எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 மே, 2017

புஸ்தகாவில் என் நாலாவது மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில் என் நாலாவது  மின்னூல் . ”நீரின் பயணம்”

புஸ்தகாவில்   என் நாலாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஒன்பதாவது நூல் ) “நீரின் பயணம்” வெளியாகி உள்ளது.

இது எனது கவிதைகளின் தொகுப்பு. . 184 கவிதைகள் உள்ளன.
 உள்ளன.

பக்கங்கள் - 201.

விலை ரூ. 125. 00 / $ 3.99.

 இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/neerin-payanam

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் என் மூன்றாவது மின்னூல் “ தேன் சிறுகதைகள்”

புஸ்தகாவில் நேற்று  என் மூன்றாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , எட்டாவது  நூல் ) “ தேன் சிறுகதைகள்”  வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 29 சிறுகதைகளும் ஒரு நாடகமும் உள்ளன.

பக்கங்கள் - 125.

விலை ரூ. 75. 00 / $ 1.99.

இந்த இணைப்பை க்ளிக் செய்து வாங்கலாம். 

http://www.pustaka.co.in/home/ebook/tamil/thean-sirukathaigal

தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.



நேருக்கு நேர். மனம் விரும்புதே உன்னை உன்னை.. சிம்ரன் தோன்றிய முதல் படம். ஹிப் டான்ஸ்களின் முன்னோடி. J





அதே சிம்ரனின் முதிர்ச்சித் தோற்றம். ஆனால் க்ளாஸான பாட்டு.

Vaaranam Aayiram - Mundhinam Video | Harris Jayaraj | Suriya

பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.



பிட்ஸ்ட்ரிப்ஸ் கலாட்டா.

இது ஒரு ஃபேஸ்புக் அப்ளிகேஷன். கொஞ்சநாள் நான் இதன் பிடியில் அகப்பட்ட பிடியாய் இருந்தேன். ஹிஹி .. 


**பாஸ்டாவில் ஆராய்ச்சி



திங்கள், 29 மே, 2017

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனத்தில் கவிதை, கோலம், சமையல்.

மகளிர் தரிசனம் ஸ்பெஷல் இதழில் என்னுடைய கூலம் கவிதை,

விழிப்புணர்வுக்கோலங்கள்,

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

சனி, 27 மே, 2017

புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

 புஸ்தகாவில் என் இரண்டாவது மின்னூல் . ”தீபலெக்ஷ்மி”

புஸ்தகாவில் நேற்று  என் இரண்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஏழாவது நூல் ) “தீபலெக்ஷ்மி” வெளியாகி உள்ளது.

இது எனது சிறுகதைகளின் தொகுப்பு. 16 சிறுகதைகள் உள்ளன.

பக்கங்கள் - 126.

விலை ரூ. 75. 00 / $ 1/99.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/deepalakshmi

 படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.

சாட்டர்டே போஸ்ட். ஜிஎம்பி சாரின் தேடல்களும் பகிர்வுகளும்.



பாலா சார் என்று நான் அழைக்கும் ஜி எம் பாலசுப்ரமணியன் சார் நான் வியக்கும் ஒரு பதிவர். பூவையின் எண்ணங்கள், gmb writes ஆகிய இரு பதிவுகளில் எழுதி வருகிறார். 

எல்லாரும் பாராட்டும் ஒரு விஷயத்தில் அவர் கேள்விகள் எழுப்பி இருப்பார். தற்போது அவரும் தன்மையாகவே பாராட்டிச் சென்றுவிடுகிறார். அவ்வப்போது அவரது ஆதங்கமும் கேள்விகளும் ஒளிந்துதான் இருக்கும் அவற்றுள்ளும்.

பதிவுகள் எழுதுவதிலும் வித்யாசம்தான். ஏனெனில் அவர் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் தேடி எழுதி இருப்பார். நான் ஆத்திகனா, நாத்திகனா, நான் ஏன் பிறந்தேன், ஆலயம் சென்றதனாலாய பயன், தொடரும் தேடல்கள் ஆகியன மிகவும் சிந்திக்கவைத்த இடுகைகள். இடையறாத தேடல்தானே மனித வாழ்க்கை. 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது உடன் எழுதி அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். 


அன்பின்  தேனம்மைக்கு இத்துடன் ஒரு பதிவு எழுதி அனுப்பி இருக்கிறேன்


 தேனம்மை லக்ஷ்மணனுக்காகபதிவுலகில் நேரில் சந்தித்திராத  ஒரு நண்பி. அட்டகாசமாக எழுதுகிறார் நான்  என் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின்  உச்சிக்காகவாவது  போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top) பரிவை குமாரின் தளத்தில் அவரது அபிலாக்ஷைகளை கூறி இருந்தார் . அப்போதே என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார்அவர் என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும்  எழுதுங்கள் சாட்டர்டே போஸ்டுக்கு பதிவிடலாம்  என்றார் எழுதி முடித்தபின்  பார்த்தால் பதிவின் நீளம் பயமுறுத்துகிறது ஒரு தலைப்புக்காக எழுதும்போது நீளம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. இத்தனைக்கு பதிவுலகில் லிங்க்  கொடுத்தால் படிப்பவர்குறைவு என்று தெரிந்ததால் அவற்றை விட்டு விட்டிருக்கிறேன்
                  என் எழுத்தைப் பற்றி

புதன், 24 மே, 2017

பெல்லட் - குறுநாவல்.


