எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 மார்ச், 2014

சொர்க்கத்தின் எல்லை நரகம்.



சொர்க்கத்தின் எல்லை நரகம் :-
=================================

மீனாட்சிக் குட்டிக்குச் சந்தோஷமாயிருந்தது. அவளின் சரோசாச்சி ஆபீஸுக்குப் போயிட்டாக. அய்ய்ய்ய். இன்னைக்கு என்ன இந்தக் குளிக்குற சோப்பையும், சீப்புப் பெட்டியையும், பவுடர் டப்பாவையும் வெளிய வச்சுட்டுப் போயிட்டாக.

அடுப்படிக்குப் போய்ச் சமயல் பண்ணின சாமான்களை எல்லாம் வெளக்க எடுத்து வச்சுப்பிட்டு, எல்லாச் சாமான்களையும் உள்ளே வெச்சுப் பூட்டிப்புட்டுத் தொவைக்குற துணி, வெளக்குற சாமான், மத்தியானம் குட்டிக்குத் திங்கக் கொளகொளத்துப் போன நேத்தைச் சோறும், சுண்டக்குழம்பும், மத்யானம் இட்டலிக்கு ஆட்ட அரிசியும், உளுந்தும் ஊற வைத்துவிட்டுப் போயிருந்தாள் சரோசாச்சி.

சனி, 29 மார்ச், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ஒரு சிவில் இஞ்சினியரும், சில பல்புகளும்.

முகநூலில் என் அன்புத் தங்கைகளுள் ஒருவர் ஸ்ரீதேவி செல்வராஜன். , இவர் ஒரு சிவில் இஞ்சினியர். எவ்ளோ பெரிய சிவில் இஞ்சினியரா இருந்தாலும் தன் அக்கா பெண்களிடம் ( ஒன்றாவது படிக்கும் கீதா, நாலாவது படிக்கும் தர்ஷிணி யிடம் )வாங்கிய பல்புகளை அலுக்காமல் சலிக்காமல் முகநூலில் பகிர்வார்.

நமக்கும் நம் அண்ணன் தம்பி அக்கா தங்கை பிள்ளைகளிடம் இதுபோல பல்ப் வாங்கிய பெருமை இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறு அந்த பல்புகளை நம்மேல் அவ்வப்போது மாட்டி ஒளிவிடச் செய்து மகிழ்வார்கள். !! :).

வெள்ளி, 28 மார்ச், 2014

சிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 27 மார்ச், 2014

தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்



41.ஒரு மாலை இளவெய்யில் நேரம். 
சூர்யாவின் கஜனி  படப் பாடல்.அழகும் குறும்பும் துள்ளும் அசினும், இளமையான சூர்யாவும் காட்சியழகு.



42. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் 
கனகா சிவாஜி காம்பினேஷனில் மிகவும் ரசிக்கும் பாடல். ரொம்ப அந்யோன்யமும் அன்பும் வாஞ்சையும்  கொஞ்சலும் வழியும் பாடல்.



43. காடு திறந்து கிடக்கிறது.-- வசூல் ராஜா 
தலை கூட யார் நடிச்சாலும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னான்னு வொர்க் அவுட் ஆகும் என்பது என் தலைவரின் அசைக்க முடியாத கருத்து. அதே போல சிநேகாவுடன் பாடும் இந்தப் பாடல் செம அழகு. இளமையும்  அழகும் அன்பும் கொட்டிக் கிடக்கும் தமிழ் நடிகை சிநேகா. அவர் இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்..


புதன், 26 மார்ச், 2014

அன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எனக்கு பெருமாள் தாயார் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் ரத்தினவேல் ஐயா அவர்கள். அவருடனும் அவரது துணைவியார் உமா அவர்களுடனும் பேசி இருக்கிறேன்.

வலைத்தளக் கவிதைகளைப் பார்த்துவிட்டு சமுதாய நண்பன் என்ற இதழுக்கு என்னுடைய கவிதைகளைக் கேட்டு வாங்கிப் போடச் செய்ததுமல்லாமல் எனக்கு ஒரு வருடத்துக்கான சந்தாவும் கட்டி அந்தப் புத்தகங்கள் என்னை அடையுமாறு செய்திருக்கிறார். என்னுடைய 9 கவிதைகள் சமுதாய நண்பனில் வந்திருக்கின்றன.

