எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

901. இருட்டில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் கிழவர்கள்.

#ஒரு மிட்நைட்டில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஆச்சர்யப்படுத்திய விஷயம்.

902. சுண்ணாம்பை எதுக்கு எடுத்து உடம்புல அடிச்சிக்கிறே

உடம்புல சுண்ணாம்புச் சத்து கொறைஞ்சிருக்காம்.

“ஙே”


903. S1 லதானே உங்க டிக்கெட் S9 க்கு ஏன் வந்தீங்க.

எனக்கு அலாட் ஆன சீட்டை ஒரு சீனியன் சிட்டிசன் கேட்டாங்க.ன்னு S 2 க்கு அவங்க சீட்டுக்கு வந்தேன். அங்கே ஒரு கர்ப்பிணி S 3 ல தன்னோட இடத்துக்குப் போ சொன்னாங்க. S 3 ல ஒரு கைப்புள்ளக்காரம்மா வீட்டுக்காரரோட இருக்கணும்னு S 4 க்கு தன் சீட்டுக்குப் போ முடியுமான்னு கேட்டாங்க.  இப்பிடியே ஒரு மாற்றுத் திறனாளி, அப்பா அம்மா இல்லாம தனியா ஃப்ரெண்ட்ஸோட வந்த குட்டிப் பொண்ணு இதுபோல் ஒவ்வொருத்தரும் கேக்க நான் S 9 க்கு வந்திருக்கேன்.

சார் எனக்கொரு ஃபேவர்.

என் வைஃப் கூட இங்கே இருக்கேன். நீங்க S 10 க்கு என் சீட்டுக்குப் போக முடியுமா.

“ஙே”

904. குடிச்சபின்னாடி



காஃபின்னா கசக்கணும்
டீன்னா இனிக்கணும். :)

905. இந்த காக்கா எப்பிடி ஸ்லிம்மா இருக்கு

அது சோறு இட்லி சாப்பிடாது

அதான் கேக்குறேன் அப்பளம், சிப்ஸ், முறுக்கு, பிஸ்கட்டுன்னு நொறுக்குத்தீனியா மொறுக்கியும்
எப்பிடி ஸ்லிம்மா இருக்கு :)

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். கோகுலம். GOKULAM KIDS RECIPES.

ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்:-
.



ிஸ்கி:- இந்தெசிபி 2016 ஆகஸ்ட் மோகுலத்ில் வெளியானு. இில் சேம்பு வை ரெசிபியைப் பாராட்டியஆர் கே ஹிாஜா & ஆர்.ஜி. காயத்ரி , ிையன்விளஆகியோருக்கு மம் நிறந்தன்றி. ! 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.

881. Think thoughts of Forgiveness towards everyone.. Fly a kite across the river.. :) -- will try and thx to speaking tree.

882. Increasing the amt of let-7 ( a regulator molecule ) against the LIN28 ( a protein ) will switch off cancers in testis and ovary.. -- a research news in TOI.. ( coz chemotheraphy can have long term side effects including hearing loss and damage to the kidneys.. )..

883. ட்ராவல் பண்ணும்போது எடுத்துட்டுப் போறது ஹேண்ட்பாகா, கோடவுனான்னே தெரில.

884. எக்ஸ் எல் போதும்

இல்ல எக்ஸ் எக்ஸ் எல் எடுத்துக்க.

என்னங்க புது நைட்டி நல்லாயிருக்கா

எங்க நடந்து காமி

முன்னே போ.. பின்னவா..

என்ன கிண்டலா..

ரொம்ப அழகான..

சொல்லுங்க சொலுங்க..

குண்டு கோஸ்ட் மெதந்து வர மாரி இருக்கு..

யேய்....

-- குனிஞ்சு பார்த்தா ஐயயோ காலையேக்காணோம்

885. இன்பாக்ஸில் இன்ஸ்டண்டா பதில் சொல்ல ”தம்ஸ் அப் ” கொடுத்த முகநூல் தெய்வம் வாழ்க.

886.ஒரு (ஏசி கோச்) ட்ரெயின் பயணம் காதைப் பதம்பார்க்க ( ஏர் ட்ரம்ல ஹோல் ) காய்ச்சல், தொண்டை வலி. காட்டன் கொண்டுவராததால் வந்த தலைவலி. எப்படியோ சரியாகிவிடும் என விட அது அதி உச்சமாகி நேற்று முழுக்க உறக்கமில்லை. இன்று காலை எல்லா மாத்திரையையும் உத்தேசமாகப் போட்டுத் தூங்கியதில் எட்டரைக்கு விழித்து கல்கி பவள விழாவுக்கு ஒரு அர்ஜெண்ட் விசிட்.

