எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

துணை. - சொல்வனத்தில்.


துணை.:-


விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு . காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.

மெல்ல அசங்கியபடி  பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.

கீழ்வீட்டின்  நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். லோப்ல லேது என்று எத்தி கதவைச் சாத்திக்கொள்வார். எதற்கு வளர்ப்பு மிருகம். மனிதனுக்குள்ளே பல மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.  மற்றொரு மனிதனைப் பார்த்துக் கத்தினால் பதிலுக்கு குதறிவிடுவான், அதை நன்றியுள்ள நாய் செய்யாது என்பதாலா.


பாவம் அதன் வாயை வேறு அவ்வப்போது சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டிவிடுகிறார்கள். அது அவனைப்பார்த்தால் ஓடிவந்து குலவ வருகிறது . அவனுக்கும் ஃபாத்திமாவுக்கும் வளர்ப்புப்பிராணிகள் என்றால் அலர்ஜிபடி இறங்கிப்போகும்போது அது ஓடிவந்தால் அப்படியே மூச்சைப்பிடித்தது போல நின்று கொள்வார்கள் சாலமனும் ஃபாத்திமாவும்.


வீட்டுக்காரர் பையன் வந்துடர்னா மத் அங்கிள். குச் பீ நஹி கரேகாஎன்று சொல்லி காலிடுக்கில் அதன் சங்கிலியை மிதித்துப் பிடித்துக்கொள்வான்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.



திரு.கம்பன் அடிசூடி அவர்களின் வரவேற்புரை. :-

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.:-

குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழாவில் கம்பன் அடிசூடி அவர்களின் உரையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் அவர் பொருத்திச் சொன்ன விதம் அருமை.

கலப்பு.



இனியும்
பிச்சையெடுக்கப் போவதில்லை.
யாருக்கும்
காரணம் சொல்லத்
தேவையில்லாத போதும்
யார் தலையையும் காக்கும்
பொறுப்பு இல்லாத போதும்
தர்மத்துக்காகக்
காத்திருப்பு.,
கோயில் வாசலில்
அழுக்கு மூட்டையோடு
குளிக்கவும் இல்லாமல்.

காரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது :-



காரைக்குடி கம்பன் கழகத்தின் 58 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் சாகித்திய அகாதமியின் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களைப் பாராட்டி கம்பனடிப்பொடி விருது வழங்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பிதழ் கம்பனடிசூடி திரு பழனியப்பன் அவர்களிடமிருந்து வந்ததால் கலந்து கொண்டேன்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6

139. இது அரிவாள்மணை -- அருகாமணை. ஆனால் தேங்காய் திருகியும் அதற்கான மடலும் இணைந்தது. அநேகமாக இதுபோல் காரைக்குடியில் மட்டுமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.என் அம்மாவிடம் நாங்கள் போகும் ஊரில் பழகும் தோழியர் & பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுபோன்ற அருகாமணை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பார்கள். ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்குத் திரும்பும்போது அநேகருக்கு இம்மாதிரி அருகாமணை பார்சல் ஆகி இருக்கும். :)

அதே அரிவாள்மணை இன்னொரு கோணத்தில். இதில் திருகினால் தேங்காய் பூப்போல வரும். மிக்ஸியில் பவுடராகிவிடும். அல்லது திப்பி திப்பியாக வரும்.

மன வடிவ முத்தம்.

முன்னொரு நாள்
முன் மாலைப்போதும்
பின்னொரு நாள்
பின்னிரவுப்போதும்
இன்னொருநாள்
இளங்காலைப் போதும்
உன் குரல் அனுப்பி
விழுந்து கிடந்த
எனை தூக்கினாய்
குழந்தையைப்
போலானேன்
சினேகிதியே
தாயானாய்
வார்த்தைகளால்
தாலாட்டி
இதம்தந்தாய்
இன்னமுதே..

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - சுசீலாம்மாவின் புதுநூல் வெளியீடு.

அன்பு வாழ்த்துகள் அம்மா.