செவ்வாய், 25 மார்ச், 2014

அவள் ஆண்டாள்.

இன்று ஆண்டாளைப் பற்றி
அறிந்து கொள்ள முடிந்தது என்னில்
குசேலனாய்க் கட்டி வந்த
சிந்தனை அவல்கள்
துணியோடு துணியாய்ப் போனது.
பார்வைத் தேங்காய்த் துண்டு சிதற
கோயில் படிக்கட்டோரம் கால்முடக்கி
உறவு யாசகம் அபகரிக்க
கோவணப் பிச்சைக்காரனாய் நான்.

திங்கள், 24 மார்ச், 2014

புத்தக வாசம்:-



புத்தக வாசம்
==================

கண்ணை மூட முடியவில்லை. அந்தப் புத்தக நிலையத்தின் வாசம் முழுக்க உடம்பெல்லாம், மனசெல்லாம், அப்பிக் கொண்ட மாதிரி இருந்தது. தேடித் தேடி எடுத்த புத்தகம் இது. பன்னிரண்டு ரூபாய் முட்ட முழுசாய். என்னுடைய தகுதிக்கு அது அளவுக்கு மீறியதுதான். அப்பா பணம் அனுப்புவது டியூஷன் ஃபீஸுக்கும் மெஸ்ஸுக்கும்தான்.

அதிலேயும் ’மில்க்கும் எக்கும்’ வாங்காமல் இப்பிடித் தகிடுதித்தம். அப்பா வாராவாராம் ”ஏம்மா எக்ஸ்ட்ராஸ் எல்லாம் எடுக்குறியா.?”. ஓ.. ரெகுலரா எடுக்குறேம்பா “ . ”பிள்ளை மெலிஞ்சுக்கிட்டே போகுது, முடியும் இப்பிடிக் கொட்டுதே ”. தனக்குக் கவலைப்பட ஆளிருப்பதாலேயே வெளியில் ஒரு நமுட்டுச் சிரிப்பு உதிர்க்கும்.

அம்மாவுக்குத் தெரியும் நான் பாங்கில் பணம் போடுவது. ரொம்ப நாள் ஆசை. நாலாங்கிளாசிலிருந்தே ’புத்தகக் கடையிலிருக்கிற அத்தனை புத்தகத்தையும் வாங்கிவிட வேண்டும். ‘. பள்ளிக்கூடத்திலேயே வருடா வருடம் புது நோட், புக்ஸ் எல்லாம் பீஸ் கட்டி வாங்கும்போது விடிறி அடிப்பதாய் ஒரு கையில் பிடித்து மறுகையால் படபடவென்று பிரித்து மூக்கருகில் வைத்து அத்தனை புத்தகங்களையும் சலிக்காமல் வாசம் பார்ப்பேன்.

சனி, 22 மார்ச், 2014

சாட்டர்டே போஸ்ட். மணிமேகலையும் தன்னம்பிக்கைத் தாத்தாவும்.

என் அன்புத் தங்கைகளில் ஒருவர் மணிமேகலை.  பட்டிமன்ற நடுவராக அவரின் உரை பற்றி , அவரின் தலைப் பொங்கல் அனுபவங்கள் பற்றி எல்லாம் பத்ரிக்கைகளிலும் என் வலைத்தளத்திலும் பகிர்ந்து இருக்கிறேன்.

அவரிடம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டேன். அவரின் பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.

//// உங்க அலுவலகம் சம்பந்தமா மறக்க முடியாத நிகழ்வு எது.. அது உங்க வாழ்க்கையை மாத்துனுச்சா..///

வெள்ளி, 21 மார்ச், 2014

தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.


31.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
தியாகராஜனும் சரிதாவும் பாடும் பாடல். மிக அழகான காட்சியமைப்பு. எப்போதும் போலவே நான் தமிழ்ப் பாடல்களின் வரிகளுக்கும் காட்சியமைக்கும் அடிமை.