சாப்பிடாமல் சென்றதால் அங்கே டிஃபன் சாப்பிட்டுத் திரும்ப மாத்திரைகளைக் கோயில் பிரசாதம் போல வாயில் போட்டு விழுங்கிவிட்டு அரங்கத்துக்கு உள்ளே வரும் வழியில் கல்கியின் ஐம்பெரும் தலைகளைப் படம் பிடிக்கிறேன் என்று குட்டிப் படி தடுக்கி பொதகட்டீர் என விழுந்து திரும்ப உள்ளே போனால் ஸ்க்ரீன் எல்லாம் கறுப்பு பட்டாம் பூச்சி பறக்க கண் தெரியாமல் போனது போலானது.

தடுமாறி மறுபடியும் உள்ளே சீட்டுப்பக்கமிருக்கும் படிகளில் குதித்துப் பிரண்டு வெளியே வந்து படியில் உக்கார்ந்து ஆசுவாசம் செய்து பாத்ரூமில் போய் முகம் கழுவினால் வேர்த்து வேர்த்துக் கொட்டுது.

அப்புறம் நட்புகள் பயந்துவிடக்கூடாதே என சமாளித்து ஒருவழியாக ஃப்ரெண்ட்ஸ் படத்தில் மண்டையில் அடிபட்ட சார்லி மாதிரி வந்து அமர்ந்தேன்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

சூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. )


குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப் பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.

பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள். ”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள். 

”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம். வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான் போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம் அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள் மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும் சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )


வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்.

வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன்

 

காரைக்குடியில் கம்ப்யூட்டர் கம்பெனியா. அதுவும் கால் லெச்சம் பணம் கட்டி யாராவது படிப்பார்களா. உங்க அப்பா காசை வீணடிக்காதீங்க. வேற தொழில யோசிங்க பாஸ் என்று நண்பர்கள் அட்வைஸியபோதும் முன்வைத்த காலைப் பின்வைக்காமல் முடிவெடுத்தபடி APTECH இன் ப்ரான்சைஸை 95 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்கள், ஊரில் மட்டுமல்ல பேரிலும் திட சித்தம் கொண்ட இந்த கல்லுப்பட்டி ப்ரதர்ஸ்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பவளவிழா மலரில்.

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பிழா மில்.


75 ஆண்டுகள்;,  முக்கால் நூற்றாண்டு..!! வெற்றிகரமாகப் பத்ரிக்கைப் பணியில் கோலோச்சி வரும் கல்கி குழுமப் பத்ரிகைகள், வேரூன்றிப் பாய்ந்திருக்கும் தமிழ் விருட்சத்தின் அற்புதக் கிளைகள். கல்கி குழும ஊழியர்களின் குழந்தைகளிடமும் தமிழ் விதையைத் தூவவும், ஆலம் விழுதாய்த் தமிழை ஊன்றவும்  பவளவிழா ஆண்டு நிறைவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்காக ஜூன் 11 ஆம் தேதியன்று பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி வளாகத்தில் தமிழ் செழிக்கப் பல்வேறு போட்டிகளும் குதூகலமாய் நடைபெற்றன.

வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் ஒப்புவிக்கும்  போட்டிகள் முதலிலும் அதன் பின்  வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியும், பாடல்  போட்டியும் நடந்தது. மினிஷா நாயர் தொகுத்து வழங்க மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி அனைவரையும் குழந்தைகளாக்கினார்.

கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பெருமைக்குரியவர்களே

சனி, 20 ஆகஸ்ட், 2016

மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.

861. மெல்லத் தூறிக் கொண்டிருக்கிறது மழை. இதழ்கள் உதிர்வதுபோல் என்னைத் தொட்டுத்தொட்டுப் புல்லரிக்கவைக்கிறது. எந்தத் தாழ்வாரமும் வாகாய் இல்லை ஓடி ஒளிய.