முகநூலில் சுசீல்லாம்மா தனது பக்கத்தில்  தனது புது நூல் வெளியீடு பற்றி எழுதி இருந்தார்கள். அவர்கள் வலைப்பக்கத்திலும் வெளியானதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தேடிப்பாரேன்..

தேடிப்பாரேன்,
கொஞ்சம் தேடிப் பாரேன்.
நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகளில்
ஆற்றின் கண்ணாடிச் சில்லுகளில்
கொட்டிச் சிதறும்
வெளிச்ச வெள்ளங்களில்
சூரியனின் சூடான முத்தங்களில்

சாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய சுடர்க்கொடி சுமிதாவும்.

முகநூலில் என் அன்பிற்குரிய தங்கைகளுள் ஒருவர் சுமிதா ரமேஷ். அழகான கவிதைகளும் அதைவிட அழகான அரங்கன் பதிவுகளுமாக மனதைத் தொட்டவர். என்றும் புன்னகை, எளிமை, அசத்தலான பதிவுகள் எனக் கலக்கி வருபவர். முகநூலில் மட்டுமல்ல கூகுள் ப்ளஸ்ஸிலும் இவர் பதிவுகள் பார்த்து அசந்ததுண்டு. அரங்கன் மேல் எனக்கும் பித்தென்றாலும் இவர் வழி தனி வழி. தினமும் தவறாமல் ரசனையோடு அரங்கனைப் பாடிப் பரவிப் புகழும் இவரின் பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட ஆவல் மிகுந்தது. 

/// அரங்கனைப் பற்றி ாயிரிவ்யப் ப்ரந்தப் பாடல்குடன் எனது தளத்துக்காக எழுதித்தரமுடியுமா சுமி. // 

 என முகநூல் உள் டப்பியில் தொடர்பு கொண்டபோது தினம் அரங்கனைப் பற்றி எழுதி வரும் அவர் ஆழ்வார்களைப் பற்றியும் எழுதித் தருவதாகச்சொன்னது களிகூரச் செய்தது. எம்பெருமான் சங்கல்பம். இதையே அவரும் சொன்னது பார்த்து இன்புற்றேன். :)
 



வைணவத்தில்  திளைத்த  ஆழ்வார்கள்
 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பொழுதும் மனசும்.



9.4.86.

8. சுருண்டு கிடக்கிறது
பொழுதும் மனசும்

கவிழும் ஓடாய்
இருள்.

உரலும் உலக்கையுமாய்
காற்றும் மரங்களும்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள். - சுமதிஸ்ரீயின் நூல் ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5


செட்டிநாட்டில் மிதிலைப்பட்டியில் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பது கேள்வியுற்று தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாதய்யர் அங்கே மாட்டுவண்டியில் சென்று அவற்றை எல்லாம் வாங்கிவந்து சேகரித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கே காரைக்குடியில் திருமணத்தைப் பதிவு செய்யவும் 124. ஏடுகளையும் 125. எழுத்தாணிகளையும் போன நூற்றாண்டில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு 126. இசைகுடிமானம் எழுதுதல் என்று பெயர். பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும், மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் இந்தத் திருமணப் பதிவு ஏடை எழுதிக் கொள்வார்கள். ஓரம் நறுக்கப்பட்டு கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஏடும். 

கதவுகள்



தொலைந்த என்னைத் தேடி
ஒவ்வொரு கதவாய்த்
திறந்து பார்க்கிறாய்.
எல்லாம் முடிந்தது எனத் திரும்பிச்
செல்லும் உன்னைக்
குரலற்றுப் பார்க்கிறேன்

புதன், 19 ஆகஸ்ட், 2015

சாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’ - ஒரு பார்வை.





இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.



115. இது ட்ரேதான். ஆனால் மரத்தில் செய்யப்பட்டு பறவையும் கிளையும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.



116.இது மணவறையில் உபயோகப்படுத்துவது. அரசாணிக்கால் நடுவது. முதல் நாள் இரவே பங்காளிகள் வந்து இதில்தான் கிலுவைக் கம்பையும் பாலைக்கம்பையும் ஊன்றி அரசிலைகளைச் சுற்றி வைப்பார்கள். அரசன் ஆணைக் கால் என்று பெயர். அரசனின் ஆணையோடு திருமணம் செய்விப்பதாக இதை வைப்பது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு.

