எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 பிப்ரவரி, 2017

மாங்கல்யதாரணமும் மங்கள தோரணமும்.

641*. கழுத்துரு கோர்த்தல்.
கழுத்துருவில் பொதுவாக 642* .31 உருப்படி இருக்கும். இது போக 643* .குச்சி 644*. தும்பு 645*.துவாளை என்ற மூன்றையும் திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையில்கழுத்துருவில் கோர்த்து மணமகளுக்கு மணமகனின் தாயார் அல்லது அப்பத்தா அணிவிப்பார்கள். திருமணத்தின் போது கழுத்துரு கட்டுவதுதான் 646*. மாங்கல்யதாரணம்.

இதில் 647. கடைமணி, 648*. உரு, 649*. சரிமணி, 650*. ஏத்தனம், 651*. லெட்சுமி ஏத்தனம், 652*. திருமாங்கல்யம் ஆகிய உருப்படிகள் கோர்க்கப்படும்.

கடைமணி சதுரமாகவும், உரு உருண்டையாகவும், சரி மணி நீள் உருண்டையாகவும் இருக்கும். ஏத்தனம் என்பது ஐந்து விரல்கள் போல லெட்சுமி ஏத்தனத்தின் இருபக்கமும், திருமாங்கல்யத்தின் இருபக்கமும் கோர்க்கப்படும். லெட்சுமி ஏத்தனம் என்பது நான்கு விரல் கொண்ட அமைப்பில் நடுவில் இருப்பது. திருமாங்கல்யம் என்பது கோபுர அமைப்பில் இருபுறமும் கால்பாவியது போல் இருப்பது. 

இவற்றைக் கோர்ப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. 653*. திருமணத்தின் முதல் நாள் மணமகள் வீட்டாரிடமிருந்து கொண்டு வரப்பட்டு மாப்பிள்ளை வீட்டில் கழுத்துருவுக்குப் 654*. பொன் தட்டி அதன் பின் கோர்க்கப்படும். 655*. மாப்பிள்ளையின் பங்காளிகள் வந்திருந்து கோர்த்துக் கொடுப்பார்கள்.

////656.*. பிள்ளைச் சரடு இழைதல்:
7 பாகம் நூல் எடுத்து, 3ல் ஒரு பங்காக சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒத்தை தும்பை கோர்க்கவேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடது பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்து குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர் கழுத் துருவை கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்டு பின்னர் கழட்டி வைக்கவேண்டும்.

கழுத்துரு உருப்படிகள்:
மேல் பாகம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
கீழ்பாகம்: 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
கடைமணி: 1, 16, 17, 31
உரு: 2, 3, 4, 6, 8, 10, 12, 14, 15, 18, 19, 20, 22, 23, 25, 26, 28, 29, 30
ஏத்தனம்: 5, 13, 21, 27
லெட்சுமி ஏத்தனம்: 24
சரி மணி: 7, 11
திருமாங்கல்யம்: 9

29 உருப்படிகள் இருந்தால் 23, 25 (வட்டத்துக்குள் உள்ளதை) கோர்க்க வேண்டாம்.////


-- நன்றி அருண் கண்ணன். செட்டிநாட்டு இதிகாசம்.  
பிள்ளைகள் கோர்க்கக் கற்றார்கள். கோர்த்தபின் இப்படி இருக்கும்.


மேலே உதிரியாக இருப்பதுதான் குச்சி தும்பு துவாலை. இதைத் திருமணம் முடிந்த பின்னர் கோர்ப்பார்கள்.
தென்னங்குருத்தைக் கொண்டு தோரணம் தயாரித்தல், ( 657*. கூந்தல் என்றும் சொல்வார்கள் ) மங்கள தோரணம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு திருமணத்திலும் ஒவ்வொரு விசேஷத்திலும் ( குடிபுகுதல், பண்டிகைகள், திருவிழாக்கள் ) கட்டப்படுகிறது. நீளக்கயிற்றில் ஒரு மாவிலையும் ஒரு தோரணமும் கோர்த்துக் கட்டி மணப்பந்தலை அலங்கரிப்பார்கள். மாவிலையைப் பின்புறமாகக் காம்பைச் செருகி அதைக் கோர்ப்பார்கள்.
தென்னங்குருத்தோலை கொண்டு செய்யப்படுவது தோரணம். மங்களம், அமங்கலம் ஆகிய தோரணங்கள் உண்டு. தோரணத்தை மூன்று நான்கு இடங்களில் கீறி இரண்டாகப் பிரித்து அதை ஒன்றுக்குள் ஒன்று செருகி வி ஷேப்பில் மடிப்பார்கள். இந்த மடிப்புக்களைக் 658*. குருவி என்பார்கள். 
659*. அமங்கல தோரணங்கள் மூன்று குருவிகள் கொண்டதாகவும் குருவிகளின் தலை கீழ்நோக்கியும் வால் மேல் நோக்கியும் இருக்கும்.

660*. மங்கள தோரணங்கள் நான்கு குருவிகள் கொண்டதாகவும் குருவிகளின் தலை மேல்நோக்கியும் வால் கீழ்நோக்கியும் இருக்கும். ( இரட்டை வால் குருவி போல :) இந்தப் பிள்ளைகள் மங்கள தோரணம் செய்திருக்கிறார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்   



7 கருத்துகள்:

  1. தொழிற்நுட்ப பதிவு எழுதுவது பற்றிய ஞாபகம் வந்தது...!

    பதிலளிநீக்கு
  2. அருமையாக இருக்கே!! பிள்ளைங்களுக்கும் கற்றுக் கொடுத்தல் அவங்க ஆசையா கற்றுக் கொள்தல் பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் மகிழ்வாக இருக்கிறது. கல்சர் கல்சர்!!!

    பதிலளிநீக்கு
  3. மாங்கல்யங்கள் பல வகைப் படும் இடத்துக்கு இடம் கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் மாறு படும்

    பதிலளிநீக்கு
  4. அஹா நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி பாலா சார். ஆம் சரியா சொன்னீங்க.

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...