எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2009

பூவரசம்பூ

பயாலஜி லாப்பில்
தவளைக்கும் எலிக்கும்
இனப்பெருக்க உறுப்பும்

இதயம் இணைந்த
சுவாச உறுப்பும்
இருக்கிறதா என

ஆணியும் குண்டூசியும்
மாட்டி தேடிக்
கொண்டிருந்தோம்...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

செடிச் சம்பங்கி [பன்னீர்ப்பூ]

நலுங்கிலும் ஊஞ்லிலும்
இப்போதுதான் அமர்ந்து
அப்பளம் உடைத்து
தேங்காய் உருட்டியது
போலிருக்கிறது...

அன்று அணிந்திருந்த
அதே போன்ற
சம்பங்கி மாலை
அணிந்து நீ...

கொடிச் சம்பங்கி

பூக்களுக்கு அனுமதி
இல்லாத இடங்களிலும்
நீ நுழைந்து விடுவாய்
பூப்போல...

பஸ்ஸின் நெரிச்சலில்
எரிச்சலில்
அலுவலகத்துக்கு நானும்
பள்ளிக்கு நீயும்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

மேரி கோல்டு [தங்க அரளி]

நாட்டியப் பள்ளி வாசலில்
பூத்துஇருந்தது
மேரி கோல்டு...

உன் சாரதியாய்
வந்த நான்
வெளியில் காரில்...

செண்பகப்பூ

காண்டாமணி ஒலிக்க
கலியுகத் தெய்வம்
ஐயனாரும் சாத்தையனும் ...

கருவிழி முறுக்கு
மீசையுடன் கருப்பரும்
எடுப்பான புரவிகளுடன்
அமர்ந்த கோயில்...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நந்தியாவட்டை

விடியலின் ஈரத்தில்
புஷ்கரணியில் குளித்து
நந்தவனத்தில் உலா...

தளிர்க் கைகளால்
நந்தியாவட்டைகளைக்
கொய்து கொண்டிருந்தாய்...
என் மனசைக் கொய்வதாய்...

செவ்வந்தி

பிறந்ததில் இருந்து
காதலித்துக் கொண்டே
இருக்கிறேன் உன்னை...

ஐந்து வயதில் தான்
என் அருகு வந்து
அமர்ந்தாய் நீ...

இன்று வரை
என்னை விட்டுப்
பிரியவில்லை...

சனி, 26 செப்டம்பர், 2009

முருங்கைப்பூ

அவென்யுவின் அழகுக்காய்
பூச்செடிகள் வளர்க்க
வாஸ்துவில் இருந்து
தப்பி வளர்ந்தது
முருங்கை ஒன்றும்..

விழுந்த குப்பையெல்லாம்
கூட்ட வந்த நீ
முருங்கை போல
முறுக்கு ஏறி..

நீலச்சங்குப்பூ

கறுப்பு வெதை போட்டு
சிறு வயசுப்பசங்க நாம
தினம் தண்ணீ
ஊத்திவந்தோம்...

பச்சையாய்
எலை வந்து
ஆகாயம் போல்
பூப்பூத்துச்சு...

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனகாம்பரம்

ஊர்த்திருவிழா...
கிலுகிலுப்பை, ஊதல்
சின்னவனுக்கு...
பலூனும், பஞ்சு மிட்டாயும்
பெரியவளுக்கு...

தேரில் வந்த சாமி பார்த்து
தேங்காயுடைச்சு
முடிச்சாச்சு...

மாதுளம்பூ

அராபிக் மெஹந்தியும்
கோல்ட் :.பேஷியலும்
வீடியோ வெளிச்சத்தில்
பூச்செண்டுகள் சூழ ரிஸப்ஷன்....

பெற்றோர் நடத்திய
பொருந்திய திருமணம்...

காக்கரட்டை மல்லி [காட்டு மல்லி]

மூக்கிலே புல்லாக்கு...
முகம் நெறைய மேக்கப்பு...
கார்பாவும் தாண்டியாவும்
பாங்ராவும் ஆடிய நீ ....
கோலாட்டம் கும்மியிலே
என் மனசை சேர்த்தடிச்சே...

பள்ளிக்கூட ஆண்டு விழா...
கரகமா, காவடியா...
கதகளியா, மோகினி ஆட்டமா...
ஒடிஸியா, குச்சுப்புடியா,,,
எதையாடப்போறே நீ...?

முல்லை

வரவேற்பறையில்
முகமகன்கள்கூறி
அவரவர் ப்ரபஞ்சத்தில்
ஆழ்ந்திருந்தோம்...

கணினித்திரையில்
அவசரச் செய்திகள்..
மயில் மேல் முருகனாய்
உலாவியில் சுற்றி
உடனுக்குடன் முடித்து
உலகு மீண்டோம்...

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆவாரம் பூ

பொங்கலுக்குப் பொங்கல்
விடுமுறையில் ஊர் வாரேன்..
புது நெல்லு வாசத்தில் நீ
வெல்லமிட்ட பொங்கல் தின்ன...