ஒரு வைக்கோல்போரின் மேல் அமர்ந்தும் விடுதிக் கட்டிடங்களைச் சுற்றியும் கைகள் விரித்து அலைந்து கெபியில் ஒண்டிக் கொண்டதும் அதில் சிற்றருவிகளாய்த் தெறித்த சாரலும் மரங்களின் மேலிருந்து மணிகளாய் உதிர்ந்த மழையும் தாவணியில் நீரலையைச் சரியவிட நானே காடாய் மரமாய் மலையாய் உன்மத்தம் பிடித்து ஊறிக் கிடந்ததும் ஏனோ நினைவில் வர கூச்சம் விட்டு நடக்கத் துவங்குகிறேன்.

செல்லுமிடமெல்லாம் சிரசில் முத்தமிட்டுத் தோள்பற்றிக் கைவழி வழிந்து பிடித்து என்னைத் தொடர்ந்து வருகிறான் அவன். வீடுகளுக்குள் உறைந்து கிடக்கிறது ஊர்.

எங்கள் ராஜபாட்டையில் மழைப்புரவியும் நானும். அங்கங்கே அகலக் கால் விரித்து அவன் அடர்கோபம் கொள்ள கடிவாளமிழந்த கோமகளாய்க் கைவசம் சேணம் மிச்சம். பூந்தூறலாகக் கோதையாய் நான் அவனை மார்பில் சூட மெல்லத் தன்வசம் இழந்து முணுமுணுக்கிறான் காதோரம். மெல்ல நட மெல்ல நட என்று.

கிசுகிசுக்கும் அவன் குரலைக் கன்னத்தில் திப்பி திப்பியாய் வாங்கி உரத்துக் கூவுகிறேன் எதிரொலிக்கிறது எங்களுக்கான பாதையில் நான் விரித்த வார்த்தைகள். மீண்டும் மீண்டும் வா... ஐ லவ் யூ மழை ராட்சசா... :)


862. dekh bhai dekh( Sushma Seth) , zaban sambalke ( Pankaj Mohan/Kapoor), nukkad ( Shah Rukh Khan), Junoon ( Kitu Kidwani), Shanthi ( Manthra Bedi).. ithu 5 m 1995 la iruntha top 5 hindi serials.. whom do u like the most.. ( yaraith theriyuthoo ilaiyoo.. ellarukkum Manthravai therinchurukalam..lol )

863. ATTRACTION ..> DISTR(U)ACTION.

864. 5000 பேரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறதா..

865. பஜ்ரங்பலியின் வாலை விட அதிகமா நீளுதே ப்ளாக் லிஸ்ட்

புதன், 17 ஆகஸ்ட், 2016

சூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.

எனது ”சூலம்” சிறுகதைக்கு 2016 திருக்குறள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு வழங்கிய பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துக்கு நன்றிகள். இது தற்போது வெளியான எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி !

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

காட்டானும் காத்திருத்தலும், காதலும் கனவு ராணியும்.

1. MADE IN INDIA .

அலிஷா டேயின் இந்தப் பாட்டுக்கு நான் அடிமை. இது வெளிவந்து 92 - 93 இருக்கும் என நினைக்கிறேன். ராஜா ராணி கதை. கொஞ்சம் மைக்கேல் ஜாக்சன் பாடல் பாணி. அப்புறம் கொஞ்சம் ஃபேரி டேல்ஸ் கதை. :)




2. PAYALIYAA HO HO HO

ரிஷி ஒரு கொலுசை வச்சு என்னா ஆட்டம் என்னா ஆட்டம். :)  வெகு சீக்கிரத்தில் மறைந்த திவ்ய பாரதி கொள்ளை அழகு.




3. AISI DEEWANAGI.

இதிலும் ஷாரூக்குடன் திவ்யபாரதி. பாடல் வரிகள் இதம்.
 




4. KYA KOI HAMEY JUNGLIE KAHEN

சசி கபூர் நடித்த மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல். காட்சியமைப்பும் அருமை. 




