எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மறுபடி இணைபுகு நீ.



ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும் நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும் நீ

வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ  தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.


சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ


ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.


ஆண்டாளாய் நான் உருக அந்தத்
திருப்பாவை நீ திருமாலும் நீ
உயிர்கொடுத்தவன் நீ உருகிச் சேர்ந்ன் நீ.

ஐந்தல்ல ஆயிரம் எடுத்தாலும் எந்தன்
பிறவியின் பெரும்பயன் நீ பெறற்கரும் பேறும் நீ
மனதின் மறுஉரு நீ. மறுபடி இணைபுகு நீ. 

 டிஸ்கி :- ஏர்வாடி திரு இராதாகிருஷ்ணன் கடந்த நாற்பதாண்டுகளாக நடத்திவரும் கவிதை உறவு இதழுக்காக  ”என் கணவர்” ிரா முல்லை அவ்கள் கேட்டற்காக என்ற தலைப்பில்  எழுதிய கவிதை இது.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...