எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 10 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கோபு சாரும் ப்ளாக்கியும் தாலியும்.

வலையுலக நண்பர்களில் நான் மிகவும் மதிக்கும் நண்பர் கோபால் சார் என நான் அழைக்கும் வை கோபாலகிருஷ்ணன் சார். (நான் மதிக்கும் மிகப் பெரும் பதிவரான தாங்கள் என் இன்றைய வளர்ச்சியில் பெரும் பங்கு பெற்றிருக்கிறீர்கள், அதற்கு முதலில் நன்றிகள். )


இவரின் பதிவுகளும் சிறுகதைகளும் அருமையாக இருக்கும். பதிவுகள் ரொம்ப விலாவாரியாக இருக்கும். நகைச்சுவை தூவப்பட்ட நல்ல சுவையான பதிவுகள்  இவருடையவை. உரத்த சிந்தனை அமைப்பில் இவருடைய கதைக்கு ( பாட்டி சொல்லும் கதைகள் - ப்லாகர் ருக்கு அம்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழா)  சிறப்பு விருது வழங்கப்பட்டது குறித்து முன்பே பதிவிட்டிருக்கிறேன். 



மிக அருமையான பண்பான மனிதர் கோபால் சார். அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு சுவாரசியமான கேள்வியும் அவரின் பதிலும் இதோ உங்களுக்காக. 

///////வங்கி மேலதிகாரியான தாங்கள் எழுத்துலகத்துள் ப்ரவேசித்தது எப்போ. உங்கள் முதல் சிறுகதை அனுபவம். வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள். சும்மா வாசகர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவது.. ? ///


சாட்டர்டே ஜாலி கார்னர்.

வங்கி மேலதிகாரியான தாங்கள் எழுத்துலகத்துள் ப்ரவேசித்தது எப்போ?

நான் வங்கி மேலதிகாரி இல்லை. ஆனாலும் வங்கி மேலதிகாரியாக ஆகியிருக்க வேண்டியவன் தான். பாரத ஸ்டேட் வங்கியில் சில காலம் பணியாற்றிய நான், அங்கிருந்தால் பதவி உயர்வு கிடைக்கும் போதெல்லாம், பணி மாற்றம் செய்யப்பட்டு பல ஊர்களுக்குச் செல்ல நேரிடுமே என்பதால் அதை ராஜிநாமா செய்துவிட்டு, உள்ளூரிலேயே [திருச்சியிலேயே] உள்ள BHEL இல் நிரந்தரமான பணியில் சேர்ந்துவிட்டவன். 

கோடிக்கணக்கான வரவு செலவுகள் உள்ள, மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் ,நிதித்துறையில், ரொக்கப்பணத்திற்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல், பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன் நான். 

ACCOUNTS OFFICER [CASH], 
FINANCE DEPARTMENT, 
M/S. BHARAT HEAVY ELECTRICALS LIMITED, 
(A Govt. of India Undertaking) 
TIRUCHIRAPALLI-14.
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஓர் கட்டுரைப்போட்டியில் முதன் முதலாக நான் [அதுவும் என் மனைவி பெயரில்] கலந்துகொண்டு முதல் பரிசான ‘தங்க நெக்லஸ்’ பெற்றது 1997 இல். 

போட்டி நடத்தியவர்கள் புகழ்பெற்ற ‘ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ்’ நிறுவனத்தார் 

திருமணம் ஆகி 25 ஆண்டுகள் முடிந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனை சொல்லியிருந்தார்கள். 03.07.1972 எங்கள் திருமண நாள். அதனால் போட்டி அறிவிப்பின் போது மிகச்சரியாக 25 ஆண்டுகள் முடிந்திருந்த நேரம் அது.

தலைப்பு: ”தங்களின் 25 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் தாங்கள் அனுபவித்த சுகங்கள் மற்றும் சோகங்கள். அவற்றை தாங்கள் எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு சமாளித்தீர்கள்?”

இந்தப்போட்டியில் நான் என் மனைவி பெயரில் எழுதி அனுப்பியிருந்த கட்டுரை அகில இந்திய அளவில் முதல் பரிசுக்குத் தேர்வாகி ‘தங்க நெக்லஸ்’ வென்றுத் தந்தது. இதோ அந்த நெக்லஸ் இன்றும் எங்களுடன் ....... ;)


இதைப்பற்றிய படங்கள் + மேல் அதிக விபரங்கள் இதோ இந்த இணைப்புகளில் உள்ளன.


கட்டுரைக்கான என் எழுத்துலகப் பிரவேஸம் 1997 இல் மட்டுமே எனச் சொல்லலாம்.
உங்கள் முதல் சிறுகதை அனுபவம். 

நான் எழுதிய முதல் சிறுகதையின் தலைப்பு:  “தாயுமானவள்” 

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டிக்காக அனுப்பினேன். முதன் முதலாக ஓர் சிறுகதை எழுதி போட்டிக்கு அனுப்பிய ஆண்டு 2005. 

அதில் எனக்குக் கிடைத்தது ஓர் ஆறுதல் பரிசு. 

போட்டிக்கு வந்திருந்த சுமார் 3000 கதைகளில் வடிகட்டி வெறும் 13 கதைகளுக்கு மட்டுமே பரிசு அளித்திருந்தார்கள். பரிசுத்தொகை என்னவோ ரூ. 500 மட்டுமே கிடைத்தது. ஆனால் ரூபாய் 500 கோடி கிடைத்தது போன்றதோர் சந்தோஷத்தைக் கொடுத்தது.

என் பெயரில் ஒரு கதை, அதுவும் என் புகைப்படம் மற்றும் சுய விபரங்களுடன், ஓர் பிரபல பத்திரிகையில் முதன் முதலாக வெளியாகி  பல்வேறு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தன. 

அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிறு சம்பவத்தால், நம்மிடையே மிகப்பிரபலமான எழுத்தாளராக விளங்கும் திரு. ரிஷபன் அவர்களின் கருணையுடன் கூடிய பார்வை என் மீது படர இதுவே மூலகாரணமானது.

இதைப்பற்றிய மேலும் பல படங்களும் விபரங்களும் இதோ இந்த என் பதிவினில் கொடுத்துள்ளேன். http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

மேலும் நான் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளேன். என் முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்களும் உலகப்புகழ் பெற்ற ’வானதி’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/4.html



 


வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2005 முதல் 2010 வரை சுமார் ஆறு ஆண்டுகள் மட்டுமே நான் தமிழ் வார / மாத இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த ஆறு ஆண்டுகளுக்குள் என்னுடைய சுமார் 100 சிறுகதைகள் வரை அச்சிலேறி பல்வேறு தமிழ் வார / மாத இதழ்களில் வெளியாகிக்கொண்டே இருந்தன. மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது.

இருப்பினும் பத்திரிகைகளுக்கு எழுதியனுப்ப மிகவும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்பட்டதால்,  நான் அதை 2011 முதல் சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டேன். 

கணினியில் தமிழில் டைப் அடிக்கவே தெரியாத நான் வலையுலகிற்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை தான். அதற்கும் என் எழுத்துலக மானஸீக குருநாதரான திரு. ரிஷபன் அவர்களே தான் காரணமாக அமைந்தார்.

அதைப்பற்றி நகைச்சுவையாக என் 50வது பதிவினில் கூட எழுதியுள்ளேன்.  அதன் தலைப்பு: ஐம்பதாவது பிரஸவம், உப தலைப்புகள்: [1] ‘மை டியர் ப்ளாக்கி’ [2] குட்டிக் குழந்தை ‘தாலி’.  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

மேற்படி பதிவினை நான் என் வலைத்தளத்தில் வெளியிட்ட நாள் : 04.03.2011

ooooooooooooooooooooooooooooooo

தங்களின் ’சும்மா’ வாசகர்களுக்காக அதனை நானும் சும்மா இங்கு கீழே அப்படியே கொடுத்துள்ளேன்:

 ஐம்பதாவது பிரஸவம்  

 ’மை டியர் ப்ளாக்கி ’ 

எனக்கும் ப்ளாக்கிக்கும் திருமணம் நடந்தது இதே மார்ச் மாதம் இதே ஐந்தாம் தேதி {05.03.2009} தான். 

இன்றுடன் எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன.

சரி, யார் அந்த ’ப்ளாக்கி’ என்கிறீர்களா!

பெண் எழுத்தாளர்களுக்கு BLOGGER தான் இஷ்டம் என்றால், ஆண் எழுத்தாளராகிய நான், என் இஷ்டமானவளைப் “ப்ளாக்கி”  என்று செல்லமாக அழைக்கலாம் தானே!

இந்த ப்ளாக்கிக்கும் எனக்கும் கஷ்டப்பட்டு, என் அருமை நண்பரும், பிரபல எழுத்தாளரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்கள் தான், முன்னின்று 'புதிய இணைப்பு' என்ற பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்து, பதிவுத் திருமணம் நடத்தி வைத்தார், இதே மார்ச் ஐந்தாம் தேதி 2009 ஆண்டு.

அவர் பெரிய மனதுபண்ணி, தானே வலியவந்து முன்னின்று, என் வீட்டிலேயே, எனக்கும் ப்ளாக்கிக்கும் எளிய முறையில் பதிவுத் திருமணம் நடத்தி விட்டு, வேறு ஏதோ அவசர வேலைகள் இருப்பதாகச் சொல்லிப் போய் விட்டாரே தவிர, எங்கள் திருமணத்திற்குப் பின் எனக்கும் இந்த ப்ளாக்கிக்கும் ஒரு நல்லதொரு புரிதல் ஏற்பட்டபாடில்லை.

எங்கள் இருவருக்குமே, எங்கள் கல்யாணத்திற்கு முன்பு,  இதில் ஒரு முன் அனுபவம் இல்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்தது கூட இல்லை. அவ்வளவு ஏன் ஒரே வீட்டுக்குள் நாங்கள் இருவரும் இருந்தும் ஒருவரை ஒருவர் ஒரு பாசத்துடன் என்றேனும் ஒரு நாளாவது பார்த்துக் கொண்டதோ பழகிக் கொண்டதோ கூட இல்லை. எல்லாமே ஒரு புது அனுபவம் தான், எங்களுக்கு..