சனி, 13 ஆகஸ்ட், 2016

காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)


386. ஏழு வாயிற்கதவுகள் கொண்டவை காரைக்குடி வீடுகள். 387.முகப்புக் கதவு, 388.பட்டாலைக் கதவு, 389.வளவுக் கதவு, 390.ஆல்வீட்டுக் கதவு, 391.இரண்டாங்கட்டுக் கதவு, 392.மூன்றாங்கட்டுக் கதவு, 393.பின் வாசற்கதவு என ஏழு இரட்டைக் கதவுகள் உண்டு.
394. இது மணிப்பூட்டு. பூட்டு ஒரு சுற்றுச் சுற்றி லாக் ஆனவுடன் ட்டிடிங் என்று சத்தம் கேட்கும். இது போல் மூன்று முறை சுற்றிப் பூட்டணும்.
சாவிகளும் கோயில் சாவிகள் மாதிரிப் பெரிதானவைதான். அந்த ஸ்விட்ச் போர்டைப் பாருங்க இப்பல்லாம் தட்ட எளிதான வெள்ளை பட்டன்கள். இந்த 395.கறுப்பு சுவிட்சைத் தட்டினால் டிக் என்று சத்தம் கேட்கும்.

புதன், 10 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் உள்ள நந்தினி சிறுகதை .

தென்றலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் அனுப்பி அதன் பின் மறந்துவிட்டு என் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்ட கதை ஒன்றை தென்றலுக்காக ஒலிவடிவமாக்கி இருக்கின்றார்கள்.


வேறு நூலில் வந்ததை வெளியிடமுடியாது என்றாலும் ஒலி வடிவில் முன்பே ஏற்றியதை பெருமதிப்பிற்குரிய என் முகநூல் தோழி திருமதி சரஸ்வதி தியாகராஜன் அனுப்பி இருக்கின்றார்கள்.

அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர்கள் குரலில் என் கதையைக் கேட்கும்போது அற்புதமாய் இருக்கிறது. படிக்கும்போதே நெகிழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன்.

என் சிறிய மகன் சபாரெத்தினத்தினம் இதை சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்துள்ளான்.

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.  கேட்டுட்டு சொல்லுங்க :)


திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

ஆத்தாள் என்பவள் நம் அகத்தில் இருப்பவள், ( இல்லத்தில் )  அகத்துள் ( உள்ளத்தில் ) உறைபவள். அதனால்தான் ஆத்தா *381 என்றழைக்கின்றோம் என்றார் ஆடிப்பூரத் திருவிழாவில் முத்தமிழ் மன்றத்துக்காக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் உரையாற்றிய திரு கம்பனடிசூடி பழனியப்பன் ஐயா அவர்கள்.

நம்ம ஊர்களில் அம்மனையே ஆத்தா என்றுதான் அழைப்போம். மாரியாத்தா, காளியாத்தா என்று அதே போல் காரைக்குடியைக் காக்கும் தெய்வங்களை கொப்பாத்தா, முத்தாத்தா என்று அழைக்கிறோம்.  வீட்டுப் படைப்பு தெய்வங்களை அக்கினியாத்தா, மாறாத்தா, அடக்கியாத்தா, மெய்யாத்தா என்று அழைக்கிறோம். என்றார்கள்.

இன்னும் இன்னும் இலக்கியத்திலும் ஏனைய இடங்களிலும் ஆத்தா என்று சொல்லப்பட்ட இடங்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசிய அவர்கள் ஆத்தா என்று தமது பாடல்களிலே சொன்ன இருவரை முக்கியமாகக் குறிப்பிட்டார்கள். . அந்த இருவர் நமக்கெல்லாம் தெரிந்த இருவர்தான் இருவருமே யோகியைப் போன்றவர்கள், இல்லறவாசிகள்தாம்.

 ஒருவர் பட்டர், இன்னொருவர் பட்டினத்தார்  ஒருவர் இல்லறத்தில் இருந்தும்  யோகியைப் போன்றே இருந்தவர் அவர் அபிராம பட்டர். இன்னொருவர் இல்லறத்திலிருந்து துறவறம் பூண்டவர். அபிராமி அந்தாதியில் குறிப்பிட்ட நூற்பயனில் அவர் பாடுகிறார் இப்படி.

மறுபடி இணைபுகு நீ.



ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும் நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும் நீ

வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ  தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.


சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ


ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மைக்கேல் ( இன்ஸ்பிரேஷன் ) ஜாக்சன். - MICHAEL ( INSPIRATION) JACKSON !

 மைக்கேல் ஜாக்சனின் பாப் பாடல்களை ரங்கமணி கேட்பார். அடுத்துப் பிள்ளைகள். எனவே அடிக்கடி கேட்டுக் கேட்டு எனக்குப் பிடித்துப் போன பாடல்களை இங்கே பகிர்கிறேன். ப்ரேக் டான்ஸில் இருந்து பாப் பாடல் நடனங்கள் ரொம்ப வித்யாசமானவை அல்ல. !