32. தேன் பூவே பூவே வா 
அம்பிகாவும் லதாவின் சகோதரர் ராஜும்பாடும் பாடல். சந்தத்தோடு அழகாக அம்பிகா அபிநயம் செய்வது பிடிக்கும்.


33. கண்ணாமூச்சி ஏனடா 
ஐஸ்வர்யா பாடும் பாடல். இவரின் நடனத்துக்கு நான் அடிமை. மிக அழகான முகபாவங்களோடு பாடுவார். ஆட்டமும் காட்சியமைப்பும் இனிமை. மம்முட்டி இவருக்கு ஜோடி.


வியாழன், 20 மார்ச், 2014

பத்மஜா நாராயணனின் தெரிவை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 15 மார்ச், 2014

பண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்




பண்ணையாரும் பத்மினியும். :_

கார் என்பது இன்றைய மத்தியதரக் குடும்பங்களின் கனவாக இருக்கிறது.ஒரு கார் இருந்தா போதும் எங்க வேணாலும் போகலாம். இந்த பஸ், ட்ரெயின் ப்ளைட் டிக்கெட் வாங்கும் அவஸ்தை எல்லாம் இல்லை. ஆனால் பெட்ரோல் விலைதான் ஏறிப் போச்சு. செல்ஃப் ட்ரைவிங் செல்லத் தெரியாவிட்டால்.ட்ரைவரிடம் விட்டால் இன்னும் என்னென்ன கேடு வேறு அதற்கு நிகழுமோ. இந்த பயமும் அனைவரிடமும் உண்டு. அனைவருக்கும் இருக்கும் இந்தக் கார் ஆசையை மெயின் தீமாக வைத்துக் கதை சொன்ன அருண் குமாருக்கும் தயாரித்த கணேஷ் குமாருக்கும்  முதலில் ஒரு ஹேட்ஸ் ஆஃப். 

 எங்கள் அப்பத்தா வீட்டு ஐயாவிடம் 40 கார்கள் இருந்ததாம். ஆஸ்டின், செவர்லெட், பத்மினி , ப்ளைமவுத், அம்பாசிடர் என்று. அப்ப உள்ள கார்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருப்பதால் அதன் உள்ளே பிள்ளைகள் அமர ரெட்டு சீட்டுப் போட்ட மடக்கு ஸ்டூல்கள் இன்னும் என் அம்மா வீட்டில் இருக்கின்றன. 

சாட்டர்டே ஜாலி கார்னர், ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள்.




  • முக நூல் நண்பர் ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள் கேட்டோம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக. அவரின் பதில்கள் சுவாரசியம். நீங்களும் படிச்சு ரசியுங்க. 

    இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பக்கம் தானே தனியா வீட்டைக் கட்டி வாழ்ந்தவர் இவரு .

    #1 : இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எப்பிடி இருக்கு. இதப் பத்தி நிறைய சொல்லுங்க. “

வெள்ளி, 14 மார்ச், 2014

தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

21. தனியே தன்னந்தனியே.
ரிதமில் வரும் இந்தப் பாட்டு சொல்லொணா சோகத்தைக் கிளப்பும். மீனா தனியாக தன் மகனோடு ஒரு வைபவத்துக்கு வரும்போது இந்தப் பாடல் இடம் பெறும். இதில் நடனம் சிறப்பாக இருக்கும். அருமையான லிரிக்ஸ்க்காகவும் பிடிக்கும்.

22. பூமாலையில் ஓர் மல்லிகை

சிவாஜி கே ஆர் விஜயா. நம்ம ஃபேவரைட் ஜோடியின் பாடல். கணவன் மனைவி போல மிகப் பாந்தமாக இருக்கும் இந்த ஜோடி. பாடலும் இணைவும் இழைவும் குழைவும் அப்படியே. விஜயாம்மாவின் சிரிப்புக்கு நான் அடிமை. அந்த மச்சத்துக்கும்.

23. my bro Naveen Kbb' film song..நெல்லை சந்திப்பு--  இதுதானே எங்கள் வீடு. சந்தோஷம் பொங்கும் கூடு. தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..