காணும் பொங்கலன்னிக்கு
கன்னுப்புள்ளையும் நெக்கதிரும்
ஆவாரம் பூவும் சொமந்த காலம்
என் நெனைப்பில் ஓடுதடி...

மகிழம்பூ

அக்ரஹாரத்தின்
நீண்ட தெருக்களில்
வாழையும் தென்னையும்
மாடும் கன்றும் செறிந்த
உன் வீட்டின் எல்லைச்
சுவரோரம் மகிழமரம்...

பூத்திருப்பது தெரியாவிட்டாலும்
முற்றத்தில் அமர்ந்து
உதிர்ந்த மகிழம்பூக்களை நீ
கோர்த்துக்கொண்டிருப்பது தெரியும்...

வாடாமல்லி

உருவத்தில் ஆணாகவும்
உள்ளத்தில் பெண்ணாகவும்
பருவ வேறுபாடு இல்லாத
பச்சிளம் குழந்தை நீ...

எல்லோருடனும் சேர்ந்து
வாழும் ஆசையில்
கதம்பத்தில் இணைந்தாய்...

தனித்துத் தெரிவது
உன் நிறம் மட்டுமல்ல
குரலும்தான்...

புதன், 23 செப்டம்பர், 2009

செம்பருத்தீ

செம்பருத்தித் தைலத்தில்
தோய்ந்த என் கூந்தல்
மிகப்பிரியம் உனக்கு...

கார்மேகத்தையும்
கடலலைகளையும்
கைகளால் அளையும்
ஆசையில் நீ பின்தொடர...

நீ துரத்துவதுபோல்
நான் வேகமாய்
முன்னேறி...

மல்லிகை

கல்லூரி வகுப்பறை
நண்பர்கள் பேப்பர்
அம்புகளை எய்து
கொண்டிருந்தபோது...
நீ பார்வை
அம்புகளை எய்தாய்...

உன் பார்வை விடு
தூதில் ஒவ்வொன்றும்
மல்லிகையாய் மெத்தென்று
என் மனதில்...

செவ்வரளி

அநேகப் பூக்களை
மனிதர் சூட
தெய்வத்துக்கு மட்டுமே
உரிய பூ நீ...

சிவப்பு சிந்தனையிலும்
சித்தாந்தங்களிலும்
செந்நிறமாகவே
பிரசவிக்கப்பட்டவள் நீ...

விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...

டேலியா

காவலர்களின் பாதுகாவலில்,
டில்லி முகல் கார்டனில்,
பனி பர்தாவில்,
பீட்ரூட் நிறத்தில்,
விரிந்த மயிலாய்....

பூக்களிலே புஷ்டியான
பூ நீதான்...
பிரிய மனமில்லாமல்
பிரிந்து வந்தேன்...

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தாமரைப்பூ

அல்லியும் ஆம்பலும்
குமுதமும் கொட்டிக்கிடக்கும்
குளத்தில் இறங்கி
என்னை மட்டும்
பறித்துச் சென்றாய்...

தனிமைப் படுத்தப்பட்டதாய்ப்
பதறினேன் நான்...

தாழம் பூ

பூஜைக்கு
மறுக்கப்பட்டாலென்ன
பூப்படைந்தபெண்களின்
கூந்தலில்
மடல்மடலாய் நான்...

சூரிய காந்தி

நீ உதித்து
உலா செல்லும்
திசையெல்லாம்
உனைக் காண
முகம் திருப்பி
ஒயிலாகப்புன்னைகைத்து...

நான் மட்டும்
இரவெல்லாம்
தனித்திருந்து
விழித்திருந்து...

சாமந்தி

ஆடி மாசம்
அம்மன் கோயில்
கொடை...

மஞ்சள் பூசி
மஞ்சள் சூடி
மஞ்சள் அணிந்து
மகிமையாய் நீ...

குல்மோஹர்

குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரோஜா

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனைவி

எந்நேரம் வந்தாலும்
எனக்காக கதவடியில்
காத்திருந்திருப்பாய்..

அதீதப்பேச்சால்
அயர வைத்தது போல்
அன்பாலும்...

பணிக்கான ஓட்டத்தில்
ஊர் விட்டு ஊர் ஓட
என்னுடனே துணை வருவாய்...

விட்டில்

யார் தடுத்தும் கேளாது
மாயக்கனவுக்குள்
வீழ்ந்து கொண்டு...

வலைகளை விரித்து
எலிகளை இயக்கி...
இன்னும் எனக்கான
பொறிகளைப் பெருக்கி...

ட்விலைட்டின் வேம்பயர் நீ...
உன்னால் உறிஞ்சப்பட
கழுத்தெல்லாம் ரத்தம் சேமித்து...

வியாழன், 17 செப்டம்பர், 2009

காதல்

மகிழ்ச்சி குமிழ்குமிழாய்
காற்றில் பரவி
வீடு முழுதும்
பொங்கி வழிந்து...

