எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2012

ரத்தநிறம்..

ரத்தநிறம்:-
 *****************
 ஒருவன் இருந்தபோது
சுழற்றிக் காண்பித்த வாளை
அவன் இறந்தபின்னும்
இறக்குவதில்லை இவர்கள் .

நிறங்களைத் தீட்டியவன்
தூரிகையில்
இனங்கள் அடிக்கப்பட்டன.

வெள்ளி, 30 மார்ச், 2012

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்..:-
***********************************
நல்ல நட்சத்திரக்காரர்
நீங்கள் என்று
புகழப்படுகிறீர்கள்.

இது இதற்கு உகந்தது என்று
ஒரு சுபயோகக்காரனாகப்
பிறப்பித்திருக்கிறது அது உங்களை..

புதன், 28 மார்ச், 2012

வயதின் கம்பீரம்.

வயதின் கம்பீரம்:-
*****************************

கண்ணாடியைப் பார்ப்பது
இப்போதெல்லாம் பிரியத்துக்கு
உரியதாயில்லை.

எடை மெஷி்ன்
சங்கப்பலகையாய் மிரட்டுகிறது
கனம் அதிகரித்துவிட்டதாக.

செவ்வாய், 27 மார்ச், 2012

இன்று போய்..

இன்று போய்:-
**********************

நீ நேரில் வந்து
போரிடும்போதெல்லாம்
உன் சரிபாதி வலிமையை
அபகரித்துக் கொள்கிறேன்.

ஹீனமான குரலுடன் நீ
மறைமுகத் தாக்குதல்
தொடுக்கிறாய்.

வெள்ளி, 23 மார்ச், 2012

இடப்பெயர்ச்சி.

இடப்பெயர்ச்சி..:_
***********************

கூடாரங்கள் காலியாகின்றன.
கொழுப்பு சுமந்த திமிலில்
நீர் ஏற்றிக் கொள்கிறது
அலுப்போடு ஒட்டகம்

ஆணிகள் பிடுங்கப்பட்டு
சுருட்டப்படும் டார்பாலின்கள்
குடைப்பாய் அமைப்பில்
குறுக்கில் ஏற்றப்பட்டு.

வியாழன், 22 மார்ச், 2012

ஒட்டுக் கேட்கும் யந்திரம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..
*************************************

பூச்சிகள் வண்டுகள் அளவில்
ஒலிவாங்கிக் கடத்தும் யந்திரங்கள்
குவிந்து கிடந்த கடை வழியே
கடக்க வேண்டி வந்தது.

எதிர்முறைக்காரர் வீட்டு அலமாரி.,
மேலதிகாரியின் மேசையடி.,
கட்சிக்குள்ளே கோஷ்டியானவனின்
சின்ன வீட்டின் பரண்.,

புதன், 21 மார்ச், 2012

சூரியச் சிறகுதிர்ந்து.. உயிரோசையில்..

சூரியச் சிறகுதிர்ந்து..
********************************

கலையும் மேகங்களாய்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன
பழக்கங்களும் உறவுகளும்.

நிமிடத்துக்கு நிமிடம்
மாறும் மனநிலையில்
கலையவும் உருவாகவும்..

செவ்வாய், 20 மார்ச், 2012

ரீங்காரம் அடங்காமல்..

வைத்த ஆரவாரம்
அடங்காத பாத்திரமாய்
தன்னைத்தானே
ஏசியபடி வீதிகளில்

எண்ணச் சுருக்கங்களுக்குள்
நீவமுடியாத மடிப்புகளோடு
தலையை அசைத்தபடி
கண்கள் எங்கோ அலைய

திங்கள், 19 மார்ச், 2012

சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

சனி, 17 மார்ச், 2012

10 குறுங்கவிதைகள்.. திண்ணையில்.

கண்வழி நுழைந்தாய்..
உறுத்தல் அதிகம்தான்..
கண்ணீராய் வெளியேறினாய்..

******************************************************

முதுகில் இருக்கும் ஓடு
அவ்வப்போது ஒளிந்துகொள்ள..
சுமையாய் இருந்தாலும்
சுமைகள் ஏறாமலிருக்க ..
******************************************************

வெள்ளி, 16 மார்ச், 2012

மூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..

ஒரு கதவு சட்டென மூட
இன்னொரு ஜன்னல் திறக்க
அடைபட்டுக் கிடந்த காற்று
விரைந்து தப்பித்து ஓட

அசையும் அசையா
சொத்துக்களுக்கெல்லாம்
வாரிசுகள் கையெழுத்திட்டு
சான்றிதழ்கள் சாட்சியோடு

வியாழன், 15 மார்ச், 2012

4 குறுங்கவிதைகள்..

சொட்டு நீலமோ உன் பார்வை
வெளுக்காமலே
வெண்மையாகிறேன் நான்
***************************************

தந்திக் கம்பங்களில்
நிதானிக்கும் பறவைகளாய்
ஓய்வெடுத்து போகின்றன
குறுஞ்செய்திகள்..

புதன், 14 மார்ச், 2012

வாக்கு நீளம். உயிரோசையில்..

ஆழக்கற்கள் புரட்டுவதில்லை
புரளுவதில்லை..
வார்த்தை நதியை
வருடியபடி இருக்கின்றன..
கால் நனைப்பவரைக்
குளிர்வித்தபடி..

நெகிழும் கற்கள்
கரை ஓரமெங்கும்.
நகர்ந்து உதிரும்.
மிதிப்பவர் பொறுத்து..

செவ்வாய், 13 மார்ச், 2012

ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ( சிறுகதை)

மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு..

மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது..

நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல் ஒரு முறை மோதிவிட்டு அதற்கடுத்தே வரும் ஸ்டாப்பில் இறங்கிப் போய் விடவேண்டும். மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

போன முறை மாதிரி சொதப்பி அடி வாங்கக் கூடாது. நெரிசலில் சிக்கி தர்ம அடி வாங்கி உதடு எல்லாம் ரத்தம்.

வேண்டாம் விட்டு விடலாம் என நினைத்தாலும் கண்ணெதிரில் தெரிவதை உடமையாக்காமல்.. ஹ்ம்ம் முடியவில்லை

ஞாயிறு, 11 மார்ச், 2012

ஞாபகம் வருதே.. எனது பார்வையில்

ஞாபகம் வருதே -- ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 10 மார்ச், 2012

தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

லலித் கலா அகாடமியில் விகடன் குழுமம் வழங்கிய ஓவியக் கண்காட்சி. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து அந்த தொகையை தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அது. முக நூலில் விகடன் ஆசிரியர் கண்ணன் அழைத்திருந்தார் அனைவரையும்.

நம்ம யாருமே மறக்க முடியாத முதல் பத்ரிக்கை ஹீரோ.. அன்னைக்கும் இன்னிக்கும் என்னிக்கும் இந்த விகடன் தாத்தா அப்படியே இருக்கார்.. பருவ மாற்றம் , உருவ மாற்றம் எல்லாம் நமக்குத்தான். இன்னும் பல நூற்றாண்டுகள் இவர் நம்ம தலைமுறைகளுக்கும் சேவை செய்யணும்.

வீர சந்தானம் சாரை முதல்ல அங்கே பார்த்தேன். இந்த விநாயகர் ஓவியம் அவரோடது.

வெள்ளி, 9 மார்ச், 2012

வியாழன், 8 மார்ச், 2012

யசோதரா..


வசீகரா என்றிருக்க
நிராதரவாய் நீ விட்டுச்சென்ற
யசோதரா நான் ..
நிழலாய், நிலையாமையுடன்.

அமிர்தம் அள்ளிஉண்டு
சலித்ததுனக்கு.
நீ சிதறிச் சென்ற
துளிகளின் மிச்சமெனக்கு

புதன், 7 மார்ச், 2012

கோடிப் பேரில்...

கோடிப்பேர் இருப்போம்..
வால்வீசி முட்டினோம்
ஒற்றைக் கதவின் முன்..

என் வாலை வெட்டி
உள்ளிழுத்துக் கொண்டது
திறப்பற்ற கதவு..

ஒற்றைச் சில்லான நான்
பத்துவிதமாகப்
பெருகத் துவங்கினேன்..

செவ்வாய், 6 மார்ச், 2012

குளிர்விக்கும் கோல்..

குளிர்விக்கும் கோலோடு
சில மந்திரவாதிகள்..
சும்மா இருக்கும்
தொப்பிக்கு்ள்ளிருந்து
கைக்குட்டை.,முயல்குட்டி.,
பூச்செண்டு ., புறா என
வண்ணமயமாய் வெளியெடுத்து..

பெட்டிக்குள்ளிருக்கும் போது
ஒன்றுமற்ற தொப்பியாய் இருப்பது
மந்திரவாதி கைபட்டு
புதையல் பெட்டகமாய்..

ஞாயிறு, 4 மார்ச், 2012

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல..

இந்தக் கதை ஒரு பையனின் பார்வையிலிருந்து..

நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.

” அப்பா .. சைக்கிள்..” . ஒன்று வாங்கிக் கொடுத்தார்.

“ஏறி ஓட்டுடா..” ..

” தெரியாதுப்பா ..”.

“முடிஞ்சா ஓட்டு.. இல்லாட்டி விட்டுரு”..

என் தம்பி பின்னாடியே ஓடி வந்து.. “ ஓட்டுடா முடியும்டா..”

இன்றுவரை என் பின்னால் இருக்கும் உந்துசக்தி அவன்தான்.

சனி, 3 மார்ச், 2012

ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...



இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


வெள்ளி, 2 மார்ச், 2012

நன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை அரசிகள் விமர்சனம்.)

கோமதி அரசு.. வலைப்பதிவர். ( வலைச்சரத்தில்)

////’சும்மா’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி .தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ’போராடி ஜெயித்த கதைகள்’ என்று எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் திருமதி. லூர்துராணி அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஹீமோக்ளோபின் அளவு குறைவுக்காக ஸ்டிராய்டின் தொடர்ந்து சாப்பிட்டதால் அவரிடம் அது ஏற்படுத்திய பக்க விளைவுகள் -அதை போக்கி சாதனைகளச் சாதித்து கொண்டு இருப்பது- பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.

//டயாபட்டீஸ்., ரத்த அழுத்தம்., காடராக்ட்., கிட்னியிலும் நெஃப்ரான்கள் வீக், 2000 ஆம் வருடத்தில் கான்சர் வந்து மார்பக நீக்கம்., கீமோதெரஃபி., மற்றும் ரேடியேஷன் 55 நாட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 1 மார்ச், 2012

முருதாடி. பூவரசி காலாண்டிதழில்.


முருதாடி..:-
******************

பெல்லாப் பூடம்.,
அடம்., சீண்டரம்.,
லண்டி., சகடை.,
குந்தாணி மட்டை.,
காளி., முருதாடி
இதெல்லாம் அம்மாவின்
வழங்குபெயர்கள் அவளுக்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...