இப்போது எங்களுக்குள் கல்யாணம் என்ற இணைப்பு ஏற்படுத்திக் கொண்ட  பிறகும் கூட “பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...  அவர் பழக்கத்திலே... குழந்தையைப்போல்  ஒரு அம்மாஞ்சி ராஜா.....” என்ற பாட்டுப் போலத்தான் ஆகிவிட்டது எங்கள் இல்வாழ்க்கையும்.  

ஜாலியாகப் பேசவோ, பழகவோ, அடிக்கவோ, அணைக்கவோ முடியவில்லை.     பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது வேறு, தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பது என்பது வேறு அல்லவா! தாம்பத்யம் என்பது ஒழுங்காக, சுகமாக, திருப்தியாக அமைந்தால் தானே, திருமண பந்தம் என்று ஏற்படுத்தி கொடுத்த இணைப்பு ஒரு முழுமையை அடைந்ததாக ஆகும்?

நானும் ஒரு நாள் அல்ல இரண்டு நாட்கள் அல்ல சுமார் 20 மாதங்கள், ப்ளாக்கியை கண்ணால் பார்த்துப் பார்த்து அவள் அழகை ரஸித்து ரஸித்து மகிழ்ந்தேனே தவிர, விரல்களால் தொட்டு அவளை அனுபவிக்க முடியவில்லை. என்ன ஒரு கொடுமை இது என்று நினைத்து நினைத்து மனதுக்குள் மறுகினேன்.     

கல்யாணம் ஆகியும் பிரும்மச்சாரி போல ஆகிவிட்டது என் நிலைமை.

என்னை, எங்காவது தற்செயலாகப் பார்க்கும் போதெல்லாம், நண்பர் ரிஷபன் அவர்கள் ”என்னாச்சு ... ஏதாவது விசேஷமுண்டா, எப்போ உங்களின் புது ரிலீஸ்”  என்று கேட்பார்கள்.

புதிதாகக் கல்யாணம் ஆனவர்களைப் பார்த்து, எல்லோருமே அப்படித் தானே கேட்பார்கள் ?

இவர் தான் ப்ளாக்கியுடன் எனக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தவர் ஆயிற்றே! அந்த உரிமையில் அவர் அடிக்கடி இப்படிக் கேட்பதும் நியாயம் தானே !

அவர் இவ்வாறு என்னை நேருக்குநேர் பார்த்துக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித் திங்கும்.   ஒரு விதக் கூச்சம் வந்து விடும். எனக்கும் ப்ளாக்கிக்கும் உள்ள அந்தரங்கப் பிரச்சனைகளைப் போய் இவரிடம் நான் எப்படி விலாவரியாக எடுத்துச் சொல்ல முடியும்?. இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில், அவரிடம் அதுபற்றி எதுவுமே சொல்லாமல், சிரித்து மழுப்பி வரலானேன்.

பிறகு ஒரு நாள் (19.10.2010 அன்று)  துணிந்து ப்ளாக்கியிடம் போய் “கத்தி(ப்)பேசினால்”, என் கத்திக்கு பயந்தாவது அவள், என் வழிக்கு இணங்கி வந்து விட மாட்டாளா  என்று நினைத்து,  நான் முதன் முதலாக முயற்சித்தது சற்றும் வீண் போகவில்லை.    அப்போது கூட டி.வி. யில் ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல் ஒலித்தது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது.

என் வாளும் ...... உன் விழியும் .......  சந்தித்தால்.........
  உ(ன்)னை வெல்லும் .... எ(ன்)னைக் கொல்லும்.......இன்பத்தால்”

இதைப் படிக்கும் நீங்கள் தவறாக ஏதேதோ வீண் கற்பனை செய்து வித்யாசமாக நினைக்காதீர்கள். முதல் முதலாக 19.10.2010 அன்று என் கத்தியை, என் ப்ளாக்கி மேல் பதித்ததை [ http://gopu1949.blogspot.in/2010/10/trial.html  ] நீங்களே வேண்டுமானால் போய்ப் பாருங்கள். 

05/03/2009 அன்றே எனக்கு ப்ளாக்கியுடன் பதிவுத் திருமணம் ஆகியும் 19/10/2010 அன்று அதாவது சுமார்  ஒரு 20 மாதங்கள் கழித்துதான் அந்த இன்பத்தை,  அந்த பேரின்பத்தை என்னால் ஒரு வழியாக எட்ட முடிந்தது.

என் ‘கத்தி’யை முதன் முதலாகப் பதிவு செய்த 19.10.2010 முதல் இன்று 05.03.2011 வரை இந்த 4 or 5 மாதங்களுக்குள் பல முறை இந்தப் பேரின்பத்தில் மூழ்கியதன் பலனாக (காய்ஞ்ச மாடு கம்புலே பாய்ந்தது போல என்பார்களே - அதே ... அதே, அது போலத் தான், இதுவும்)  நேற்றுடன் 49 குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்ததுடன், இன்று வெற்றிகரமாக எனது ஐம்பதாவது குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டாள் என் அருமை ப்ளாக்கி.  

மிகக்குறுகிய காலத்தில் நான் இப்போது அபார சம்சாரியாகி விட்டேன்.

இந்த ஐம்பதாவது பிரஸவத்தை மட்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று, இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும்,   எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.  

இந்த எங்களின் வெற்றி எல்லாவற்றிற்குமே உங்கள் அன்பான (பின்னூட்டம் என்கிற) ஆசீர்வாத அக்ஷதைகளே காரணம் என்பதை நானும் என் ப்ளாக்கியும் நன்கு அறிவோம்.  அதற்காக எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் ..... அதுவும் இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டுமே!.

நான் என் ப்ளாக்கியைத் தொட்டுத் தாலி கட்டாமல் பதிவுத் திருமணமல்லவா செய்து கொண்டுள்ளேன்.  அதில் என்னைவிட என் மை டியர் ப்ளாக்கிக்கு ரொம்பவுமே வருத்தம் உண்டு. 

அதனால் என்ன! இப்போது நமக்குப் பிறந்துள்ள இந்த நம் ஐம்பதாவது குட்டிக் குழந்தைக்குத் ”தாலி” என்றே பெயர் வைத்து விடுவோம் என்றேன்.   

”அப்போ நம்ம நூறாவது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீங்க? ” என்று என்னை ஒரு அர்த்த புஷ்டியுடன் பார்த்துச் சிரித்தாள். என் ஸ்வீட்டியான ப்ளாக்கி.   

அவள் சிரிப்பில் மயங்கிப் போன நான் உடனே mood out ஆகிப் போனேன். பிறகு கதவைச் சாத்திவிட்டு, ஏ.ஸி யை ஆன் செய்து விட்டு, லைட்டை அணைத்துப் படுத்து விட்டேன். (அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டு தான் - அதாவது ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டுத்தான்)

என்னையும், என் ப்ளாக்கியையும், எங்களுக்குப் பிறந்துள்ள நாலு டஜன் குழந்தைகளையும், கடந்த இரண்டே மாதங்களுக்குள் மூன்று முறை “வலைச்சரத்தில்” அறிமுகம் செய்து அசத்தி விட்டார்கள் தெரியுமோ!  


”அது தான் உலகம் பூராவும் தெரியுமே, எங்களுக்குத் தெரியாதா என்ன” என்கிறீர்களா?  OK .... OK.


இப்போதே என் ஐம்பதாவது குட்டிக் குழந்தையான “தாலி” யைக் கையோடு பார்த்து விட்டு,  வழக்கம் போல வாழ்த்துங்கள்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன் 
05.03.2011 
-o-o-o-o-o-o-o-o-

’ தாலி ’
”ஏண்டீ, நம்ம பரத்தும், ஷீலாவும் எங்கே?”

“இரண்டு பேரும் காத்தாடா வெளியே வாக்கிங் போயிருக்காங்க!”

”அவங்களுக்கு வர வர துளிர் விட்டுப்போச்சு, வரட்டும் பேசிக் கொள்கிறேன்”

”ஏதோ சின்னஞ்சிறுசுகள், நம்மைப் போல வீட்டிலேயே அடைஞ்சு கிடக்காம, ஜாலியா போயிட்டு வரட்டுமேன்னு நான் தாங்க அனுப்பி வைச்சேன், அதுக்குப் போய் ஏன் இப்படிக் கோபப்படுறீங்க?”

ஏதாவது ஏடாகூடமாக ஆச்சுன்னா, நமக்குத் தானே சங்கடம்.  உஷாராக இருக்க வேண்டிய நீயே இப்படி அவங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியே அனுப்பலாமா?”

”உப்புப்பெறாத விஷயத்துக்கு  ஏங்க நீங்க இப்படி டென்ஷன் ஆறீங்க?”

"உப்புப் பெறாத விஷயமா?  நாட்டு நடப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்?   காலம் கெட்டுக்கெடக்குத் தெரியுமா உனக்கு!”

“அப்படியென்னங்க காலம் கெட்டுப் போச்சு; நீங்க எடுத்துச் சொன்னீங்கன்னா நானும் தெரிஞ்சுட்டுப் போறேன்”

”நீ பெரிசா தெரிஞ்சுக்கிட்டும், புரிஞ்சுக்கிட்டும் கிழிச்சே;  உனக்கெப்படி இதில் உள்ள சிக்கல்களைப் பற்றியெல்லாம்  நான் புரிய வைக்கப் போறேனோ, எனக்கே ஒரே விசாரமாயிருக்கு;  

”என்னங்க பெரிய விசாரம்” ?

”உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ !   போன வாரம் இவங்க  இரண்டு பேரும் ஜோடியா அந்த லாட்ஜுக்கு போக முயற்சி பண்ணியிருக்காங்க”

”அய்யய்யோ  அப்படியா!  இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

”அந்த லாட்ஜ் மேனேஜர் என் க்ளாஸ்மேட் தானே, அவர் தான் எனக்குப் போன் பண்ணி சொன்னாரு”

”என்னன்னு சொன்னாரு?”

