்டன்.  என் அன்ன பட்சி கவிதைத் தொகுதி வெளியீடு ஈவண்ட் போட்டவுடன் காலையே வந்து செல்வதாகச் சொன்னவர் மாலையில் எனக்காக வந்தார். முதலில் வந்து கரம்பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் அன்று வாங்கிய நூல்களும் அன்னபட்சி பற்றிய அவரது நிலைத்தகவல்களையும்  இங்கே பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி புவனா. 

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ராமலெக்ஷ்மி ராஜனின் “அடை மழை. “



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

செட்டிநாட்டு உணவுகளின் முக்கியத்துவம்:-
செட்டிநாடு என்றாலே கட்டுக் கோப்பான வீடுகளுக்கு அடுத்தபடியாக அவர்களின் விருந்தோம்பல்தான் ஞாபகம் வரும். செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை.

சனி, 1 பிப்ரவரி, 2014

சாட்டர்டே போஸ்ட். ராஜ் சுந்தர். பெல்ஜியம் பாட்மிண்டன் க்ளப் ப்ரசிடெண்ட்.

Agnieszka Jean Villanueva -- AGA வுடன். அகா ஒரு டோர்னமெண்டில் என் பார்ட்னர் மற்றும் உலக ரேங்கிங்கில் முன்னணியில் இருக்கிறாள். அன்றைய மாட்சை வென்றது அவள்தான். அவளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். http://masterbad.skynetblogs.be/archive/2007/08/20/profil-jean-villanueva-czerwinska-agnieszka.html
எங்கள் லெக்ஷ்மி காலனியில் எங்கள் தம்பிகளோடு வளர்ந்து இன்று பெல்ஜியம் பாட்மிண்டன் கிளப் பிரசிடெண்டாக உயர்ந்திருக்கும் ராஜ் சுந்தரை முகநூலில் சமீபத்தில்தான் சந்தித்தேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...