எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2016

சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.



சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை

பட்டுகயிற்றை எப்பிடி இடுப்பை சுற்றி கட்டுகிறோமோ, அது மாதிரி இந்த புத்தகமும் சமூகத்தை சுற்றி சகல இடத்திலும் சாமனியதளங்களில் இலகுவாக பயணிக்கிறது.அறுத்து போடும் பட்டு கயிற்றில் உயிர் ஏற்றி ஆரம்பிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு.

குடியின் கொடுமையை சூலம் கொண்டு சாய்த்து,கோமாவில் இருந்த பெண்ணை உணர்ச்சியோடு பார்த்து,கடல் தாண்டி சென்றவர்களின் வாழ்வின் காதலை சேர்த்து,மேக்கப் பெண்களின் வலியை சொல்லி,ஈரமற்ற வாழ்க்கையின் இயலாமையை தாண்டி, ஜனிக்க போராடும் கருவின் கண்ணீரில் மிதந்து, வாழ்வியலுக்காக போராடும் சிறுமியின் சிறு கனவு, வீட்டில் வெற்றிடத்தை விட்டுச் சென்ற அப்பத்தா,அன்னியதேசத்தில் ரக்ஷித் நின்ற பந்தம், கனத்த காயங்களினால் மகளை காவாந்து செய்யும் தாய்,குழந்தை வேண்டி போராடி,கொல்லிநோயினால் தப்பி பிழைத்து,கல்யாண பந்தத்தின் அழகு காட்டி,வாழ்க்கை ஜீவநதியாக எல்லா கட்டத்திலும் அடுத்ததை தேடி பயணப்படுகிறது.

பச்சிளம் குழந்தையோடு சேர்த்து எட்டு கட்டமான பெண்களின் வாழ்க்கை, சமூகத்தின் எல்லா தட்டுக்களிலும் அவர்கள் கடந்து செல்லும் காட்சிகள், அவர்களை கனக்க வைக்கும் நிமிடங்கள்,சிரிக்க வைக்கும் சின்ன பொழுதுகள் என எல்லாவற்றையும் கதையாய் காட்சி படுத்தியிருக்கிறார் தேனம்மை.

மிக இயல்பாக ,அதே சமயம் மிக தத்ரூமாக கதைகளத்தை நம்மிடையே பதிவு செய்து, நம்மை பயணிக்க வைக்கிறார்.கதைகளின் முடிவில் கதை மாந்தர்காய் உச்சு கொட்டுதலையும், பிராத்தணை செய்வதை தவிர்க்க முடியாது போகிறது.

இந்த சிவப்பு பட்டு கயிற்றை பயணங்களில் உங்கள் கையோடு எடுத்து செல்லுங்கள்,நீங்கள் இறங்கும் போது இது உங்களுக்கு நிறைய பேரின் வாழ்க்கையை அறிமுகபடுத்திவிட்டு செல்லும்.

ிவப்புப் பட்டுக் கிறு, ேனம்மைலெக்ஷ்மன், ிஸ்கி புக் பேலஸ், கே. கே. நர், சென்னை - 78, ஃபோன்: 044 - 65157525, விலை ரூ. 80/-


5 கருத்துகள்:

  1. ’நினைவடுக்குகளின் எதிரொலி’யில் இரத்தினச் சுருக்கமாக ஆனால் மிக அழகாக எழுதப்பட்டுள்ளது.

    எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவருக்கும், நூலாசிரியரான தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...