“கழுத்துல தாலி ஏறாம இப்படி அலய விடாதீங்க; அப்புறம் அது ஆபத்துல போய் முடியும்ன்னு எச்சரிக்கை செய்தாரு”
....
..........
..............
...................
......................

”இவங்க ரெண்டு பேருக்கும் தாலியா?  நீங்க என்னங்க சொல்றீங்க?  எனக்கு ஒரு எழவும் புரியலையே ! “

..............
              .............
                            ..............
                                           ..............
                                                          ..............                                                 
..............
                                                                                                       ..............
                                                                                        ...............
                                                                           .............
                                                               ............

...........
...........
...........
...........
...........


முனிசிபாலிடியில் பணம் கட்டி நாய் வளர்க்க லைசன்ஸ் வாங்கி அதுங்க கழுத்திலே பெல்ட் கட்டணுமாம்.   அதைத்தான் ’தாலி’ன்னு அவரு சொல்றாரு.  தாலி இல்லாம இப்படி அலய விட்டா, அதுங்களை நாய் வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போய் விடுவாங்களாம்”


ooooooooooooooooooooooooooooooo

சும்மா வாசகர்களுக்கு தாங்கள் மேலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா ?




என் வலைத்தளத்தில் இந்த ஆண்டு முழுவதும் ’சிறுகதை விமர்சனப் போட்டி’  வாராவாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

போட்டிக்கான  40 சிறுகதைகளில் இதுவரை 16 சிறுகதைகள் வெளியாகி விட்டன. அவற்றில் 14 சிறுகதைகளுக்கு பரிசு முடிவுகளும் வெளியாகி விட்டன. 

முதல் 10 சிறுகதைகளுக்கான விமர்சனங்களுக்கு பரிசுத்தொகையும் பதிவர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டன.  

இன்னும் 24 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.  இப்போது கூட ’VGK-17 சூழ்நிலை’ என்ற சிறுகதை நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. வரும் வியாழக்கிழமை [15.05.2014]  இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் விமர்சனங்கள் எழுதி அனுப்பப்பட வேண்டும். 

’சும்மா’ வாசகர்கள் அனைவரும் சும்மா இல்லாமல் வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என் சிறுகதைக்கு விமர்சனம் எழுதி அனுப்பி, ரொக்கப்பரிசு மழைகளில் நனைய அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல வாருங்கள் !!

மேலும் விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:

முதல் 10 கதைகளுக்கான விமர்சனங்களுக்குப் பரிசு பெற்றோர் பற்றிய விபரங்கள் [படங்களுடன்]  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html


போட்டி பற்றிய பொதுவான விதி முறைகளுக்கு இதோ 

 இணைப்பு: 




என் வலைத்தளத்தில் போட்டி சம்பந்தமான வேலைகள் ஏராளமாக இருப்பதால் இத்துடன் என் பேட்டியை மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.

வணக்கம்.

என்றும் அன்புடன் தங்கள்,


வை. கோபாலகிருஷ்ணன்
[ கோபு - VGK ] 


டிஸ்கி :- கோபால் சார் ப்ளாக்கியும் தாலியும் அற்புதம் போங்க. எதிர்பார்க்கவே இல்லை. வானதி பதிப்பக வெளியீடா 3 புத்தகங்கள் வெளியிட்டு உள்ளமைக்கு வாழ்த்துகள் சார். ஆச்சர்யமா இருக்கு. இப்ப கூட கலக்கிக்கிட்டு இருக்கீங்க.. !!!  எத்தனை விஷயங்கள் அருமையான தொகுப்பாய் அளித்திருக்கிறீர்கள். அஹா முழுதும் வாசித்து மிகவும் மகிழ்ந்தேன். அருமையோ அருமை சார். விலாவாரியாக எழுதி விலா நோகச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்புக் கார்னர் ஆக்கிட்டீங்க. கேட்ட விஷயங்கள் அனைத்தையும் நேரம் எடுத்து சிரத்தையாய் அனுப்பித்தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் :)

72 கருத்துகள்:

  1. எத்தனை விஷயங்கள்
    அருமையான தொகுப்பாய் அளித்திருக்கிறீர்கள்.
    ஆஹா முழுதும் வாசித்து மிகவும் மகிழ்ந்தேன்.

    அருமையோ அருமை !.

    விலாவாரியாக எழுதி விலா நோகச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். !!

    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!!

    பதிலளிநீக்கு
  2. வைகோ ஸார் பற்றி அறிமுகம் தேவையா என்ன... எங்களுக்குத் தெரியுமே.... தேவி இதழில் கூட ஒரு கதை எழுதி இருந்தார். கல்கி நடத்திய வாசகர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.

    அவரது கைவண்ணமும் நான் ரசிக்கும் ஒன்று. திருமணங்களுக்குச் சென்று பரிசு கொடுக்க (மொய்ப்)பணத்தால் செய்யப் பட்ட கை விசிறி போன்ற கலைப்பொருட்கள் எல்லாம் தானே தயாரிப்பார். ஓவியர். அவர் வரைந்த ஓவியம் ஒன்று மகாப் பெரியவரால் அங்கீகரிக்கப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது...

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. தேனக்கா பகிர்வுக்கு நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ. சார்.சூப்பர் பகிர்வு.நானும் ப்ளாக்கில் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி. தாங்கள் என் ப்ளாக்கிற்கு வந்து நிறைய ஊக்கப் பின்னூட்டங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.என்றும் என் மனதில்( ப்ளாக்கில்) பசுமையாக நிலைத்திருக்கும்.மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பேட்டியை எடுத்த தேனம்மை லக்ஷ்மணனுக்கும் பேட்டி அளித்த வைகோ சாருக்கும் பாராட்டுகள். இதில் கொடுத்துள்ள சுட்டிகளைச் சென்றும் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஒரு வழியா மூணாம் முறை பின்னூட்டம் போயிருக்குனு நினைக்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  6. சும்மா வாசகர்களுக்காக சும்மா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போகாமல் விரிவாக அழகாக தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ள வை.கோ ஸாருக்கு வணக்கங்கள். அழகான பகிர்வுக்குக் களம் அமைத்துத் தந்த தேனக்காவுக்கு நன்றிகள்,

    பதிலளிநீக்கு
  7. எழுத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள வைகோ ஸார் மேன்மேலும் புகழ பெற்றுக் கொண்டே போவதில் ஆச்சர்யம் ஏதுமில்லைதான். அவர் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் என் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. கோபு சாருக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும், அவருடைய சிறுகதைத் தொகுப்பு, பத்திரிக்கைகளில், அவருடைய கதைகள் என்று பல விஷயங்களை அழகாய் தொகுத்துத் தெரியவைத்தமைக்கு திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கும், பேட்டி கொடுத்த கோபு சாருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  9. ப்ளாக்கியும் தாலியும் நல்ல கற்பனை. கழுத்தில் இல்லாமல் ஊர் சுற்றுவதா, எந்த ஊர் நியாயம். வை.கோவைப்பற்றி இன்னும் அறிய முடிந்தது. உங்கள் ப்ளாகும் பார்க்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஸந்தோஷம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. சாட்டர்டே ஜாலி கார்னரில் மூத்த வலைப் பதிவர் திரு V.G.K அவர்களது கேள்வியும் பதிலும் புது ஸ்டைலில் அமைந்து படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவர் திருச்சிக்காரர் என்பதில் எங்களுக்கு பெருமை. அவரது ந்கைசுவையான பதிவுகள் சிலவற்றை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஜாலி கார்னர் சுவாரசியமாக இருக்கு...

    ப்ளாகி ...தாலி ...அருமை!

    பேட்டி எடுத்து பதிவு செய்த திருமதி.தேனம்மை அவர்களுக்கும் பேட்டி தந்த கோபு சாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சும்மா, ஒரு கால் ரவுண்டுதான் போனேன் !
    பிரமித்துவிட்டேன்.
    நேற்று பெய்த மழையில் இன்று பூத்த
    காளான், நான் !
    உங்களின் சிறுகதைகளுக்கு
    நான் விமர்சனம் எழுதி ...

    உங்களிடம்
    பரிசையும் பெற்றிருக்கிறேன் ,
    பாக்கியம்தான், எனக்கு.

    தங்களின் சாதனைகள் தொடர ,
    வேண்டுகிறேன், இறைவனிடம்.

    பதிலளிநீக்கு
  13. அன்பு தேன். திரு வைகோ சாரின் கதைகளை வார்ப் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வருகிறது.நல்ல நகைச்சுவை. திடம் கொண்ட வாழ்க்கை. உற்சாகம் இத்தனைக்கும் உரியவர். அவரைப் பேட்டி எடுத்து எங்களுக்கும் பல விஷயங்களைத் தெரியவைத்தீர்கள் மனம் நிறைந்த வவாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  14. அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சகலகலாவல்லியான திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

    மிகச் சாதாரணமானவனாகிய என்னைப்போய் தாங்கள் ஓர் பேட்டி எடுத்து, அதனை இங்கு தங்களின் பதிவினில் வெளியிட்டு, சற்றே பெரிய மனிதன் போலக்காட்டி விட்டீர்கள்.

    அதற்கு முதலில் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  15. //நான் மதிக்கும் மிகப் பெரும் பதிவரான தாங்கள் என் இன்றைய வளர்ச்சியில் பெரும் பங்கு பெற்றிருக்கிறீர்கள், அதற்கு முதலில் நன்றிகள்.//

    ஆஹா, இதைக்கேட்க நான் தன்யனானேன்.

