எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

நிஸிம் இசக்கியேல். இருளின் கீதங்கள். NISSIM EZEKIEL. HYMNS IN DARKNESS.

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன்.

தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன்.

மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் இசக்கியேல் மும்பையிலும் பின் லண்டனிலும் கல்வி கற்றுள்ளார்.  காலனித்துவத்துவக் கோட்பாடுகளுக்குப் பின்னான இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருந்தார்.தனது 65 ஆவது வயது வரை பத்ரிக்கைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவருடைய ஓரிரு கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக உயர்நிலை வகுப்புகளில் அமல்படுத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தனது 80 ஆவது வயதில் 2004 இல் மறைந்தார். 

1976 இல் வெளிவந்த ஹிம்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எனது கருத்துகளோடு அவரது கவிதைகள் சிலவும் பகிர்ந்துள்ளேன்.

மரபைச் சார்ந்தும் மரபை மீறியும் உள்ள கருத்துக்களை வலிமையாகப் பதிவு செய்கிறார். எல்லாவற்றிலும் இவரின் எள்ளல் தன்மை வெளிப்படுகிறது. காதல் , காமம், பெண் உடல் , திருமண உறவு, பந்தம், அதன் நீட்சி போன்றவற்றினைப் பற்றிப் பேசும் கவிதைகளே இத்தொகுதியில் பெரிதும் இடம் பெறுகின்றன.

வயது வந்தோருக்கான கவிதைகள் என்றும் கூறலாம். குட் பை பார்ட்டி ஃபார் மிஸ் புஷ்பா டி.எஸ் என்ற கவிதை தன் தாய்மொழி வேறாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையில் எழுத்தப்பட்ட ஒரு நையாண்டிக் கவிதையாகும். 

THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.

எல்லாமே அடலசண்ட் கவிதைகள் தான். ஓன்லி பெரியவங்களுக்கு மட்டும்.

1. PASSION POEMS:-

1. SUMMER :-

TOO WARM
FOR LOVE MAKING
NOT TO WARM
FOR CARESSING.
WE ARE COOL AFTER BATHING
TOGETHER.

(வேனில் காலம்:-

காதல் செய்வதற்கு ஆகாத
வெக்கையான பொழுது.
மிருதுவாய்த் தடவ ஆகாததல்ல
இணைந்து குளித்தோம்
குளிர்ந்தோம். )




2. MONSOON:-

YOU ARRIVED
WITH SARI CLINGING
TO YOUR BREASTS AND HIPS
I PUT A KISS UPON YOUR LIPS
NO PART OF YOU
COULD HIDE.
AS YOU DRIED.

(மழைக்காலம்:-

ஸ்தனங்களிலும் இடையிலும்
புடவை நீரொட்டிக் கிடக்க

வந்தாய் நீ.
உன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன்
உன் எந்த உறுப்பும்
ஒளிய முடியாது
நீ உலரும் போது )

3.  THE SANSKRIT POET:-

HOW FREELY THEY MENTION
BREASTS AND BUTTOCKS
THEY ARE MY POETIC ANCESTORS.
WHY AM I SO INHIBITED ?

{சமஸ்கிருதக் கவிஞர்

எவ்வளவு இலகுவாக அவர்கள்

மார்பகங்களையும் பின்புறங்களையும்

குறிப்பிட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் என் கவிதை முன்னோடிகள்.

எனக்கு ஏன் இந்த மனத் தடை?. }


4. ON GIVING REASONS:-

SHE GAVE ME
SIX GOOD REASONS
FOR SAYING NO
AND THEN
FOR NO REASON AT ALL
DROPPED ALL HER REASONS
WITH HER CLOTHS.

(  காரணங்களைக் கையளித்தல் பற்றி:-

வேண்டாம் என்று சொல்வதற்கு

ஆறு சரியான  காரணங்களை
அவள் சொன்னாள்.

அதன் பிறகு

எந்தக் காரணமுமே இன்றி

களைந்தாள்  காரணங்களை

அவள்  உடைகளோடு சேர்த்து . )


5. NAMES:-

I REMEMBER
NOTHING
EXCEPT THAT SHE
UTTERED MY NAME
OVER AND OVER AGAIN
AND I
HERS.

( பெயர்கள்:-

எனக்கு எதுவும்

நினைவிலில்லை

அவள் என் பெயரைத்

திரும்பத் திரும்ப

உச்சரித்துக் கொண்டிருந்ததும்
நான் அவள் பெயரை

உச்சரித்துக்கொண்டிருந்ததும் தவிர )


நான் மிகவும் ரசித்த கவிதை இது. 

6. A MARRIAGE :-

KRISHNA'S TRICKS
ARE NOT FOR HIM.
NOR RADHA'S WILES
FOR HER.
THEY HAVE A DIFFERENT TRUTH
WITHIN A KINGDOM OF THERI OWN.
I ENVY THEM.