மைக்கேல் ஹிஸ்டரி ஜாக்சன் என்ற வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்ததும் அவரைப் பார்த்து நிறையப் பேர் மயங்கி விழுவார்கள். அவ்ளோ க்ரேஸ்.

எனக்கு அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும். கமலஹாசனிலிருந்து பிரபுதேவா மற்றும் இன்றைய டான்ஸ் மாஸ்டர்கள் வரை அனைவருக்கும் ஒரு கருவூலம் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள்.

1. முதலில் கோஸ்ட் இதுதான் தசாவதாரத்தில் கமலின் மேக்கப்புக்கான இன்ஸ்பிரேஷனான இருந்திருக்கக் கூடும்.தனியே அமர்ந்து பார்த்தால் சிறிது திகிலூட்டக்கூடிய பாடல் காட்சி இது.



2. ஒரு முகநூல் நண்பர் பகிர்ந்திருந்த ராபர்ட் ப்ரவுனிங் பாடலை ஞாபகப்படுத்தும் ஆல்பம் இது. கமலஹாசனின் மாயா மச்சீந்திரா பாடலும் இதைப் போன்றதுதான்.



3. ரொம்ப ரசிச்ச பாட்டு இது. கொஞ்சம் முக்காபலாவை ஞாபகப் படுத்திய பாட்டு.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

361. வர்ணக்கோமாளி - அதி கோமாளித்தனமாகக் காரியம் செய்பவர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இருக்கும் வர்ணத்தை எல்லாம் கோமாளி முகத்தில் அடித்துக் கொள்வதைப் போலக் கிறுக்குத்தனமாக எல்லாப் பக்கமும் பேசித் திட்டு வாங்குபவர் இவர். சமய சந்தர்ப்பம் தெரியாமல் காமெடி செய்பவரையும் குறிக்கும்.

362. பாடாவதி. - பயனற்றவர்., சுமார். உருப்படாதவரைக் குறிப்பது.

363. சர்வ பாடாவதி - எக்ஸ்ட்ரீம் பாடாவதி. சுத்த வேஸ்ட் என்பதைப் போல. எதுக்கும் லாயக்கில்லாதவர் எனச் சொல்வது.

364. திருகுதாளம் பிடிச்சது - எந்த விஷயத்தையும் ட்விஸ்ட் செய்து விடுபவரைக் குறிப்பது

365. தீசப் பிடிச்சது. - நல்லெண்ணம் அற்றவரைக் குறிப்பது. தீசல் என்றால் தீய்ந்து போதல் ஒரு பொருள் அதி உஷ்ணத்தால் தீய்வது போல அடுத்தவரைப் பார்த்து அதீதமாகப் பொறாமைப்படுபவரைக் குறிப்பது.

366. பூதிப்படையில. - ஒரு விஷயத்தைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் அடித்து விடுவது. குத்து மதிப்பாகச் சொல்வது.

367. வெகண்டை - தேவையில்லாமல் கிண்டல்/நக்கல் செய்பவரைக் குறிப்பது.

ஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!! ***************************************************

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது.

காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு கழிவுகளை அதில் கொட்டி விஷமாய் ஆக்கி இருப்பீர்கள். பெண்களையும் அப்படித்தானே கடக்கிறீர்கள். தேவைக்கு உபயோகப்படுத்தி பின் பகடைக் காய்களாக. உடமைப் பொருட்களாக, பல நூற்றாண்டுகளாக.




உங்கள் இறுகிய பார்வையில் அவளை முடக்குகிறீர்கள். அல்லது அன்பால் முடங்க செய்கிறீர்கள். அவளைப் பற்றி வரையறை வைத்திருக்கிறீர்கள். இன்னது செய்யலாம் இன்னது கூடாது.. இப்படி இருக்கலாம் இப்படிக் கூடாது என்று. அதில் உங்கள் தோழிகளுக்கு சில சலுகைகள் இருக்கலாம். மகளுக்கும்கூட ஆனால் மனைவிக்கு அல்ல.

புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதா.. குமார்..