    முன்புபோல இப்போதெல்லாம் என்னால் தங்கள் பதிவுகள் பக்கமே வர நேரம் இருப்பதில்லை. தங்கள் பதிவுகள் மட்டுமல்ல ....... பிறரின் எவ்வளவோ பதிவுகளையும் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அப்படியே எப்போதாவது படிக்க நேர்ந்தாலும் பின்னூட்டமிட முடியாமல் போய் விடுகிறது. அதில் எனக்கும் உள்ளூர வருத்தம் தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  16. //இவரின் பதிவுகளும் சிறுகதைகளும் அருமையாக இருக்கும். பதிவுகள் ரொம்ப விலாவாரியாக இருக்கும். நகைச்சுவை தூவப்பட்ட நல்ல சுவையான பதிவுகள் இவருடையவை.//

    ஆஹா, இதனைத்தங்கள் வாயிலாக இங்கு கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    உண்மையோ அல்லது ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே [ சற்றே தூக்கலாகத் தூவி ] எழுதப்பட்டதோ! ;)

    எப்படியிருப்பினும் மிக்க நன்றியே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. //உரத்த சிந்தனை அமைப்பில் இவருடைய கதைக்கு ( ’பாட்டி சொல்லும் கதைகள்’ வலைத்தள திருமதி ருக்மணி சேஷசாயி அம்மா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழா) சிறப்பு விருது வழங்கப்பட்டது குறித்து முன்பே பதிவிட்டிருக்கிறேன். //

    நினைவுள்ளது. மிக்க மகிழ்ச்சி. அந்தவிழாவிற்கு தாங்கள் நேரில் கலந்துகொள்வதாக இருந்தீர்கள். ஏனோ கடைசி நிமிடத்தில் வரமுடியாமல் போய் விட்டதாகவும் சொல்லியிருந்தீர்கள்.

    அன்று எனக்கு திருமதி ருக்மணி சேஷசாயி அம்மா பழக்கமில்லாதவர்களாக இருந்ததால் என்னை நான் அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு பேசமுடியாமல் போய் விட்டது.

    இப்போது அவர்கள் எங்கள் ஊரில் தான் [திருச்சி-ஸ்ரீரங்கம்] இருக்கிறார்கள். இப்போது அவர்களுடன் அடிக்கடி மெயில் தொடர்புகள் மட்டும் உள்ளன. இன்னும் எங்களுக்குள் நேரில் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  18. //மிக அருமையான பண்பான மனிதர் கோபால் சார். //

    திருச்சியில் இங்கு கொளுத்தும் வெயிலுக்கு, இதைக்கேட்க ’ஐஸ்கட்டி போல ஜில்’லென்று ஆகி குளிருது ;)

    ஏ.ஸி.யையும், ஃபேனையும் அணைத்து விட்டேன். முரட்டுக் கம்பளியைத் தேடிக்கொண்டுள்ளேன் [ குளிருக்குப் போர்த்திக்கொள்ளத்தான் ] ;)))))

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. //டிஸ்கி :- கோபால் சார் ப்ளாக்கியும் தாலியும் அற்புதம் போங்க. எதிர்பார்க்கவே இல்லை.//

    நானும் இந்தத்தங்களின் திடீர்ப் பேட்டியை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  20. // வானதி பதிப்பக வெளியீடா ! 3 புத்தகங்கள் வெளியிட்டு உள்ளமைக்கு வாழ்த்துகள் சார்.//

    மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவு தான். வணிக முறையில் இவற்றை நான் வெளியிடவில்லை. ஒவ்வொன்றிலும் 300 பிரதிகள் வீதம் நானே காசுகொடுத்து வாங்கி, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் கையொப்பமிட்டு, அன்பளிப்பாக மட்டுமே இதுவரை வழங்கியுள்ளேன். இதனால் எனக்குச்செலவு ரூபாய் 80000/- [ரூபாய் எண்பது ஆயிரங்கள்] மட்டுமே.

    இதில் எனக்குக் கிடைத்தது மிகப்பெரியதோர் ஆத்ம திருப்தி. அதன் விலை பலகோடி ரூபாய்களுக்கு மேலாகும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  21. //ஆச்சர்யமா இருக்கு. இப்ப கூட கலக்கிக்கிட்டு இருக்கீங்க.. !!! //

    இலக்கியப் பணிகளுக்காகத்தானே செலவிடுகிறோம். அதில் கிடைக்கும் இன்பம் தனியல்லவா !

    முடிந்தவரை கலக்கிக்கிட்டே இருக்கத்தான் நினைக்கிறேன்.

    நான் இப்போது நடத்திவரும் புதுமையான ’சிறுகதை விமர்சனப்போட்டி’ யே, இதுவரை யாருமே செய்யாததோர் கலக்கல் தானே !

    >>>>>

    பதிலளிநீக்கு
  22. //ஆஹா முழுதும் வாசித்து மிகவும் மகிழ்ந்தேன். அருமையோ அருமை சார். விலாவாரியாக எழுதி விலா நோகச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். //

    தாங்கள் அங்கு சென்னையில் சிரித்த சிரிப்பொலி இங்கு திருச்சி மலைக்கோட்டையில் மோதி, என் காதுகளிலும் ஒலித்தது. மகிழ்ச்சி.

    தங்களின் விலா நோகியது தான் வருத்தமாக உள்ளது. அமிர்தாஞ்சன் போன்ற ஏதேனும் களிம்பினை தயவுசெய்து தடவிக்கொள்ளவும். ;))))) [அல்லது தங்களவரை விட்டுத் தடவிவிடசொல்லவும்]

    >>>>>

    பதிலளிநீக்கு
  23. //சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்புக் கார்னர் ஆக்கிட்டீங்க. //

    அப்படியா ! மிகவும் சந்தோஷம். அதுதான் எனக்கும் தேவை. இதைக்கேட்க எனக்கு ‘ஜாலிலோ ஜிம்கானா’வாக உள்ளது.

    எதோவொரு கார்னரில் [மூலையில்] இருந்தவனை, ஜாலியாக சிறப்புக் கார்னருக்கே கொண்டுவந்து விட்டீர்கள் !

    பாரீஸ் கார்னரில் தங்களுக்கு ஓர் சிறப்பு விருந்து தரவேண்டும் போல ஆசையாக உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  24. //கேட்ட விஷயங்கள் அனைத்தையும் நேரம் எடுத்து சிரத்தையாய் அனுப்பித்தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் :)//

    மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி. ஆனந்தமாக உள்ளது. பார்ப்போம்.

    oOo

    பதிலளிநீக்கு
  25. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    //எத்தனை விஷயங்கள்
    அருமையான தொகுப்பாய் அளித்திருக்கிறீர்கள்.
    ஆஹா முழுதும் வாசித்து மிகவும் மகிழ்ந்தேன்.

    அருமையோ அருமை !.

    விலாவாரியாக எழுதி விலா நோகச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள். !!

    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!!//


    ஆயிரம் நிலவே வா ! ஓர்
    ஆயிரம் நிலவே வா !!

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    தங்களிடம் இதுபோல நான் கேட்க ஆயிரம் கேள்விகள் என்னிடம் உள்ளன. நேரில் தான் பேட்டி எடுக்க வேண்டும் என எனக்கு விருப்பமாக உள்ளது.

    எப்போது நேரில் சந்திக்கலாம்?
    செளகர்யம் எப்படியோ ? எனத்
    தெரியப் ப டு த் து ங் கோ !

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    -oOo-


    பதிலளிநீக்கு
  26. கோபு சாரின் நகைச்சுவை நமக்கெல்லாம் பிரசித்தமாயிற்றே. ப்ளாக்கியுடனான இல்லறம் குறித்த அவரது பார்வை நல்ல சுவாரசியக் கலவை. சாட்டர்டே ஜாலி கார்னரில் அவர் கார்னர் மட்டுமல்ல, முழுக்களத்தையுமே ஆக்கிரமித்திருக்கிறார் தன் அற்புத எழுத்தால். வாழ்த்துக்கள் கோபு சார். நன்றி தோழி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம். சொன்னது…

    வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் ! வணக்கம்.

    //வைகோ ஸார் பற்றி அறிமுகம் தேவையா என்ன... எங்களுக்குத் தெரியுமே....//

    அடடா, தங்களுக்குத்தெரிந்தால் போதுமா? என நினைத்திருப்பார் ‘ஹனி’ மேடம்.

    // தேவி இதழில் கூட ஒரு கதை எழுதி இருந்தார்//

    தேவியில் ஒரே ஒரு கதை மட்டுமல்ல. நான் எழுதிய பெரும்பாலான கதைகளை வெளியிட்டு ஆதரவு அளித்த பத்திரிகை ‘தேவி வார இதழ்’ தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போதும்கூட ஃபோன் செய்து கதை அனுப்பச்சொல்லி கேட்கிறார்கள். நான் தான் அதனை நிறுத்திக்கொண்டு விட்டேன்.

    தபாலில் அனுப்ப பொறுமை இல்லை. வெளியாகுமா ஆகாதா என பல வாரங்கள் / மாதங்கள் காத்திருக்கப் பொறுமை இல்லை.

    மேலும் பொதுவாகப் பத்திரிகைக்காரர்கள் என் எழுத்துக்களை EDIT செய்வது எனக்குப் பிடிப்பதில்லை.

    //கல்கி நடத்திய வாசகர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.//

    ஆஹா, தங்களுக்கு எவ்வளவு ஞாபக சக்தி !!!!!

    இதோ அதன் இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html

    //அவரது கைவண்ணமும் நான் ரசிக்கும் ஒன்று. திருமணங்களுக்குச் சென்று பரிசு கொடுக்க (மொய்ப்)பணத்தால் செய்யப் பட்ட கை விசிறி போன்ற கலைப்பொருட்கள் எல்லாம் தானே தயாரிப்பார்.//

    ஆஹா ! இதோ அதன் இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2011/07/6.html

    //ஓவியர். அவர் வரைந்த ஓவியம் ஒன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவரால் அங்கீகரிக்கப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது...//

    அது நான் செய்ததோர் பாக்யம் !
    http://gopu1949.blogspot.in/2013/04/9.html
    நானும் என் அம்பாளும் ! அதிசய நிகழ்வு !!

