எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஜூன், 2015

இறைவன்.



3. இறைவன் :-

*கூடையிலே பழங்கள்
விற்பதற்காய்.

*கூடைக்காரன் பயணம்
முட்கள் விதைத்த
ஒற்றையடிப்பாதையில்.

*கம்பீரக் க்ரீடமாய்க்
கூடை,
தலைமேல்.

*மனிதம் அறைபடும்
சாலைகளில்,
சந்துகளில்,
பொந்துகளில்,
கூடைக்காரன் கூவல்.

*மனிதர்கள் மனிதர்கள்
நித்ய வேலைகளில்,

*கூடைக்காரன் நா வரளும்,
பழங்கள் சுருளும்.

*மறுநாளும்  மனிதம் தேடி
அதே கூடையில் (ஞானம் )
பழங்கள் ஏந்தி
பயணம் செல்லும் கூடைக்காரன்.

8 கருத்துகள்:

  1. //*மறுநாளும் மனிதம் தேடி அதே கூடையில் (ஞானம் ) பழங்கள் ஏந்தி//

    தினமும் கூவிக்கூவி ’மனிதம் தேடி’ விற்றால் தானே அவனுக்கும் வியாபாரம் ஆகும். :)

    நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. "கடை விரித்தேன் வாங்குவாரில்லை "
    என்கிற வரிகளை நினைவில் நிறுத்திப் போகும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    (அடைப்புக் குறியிலிட்டுருந்த ஞானத்தை
    தலைப்பாக்கி இருக்கலாமோ )

    பதிலளிநீக்கு
  3. இறைவன் இங்கே என்று கூவி விற்கிறானோ. வலைப்பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக. வலைச்சரம் காண அழைப்பு.

    பதிலளிநீக்கு
  4. பிடித்த வரியை குறிப்பிட்டு சொல்லலாமென்றால் , எல்லா வரிகளும் நன்றாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  5. எந்த வரியை மெச்ச என்று ஒரே குழப்பம்....எல்லா வரிகளும் போட்டி போடுவதால்...

    *கூடைக்காரன் நா வரளும்,
    பழங்கள் சுருளும்.

    *மறுநாளும் மனிதம் தேடி
    அதே கூடையில் (ஞானம் )
    பழங்கள் ஏந்தி
    பயணம் செல்லும் கூடைக்காரன்.// ஆஹா ஞானம்! எங்கேயோ போய்ட்டீங்க சகோதரி!

    பதிலளிநீக்கு
  6. நன்றி விஜிகே சார்

    நன்றி ரமணி சார் . ஆமாம் ஞானம் என்ற தலைப்பும் நன்றாகத்தான் இருக்கும் :)

    நன்றி டிடி சகோ

    இருக்கலாம் பாலா சார் :)

    நன்றி செல்லபாண்டியன் !!!!!

    நன்றி துளசிசகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...