எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், கேஜிஜியின் காரணப்பெயர்/பெயர்க்காரணம். :)

வலையுலகில் மதிப்பிற்குரிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் கேஜிஜி  எனப்படும் K G GOWTHAMAN கேஜி கௌதமன் சார். இவரும் ஸ்ரீராமும் (இன்னும் சில நண்பர்களும் என நினைக்கிறேன்) இணைந்து  எங்கள் ப்லாக் என்னும் வலைப்பதிவில்  சிறப்பான பதிவுகள் போட்டு வருகிறார்கள். அதில் பாசிட்டிவ் பதிவுகளையும் புகைப்படப் பதிவுகளையும் அவ்வப்போது படித்து வருவேன். என் வலைப்பதிவிலும் இவர்கள் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வருகிறார்கள். ( என் இன்றைய நிலைக்கு வலைப்பதிவர் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  இருக்கிறது . அதற்கு நன்றிகள் )

வலைத்தளத்தில் கேஜி கௌதமன் சாரின் முழுப்பெயர் சட்டென்று கண்ணில் படவில்லை. ஆனால் முகநூலில் இவர் பெயரைப் பார்த்தவுடன் பரிச்சயம் ஆனதாகத் தெரிந்ததும் நட்பு அழைப்பு விடுத்தேன். அட நம்ம கௌதமன் சார் இவங்க என்று தெரிந்தது. தன் குழந்தைகள்/ பேரப்பிள்ளைகள் பேரை இப்பவெல்லாம் ரெண்டு எழுத்துக்கு மேல வைக்கிறதில்லை மக்கள். அதுவும் AA என்று இரண்டு ஏ வரும்படி ஆதித்யா, ஆருஷ், ஆரத்தி, ஆதி என்று வைக்கிறார்கள். இதுல கல்யாணமகாதேவி கோபால கௌதமன்னு சார் முகநூலில் பேர் வைச்சு இருக்காங்களே அதுக்கு என்ன காரணமாக இருக்கும். ஒரு வேளை அம்மா அப்பா பேரையும் சேர்த்து வைச்சிருப்பாங்களோ ஸ்கூல்ல எல்லாம் எப்பிடி கூப்பிட்டு இருப்பாங்கன்னு ஒரே யோசனை

வியாழன், 29 மே, 2014

மொட்டு விரியும் சத்தம். கன்னடக் கவிதைகள் தமிழில்.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 28 மே, 2014

கனக்கும் இறக்கைகள்.

பறந்து பறந்து
களைத்து வந்தமர்கிறது
ஒரு பறவை.
இளைப்பாறுதல் தந்த கிளையில்
ஒட்டிக் கொள்கின்றன கால்கள்.
இருப்பிடம் கிடைத்த இன்பத்தில்
சோர்ந்திருக்கின்றன இறகுகள்.
வேண்டும்போதெல்லாம்
கனிகள் கிடைக்கின்றன வாய்க்கருகில்.
கிறங்கிக் கிடந்த ஒரு கணத்தில்
யோசிக்கத்துவங்குகிறது பறவை,

செவ்வாய், 27 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் நண்பர் திரு KT. இளங்கோ.

இளங்கோ சாரைப் பற்றிய அறிமுகம்
என்னுடைய முகநூல் நண்பர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திரு இளங்கோ அவர்கள். அவர் மட்டுமல்ல அவரது மனைவி திருமதி பத்மா கூட என் அன்பிற்குரிய தோழி.

என்னுடைய சாதனை அரசிகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு தம்பதியராய் வந்து சிறப்பித்தார்கள். அடுத்து வெளியான என் “ங்கா” கவிதைகளை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வந்து வாங்கி அதற்கு விமர்சனமும் எழுதி அனுப்பினார்கள்.

திங்கள், 26 மே, 2014

அப்பத்தா.



அப்பத்தா:-
*******************
அவளுக்குக் கோபமாய் வந்தது. ரொம்பக் கோபம். நேத்துவரை சிட்டி வெளையாடுறதுக்காக அவள் வீட்டுக்கு வந்து ஓடிக் கொண்டிருந்த அந்த வள்ளிக் குட்டி இன்னைக்கு சன்னல் வழியாக இவள் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றது. ‘சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி வரும்ல.. அப்பப் பார்த்துக்கலாம்.’.

