எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

546.ஏட்டுப் பள்ளிக்கூடம் , திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம்  என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். அமராவதி புதூர் என்ற ஊரிலும் திருப்பளாய்த்துறை என்ற ஊரிலும் குருகுலக் கல்வி முறை இருந்தது பற்றி என் பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதென்ன ஏட்டுப் பள்ளிக்கூடம். அந்தக் காலத்தில் குழந்தைகளை முதன் முதலில் விஜயதசமி அன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். இதற்கு சூள்பிடி என்றும் பெயருண்டு. 


///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

மாணவர்கள் ஆசிரியருக்குக் குருதட்சணை ( தேங்காய் , பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தட்சணை ) சமர்ப்பித்துக்  கல்வி கற்பிக்க வேண்டி வணங்கி நிற்பார்கள். அப்போது பரப்பிய மஞ்சள் அரிசியில் அல்லது மணலில் கூட  ஆசிரியர் மாணவர்களின் கையைப் பிடித்து ஆட்காட்டிவிரலால்“அரி ஓம்” என எழுத வைப்பாராம். அதன் பின் 547.* ஏட்டில் எழுத்தாணி வைத்து எழுதக் கற்பிப்பார்களாம்.


இந்த எழுத்தாணி வார்ப்பிரும்பில் செய்யப்பட்டிருக்கும். ஏடு பனை ஓலையைப் பதப்படுத்திச் செய்யப்பட்டிருக்கும். இதை வெள்ளோலை என்றும் சொல்கிறார்கள்.

ஒவ்வொருவரும் அதில்தான் உயிரெழுத்து மெய்யெழுத்து எல்லாம் எழுதக்கற்று வார்த்தைகள், வாக்கியங்கள் எழுதக் கற்று சிலர் கவிதைகளும் காவியங்களுமே புனைந்துவிடுவார்கள். இதை எழுதி வைக்கும் ஓலைகளை ஓலை நறுக்கு என்றும் ஓலை முறி என்றும் சொல்வார்கள்.இணைத்துக் கட்டப்பட்ட பின் இவற்றை ஓலைச்சுவடி என்கிறார்கள்.

அதிகமாக அழுத்தம் கொடுத்தால் ஏடு கிழிந்துவிடும்.இதிலும் ஒவ்வொரு ஏடாக எழுதி நடுவில்/ஓரத்தில் துளையிட்டுக்  கயிற்றில் கோர்த்து வைப்பார்கள்.அந்தக் கயிறும் ட்வைன் நூல் போல் கெட்டியாக கால் இஞ்ச் தடிமனில் இருக்கும்.

ஒவ்வொரு ஓலையிலும் எழுதி முடித்துக் கோர்த்துக் கட்டும்போது தனது இன்ஷியலைப் பொறித்திருப்பார்கள்.

வட்டி கொடுக்கல் வாங்கல் கணக்கு, சொத்துப் பத்திரம்கூட அந்நாளில் ஏட்டில்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கு. !

 அந்நாளில் காதல் தூது விடக்கூட ஓலை பயன்பட்டிருக்கு. அது போக அரசாங்க ஓலைகள் திருமுக ஓலை என்று பிரசித்தமானவை.

இதில் என் கணவரின் பாட்டையா எழுதிப்பழகிய 548.*ஏடு/ஓலைச்சுவடி. இதுதான் எல்லா மங்கல நிகழ்வுக்கும் 549.*தும்பு பிடிக்க உபயோகப்படுகிறது. 

செட்டிநாட்டுப் பக்கமிருக்கும் 550.*மிதிலைப்பட்டி போன்ற ஊர்களுக்கு தமிழ்த்தாத்தா உ வே சுவாமிநாத ஐயர் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து  இதுபோல பல அரிய ஓலைகளைக் கண்டுபிடித்துச் சேர்த்துத் தமிழுக்கு அரும்தொண்டாற்றி இருக்கிறார்  எனப் படித்திருக்கிறேன். 

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்குதவாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.   சித்திரத்திலிருக்கும் காய் சமைப்பதற்காகாது. அதுபோல் வெறும் கல்வியறிவு மட்டும் யதார்த்தத்தை எதிர்கொள்ளப் போதாது. அத்துடன் பொது அறிவும் வேண்டும் என்ற அர்த்தத்தில் இருக்கலாம். !

பனை ஓலைகளை மட்டுமல்ல. காகிதப் புத்தகங்களையும் அதனாலேயே ஏடு என அழைக்கிறோம். பழைய புத்தகங்கள் பக்கங்கள் பிரிந்து தனித்தனியாக வந்தால்  ஏடு ஏடா வருது என்றும் சொல்வதுண்டு. !

பனையோலையில் எழுதிய காரணத்தாலேயே நமது எழுத்துக்கள் வட்டமாக இருக்கின்றனவாம். !  

காரைக்குடித் திருமணங்களில் ஏட்டில் இருக்கும் கயிறில்தான் தும்பு பிடிப்பார்கள். அதாவது நடுவீட்டின் சாமி வைத்திருக்கும் சுவரில்  கோலமாவு தொட்டுக் கயிற்றை நனைத்து வீடுபோல வரைவது. இது எல்லா மங்கல நிகழ்வுகளிலும் 551.*பிள்ளையார் நோன்பிலும் இடம் பெறும்.

மேலும் திருமணங்களில் 552.* இசைகுடிமானம் எழுதும்போது இதில்தான் எழுதிக் கொள்வார்கள்.அதாவது மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன். சாட்சிப்பத்திரம்.  !!!   553. *முறி எழுதிக் கொள்ளுதல் என்றும் கூறுவார்கள்.

554.*  ////கேரள சிங்கவள நாடாகிய கழனி வாசல் வீரபாண்டியபுர ஒக்கூருடையார்.... இன்னார் பேரனும் மகனுமாகிய இவரை இன்னார் பேத்தியும் மகளுமாகிய இவருக்குத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு... 555.*இத்தனைஆடு இத்தனை 556.* வராகனெடை 557.* கழஞ்சு பொன்  எல்லாம் கொடுப்பதாக/// ப்ரிண்ட் செய்யப்பட்ட காகிதத்தில் இன்று எல்லாரும் கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். ( பலம், சேர், காணி, வராகனெடை, இம்மி,மாகாணி, முந்திரி .மா,வீசம், தோலா , வீசை, குன்றிமணி, அவுன்ஸ், கழஞ்சு ஆகியன அன்றைய அளவை முறைகள் )

அன்று இவை அனைத்தையும் ஏட்டில் எழுத்தாணி கொண்டு இருவரின் 558.* பாட்டன்மாரும் தலையில் தலைப்பா கட்டி தடுக்கில் அமர்ந்து எழுதி மாற்றி வைத்துக் கொள்வார்கள். 559.*“ கல்யாணத்தைக் கெட்டி பண்ணிக் கொள்ளுதல் “ என்ற நிகழ்வு நிச்சயதார்த்தம் போல முன்பே நடைபெற்றாலும் இதுதான் 560.* உறுதிப்பத்திரம். !. 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர் 



1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...