கடலுள் களிக்கும்
டால்பின் மீனாய்
நீச்சல்லில்லாத
மிதக்கும் வட்டாய்...

இதயத்தில் இருந்து
வெடித்துக்கிளம்பி
பார்வைகள் வழியே
ரோஜாக்கள் விரிந்து...

புதன், 16 செப்டம்பர், 2009

நட்பு

எல்லா அளவு கோல்களாலும்
அளந்த பின்னும் தொடங்கியது
நமது நட்பு...

தனித்தனியே ஜனித்தாலும்
எண்ணங்களால் இணைந்தோம்
நீண்ட மௌனத்துக்குப்பின்...

பிறகு நாம் நிறுத்தாமல் பேசியதை
இரவு நேரக்கூகையும் அர்த்தசாமச் சேவலும்
விடிகாலைக்காக்கையும் பிறைநிலவும்
பௌர்ணமியும் சொல்லும்...

திங்கள், 14 செப்டம்பர், 2009

முகமூடி

பஞ்சுமிட்டாய்க்காரனும்
ஜவ்வுமிட்டாய்க்காரனுமாய்
ஈர்க்கும் கதைசொல்லி...

தெரு கடந்து சென்றபின்னும்
கைக்கெடிகாரம் ஒட்டிய
கையெல்லாம் சர்க்கரைப்பாகு...

தோல்பாவைக்கூத்துக்களில்
கயிறு கட்டி அவன் ஆட்டுவிக்க
காண அமரும் நானும் முகமூடியுடன்...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...

மழை

குளிரும் மழையும் பொருத மாலை,
முணுமுணு தூறலில் சுவரின் ஓரம்,
சொட்டுச்சொட்டாய் தண்ணீர்க்க்ரீடம்....!

மலைமுகடில் முகமறைத்த
இளஞ்சிறு சூரியன் எதிர்ப்பட..
என் மகனின் வண்ணக்கிறுக்கலாய்
எதிர்சுவர் வானில் வானவில்...!

திரைத்துணியின் மஞ்சள் ஆரஞ்ச் கொடிகளாய்
மலைமுகடெங்கும் தங்கம் தழுவிய
தடம் கதகதப்பாய்...

சனி, 12 செப்டம்பர், 2009

காந்தப்புலன்

சூரியனும் வெளிச்சமுமாய்
உலகைப் புணர்ந்து
உயிர்கள் பெருக்கி...

வால்நட்சத்திரங்கள்விழுங்கும்
வியாழன் கோளாய்
என்னைப் பதுக்கி...

நிலவாய் வந்து
அலையான என்
உன்மத்தம் பெருக்கி...

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

குடி மகன்கள்

தினமும் கேட்கும் பதட்டமான சப்தங்கள் இன்றும்..
எங்கள் அவென்யுவின் எதிர்வரிசை காரை வீட்டை
ஒட்டிய ஒலைக்குடிசையிலிருந்து....

வாழ்வோடும்., வியாதியுற்ற குழந்தையோடும்.,
போராடும் அவள் வாழ்க்கைப்பட்டவனோடும்
போராடிக்கொண்டு...

ஆணாதிக்கக்கொம்புகள் முளைத்த மூர்க்கமிருகமாய்
அருந்திய சாராயம் தந்த அசுர பலத்தில் அவன்...
கொண்டையிட்ட பெண்புலியாய் அவள்...

புதன், 9 செப்டம்பர், 2009

முருங்கை மரம்

காலையின் பசுமை வணக்கம்...
காக்கைகளின் ஊஞ்சல்...
வண்டுகளின் சாமகானம்...

கிளைக்கரங்களால் தழுவுவது
போல் ஆரவார வரவேற்பு..,
பூக்களெனும் புன்னகையும்,
காய்கள் எனும் கனிவும் காட்டி..

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

வாஸ்து

வாஸ்துப்படிக்
கட்டிய வீட்டில் மனைவி..,
வெளி நாட்டில் கணவன்...!!!

எமக்குத் தொழில் எழுத்து

அதிகமாய் எழுதிய
அலெக்ஸாண்டர் டூமாஸும்...
ஆத்ம சிந்தனையில்
மார்க்க அரேலியரும்
எனை ஈர்க்க...

ஷேக்ஸ்பியரும், தாகூரும்...
பார்த்திபன் கனவும்,
பொன்னியின் செல்வனும்
எனை மயக்க...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சரஸ்வதி வணக்கம்

பேரன்பிற்கினியவளே....
பெருமதிப்பிற்குரியவளே...
கனிவான சரஸ்வதியே...

ஆசிரியப்பெருந்தகையே...
என் இனிய சுசீலாம்மா....!!!
கம்பீரக் குரலழகி... !!!
உலகமெல்லாம் உன்
வீணை ஒலி...!!!

தலை நகரில் உறைந்துள்ள
எங்கள் தலைவியே...
ஏடும் எழுத்தாணியும் கொண்டு
இன்னும் நீயே எழுதுகின்றாய்...

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...
Related Posts Plugin for WordPress, Blogger...