இவள் திரும்பி வந்து அப்பத்தாவின் தலை மாட்டில் நின்று எக்கிப் பார்த்தாள். ஆயா வீட்டிலிருந்து அப்போதான் அப்பத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். அப்பத்தா மேல் அவ்வளவு பிரியம் என்றோ வெறுப்பு என்றோ சொல்வதற்கில்லை. இருந்தாலும் அவளுக்கு அப்பத்தாளைப் பிடிக்கும்.

சனி, 24 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கீதா மதிவாணனின் அம்மாவும் மாமியாரும்.

கீதா மதிவாணன் எனக்கு வலையுலகத் தோழி. ஆஸ்த்ரேலியாவில் வசித்து வரும் இவர் சிறுகதைகள் அற்புதமாக எழுதுவார். என் வலைத்தளத்தில் பின்னூட்டம் மூலமாக அறிமுகமானாலும் தன் சிறப்பான சிறுகதைகளால் கவர்ந்தவர். இவரது சிறுகதைகள் திருநெல்வேலி பதிப்பு தினமலர் பெண்கள் மலரில் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்துக் கேட்டாலும் அசராமல் அழகான கதைகள் அனுப்புவார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக சில கேள்விகளை முன் வைத்தேன். அவர் இந்தக் கேள்வியை செலக்ட் செய்து பதிலளித்துள்ளார்.
 
//// உங்க மாமியார்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன. அம்மா கிட்ட பிடிச்சது என்ன. (ரெண்டு பேர்கிட்டயும் பிடிக்காதுன்னும் நினைக்கிறதையும் விரும்பினா பகிர்ந்துக்கலாம்.) ///

அவரின் பதில்.

கேள்வி: உங்க மாமியார்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன? அம்மா கிட்ட பிடிச்சது என்ன? 

வெள்ளி, 23 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் இயக்குநர் திரு செல்வகுமார்.

இயக்குநர் திரு ஐஎஸ் ஆர்  செல்வகுமார் நான் 2009இல் வலைப்பதிவு எழுத வந்ததில் இருந்து நண்பர். என்னுடைய முதல் இரண்டு புத்தகங்களையும் வடிவமைத்தவர் அவர். என்னுடைய இரு கவிதைகள தனி இசைப்பாடல்களாகக் கொண்டு வந்தவர். இன்னும் பலருடைய கவிதைகளுடன் என்னுடைய நாலு வரிகளையும் சேர்த்து மூன்றாவதாக ஒரு பாடலையும் கொண்டு வந்திருக்கிறார்.

செவ்வாய், 20 மே, 2014

குறள் சூடி உமையாள்..!!!



குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்  கேளாதவர்.

இங்கே குறள் இனிது எனலாம். 3 வயதுப் பெண் குழந்தை ஒரு உபன்யாசகராக, சொற்பொழிவாளராக இருக்க முடியுமா.. அந்த அதிசயத்தைக் காண நேர்ந்தது துபாய்க்கு  ஒரு குடும்ப விழாவுக்காகச் சென்றிருந்தபோது.

ஒரு 3 வயதுக் குழந்தை குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அவளை அறிமுகப்படுத்தி மேடையேற்றியபோது மிக அழகாக மேடைக்கூச்சமில்லாமல் மேடையேறி மைக்கைப் பிடித்துப் பேசினாள்.

திங்கள், 19 மே, 2014

ப்ரொஃபஸர்.



ப்ரொஃபஸர்.
================

ப்ரொஃபஸர் அந்தக் கண்ணாடிக் கதவுகளின் உட்புறத்தில் துல்லியமாய்த் தெரிந்தார். வெள்ளை வெளேரென்று ஜிப்பாவும், பாண்டும் அணிந்து கொண்டு. கிரிஸ்டல் போலப் பல்வரிசை மின்னியது. கருட மூக்குடன் அலையலையாய்ப் புரண்ட சுருள் முடிகளுடனும் அவர் கிளாஸ் எடுப்ப்தே அமர்க்களமாய் இருக்கும். கையில் சாக்பீஸுடன் அவர் தெர்மோ டைனமிக்ஸை எடுக்கும்போது பார்த்தால் செங்கோல் ஏந்தின அரசன்தான். அந்தக் குரலின் கம்பீரத்தில் மயங்கிக் கட்டுண்டு மாணவர்கள் வகுப்பை ஒழுங்காய் அட்டெண்ட் செய்வார்கள்.

