எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 ஆகஸ்ட், 2016

காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)


386. ஏழு வாயிற்கதவுகள் கொண்டவை காரைக்குடி வீடுகள். 387.முகப்புக் கதவு, 388.பட்டாலைக் கதவு, 389.வளவுக் கதவு, 390.ஆல்வீட்டுக் கதவு, 391.இரண்டாங்கட்டுக் கதவு, 392.மூன்றாங்கட்டுக் கதவு, 393.பின் வாசற்கதவு என ஏழு இரட்டைக் கதவுகள் உண்டு.
394. இது மணிப்பூட்டு. பூட்டு ஒரு சுற்றுச் சுற்றி லாக் ஆனவுடன் ட்டிடிங் என்று சத்தம் கேட்கும். இது போல் மூன்று முறை சுற்றிப் பூட்டணும்.
சாவிகளும் கோயில் சாவிகள் மாதிரிப் பெரிதானவைதான். அந்த ஸ்விட்ச் போர்டைப் பாருங்க இப்பல்லாம் தட்ட எளிதான வெள்ளை பட்டன்கள். இந்த 395.கறுப்பு சுவிட்சைத் தட்டினால் டிக் என்று சத்தம் கேட்கும்.

396. மூன்று பட்டை வார்ப்பிரும்புக் கட்டைகளும் சில வீடுகளில் உண்டு.
397. மழையினால் பாசம் பிடித்துக் கிடக்கும் தரையும் குட்டிக் காசாணி அண்டாவும்.
வளவுக் கதவு.
பட்டாலைக் கதவும் முகப்புக் கதவும் வெளிவாயிற்கதவும்.
இது நடுவில் ஆல்வீட்டில் கண்ணைக் கவர்ந்த ஒரு 398. மெத்தை பீரோவைப் புகைப்படம் எடுத்தேன். இதில் திருமண சீராக வைத்த இலவம்பஞ்சுத் தலையணைகள், அலங்கார மெத்தைகள், 399. பிள்ளை மெத்தைகள், 400.ஒலுகு, 401.திண்டு, 402.சமுக்காளம், போர்வைகள், படுக்கைவிரிப்புகள்,403.கோரம் பாய்கள், 404.பர்மாப் பாய்கள், 405.மெத்தைப் பாய்கள், 406. சின்ன சடப்பிரம்பாய்கள், 407.ரத்தினக் கம்பளங்கள், 408.பந்திப் பாய்கள், 409.வளவு முகப்பில் விரிக்கும் சமுக்காளங்கள் ( அனுவலுக்கு எடுப்பது ),410. தடுக்குகள் இருக்கும்.

411.இதை மெயினாக எதற்கு எடுத்தேன் என்றால் இதன் கொக்கியைப் பாருங்க. பொதுவா முன்னே பின்னேதானே இருக்கும் இதில் சைடில் இருக்கு. அலமாரியில் ஒரு கதவைச் சாத்தியபின் அதன் இருபக்கங்களிலும் இருக்கும் இந்த மினி கொக்கிகளை நேரடியாக அலமாரியில் போடலாம். டைட் பிட்டா காத்துக் கூட நுழையாத அளவு இருக்கும்.
ஆகக் கடோசில ஆல்வீட்டில் இந்த அண்டாவைப் பார்த்துட்டமா. இன்னொரு அண்டா உண்டு அது  412.நெல் அவிக்கும் அண்டா. இது காசாணி அண்டாவில் பெரிது. மழைத்தண்ணீர் பிடித்து வைக்க உதவும்.
இந்த அண்டாவுல வேடுகட்டிப்பிடிச்ச மழைத்தண்ணி அம்புட்டு ருசியா இருக்கும். இந்தத் தண்ணீல சமைச்சா சோறும் குழம்பும் இன்னும் இன்னும்னு உள்ளே போகும். 
413. இான் ண்ணிக்கிடாரம் என்று எங்க அம்மா பின்னூட்டிட்டிருக்கங்க. :) 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

9 கருத்துகள்:

  1. அண்டா அண்டாவாகப் படங்களும் செய்திகளும் அருமையோ அருமை.

    இவ்வளவு பெரிய வீடுகளைச் சுத்தம் செய்து பராமரிக்கவே பலர் தேவைப்படக்கூடுமே !

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்திலும் வித்தியாசம்தான் காரைக்குடி. அப்பப்பா. எவ்வளவு நுணுக்கம்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வளவுக்கதவுகளும் அண்டாக்களும் அழகு!

    பதிலளிநீக்கு
  5. வீட்டின் கதவுகளே ஏழாக இருக்கும் போது, அது எவ்வளவு பெரிய வீடாக இருக்க் வேண்டும், வியப்பாக உள்ளது. அடடே அந்தக் கதவில் அமைந்திருக்கும் பூட்டு எவ்வளவு பெரியது, பூட்டை உடைக்கமுடியாது, பதிலாக முழுக்கதவையும் உடைக்கலாம். புகைப்படங்களும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.புகைப்படங்களுடன் அருமையான விளக்கமும் அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  6. மழைத்தண்ணி பிடிக்கும் அண்டாவுக்குப்பெயர் தண்ணிக்கிடாரம்.

    பதிலளிநீக்கு
  7. மூடிபோட்டு இருப்பதுதான் தண்ணிக்கிடாரம்.

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் விஜிகே சார். ஒரு விசேஷம் என்றால் குறைந்தது பதினைந்தாயிரம் ரூபாய் செலவழித்து மூன்று முறை ஐந்து பேர் கொண்டு வீட்டை சுத்தம் செய்தபிறகே பழைய ஸ்திதிக்கு வருகிறது.. கருத்துக்கு நன்றி.

    ஆமாம் ஜம்பு சார். கருத்துக்கு நன்றி

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி மனோ மேம்

    நன்றி அருள்மொழிவர்மன் :)

    நன்றி ஆத்தா. திருத்திவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...