ஈரோடு சங்கமத்தின்போதே எனது நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையையை வலைப்பதிவர் சந்திப்பில்  அவையில் திரு. தாமோதர் சந்துரு அண்ணன் & திரு. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலையில் தெரிவித்திருந்தேன்.  அந்த எண்ணம் இன்று ஈடேறியது.  தாமோதர் சந்துரு அண்ணன் முன்னிலையில் பாரதி புத்தகாலயத்தில் என்னுடைய நூல் பெண் பூக்கள் வாசகர்களால் வெளியிடப்பட்டது. பெண்பூக்களை அன்பின் ஆராதனாவும் சக்தி ஷாலினியும் பெற்றுக்கொண்டது வெகு சிறப்பு.  நன்றி அண்ணன். :)

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

காத்திருப்பு :-



காத்திருப்பு :-

*காகங்கள் கரைதல் போல்
இருப்புக் கொள்ளாமல்
நகரும் வாழ்க்கை.

8888888888888888888888888888888

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

அமீரகத்தின் தமிழ்த்தேரில் தாய்மை.

அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் இதழில் தாய்மை பற்றிய என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகி உள்ளன.

தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள் கட்டிடங்கள்  
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..  
மழை சலித்துச் சுருண்டது

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நாதாங்கி.

தாளிடப்பட்ட கதவின் பின்
பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை
எத்தனை முறைதான் அழைப்பது ?

தட்டத் தட்ட அதிர்கிறது
நாதாங்கி

உள் அலையும் சுவாசம்
வெப்பமாக்குகிறது அறைக்கதவை

சண்டையிட அல்ல
சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை
கதவு திறவாத ஒருவரிடம்
கத்தாமல் தெரிவிப்பதெப்படி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஸ்நேகம் :-



ஸ்நேகம் :-

*அன்புச் சூல் கொண்டு
மேகமாய் நான்.

*கட்டிட இறுக்கம் தூர்த்து
கொஞ்சம் மண்ணாகவும்
மரமாகவும் இரேன்.
என்னை நான் சமர்ப்பிப்பதற்கு.

இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்


இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்

காரைக்குடியில்  மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ  அமையாமல் காப்பது நலம்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர் . ஜக்கும்மாவின் ரின் நினைவுகள்.

ஜக்குமா. சகு மேம் என் முகநூல் தோழி. ஒருவரை ஏன் பிடிக்கும் எதுக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனா பார்த்தோடனேயே பிடிக்கும். அவங்கள்ல ஒருத்தர் ஜக்குமா. மிக மிக அன்பானங்க. அதிர்ந்து ஒரு சொல் சொல்லி எழுதி அறியாதவங்க. தன்மையானவங்க. பேசும் , எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் நூறு முறை யோசித்தபின் எழுதுறவங்க. தன்னையறியாமல் கூட அடுத்தவங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையா இருப்பாங்க. எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும்.அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காக தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கும்படி கேட்டிருந்தேன். அதுக்கு அவரின் பதில் இங்கே. :)


சகு மேம் எங்களோடு நீங்கள் சொல்ல நினைத்து இதுவரை சொல்லாத நிகழ்வுகள் சிலவற்றைப் பகிர்ந்துக்க வேண்டுகிறேன். 

 முயற்சிக்கறேன்! தேன்! உங்களைப் போலெல்லாம் பத்திரிகை க்காக எல்லாம் நான் எழுதிய அனுபவம் கிடையாதுப்பா! உங்க மதிப்பில் நான் இருப்பது உங்களுக்கே உள்ள அன்பான குணம்! நேரம் கொஞ்சம் சாதகமாக சில நேரங்களில் அமைய மெனக்கிட வேண்டியதாய் போய்விடுகிறது!
Related Posts Plugin for WordPress, Blogger...