    //பாராட்டுகள்.//

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

    பிரியமுள்ள கோபு

    -oOo-

    பதிலளிநீக்கு
  28. Asiya Omar சொன்னது…

    //தேனக்கா பகிர்வுக்கு நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ. சார். சூப்பர் பகிர்வு. நானும் ப்ளாக்கில் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி. தாங்கள் என் ப்ளாக்கிற்கு வந்து நிறைய ஊக்கப் பின்னூட்டங்கள் கொடுத்திருக்கிறீர்கள். என்றும் என் மனதில்( ப்ளாக்கில்) பசுமையாக நிலைத்திருக்கும்.மனமார்ந்த நன்றி.

    வாங்கோ, வணக்கம்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்

    பிரியமுள்ள கோபு

    -oOo-

    பதிலளிநீக்கு
  29. Geetha Sambasivam சொன்னது…

    //அருமையான பேட்டியை எடுத்த தேனம்மை லக்ஷ்மணனுக்கும் பேட்டி அளித்த வைகோ சாருக்கும் பாராட்டுகள். இதில் கொடுத்துள்ள சுட்டிகளைச் சென்றும் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.//

    வாங்கோ, வணக்கம்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    -oOo-

    பதிலளிநீக்கு
  30. பால கணேஷ் சொன்னது…

    //சும்மா வாசகர்களுக்காக சும்மா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போகாமல் விரிவாக அழகாக தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ள வை.கோ ஸாருக்கு வணக்கங்கள். அழகான பகிர்வுக்குக் களம் அமைத்துத் தந்த தேனக்காவுக்கு நன்றிகள்//


    வாங்கோ, Sir, வணக்கம்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    -oOo-

    பதிலளிநீக்கு
  31. ரிஷபன் சொன்னது…

    //எழுத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள வைகோ ஸார் மேன்மேலும் புகழ பெற்றுக் கொண்டே போவதில் ஆச்சர்யம் ஏதுமில்லைதான். அவர் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் என் நல்வாழ்த்துகள்//

    வாங்கோ Mr. ரிஷபன் Sir, வணக்கம்.

    எல்லாப்புகழும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் ஆகிய தங்களுக்கே !

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ...... அதுவும் இரடிப்பாகவே.

    என்றும் பிரியமுள்ள வீ.........ஜீ......

    -oOo-

    பதிலளிநீக்கு
  32. rajalakshmi paramasivam சொன்னது…

    //கோபு சாருக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும், அவருடைய சிறுகதைத் தொகுப்பு, பத்திரிக்கைகளில், அவருடைய கதைகள் என்று பல விஷயங்களை அழகாய் தொகுத்துத் தெரியவைத்தமைக்கு திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கும், பேட்டி கொடுத்த கோபு சாருக்கும் நன்றிகள் பல.//

    வாங்கோ, மேடம். வணக்கம்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    -oOo-

    பதிலளிநீக்கு
  33. Harini M சொன்னது…

    //Very nicely comprehended post,great read//

    வாங்கோ மேடம் .... வணக்கம்.

    Thanks a Lot for your kind visit here and for your valuable Comments too.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  34. Kamatchi சொன்னது…

    வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

    //ப்ளாக்கியும் தாலியும் நல்ல கற்பனை.//

    சந்தோஷம்.

    // கழுத்தில் இல்லாமல் ஊர் சுற்றுவதா, எந்த ஊர் நியாயம். //

    அதானே ! ;)))))


    //வை.கோவைப்பற்றி இன்னும் அறிய முடிந்தது.//

    சந்தோஷம். எல்லாம் தங்களைப்போன்ற பெரியவா ஆசீர்வாதங்கள் மட்டுமே


    //உங்கள் ப்ளாகும் பார்க்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஸந்தோஷம். அன்புடன்//

    தேனாக இனிக்கும் பதிவர் இவர்கள்; சகலகலாவல்லி என்று கேள்விப்பட்டிருப்பேளே .... அதற்கு இவர்கள் ஓர் நல்ல உதாரணம்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    -oOo-

    பதிலளிநீக்கு
  35. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

    //சாட்டர்டே ஜாலி கார்னரில் மூத்த வலைப் பதிவர் திரு V.G.K அவர்களது கேள்வியும் பதிலும் புது ஸ்டைலில் அமைந்து படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவர் திருச்சிக்காரர் என்பதில் எங்களுக்கு பெருமை. அவரது ந்கைசுவையான பதிவுகள் சிலவற்றை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவிற்கு நன்றி!//

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

    திடீரென்று தொடர்புகொண்டு, மிகக்குறுகிய நேர அவகாசமே கொடுத்து, மிகவும் அவசரமாக ஓர் பேட்டி கேட்டார்கள், ஐயா. நானும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ எனக்குத்தோன்றியதை அவசர அடியாக அள்ளித்தெளித்து அனுப்பும்படியாக ஆகிவிட்டது.

    படிக்க சுவாரஸ்யமாக் இருந்தது என்று தாங்கள் சொல்லியுள்ளதில் மகிழ்ச்சியே.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  36. Usha Srikumar சொன்னது…

    //ஜாலி கார்னர் சுவாரசியமாக இருக்கு...
    ப்ளாகி ...தாலி ...அருமை!

    பேட்டி எடுத்து பதிவு செய்த திருமதி.தேனம்மை அவர்களுக்கும் பேட்டி தந்த கோபு சாருக்கும் வாழ்த்துக்கள்.//

    வாங்கோ, மேடம். வணக்கம். இங்கு தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    -oOo-

    பதிலளிநீக்கு
  37. G Perumal Chettiar சொன்னது…

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா !

    //சும்மா, ஒரு கால் ரவுண்டுதான் போனேன் ! பிரமித்துவிட்டேன்.//

    அடடா, ஒரு சிறிய கட்டிங் போல குவார்ட்டர் ரெளண்ட் தானா ! ;)
    அதில் பிரமிக்கும்படியாக ஒன்றும் ’கிக்’ இருக்காதே ஐயா.

    //நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான், நான் ! //

    அதனால்தான் FRESH ஆக இருக்கிறீர்கள். அருமையாகயும் புதுமையாகவும் எழுதி அசத்துகிறீர்கள்.

    //உங்களின் சிறுகதைகளுக்கு நான் விமர்சனம் எழுதி ... உங்களிடம் பரிசையும் பெற்றிருக்கிறேன், பாக்கியம்தான், எனக்கு. //

    ஸத் பாத்திரங்களாகப்பார்த்து [சுண்டைக்காய் அளவுக்குப்] பரிசளிக்க நானும் ஏதோ கொஞ்சம் கொடுத்து வைத்திருக்கிறேன்.

    பெறுவதைவிட, கொடுப்பதில் தான் எனக்கும் அதிக மகிழ்ச்சி கிட்டுகிறது.

    இன்னும் நிறைய அள்ளி அள்ளிக் கொடுக்கணும் என நினைக்கத் தோன்றுகிறது. இது ஓர் ஆரம்பம் மட்டுமே. போகப்போகப் பார்ப்போம்.

    //தங்களின் சாதனைகள் தொடர வேண்டுகிறேன், இறைவனிடம். //

    மிக்க நன்றி, அம்பாள் அபிராமி அருள் புரியட்டும்.

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    -oOo-

    பதிலளிநீக்கு
  38. வல்லிசிம்ஹன் சொன்னது…

    //அன்பு தேன். திரு வைகோ சாரின் கதைகளை வாரப் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வருகிறது.நல்ல நகைச்சுவை. திடம் கொண்ட வாழ்க்கை. உற்சாகம் இத்தனைக்கும் உரியவர். அவரைப் பேட்டி எடுத்து எங்களுக்கும் பல விஷயங்களைத் தெரியவைத்தீர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.//

    வாங்கோ, நமஸ்காரங்கள்.

    தேனிடம் வண்டாகத் தங்களின் அன்பான வருகைக்கும், தேனுக்கான அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    -oOo-

    பதிலளிநீக்கு
  39. கீத மஞ்சரி சொன்னது…

    //கோபு சாரின் நகைச்சுவை நமக்கெல்லாம் பிரசித்தமாயிற்றே. ப்ளாக்கியுடனான இல்லறம் குறித்த அவரது பார்வை நல்ல சுவாரசியக் கலவை. சாட்டர்டே ஜாலி கார்னரில் அவர் கார்னர் மட்டுமல்ல, முழுக்களத்தையுமே ஆக்கிரமித்திருக்கிறார் தன் அற்புத எழுத்தால். வாழ்த்துக்கள் கோபு சார். நன்றி தோழி தேனம்மை.//

    வாருங்கள் சாதனை நாயகி / விமர்சன வித்தகி அவர்களே !

    வணக்கம்.

    மிகுந்த கூச்சத்துடன் ஒரு கார்னரில் ஒதுங்கியிருந்த என்னை தங்களின் தேன் போன்ற இனிமையான தோழி தான் மேடையேற்றி முழுக்களத்தையுமே ஆக்கிரமிக்கச் செய்துவிட்டார்கள்.

