எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.



 321. ஆடிச்சீர் - திருமணம் முடிந்த முதல் மூன்று வருடங்களுக்கு ஆடி மாதத்தில் வழங்கப்படும் சீர். ஆனால் இப்போதெல்லாம் முன்பே ஏதோ பணமாகக் கொடுத்து விடுகிறார்கள் . அல்லது இது இப்போது நடைமுறையில் இல்லை எனலாம். 

322. விளையாட்டுப் பொட்டி வேவு - பிள்ளை பிறந்ததும் எடுக்கப்படும் வேவு. விளையாட்டுச் சாமான்களைப் பரப்புவார்கள். வெள்ளி வேவுக் கடகாத்தில் பச்சரிசி தேங்காய் வைத்து ஆயா வீட்டில் இருந்து வேவு இறக்குவார்கள். இதற்கு அப்பத்தா வீட்டில் பலகாரம் செய்வார்கள். 

323. பொங்கல் சீர் :- சிலர் பொங்கல் சீரை வேவாகவும் எடுப்பதுண்டு. 

324. வேவு :- வீட்டு நிலை வாசலில் நடுவீட்டுக் கோலம் போடப்பட்டிருக்கும், அதன் முன் ஸ்லேட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். இந்த ஸ்லேட்டு விளக்கை அந்த வீட்டில் உள்ள திருமணமாகப்போகும் பையன்/பெண்ணின் அப்பத்தாவோ அத்தை முறை உள்ளவர்களோ ஏற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். அதன் முன் வேவு இறக்கும் பங்காளிகள் தலையில் தலைப்பா கட்டி வேவு இறக்குவார்கள். 

325. மாமவேவு :- இது திருமணத்தன்று ஆயா வீட்டில் இருந்து முதல் பையன் அல்லது பெண் திருமணத்தன்று திருமணத்துக்கு முன் வேவு எடுப்பார்கள். இதில் பரங்கிக்காய் , இலைக்கட்டு, பச்சரிசி, தேங்காய், வெல்லம் போன்றவையும் சீராக எடுத்து வரப்படும். 


326. கல்யாண வேவு/திருப்பூட்டின வேவு. :- திருப்பூட்டியபின் மாப்பிள்ளை வீட்டாரோடு பெண் வீட்டார் வேவு இறக்கிக் கொள்வார்கள். 

327. பெண்ணழைத்த வேவு :- திருமணம் முடிந்தபின் பெண்ணழைத்த பிறகு மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டில் பெண் வீட்டாரோடு வேவு இறக்கிக் கொள்வார்கள். 

328. திருவாதிரைப் புதுமை - அந்தக் காலத்தில் செய்தது இப்போது வழக்கொழிந்து விட்டது.   பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் பிறந்தநாள் போன்ற ஒரு விழா. சர்வ ஆபரணமும் அணிந்த சர்வ அலங்காரம் செய்த குழந்தையைத் தங்கத் தட்டிலோ, வெள்ளித் தட்டிலோ உட்கார வைத்துத் தூக்கி ஆலத்தி போல சுத்தி இறக்குவார்களாம். திருஷ்டி கழியச் செய்வது இது. 

329. சூள்பிடி/சூப்டி.. - இதுவும் அந்தக் காலத்தில் செய்தது இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆண் பிள்ளைகளுக்கு செய்யப்படும் ஒரு விழா. சூள்பிடி என்று சொல்வது. முதன் முதலில் பள்ளிக்கூடம் சென்று படிக்கப் போகும்பிள்ளையைக் குதிரையில் வைத்து அழைத்துச் சென்று ( அதன் முன்னே தீவிட்டி பிடித்து அழைத்துச் செல்வார்களாம் – அதுதான் சூள் பிடி ) பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றார்கள். 

///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////
 
330. முறைப்பலகாரம் கொடுத்தல் - திருமணம் ., சடங்கு கேதம் போன்றவற்றுக்கு  பலகாரம் கொடுப்பது.

331. மணவறைப் பொங்கல் இடுவது - பெண்ணின் மாமி மணவறையில் பங்கல் வப்பு, இடுவது

332. மஞ்சள் நீராடுதல். :- மாப்பிள்ளை பெண்ணைப் பெஞ்சில் அமரவைத்து அவர்களின் பாதத்தில் மஞ்சள் நீரை மாப்பிள்ளைக்கு மச்சினன் மச்சினியும் பெண்ணுக்கு கொழுந்தனார் நாத்தனாரும் ஊற்றுவது. சம்பந்திகள் இருவருமே கூட புடவை முந்தானை, வேட்டி முனையில் மஞ்சள் நீரால் நனைத்துக் கொள்வார்கள்.  

333. பிள்ளை எடுக்கிக் கொள்ளுதல்/ுலம் வாழும் பிள்ளை கொடுத்து வாங்குதல் - குலம்வாழும் பிள்ளையை அனைவரிடமும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள்.   :- மணப்பெண் குலம் வாழும் பிள்ளையை ஒரு பட்டுத் துணியில் சுற்றி அனைவரிடமும் கொடுத்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுதல். 