நம் நட்பில் இருந்த, இருக்கும் இருவரின் காதலை நாம் தினம் தினம் சோகத்தோடு  சுமந்தலைவது எவ்வளவு கொடிது. தினம் தினம் புறாக்கள் எச்சமிட்டு எவ்விப் பறக்கும் மொட்டைமாடியின் பெஞ்சுகளில் சிதறிக்கிடக்கும் தானியங்களும் நீரும்போலக் கலந்தழிகிறது மனது. ஒரு நெருப்பை மூடியது போல, ஒரு காட்டாற்றைக் கதவடைத்து வைத்தது போல ஒன்றரை மாதங்களாகச் சூழ்ந்து செல்லும் இவ்வேதனையைக் கடப்பதெப்படி . தினம் தினம் சோர்வுறும் மனதை எதனால் புத்துணர்வூட்டிக் கொள்வது. கவிதாவைப் போலக் குமரனின் கவிதைகளிலா..

அவளும் நானும் முகநூலில்தான் நட்பானோம்..கவிதா சொர்ணவல்லி என்ற பேர் எனக்கு மிகவும் பிடித்தது. அதுவும் அவளின் படமாக அந்த ஒற்றை மயில் மாணிக்கம் அற்புதம். அவளின் சில சிறுகதைகளைப் படித்து இப்படியும் உள்மனசை, உண்மையை அதிரடியாய்ச் சொல்லமுடியுமா என அதிசயித்திருக்கிறேன்.

குமரகுருபரனை நான் நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் கவிதாவின் முகநூல் எழுத்துகள் வழி பார்த்திருக்கிறேன். அவரது இரு நூல்களின் வெற்றியை அவள் கொண்டாடிய ஒவ்வொரு தருணங்களிலும் பொறாமையுற்றிருக்கிறேன். அவரின் கம்பீரத்தையும் உருவத்தையும் உயரத்தையும் சிலாகித்தபோதெல்லாம் அவளிடம் செல்லக் கோபம் கொண்டிருந்திருக்கிறேன். அது அவள் என்னிடம் கொண்ட அன்பின் பங்கீட்டுக்கான பொறாமை. அவள் பொசல் வெளிவந்தபோது நான் அவள் பக்கமில்லையே என்று மிக வருந்தி இருக்கிறேன்.

எஃப் எம் ரேடியோவில் வழக்கமாக அனைவரையும் கலாய்க்கும் பாலாஜி என்னை கவிதாவின் அறிமுகத்தில் ( சர்வதேசத் திரைப்படங்கள்பற்றிய) கருத்து கேட்டபோது  மிக மிக எளிதாகப் பேச விட்டார். முதன்முதலில் வானொலியில் என் குரலை உலவவிட்ட பெருமைக்குரியவள்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அக்கா அம்மாவானாள் !

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு வகையான வாழ்த்துகள். முன்பு எல்லாம் அக்கா என வாழ்த்துவார்கள். இந்தச் சில வருடங்களில் சிலர் அம்மா என்றும் வாழ்த்துகின்றார்கள்.

இனிமையான வாழ்த்துகள் கண்டு மனம் நெகிழ்ந்த தருணம் அதை வலைப்பூவிலும் பதிவு செய்யும் எண்ணம் வந்தது.

உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துகளும் சுமந்து இதயம் திகைத்து நிற்கிறது. நட்பெனும் பேறு பெற்றேன். சிரம்தாழ்த்தி ஏற்கிறேன். என் பிறந்தநாளில் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றி. . வாழ்க வளமுடன்.
அன்பரே ! வணக்கம் . உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! “ அறிவைத் தேடிக்கொண்டே இரு! அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு ! சாதியை உதறு ! மதத்தை மற! மனிதனை நினை! உழைப்பை நம்பு! அன்புடன், சு.பொ.அகத்தியலிங்கம்

Subramaniam Chupoo

அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Advance birthday wishes

தனிமையான நாளும் வாழ்க்கைக்கான காதலும்.

சில ஆங்கிலப் பாடல்கள் ம்யூசிக், தீம், டான்ஸ், குரல் இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லாது எல்லாமும் சேர்ந்தோ பிடிக்கும். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.

1. i want to hold your hand. பீட்டில்சின் இந்தப் பாட்டு எப்ப கேட்டாலும் ரிதம்.


2. high school musical 3 take my hand hary. இளம்பிள்ளைக் காதல்.



3. HOTEL KALIFORNIA - EAGLES. மறக்கமுடியாதகுரல், பாடல்வரிகள். மனசைக் கொய்த பாட்டு. மிகப் பிடித்த வரி.

WE ARE ALL JUST PRISIONERS HERE OF OUR OWN DEVICE.. !




Related Posts Plugin for WordPress, Blogger...