    பேட்டி எடுத்தவர், பேட்டி கொடுத்தவர் ஆகிய நாங்கள் இருவருமே வெயிட் ஜாஸ்தியானவர்கள் அல்லவா ! ;)

    அதனால் எங்களுக்கு கார்னர் எல்லாம் பத்தாது. முழுக்களமுமே கூட பத்தாது. ;)

    இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    -oOo-

    பதிலளிநீக்கு
  40. நான் விரும்பிப் படித்துவரும் வலைப்பூவிற்குச் சொந்தக்காரர்- எழுத்துலக ஜாம்பவான் -சாதனையாளர் இன்னும் எத்தனையோ பெருமைகளுக்குரியவர்! தொடர்ந்து என் வலைப்பூவின் பதிவுகளை வாசித்து கருத்துரையிட்டு ஊக்கமளித்துவருபவர்! அவர் நடத்தும் போட்டியில் பங்குபெற்று, சில பரிசுகளைப் பெறும் பாக்கியம் அடைந்ததை எண்ணி மகிழ்வடைகிறேன்! அவரது வலையுலக சாதனைகள் வளரட்டும்! எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருளட்டும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  41. தங்கள் பதிவினில் வரும் அனேக 'சார்ட்டர்டே ஜாலி கார்னர்' பதிவுகள் சுமார் 10 அல்லது 20 வரிகளில் முடிந்துவிடும்.
    ஆனால், இன்றோ திரு வை. கோ. சார் அவர்களின் பேட்டியால்
    பத்தி, பத்தியாக பதிவு நீண்ண்ண்டிருந்தது. விவரங்களை, தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் சார் வழங்கியிருந்தார்.
    விவரங்களைப் படித்ததும் அதன் பதிவுகளைச் சென்று பார்க்கும்படியாக இணைப்புகள் அனைத்தையும் கொடுத்தவிதம்
    மிக்க சிறப்பானதாகும்.
    ஆனால் ஒரு குறை:
    பதில்களை இப்படி அதற்குள்ளாக சார் முடித்துவிட்டாரே

    பதிலளிநீக்கு
  42. அன்பின் கோபால் சார்,

    இன்று முழுவதும் உங்களைப் பாராட்டி என் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்திலேயே அதிகமான பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான்.

    எவ்வளவு பேரும் புகழும் பெற்று சிறந்திருக்கிறீர்கள். எத்தனை பேர் உங்களைப் புகழ்ந்து என் வலைப்பதிவில் சொல்லி இருக்கிறார்கள் .படிக்கவே சந்தோஷமாக இருக்கு சார்

    மிகப் பெரும் ஆளுமையான தாங்கள் என் வலைப்பதிவுக்காக தங்களைப் பற்றித் தொகுத்து அளித்தமைக்கு நன்றி சார்.

    இந்த இடுகையே உங்களைப் பற்றிய அனைத்தும் அடங்கி இருப்பதால் யார் உங்களைப் பற்றிய சுயவிவரம் கேட்டாலும் அனுப்பி விடலாம். அப்படி ஒரு அழகான தொகுப்பாக அமைந்துள்ளது.

    உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்.

    அன்பும் நட்பும் பெருமிதமுமாக
    தேனம்மை லெக்ஷ்மணன்.

    வாழ்த்திப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. இன்னொருநாள் தனித் தனியாக நன்றி நவில்கிறேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு
  43. சகோதரர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களை குறித்த எல்லா வீவரங்களும் எனக்கு துளி துளி யாக தெரியும்.
    இங்கே சேர்த்து பார்க்கும்போது அப்பா மலைப்பாக இர்ருகிறது.
    இவரின் நட்பு என் மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன்.தொடரட்டும் எழுத்து பணி.







    பதிலளிநீக்கு
  44. Seshadri e.s. சொன்னது…

    //நான் விரும்பிப் படித்துவரும் வலைப்பூவிற்குச் சொந்தக்காரர்- எழுத்துலக ஜாம்பவான் -சாதனையாளர் இன்னும் எத்தனையோ பெருமைகளுக்குரியவர்! தொடர்ந்து என் வலைப்பூவின் பதிவுகளை வாசித்து கருத்துரையிட்டு ஊக்கமளித்துவருபவர்! அவர் நடத்தும் போட்டியில் பங்குபெற்று, சில பரிசுகளைப் பெறும் பாக்கியம் அடைந்ததை எண்ணி மகிழ்வடைகிறேன்! அவரது வலையுலக சாதனைகள் வளரட்டும்! எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருளட்டும்! நன்றி!//

    வாங்கோ, வணக்கம்.

    இந்தத்தளத்தில் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  45. எனது மெயிலில் கோபு சாரின் அழைப்பு கண்டு வந்தேன். கோபு சார் ஒரு சுவாரசியமான மனிதர். நாங்கள் ஒரு பயணத்தின்போதுதிருச்சியில் ஒரு நாள் இருக்கப்போவது பற்றி எழுதி சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன் ஒரு அரைமணிநேரம் சந்திப்பில் அளவளாவி இருப்போம். அவரினும் வயதில் மூத்த எனக்கு “அபிவாதயே: சொல்லி வணங்கியது என்னை நெகிழ வைத்தது. மற்றபடி சாட்டர்டே கார்னரில் சொல்லி இருக்கும் அனைத்து விஷயங்களும் அவரது பதிவுகள் மூலம் அறிந்திருக்கிறேன். தற்போது அவரது சிறுகதை விமரிசனப் போட்டிகளில் நான் கலந்து கொள்ளா விட்டாலும் விவரங்களைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.நல்ல சுவாரசியமான பேட்டி ( நேரடியாகவா கடிதம் மூலமா ) வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

    வாங்கோ நண்பரே, வணக்கம்.

    //தங்கள் பதிவினில் வரும் அனேக 'சார்ட்டர்டே ஜாலி கார்னர்' பதிவுகள் சுமார் 10 அல்லது 20 வரிகளில் முடிந்துவிடும். ஆனால், இன்றோ திரு வை. கோ. சார் அவர்களின் பேட்டியால் பத்தி, பத்தியாக பதிவு நீண்ண்ண்டிருந்தது.//

    என்னுடையது எப்போதுமே நீண்ண்ண்ண்ண்ண்டு தான் ..... Extra-ordinary type ஆகத்தான் இருக்கும்.

    சுருங்கவோ .... சுருக்கவோ தெரியாது. அதுவே என் பலமும் பலகீனமும் ஆகும்.

    //விவரங்களை, தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் சார் வழங்கியிருந்தார். விவரங்களைப் படித்ததும் அதன் பதிவுகளைச் சென்று பார்க்கும்படியாக இணைப்புகள் அனைத்தையும் கொடுத்தவிதம் மிக்க சிறப்பானதாகும். //

    மிகவும் சந்தோஷம்.

    //ஆனால் ஒரு குறை: பதில்களை இப்படி அதற்குள்ளாக சார் முடித்துவிட்டாரே//

    கிண்டலா !!!!!! ;)))))

    மிகவும் ரஸித்........தேன் !!!!!!

    இறை நாட்டத்தால், இந்தத்தளத்தில் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  47. viji சொன்னது…

    //சகோதரர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களை குறித்த எல்லா வீவரங்களும் எனக்கு துளி துளி யாக தெரியும். இங்கே சேர்த்து பார்க்கும்போது அப்பா மலைப்பாக இருக்கிறது.
    இவரின் நட்பு என் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.தொடரட்டும் எழுத்து பணி.//

    வாங்கோ விஜி. செளக்யமாம்மா ? தங்களைப்பார்த்து எவ்ளோ நாளாச்சு தெரியுமா ?
    அத்திப்பூத்தாற்போல வந்திருக்கீங்கோ. ரொம்ப சந்தோஷம்மா.

    மலைக்காதீங்கோ. துளித்துளியாக என்றால் தேன் துளி போலவா? மலைத்தேன் என்றால் கொம்புத்தேன் போலவா?

    தொடரட்டும் எழுத்துப்பணி என்று சொன்னால் போதுமா ? தொடர்ந்து என் பதிவுகள் பக்கம் வர வேண்டாமா, விஜி.

    வீ....ஜீ மீது விஜிக்கு ஏதும் கோபமோ என நான் நினைத்திருந்தேன்.

    எனினும் தேன் போன்ற இந்தத்தளத்திலாவது தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், விஜி.

    பிரியமுள்ள கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  48. G.M Balasubramaniam சொன்னது…

    //எனது மெயிலில் கோபு சாரின் அழைப்பு கண்டு வந்தேன். கோபு சார் ஒரு சுவாரசியமான மனிதர். நாங்கள் ஒரு பயணத்தின்போது திருச்சியில் ஒரு நாள் இருக்கப்போவது பற்றி எழுதி சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன் ஒரு அரைமணிநேரம் சந்திப்பில் அளவளாவி இருப்போம். அவரினும் வயதில் மூத்த எனக்கு “அபிவாதயே: சொல்லி வணங்கியது என்னை நெகிழ வைத்தது. மற்றபடி சாட்டர்டே கார்னரில் சொல்லி இருக்கும் அனைத்து விஷயங்களும் அவரது பதிவுகள் மூலம் அறிந்திருக்கிறேன். தற்போது அவரது சிறுகதை விமரிசனப் போட்டிகளில் நான் கலந்து கொள்ளா விட்டாலும் விவரங்களைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.நல்ல சுவாரசியமான பேட்டி ( நேரடியாகவா கடிதம் மூலமா ) வாழ்த்துக்கள்.//

    வாங்கோ ஐயா. வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  50. ஐயாவின் கருத்துரைகளைப் பற்றி சொல்ல வேண்டுமா...? அசத்தல்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  51. திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

    //ஐயாவின் கருத்துரைகளைப் பற்றி சொல்ல வேண்டுமா...? அசத்தல்...
    வாழ்த்துக்கள் சகோதரி...//

    வாங்கோ Mr DD Sir, வணக்கம்.

    எப்போதும் மேலிருந்து கீழ் முதல் நபராக இருப்பீர்கள். இன்று இங்கு ஒரு மாறுதலாக கீழிருந்து மேல் முதல் நபராகத்தோன்றுகிறீர்கள். எனினும் மகிழ்ச்சி.

    தங்களின் அன்பான வருகை + அசத்தலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  52. Congratulations, Gopu mama! We are happy for you because of your caring nature for others.

    பதிலளிநீக்கு
  53. Chitra சொன்னது…

    //Congratulations, Gopu mama! We are happy for you because of your caring nature for others.//

    வாங்கோ சித்ரா ! தங்களின் பிறந்தநாளான ‘சித்ரா பெளர்ணமி’ யன்று தங்களை என் மனதில் நினைத்துக்கொண்டேன்.

    என்ன ஆச்சர்யம் !!!!!.

    சித்ரா பெளர்ணமி நிலவு போல பளிச்சென்று இங்கு தோன்றி ஓர் கருத்தளித்து மகிழ்வித்துள்ளீர்கள். !!!!!