அந்த ஹால் முழுக்கக் குரல் தெறித்து எதிரொலித்து ‘ உன்னை எங்கும் செல்ல விடமாட்டேன் ‘ என்று கையைப் பிடித்து வகுப்பில் உட்கார வைக்கும். ”சந்தேகங்கள் பாடங்களில் ஏற்பட்டால் உடனே வந்து என்னிடம் கேளுங்கள்.,”  என்று அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக சந்தேகம் வந்ததோ இல்லையோ அவரின் எக்ஸ்ப்ளனேஷன்களைக் கேட்க வேண்டியே அவரைச் சுற்றிக் கும்பல் குழுமிக் கொண்டேயிருக்கும்.

சனி, 17 மே, 2014

சாட்டர்டே போஸ்ட். புத்தகங்கள் வாழ்வு பற்றி பால கணேஷ்.



வலைத்தளத்தில் அறிமுகமாகி முகநூலிலும் நண்பரானவர், அன்பிற்குரிய சகோதரர் பாலா என்ற பால கணேஷ் . இவர் என்னுடைய பெரும்பாலான இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தது மட்டுமல்ல. தன் வலைத்தளத்திலும் ”சும்மா”வுக்குத் தனி இடம் கொடுத்துள்ளார்கள்.! என் முன்னேற்றத்திலும் வளர்ச்சியும் இவரின் பங்கும் உள்ளது. நன்றி பாலா.

என் புத்தக வெளியீடுகளுக்கு வந்து ஆதரவு அளித்து இரு நூல்களையும் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். தன்னுடைய தங்கத்தாமரைப் பதிப்பகத்தின் மூலம் மகாபலிபுரம் உங்களுடன் வரும்  ஒரு வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இதற்கு நான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். மேலும் எம்ஜியார் பற்றியும் ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறார். 

வெள்ளி, 16 மே, 2014

தேன் பாடல்கள் தேடலும் துடிப்பும்

111.தேடினேன் வந்தது.

ஊட்டி வரை உறவில் கே ஆர் விஜயாம்மா ஆடும் பாடல். சிவாஜி மறைந்திருந்து புகைப்பிடித்தபடி பார்த்துக் கொண்டிருப்பார். மிக அழகாக நடனமாடுவார் கே ஆர் விஜயா பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

112. சிபிஐ எங்கே. தேடச் சொல்லு கொஞ்சம்.

சூர்யா ஜோதிகா முதன் முதலில் தேடி ஆடிய பாடல். மிக ஃபாஸ்டான லிரிக்ஸோடு அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும் படம். 

113. பார்வை ஒன்றே போதுமா.

 ஜெய்சங்கர் பாடும் பாடல். மிக அருமையான பாடல் வரிகளுக்காகப் பிடிக்கும். எல் ஆர் ஈஸ்வரியும் குரலும் அற்புதமாக இழையும். இசையும் பாந்தமாக அமைந்திருக்கும்.

புதன், 14 மே, 2014

புத்தகத்திருவிழாக்களில் & புத்தக நிலையங்களில் அன்ன பட்சி.

அன்ன பட்சி நூல் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. இது எனது மூன்றாவது நூல். முதல் நூல் ”சாதனை அரசிகள்”. இரண்டாவது ”ங்கா”. மூன்றாவது ”அன்ன பட்சி”.

திங்கள், 12 மே, 2014

ரக்‌ஷா பந்தன். தினமலர் வாரமலரில்.



ரக்‌ஷா பந்தன்.
**************************************
சௌதாமினி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்றுடன் 18 நாட்கள் இருக்குமா. வியாழனோடு வியாழன் எட்டு அடுத்த வியாழன் பதினைந்து . வெள்ளி பதினாறு சனி பதினேழு, ஞாயிறு பதினெட்டு. இருக்குமென மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் கௌசிக் அவளைக் கைபிடித்தது போலிருந்தது. அதற்குள் பதினெட்டு நாட்கள் ஓடிவிட்டனவா.. அவளால் நம்பத்தான் முடியவில்லை.

ஜப்பான் கடிகாரத்தில் ஐந்து முறை குயில் வந்து எட்டிப் பார்த்துக் கூவிவிட்டுப் போனது.