பெல்லட்:-

அத்யாயம் – 1. சிபிஐ கோர்ட்

ஒரு கோடி ரூபாயைக் கையாடல் செய்த வழக்கில் கைதாகி கோயமுத்தூரில் இருந்த அந்த சிபிஐ கோர்ட்டில் ஆஜராகி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம். மது மாது சூது என்று எந்தப் பழக்கமும் இல்லாத நேர்மையான மனிதர், மிகப் பெரும் நிலக்கிழார் என்று பெயரெடுத்திருந்த, மிகப்பெரும் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலிருந்த அவருக்கு ஒரு கோடி ரூபாய் எடுக்கும்படி அப்படி என்னதான் தேவை பணத்துக்கு என்று அவரது அலுவலகச் சிப்பந்திகளே அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்.

”முருகானந்தம் முருகானந்தம் முருகானந்தம்..” மூன்று முறை அழைத்தார் டவாலி.

நேரே எழுந்து சென்றவரை சைகை காட்டி பக்கவாட்டில் வரச் சொன்னார் டவாலி. மாண்புமிகு நீதிபதியின் முன் குறுக்கே செல்வதோ பின்புறம் திரும்பி நடப்பதோ சிபிஐ கோர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் முருகானந்தம். ஆறடி உடம்பும் ஆறு சாண் ஆகிவிடாதா எனக் குறுகியபடி இருந்தது அவர் முகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாம் தெரிந்த முகங்கள்.

சாட்சிக் கூண்டில் ஒரு கோடி ரூபாய்க்கான அந்த செக் மாற்றப்பட்ட வங்கியின் ஊழியர்  ராஜன் நின்றிருந்தார். அவர் அங்கே இண்டர்னல் ஆடிட்டிங்கில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் இருந்தார். ராஜனுக்கு முருகானந்தத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இருந்தும் என்ன செய்ய ?. கோர்ட் நடைமுறை. நடந்ததை சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.



ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

மின் நூல் :- நினைவில் நீ

வகை :- நாவல் 

பக்கங்கள் – 162.

ஆசிரியர் :- ஜி எம் பாலசுப்ரமணியன்.

வெளியீடு :- புஸ்தகா.

விலை :- ரூ 88/ $ 2.99.

இந்நூலை இங்கே வாங்கலாம்.

 
 

செவ்வாய், 23 மே, 2017

அகல்யா :-

அகல்யா :-
****************

வாகேட்டர் பீச்சில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சூரியமீனின் தங்கச் செதில்களுடன் நீந்திக் கொண்டிருந்த கடலுடன் வெண்மணலும் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதுமான விளையாட்டில் இரண்டும் ஈடுபட்டிருந்தன. கைப்பையை இறுகப்பற்றியபடி இளசுகளின் கூச்சல்களையும் கும்மாளங்களையும் பார்வையிட்டபடி நடந்துகொண்டிருந்தார்கள் கபிலனும் அகல்யாவும்.

அங்கங்கே வட்டம் போட்டு அமர்ந்து நாலைந்து வாலிபர்கள் பாட்டில்களைக் கவிழ்த்துத் தானும் மட்டையாகிக் கிடந்தார்கள். சேஃப் கார்டுகளின் விசில்களில் அலைகளில் ஆடியவர்கள் அவ்வப்போது பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஹெனின்கைனும் கிங்ஃபிஷரும் பட்வைஸரும் கடலின் உப்புநீருடன் கசப்புநீராய்க் கலந்துகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண் நீச்சல் உடையுடன் தண்ணீருக்குள் தற்கொலைக்கு முயல்பவள் போல கைகளை நீட்டியபடி பாய்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

மணலும் நீரும் சேருமிடத்தில் லேசாகக் காலை நனைத்தபடி சொன்னான் கபிலன். ” அப்பாவுக்கு ரெண்டு தரம் அட்டாக் வந்திருச்சு இனி எங்க அப்பா அம்மா என் கூடத்தான் இருப்பாங்க.”.

”ஹ்ம்ம். நல்லதுதான் ஆனா பார்த்துக்க முடியுமா. டயப்படி மருந்து கொடுக்கணும். சாப்பாடு ஜூஸ், சூப் கொடுக்கணும். நீங்க இந்தியாவுல இருந்தா பரவாயில்லை. நான் வேற வேலைக்கு போறேன்.  ””.

“பார்த்துக்கத்தான் வேணும். வேலையை விட்டுடு. நான் அனுப்புறது போதும். வீடு துடைக்க, பாத்திரம் கழுவ, மேவேலைக்கு ஒரு ஆள் போட்டுக்க. வாஷிங் மெஷின் போட்டு சமையல் செய்றதுமட்டும்தானே . உனக்கு ஈஸிதான். “


திங்கள், 22 மே, 2017

பத்மயக்ஞம்.

பத்மயக்ஞம் :-

“என்னை ஏன் படைத்தாய் ?” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.

”ஏன். ஏன்?” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் ?. அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.

”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் ?. ’என்னது, பிதுர்வரமா ?’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.

வெள்ளிக் காசுகளை வெள்ளிக்  கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.

பாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.

தொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன ? என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்குள் பிரம்மனின் உதடு அசைந்தது.

மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.



மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.   

உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.

- இக்கட்டுரை அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது ”மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “  என்ற நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கிருந்து எடுத்துவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் மக்காஸ் :)  




Related Posts Plugin for WordPress, Blogger...