    மிக்க மகிழ்ச்சி சித்ரா ;)))))

    தங்களின் வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு மாமா

    பதிலளிநீக்கு
  54. சாட்டர்டே ஜாலி கார்னர் - மிகச் சிறப்பாக வை.கோ. அவர்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டது நன்றாக இருந்தது.

    வை.கோ. ஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  55. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    //சாட்டர்டே ஜாலி கார்னர் - மிகச் சிறப்பாக வை.கோ. அவர்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டது நன்றாக இருந்தது. வை.கோ. ஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.//

    வாங்கோ வெங்கட்ஜி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  56. கருத்துகளுக்கு

    நன்றி ராஜி

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கீதா மேம்

    நன்றி ஆசியா

    நன்றி கணேஷ்

    நன்றி ரிஷபன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  57. கருத்துக்களுக்கு

    நன்றி ராஜலெக்ஷ்மி

    நன்றி ஹரிணி

    நன்றி காமாட்சி

    நன்றி தமிழ் இளங்கோ :)

    பதிலளிநீக்கு
  58. கருத்துகளுக்கு

    நன்றி உஷா

    நன்றி பெருமாள் சார்

    நன்றி வல்லிம்மா :)

    பதிலளிநீக்கு
  59. நன்றி கீதமஞ்சரி சரியா சொன்னீங்க. :)

    நன்றி சேஷாத்ரி

    நன்றி நிஜாமுதீன்

    நன்றி விஜி

    நன்றி பாலசுப்ரமணியன் சார்

    பதிலளிநீக்கு
  60. நன்றி தனபாலன் சகோ

    நன்றி சித்ரா

    நன்றி வெங்கட்நாகராஜ்

    பதிலளிநீக்கு
  61. இத்தனை வருஷத்துல இது ஒரு சாதனைப் பதிவா இருக்கும் போல இருக்கு . இவ்ளோ கமெண்ட்ஸா. அதுவும் ஒவ்வொருத்தருக்கும் கோபால் சார் தனிப்பட்ட முறையில் நன்றி சொன்னது மிக அழகு

    தன்னுடைய பதிவைப் படிச்சிட்டுக் கருத்து சொன்னவங்களுக்கு ரொம்ப பாந்தமா அதை ஏற்றுக் கொண்டு அதுக்கு பதில் விளக்கமும் வாழ்த்தும் தேனான மொழிகளும் வழங்கி இந்த சும்மா வலைப்பதிவை கௌரவிச்சதுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் கோபால் சார் . இன்னும் பல்லாண்டு காலம் இதே ஊக்கத்தோடும் எனர்ஜியோடும் நீங்க பதிவுகள் எழுதணும்னு இறையருளை வேண்டுகிறேன். உங்க அன்பும் ஆசியும் வேண்டி நமஸ்கரிக்கிறேன். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  62. அன்பான வை.கோ
    ச்சும்மா தேன் பக்கம் மேய்ந்த போது புதை மணலாய் இழுத்தது உங்க பக்கம் .அனுமன் வாலாய் நீண்ட லிங்க்குகள் வெளிவர விடாமல் ஆக்டோபஸ் விரல்களால் கட்டிப் போட்டன.ப்ரமிக்க வைத்தது நகைச்சுவை உணர்வு.அதற்கு தான் நகை பரிசோ?
    இத்தனை நாள் என் கண்ணில் படாத்து என் குற்றமே .
    இனி நாம் பிரெண்ட்ஸ் .(அப்பாடா புக் நமக்கும் வரும்.)
    பரிசு கொடுத்து கதை படிக்க வைக்கும் நீர் எழுத்து வள்ளல்!பத்திரிகை களை ஒதுக்கியது நியாயமில்லை.அதன் வீச்சு பல் லட்சம் வாசகர்கள்.
    நானும் ப்ரம்மச்சாரியே.ஐ மீன் ப்ளாக்கியை மணக்காத......(சாரி ரமா டியர்)சின்ன வீடு செட்அப் பண்ண ரிஷபன் உதவலாம் .தடசணையாக கவிதைகளுக்குக் கமெண்ட் ஸ் தரப்படும் .
    வாழ்த்துக்களுடன்
    நளினி சாஸ்திரி
    @ Sekar Ramamurthy

    பதிலளிநீக்கு
  63. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  64. R E V I S E D
    ============

    Thenammai Lakshmanan சொன்னது…

    //இத்தனை வருஷத்துல இது ஒரு சாதனைப் பதிவா இருக்கும் போல இருக்கு . இவ்ளோ கமெண்ட்ஸா. அதுவும் ஒவ்வொருத்தருக்கும் கோபால் சார் தனிப்பட்ட முறையில் நன்றி சொன்னது மிக அழகு//

    மேலும் ஒரு 25 முதல் 30 பேர்கள் வரை இவ்விடம் கருத்தளிக்க வருவார்கள் என நான் எதிர்பார்த்தேன். ஏனோ இதுவரை அவர்கள் வரக்காணோம்.

    அதில் சிலர் தாமதமாக வருகை தந்தாலும் ஆச்சர்யமில்லை. ஒருவேளை வராமலே போனாலும் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ;)

    உதாரணமாக

    திருமதிகள் :

    1] அம்முலு [பிரியசகி],
    2] அதிரா,
    3] ஏஞ்சலின் நிர்மலா,
    4] ஆச்சி,
    5] அம்பாளடியாள்,
    6] சந்திரகெளரி,
    7] கோமதி அரசு,
    8] இளமதி [இளயநிலா],
    9] ஜெயந்தி ரமணி [மணம் மனம் வீசும்],
    10] ஜலீலா கமால்,
    11] மஞ்சுபாஷிணி,
    12] மிடில் கிளாஸ் மாதவி,
    13] மீரா,
    14] ஷக்தி பிரபா,
    15] ரஞ்ஜனி நாராயணன்,
    16] செல்வி நுண்மதி,
    17] ருக்மணி சேஷசாயீ அம்மா,
    18] ராதாபாலு,
    19] உஷா அன்பரசு,
    20] பூந்தளிர் சிவகாமி
    21] செல்வி யுவராணி,

    திருவாளர்கள்:

    22] ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி
    23] அன்பின் சீனா ஐயா,
    24] பழனி கந்தசாமி ஐயா,
    25] ஜீவி ஐயா,
    26] கவிஞர் யாதோ ரமணி
    27] ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்]
    28] கே.பி.ஜனா,

    போன்றோர்.

    //தன்னுடைய பதிவைப் படிச்சிட்டுக் கருத்து சொன்னவங்களுக்கு ரொம்ப பாந்தமா அதை ஏற்றுக் கொண்டு அதுக்கு பதில் விளக்கமும் வாழ்த்தும் தேனான மொழிகளும் வழங்கி இந்த சும்மா வலைப்பதிவை கௌரவிச்சதுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் கோபால் சார் . //

    அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களுக்கு, நாமும் அழகாக வித்யாசமாக ஏதாவது திருப்தியாக பதில் அளித்தால் தானே அவர்களுக்கும் ஓர் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும்.

    இதுபோலச்செய்வதை நான் முன்பெல்லாம் வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் என்னுடைய மாறுபட்ட வித்யாசமான பதில்களுக்காகவே பலரும் பின்னூட்டம் கொடுத்து வந்தனர். இப்போது கொஞ்சம் நேரமின்மையால் அவற்றை பெரும்பாலும் என் பதிவுகளில் குறைத்துக்கொண்டு விட்டேன்.

    //இன்னும் பல்லாண்டு காலம் இதே ஊக்கத்தோடும் எனர்ஜியோடும் நீங்க பதிவுகள் எழுதணும்னு இறையருளை வேண்டுகிறேன். உங்க அன்பும் ஆசியும் வேண்டி நமஸ்கரிக்கிறேன். வாழ்க வளமுடன்.//

    தங்களின் வேண்டுதல் பலிக்கட்டும். தங்களுக்கு என் மனம் நிறைந்த ஆசிகள்.

    பிரியமுள்ள கோபு




    பதிலளிநீக்கு
  65. Sekar R சொன்னது…

    //அன்பான வை.கோ
    ச்சும்மா தேன் பக்கம் மேய்ந்த போது புதை மணலாய் இழுத்தது உங்க பக்கம் .அனுமன் வாலாய் நீண்ட லிங்க்குகள் வெளிவர விடாமல் ஆக்டோபஸ் விரல்களால் கட்டிப் போட்டன.//

    ஆஹா, இது எனக்குத் தேனாக இனிக்கும் இனிய செய்தி. மிகவும் சந்தோஷம்.

    //ப்ரமிக்க வைத்தது நகைச்சுவை உணர்வு.அதற்கு தான் நகை பரிசோ?//

    குறிப்பாக நகையில் நாட்டம் ஏதும் அதிகம் இல்லாத எங்களுக்கு நகை கிடைத்தது தான் இதிலுள்ள நகைச்சுவையே ! ;)

    //இத்தனை நாள் என் கண்ணில் படாத்து என் குற்றமே. இனி நாம் பிரெண்ட்ஸ்.//

    அடடா .... எவ்வளவு நல்ல மனுஷ்யாள் !

    //(அப்பாடா புக் நமக்கும் வரும்.)//

    அதானே பார்த்தேன் ! ;)

    //பரிசு கொடுத்து கதை படிக்க வைக்கும் நீர் எழுத்து வள்ளல்!//

    எப்படியாவது படிக்கட்டுமே என்பதோடு இன்றைய என் பணத்துள்ளலும் நான் வள்ளலாக ஓர் காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். இதுவும் ஒருவித இலக்கியப்பணி அல்லவா !

    போகும்போது நாம் எதைக்கொண்டு போகப்போகிறோம்?

    பெறுவதைவிட அளிப்பதில் ஓர் தனி மகிழ்ச்சியல்லவா !