334. சொல்லிக் கொள்ளுதல் - பெண் தாய் வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொள்ளுதல்


335. ுடி அழைப்பு/ பெண் அழைப்பு - திருமணம் முடிந்தபின் மணமக்களை மாப்பிள்ளை இல்லத்துக்கு மேளதாளத்தோடு சீரோடும் சிறப்போடும் அழைத்து வருதல்
 
336.சீதனப்பணம்ொடத்ல் - திருமணம் முடிந்து பெண்ணுக்குக் கொடுப்பது. ஸ்ரீதனம். இது பெண்ணுக்கு மூலதனம் போன்று வங்கியில் டெப்பாசிட் செய்து வைக்கப்படும். இதை மாப்பிள்ளை பெண் இருவரும் பெரியவர்களிடம் கொடுத்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று வாங்கிக் கொள்வார்கள்.

337. முதல் வழி மறு வழி., பால் பழம் சாப்பிடுதல்பெண்ணின் தாய்வீட்டுக்கு மணமக்கள் முதல் வழி, மறு வழி சென்று வருவார்கள். அப்போது பாலில் பழத்தைக் கரைத்து பால்பழம் சாப்பிடக் கொடுப்பார்கள். 

338.தீர்த்தமாடுதல் - மாசமான பெண்ணுக்கு 5 மாதமாய் இருக்கும்போது ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடுவார்கள்

339. மருந்து குடித்தல்  & தீர்த்தம் குடித்தல். - மாசமான பெண்ணுக்கு 7 மாசமாய் இருக்கும்போது உரலில் மருந்து இடித்துக் கொடுப்பார்கள். இதில் பல்வேறு மூலிகைச் சாறு அடங்கி இருக்கும். மாமியார் அல்லது நாத்தனார் உரலில் இடித்து, மருமகளை சாமி வீட்டின் எதிரில் கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டு நிற்க வைத்து, இந்த மருந்தை வடிகட்டி அருந்தக் கொடுப்பார்கள். குழந்தைக்கு ஆயுளும் பலமும் பெருகவேண்டி இம்மருந்து கொடுக்கப்படுகிறது. 

340. தீர்த்தம் குடித்தல் :- சிலர் வீடுகளில் புண்ணியத்தலங்களில் ( காசி, இராமேசுவரம் போன்ற இடங்களில் ) இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களைக் கலந்து பூஜையறையில் வைத்து பூஜித்து, அதன் பின் மருமகளுக்கு சாமி வீட்டின் எதிரில் கோலமிட்டு ,அதன்மேல் தடுக்குப் போட்டு நிற்க வைத்து, அருந்தக் கொடுப்பார்கள்.



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

6 கருத்துகள்:

  1. காரைக்குடிப்பகுதியின் வழக்குச்சொற்களை அறிந்தோம். சொல்லுக்கான பொருளைத் தந்தவிதம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இவைகள் நம் கலாச்சாரமா...???
    இது குறித்து துளியளவு கூட
    எனக்கு தெரியாதே....!!
    அறியாததை இந்த பதிவின் மூலம்
    அறிந்தேன் சகோ...

    பதிலளிநீக்கு
  3. கிட்டத்தட்ட பல சமூகங்களிலும் இதே பழக்கவழக்கங்கள் வேறு வேறு பெயர்களுடன் சில அதே பெயர்களுடன். நிறைய தெரிந்து கொண்டோம்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜோசப்

    நன்றி துளசி சகோ. அப்படியா !!

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. காரைக்குடி பகுதியின் வழக்கு சொற்களை அறிந்தேன். சொற்கள் அனைத்தும் படிப்பறிவில்லாத சுற்றுப்புற கிராமங்களிலும் இதே சொற்கள் மற்ற சமூகத்தினரும் பயன்படுத்துகிறார்கள். வழக்குச் சொற்களின் விளக்கம் என் நெஞ்சை நெறுடுகிறது.
    சில விளக்கங்கள் தருகிறேன்

    1)சீதனம் (ஸ்ரீதனம் அல்ல) பெண்ணுக்கு நிலமாகவோ, வீடாகவோ கொடுத்து அனுப்ப முடியாது. அதற்குச் சமமாக பொருள்களை (தனம்) கொடுப்பது, அதாவது சீரான (சீருடை, சீரான பயிர் என்றால் சமமான என்றே பொருள்படுவதை நோக்குங்கள்) தங்கம், வெள்ளி,பணம்,வீட்டுச் சாமான்களை கொடுத்து அனுப்புவர். இதில் சமஸகிருதத்தை புகுத்தாதீர்.நேரம் கிடைத்தால் சிறுவாடு பற்றி விளக்குகிறேன். அதையும் ஸ்ரீவாடு' என்
    று சமஸ்கிருதமாக்கி விடாதீர்கள்.
    2) வேவு சீர்: கிராம மக்கள் தம் மகள்களுக்கு பொங்கலுக்கு முன்பு கொடுக்கும் சீர்வரிசையை பொங்கல் வேவு என்றே சொல்கிறார்கள். பெண்ணின் கிராமத்தின் விளைச்சல், ஆடு, மாடு, கோழிகள் இருப்பை அறிந்து (வேவு பார்த்து) இல்லாதவற்றையும் மற்ற மங்கலப் பொருள்களுடன் கொடுத்து வருவதுதான் வேவுசீர் ஆகும்.
    சீதனத்தை ஸ்ரீதனம் என்று சொல்ல வேண்டாம். அது உண்மை என்றால் சீர்வரிசை என்பது ஸ்ரீவரிசை என்று அனர்த்தமாகிவிடும்.

    அன்பு சகோதரன்,
    அழ.இராசேந்திரன்
    9444908068

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...