(  திருமணம்  :-

கிருஷ்ணனின் குறும்புகள்
அவனுக்கானதல்ல

ராதையின் தந்திரமும்

அவளுக்கானது அல்ல.

தங்களுக்குமட்டுமேயான இராஜ்ஜியத்தில்

அவர்களின் யதாரத்தமே வேறு..

அவர்களைப் பார்த்துப் பொறாமையுறுகிறேன். )


திருமண பந்தத்தில் உழலும் கணவன் மனைவிக்குள்ளாக  நிகழும் வெறுப்பு வேதனை மண்டிய இழப்பையும், வாக்குவாதங்களையும் புரிந்து கொள்ளாத தன்மையையும் திருமண வாழ்வின் தெளிவின்மையையும்  நிம்மதியின்மையையும் நிரந்தரமற்ற தன்மையையும் பகிர்ந்து செல்லும் கவிதைகள் சில.

7.  QUARREL.

ALL NIGHT I TALKED TO YOU
A TROUBLED DREAM
OF MANY WORDS
AND NOT A SINGLE KISS
LET US NOT QUARREL AGAIN
SO I MAY NEVER DREAM
IN ARGUMENTS ALONE.

( சச்சரவு:-

இரவு முழுவதும் உன்னோடு பேசிக்கொண்டிருந்தது

வார்த்தைகளால் நிறைந்த
ஒரு துன்பமான கனவைப் போலிருக்கிறது.

ஒற்றை முத்தம் கூட இல்லை.

இனி நாம் சண்டையிட வேண்டாம்.

அதனால் வாக்குவாதங்கள்  மட்டுமே நிறைந்த

கனவுகள் வராதிருக்கட்டும். )


பெண்ணின்மேல்/ மனைவியின் மேல் வெறுப்பு மண்டிய கவிதைகள் இவை இரண்டு,. சிறு கோபமும் ஒளிக்காத வன்மமும் வெளிப்படும் வார்த்தைகள்.

8. THE LOSS.

I HAVE LOST MY REASONS
LET IT GO.
DID I CREATE THIS WOMAN
UNTAMABLE AND YET
WILLING TO BE TAMED.?
ONLY SHIVA, MEDITATING
COULD BE IMMOVABLE
IN HER MOVING PRESENCE
AS FOR ME
I HARDLY MEDITATE AT ALL.

( இழப்பு :- 

நான் என் காரணங்களை இழந்துவிட்டேன்.

அது போகட்டும்.

அடக்கவே முடியாத
ஆனால்
அடக்கியாளப்பட விரும்பும்
இந்தப் பெண்ணை நான் உருவாக்கினேனா.

தியானத்திலிருக்கும் சிவன்மட்டுமே

அசைவற்று இருக்க இயலும்

இவளுடைய நகர்வின் இருப்பில்

என்னைப் பொறுத்தவரை

தியானிப்பது கடினம். )


முத்தாய்ப்பாக இருளின் கீதங்களில் நெகிழ வைத்த கவிதைகள் இரண்டு.

9. THE RAILWAY CLERK :-

..... .................
ALSO  I HAVE GOOD FRIENDS
THAT IS ONLY CONSOLATION.

( ரயில்வே க்ளர்க்:-

எனக்கு நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.

அதுதான் என்னுடைய ஒரே ஆறுதல் )


10. THE COUPLE:-

HIS LOVE IS SMALL
A FLICKERING LAMP
WHILE HERS LIGHTS UP
THE UNIVERSE.
HOW ON EARTH
ARE THEY TO SEE EACH OTHER
IN ITS NORMAL DARKNESS ?
ONLY THE GODS
CAN HELP THEM NOW.

(தம்பதியர்:-

அவனது அன்பு

சிறுவிளக்குப் போல ஒளிர்கிறது.

அவளது அன்போ

பிரபஞ்சத்தையே  ஒளியூட்டுகிறது.

உலகின் இயல்பான இருண்மையில்

எப்படி ஒருவரை ஒருவர் நோக்குவார்கள்.

கடவுளர்கள்தான்  அவர்களுக்கு
இப்போது உதவ முடியும். )


பெண்ணின் பேரன்பு பிரபஞ்சத்தையும் ஒளியூட்டும்தானே. உலகின் இயற்கையான இருளில் ஒருவரின் அன்பு ஒளிரும் சிறு  விளக்காகவும் , இன்னொருவரின் அன்பு பேரன்பாகவும் விகசிக்கும்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொள்வார்கள்தானே. பெண்ணின் பேரன்பில் கரைந்து விடும் ஆணின் ப்ரியம் என்பது. அதுதானே கடவுள் தன்மை. கடவுளர்கள் நிச்சயம் உதவுவார்கள். :)

டிஸ்கி:-இந்தக் கட்டுரை 21 செப், 2014 திண்ணையில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

  1. மிகவும் ரசித்தோம் இந்தப் பதிவை சகோதரி!

    அருமையான கவிஞர்! ஆங்கில லிட் என்பதால் வாசித்திருக்கின்றோம்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி துளசிதரன் சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...