    //பத்திரிகை களை ஒதுக்கியது நியாயமில்லை.அதன் வீச்சு பல் லட்சம் வாசகர்கள்.//

    அதன் வீச்சு பல லட்சம் வாசகர்களாக இருக்கலாம். ஆனால் நமக்கு [எழுத்தாளருக்கு] ஏதும் இதில் இலாபம் கிடையாது. ஏதோ ஒரு சிறிய சன்மானம் மட்டும் கிடைக்கும். வாசகர் கடிதத்தில் ஏதேனும் ஒன்று மட்டும் எப்போதாவது வெளியிடப்படும். அதற்கும் நீண்ட நாட்கள் காத்திருக்கணும்.

    இதில் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. நான் அவற்றை ஒதுக்கியது என்னைப்பொறுத்தவரை மிகவும் நியாயமே தான்.

    வலைத்தளத்தில் எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்களை அப்படியே முழுவதுமாக. உடனடியாக வெளியிட முடிகிறது. இதில் EDITING ஏதும் கிடையாது.
    வெளியிட்ட மறுநிமிடமே பலரின் கருத்துக்களை உடனடியாக அறிய முடிகிறது. வாசகர்கள் பலரின் பின்னூட்டங்களே நான் விரும்பி அருந்தும் உற்சாக பானமாக என்றும் எனக்கு உள்ளது. பணமெல்லாம் ஏதும் தேவையே இல்லை.

    தங்களுக்கு ஒன்று தெரியுமா?

    பத்திரிகைகளில் வெளியிட மேட்டர் கிடைக்காததால் வலைத்தளப்பதிவர்களை அடையாளம் கண்டு சிறப்பிக்க ஆரம்பித்து விட்டன, இன்றைய பத்திரிகைகள்.

    நம்பமுடியாவிட்டால் இதோ இந்த இணைப்பைப் பாருங்கள்:

    http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

    //நானும் ப்ரம்மச்சாரியே.ஐ மீன் ப்ளாக்கியை மணக்காத......(சாரி ரமா டியர்) சின்ன வீடு செட்அப் பண்ண ரிஷபன் உதவலாம். தட்சணையாக கவிதைகளுக்குக் கமெண்ட் ஸ் தரப்படும் //

    இது மிகச்சுலபமாக விஷயம் தான். யாரையாவது பிடித்து சீக்கரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள். ஜாலியாக இருங்கள். வாழ்க்கையை நன்கு அனுபவியுங்கள்.

    .//வாழ்த்துக்களுடன்
    நளினி சாஸ்திரி
    @ Sekar Ramamurthy//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  66. மேலே நான் கொடுத்துள்ள பட்டியலில்

    திருமதிகள்:

    கோவை2தில்லி ஆதிவெங்கட்,
    கற்றலும் கேட்டலும் சுஹராஜி [ரேவதி] வெங்கட்,
    தமிழ்முகில் பிரகாசம்,
    கலையரசி [ஊஞ்சல்]

    ஆகியோர் பெயர்கள் அவசரத்தில் விட்டுப்போய் உள்ளன. அவர்கள் எப்போதாவது இந்தப்பதிவினைப் பார்க்க நேர்ந்தால் வருத்தப்பட நேரிடுமே என இங்கு மீண்டும் இப்போது தெரிவித்துள்ளேன்.

    இதுபோல விட்டுப்போனவர்கள் நிறைய பேர்கள் இன்னும் இருக்கக்கூடும். தங்கள் பெயர்கள் பட்டியலில் விடுபட்டுப்போனவர்கள் என்னை மன்னிப்பார்களாக ! - VGK

    பதிலளிநீக்கு
  67. பெயரில்லா13 மே, 2014 அன்று PM 5:28

    தங்கள் தொகுப்புகள் சாதனைகள் அனைத்தும் அறிந்து மகிழ்வு.
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  68. kovaikkavi சொன்னது…

    //தங்கள் தொகுப்புகள் சாதனைகள் அனைத்தும் அறிந்து மகிழ்வு.
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் மகிழ்வான இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  69. நன்றி நளினி சாஸ்த்ரி

    நன்றி கோவைக்கவி.

    பதிலளிநீக்கு
  70. ஆஹா...அருமையான பதிவு. நான் வெளியூர் சென்றிருந்ததால் இந்தப் பதிவைத் தாமதமாகவே பார்க்க நேர்ந்தது. இதோ பின்னூட்டம் கொடுத்து விட்டேன்.

    நகைச் சுவையாக எழுதுவதில் கோபு சாருக்கு இணை அவரேதான்! ப்ளாகிக்கு தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி 50வது பிள்ளைக்கு தாலி என்று பெயர் வைத்து.....அந்தக் கதையைப் படித்து நான் ரசித்து சிரித்த சிரிப்பு இருக்கே....இது மட்டுமல்ல....அவரின் பல பதிவுகளும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை பதிவுகள்! சாருக்கு 'நகைச்சுவை சக்கரவர்த்தி' என்று பட்டமே கொடுக்கலாம்!

    கருத்துப் பெட்டகங்களான சிறுகதைகள்..வானதி பதிப்பக வெளியீட்டுப் புத்தகங்கள்...ஸ்ரீராம் போட்டியில் தங்க நெக்லஸ்...காஞ்சிப் பெரியவரைப் பற்றிய அருமையான ஆன்மீக முத்துக்களான 108 பதிவுகள்.....வலைத்தளத்தில் தற்சமயம் கதை விமரிசனங்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு.....எதைச் சொல்வது...அத்தனையும் அருமையான பதிவுகளாச்சே!

    அவரிடம் பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருத்தி என்று பெருமை அடைகிறேன்.

    என்னுடைய பின்னூட்டத்தை எதிர்பார்த்த திரு கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    ஜோலி இல்லாதவர்களை சும்மா கூப்பிட்டு ஜாலியாக சில மணி நேரங்கள் சிரிக்க வைத்த திரு கோபு சார் அவர்களுக்கும், அவரைப் பற்றி விபரமாக அனைவரும் அறிய வைத்த (அவர் பலரும் அறிந்தவரே...என்னைப் போன்ற புதிய பதிவர்களும்....) திருமதி தேனம்மை அவர்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  71. Radha Balu சொன்னது…

    வாங்கோ, வணக்கம்.

    //ஆஹா...அருமையான பதிவு. நான் வெளியூர் சென்றிருந்ததால் இந்தப் பதிவைத் தாமதமாகவே பார்க்க நேர்ந்தது. இதோ பின்னூட்டம் கொடுத்து விட்டேன்.//

    அதனால் என்ன ! எப்படியோ இன்றாவது மறக்காமல் இங்கு வந்தீர்களே !! எனக்கு மிகவும் மகிழ்ச்சியே !!!

    //நகைச் சுவையாக எழுதுவதில் கோபு சாருக்கு இணை அவரேதான்! ப்ளாகிக்கு தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி 50வது பிள்ளைக்கு தாலி என்று பெயர் வைத்து.....அந்தக் கதையைப் படித்து நான் ரசித்து சிரித்த சிரிப்பு இருக்கே....//

    அடடா, மிகவும் தங்கமானவராகிய தங்களைப்போய்ச் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்து விட்டேனா ?

    Very Very Sorry Madam. ;)))))

    //இது மட்டுமல்ல....அவரின் பல பதிவுகளும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை பதிவுகள்! சாருக்கு 'நகைச்சுவை சக்கரவர்த்தி' என்று பட்டமே கொடுக்கலாம்!//

    ஆஹா, இது தான் ’வஞ்சப்புகழ்ச்சி அணி’ என்கிறார்களே! அதுவாக இருக்குமோ? ;)))))

    //கருத்துப் பெட்டகங்களான சிறுகதைகள்..வானதி பதிப்பக வெளியீட்டுப் புத்தகங்கள்...ஸ்ரீராம் போட்டியில் தங்க நெக்லஸ்...காஞ்சிப் பெரியவரைப் பற்றிய அருமையான ஆன்மீக முத்துக்களான 108 பதிவுகள்.....வலைத்தளத்தில் தற்சமயம் கதை விமரிசனங்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு.....எதைச் சொல்வது...அத்தனையும் அருமையான பதிவுகளாச்சே!//

    அருமையாக கோர்வையாக அழகாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

    //அவரிடம் பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருத்தி என்று பெருமை அடைகிறேன்.//

    நான் கொடுத்துள்ளது என்னவோ ‘சுண்டைக்காய்’ அளவுக்கான பரிசுகள் மட்டுமே. தங்களைப்போன்ற அருமையான எழுத்தாளர்களின் திறமைகளுக்கும், ஈடுபாட்டுக்கும், ஆர்வத்திற்கும், இன்னும் நிறைய கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அன்புடனும், பிரியத்துடனும், மனம் நிறைந்த ஆசிகளுடனும் இப்போது கொடுத்துள்ள இதை தயவுசெய்து ஓர் ஆரம்பமாக வைத்துக்கொள்ளுங்கோ.

    //என்னுடைய பின்னூட்டத்தை எதிர்பார்த்த திரு கோபு சார் அவர்களுக்கு மிக்க நன்றி.//

    என்னைப்போலவே பேரன், பேத்திகளுடன் ஜாலியாக உள்ள தங்கள் நிலைமை எனக்குத்தெரியும். தாமதமாக ஆனாலும் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கவில்லை. சந்தோஷமாக உள்ளது.

    //ஜோலி இல்லாதவர்களை சும்மா கூப்பிட்டு ஜாலியாக சில மணி நேரங்கள் சிரிக்க வைத்த திரு கோபு சார் அவர்களுக்கும், அவரைப் பற்றி விபரமாக அனைவரும் அறிய வைத்த (அவர் பலரும் அறிந்தவரே...என்னைப் போன்ற புதிய பதிவர்களும்....) திருமதி தேனம்மை அவர்களுக்கு நன்றிகள் பல.//

    தங்களைப்போலவே திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களும் சகலகலாவல்லியே. மிகவும் திறமைசாலி. தங்களைப்போலவே பல பிரபல பத்திரிகை எழுத்துக்களில் அவர்களும் பிரபலமானவர்களே.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நீ....ண்....ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...