சகோதரர் நவீன் கிருஷ்ணாவின் படப்பாடல். மத்தியதரக் குடும்பத்தின் உறவுகளும் நெகிழ்வுகளுமாக மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

வியாழன், 13 மார்ச், 2014

தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-


தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-
*******************************************
கமலஹாசன் குமுதத்தில் எண்பத்தைந்தில் ”அவரோகணம்” என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதன் கதாபாத்திரம் தன்னைப் போலவே ஆரோகணம் அவரோகணம் செய்யக்கூடியதாக தன்னைப் போன்ற ஒரு ஆணை நேசிப்பதான கதை. வேட்டையாடு விளையாடுவில் அப்படிப்பட்ட இருவர் வில்லன் காரெக்டர்களாக இருக்க உன் காதலி என்று அமுதனிடம் இன்னொரு ஆணைப் பற்றிக் கூறி அடிப்பார்.

அதன் பின் ஸ்டெல்லா புரூஸ் கதை ஒன்று வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவன் பற்றியது. அதில் அவன் ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஆசையில் ஓடிப்போவதாக வரும். ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு அவன் ஓடிப் போவதும் உறவினர்கள் தேடியலைந்து கூட்டி வருவதுமாக இருக்கும் அக்கதையில் முடிவில் அவன் தன் தாத்தா கேட்டுக் கொண்டதற்காக ஓடிப் போய்விடுவான். அவன் தாத்தாவுக்கும் வேறொரு ஆணுக்குமான உறவை அவன் கண்ணுற்று விடுவதால் இம்முறை அவனது தாத்தாவே அவனுக்குப் பணம் தந்து போகச் சொல்லி இருப்பார்.

புதன், 5 மார்ச், 2014

உமாமோகனின் வெய்யில் புராணம்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 4 மார்ச், 2014

முகநூல் ட்ரெயிலர்.

இத்தனை நாளா முகநூலில் இருந்து என்ன சாதிச்சீங்கன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு மார்க் நம்மளோட வொர்க்கை எல்லாம் படமா சுட்டு வச்சிருக்காரு. அத இங்கே உங்களுக்காகப் பகிர்ந்திருக்கேன். நன்றி மார்க் அண்ட் டீம். :)




திங்கள், 3 மார்ச், 2014

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.

சனி, 1 மார்ச், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ராஜும்(ஜ்சிவாசுந்தரும்) ரஜனியும்.


என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சகோ ராஜ் சிவா சுந்தர். முதன் முதலாக ”ங்கா ” கவிதைத்தொகுதியை வெளியிட்டுக்கு ஈரோட்டுக்கு அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களின் மகன் அருண் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பக்கத்தில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று விநாயகர் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியபின் வெளியீட்டுக்கு அழைத்து வந்தார்.

முகநூல் தவிர ( அதிலும் ரஜனி படம்தான் ப்ரொஃபைலாக பல காலம் வைத்திருந்தார் அப்போது  ) வேறெங்கும் பார்த்தறியாத அவரை முதன் முதலாக அங்கேதான் பார்த்தேன். சொந்த சகோதரி போல அந்தத் தருணத்திலிருந்தே அன்பும் பாசமும் செலுத்தி வருகிறார். தினமும் இவர் ஸ்டேடஸ் ஒன்றையாவது ஹோம்பேஜில் கட்டாயம் பார்ப்பேன். எல்லாமே அன்பும் , நேர்மையும், நற்குணங்களைப் போதிப்பதாகவும் இருக்கும். ரஜனிமேல் அபரிமித பாசம். எளிமையும் அன்பும் பண்பும் கலந்த சகோதரரிடம் நம் வலைத்தளத்துக்காக ஒரு கேள்வி அவருக்கும் நமக்கும் பிடித்த ரஜனி பற்றி. :)

//// நீங்க ரஜனியைப் பார்த்த ( படத்துலதான் ) முதல் தருணம் எது. எப்போலேருந்து அவரோட தீவிர விசிறியானீங்க..///

 ரஜினி..

Related Posts Plugin for WordPress, Blogger...