சனி, 10 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கோபு சாரும் ப்ளாக்கியும் தாலியும்.

வலையுலக நண்பர்களில் நான் மிகவும் மதிக்கும் நண்பர் கோபால் சார் என நான் அழைக்கும் வை கோபாலகிருஷ்ணன் சார். (நான் மதிக்கும் மிகப் பெரும் பதிவரான தாங்கள் என் இன்றைய வளர்ச்சியில் பெரும் பங்கு பெற்றிருக்கிறீர்கள், அதற்கு முதலில் நன்றிகள். )


இவரின் பதிவுகளும் சிறுகதைகளும் அருமையாக இருக்கும். பதிவுகள் ரொம்ப விலாவாரியாக இருக்கும். நகைச்சுவை தூவப்பட்ட நல்ல சுவையான பதிவுகள்  இவருடையவை. உரத்த சிந்தனை அமைப்பில் இவருடைய கதைக்கு ( பாட்டி சொல்லும் கதைகள் - ப்லாகர் ருக்கு அம்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழா)  சிறப்பு விருது வழங்கப்பட்டது குறித்து முன்பே பதிவிட்டிருக்கிறேன். 

வெள்ளி, 9 மே, 2014

தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.

101. விழிகளின் அருகினில் வானம்.

ப்ரசன்னாவும் நவ்யா நாயரும் நடித்த பாடல்காட்சி. மிக அருமையான பாடல் வரிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். ஒரு நட்பு மெல்லிய காதலாக உருவெடுக்கும் தருணத்தை உறுத்தாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. இருதயமே துடிக்கிறதா. துடிப்பதுபோல் நடிக்கிறதா என்ற இடம் அழகு.

102. சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா.
நாகார்ஜுனும் சுஷ்மிதா சென்னும் ஆடும் அழகுப் பாடல் காட்சி. நதிக்கரைஓரம் செட்டிங்ஸும் இருவரின் உடையும் அழகு. வல்லினமும் மெல்லினமும் சேர்ந்ததுபோன்ற ஒரு தன்மை பாடல் முழுதும் எழில் சேர்க்கும்.

103. மழையே மழையே.
எஸ்பி பி யின் சந்தனக் குரலில் அருமையான மழைப் பாடல். எனக்குப் பிடித்த நடிகை சரிதா. பிரதாப் போத்தனுடன் மழையில் நனைந்து பாடும் பாடல். கூந்தல் மலரில் தேனைக் கொடுத்து காத்துக்கிடந்தேன் கால்கள் தடுக்க இதயம் துடிக்க..-- கூந்தல் மலர் என்ற வார்த்தைப் பிரயோகம் பிடிக்கும். :)

புதன், 7 மே, 2014

புதிய தரிசனத்தில் அன்னபட்சி நூல் விமர்சனம்.

புதிய தரிசனம் இணைய இதழில் அன்ன பட்சி பற்றிய நூல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

////அன்ன பட்சி

அன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.

திங்கள், 5 மே, 2014

ரியாத் தமிழ் சங்கப் போட்டியில் சான்றிதழும் கேடயமும்...!!


ரியாத் தமிழ்சங்கம் நடத்திய (2013 ஃபிப்ரவரியில்) கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்தது.

அதற்கான விழா 23, டிசம்பர் 2013 இல் சிறப்புற நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சகோதரர் ஷேக் முகம்மது எனக்கான நினைவுப் பரிசை சபையில் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

விருதுகள் .. சான்றிதழும் கேடயமும்.

////
திரு ராஜா அவர்கள் அனுப்பிய மடல்../////

அன்புள்ள கவிதாயினி.திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு,

வியாழன், 1 மே, 2014

தேனம்மை லெக்ஷ்மணனின் "அன்ன பட்சி" கவிதை நூல் குறித்து ஒரு உரையாடல். தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன். தமிழ்கூறும் நல்லுலகின் மிகப் பெரும் ( அழகான ) ஆளுமையான இவர் என்னுடைய அன்னபட்சியைப் படித்து ஒரு அறிமுகம் கொடுத்துள்ளார். ஆங்கிலப் பேராசிரியை,மிகப் பெரும் கவிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், த்யேட்டர் ஆர்ட்டிஸ்ட், பல்துறை வித்தகி, மனிதநேயப் பண்பாளர், இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 
Related Posts Plugin for WordPress, Blogger...