எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2016

ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.

761. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா..

762. living with mere images..


763. சுத்தி இருக்கவங்கள விட்டு எங்கோ இருக்கவங்களத் தேடி ஓடுறோம்.
‪#‎என்ன_டிசைன்_நாம‬

764. மந்திரப் பேழை என நினைத்தால்.
.
.
மரணபயம் காட்டிட்டாங்கடா பரமா..
‪#‎யாரோ‬.

765. Aayiram karangal maraithirunthalum aathavan maraivathillai ...( aathavanukku female gender enna..?..) .. Happy morning dear all.

766. முதலில் புகைப்படங்களை
அழிக்கத் துவங்கினேன்.
வெட்டி வெட்டிக் குப்பையில் போடும்போது
ஞாபகங்களை அழிப்பது எளிதானது.

767. ஆணியன் ரோஸ்டா ஆ ஆ

சனி, 28 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.



341. போரிடுதல் - குழந்தைப் பேறின் போது உடன் இருத்தல் . பிரசுபம் நிகழ உதவி செய்தல். புவாகத் ாய் க்கான் இருப்பார்கள். சிலுகில் மாமியார் நத்ாரோ மற்ற உறினோ அருகிந்து பார்த்ுக் கொள்வைப் போரிடல் என்பார்கள்.

342. . தங்கம் உரசிக் கொடுத்தல் - பிறந்த குழந்தை நாவில் தங்கம் உரசி தொட்டு வைப்பார்கள்

343. பிள்ளையைத் தொட்டிலில் போடுதல் - பட்டுத் தொட்டில் கட்டிப் போடுதல்.

344. எண்ணெய் தேய்த்துப் பாசி கட்டல்.  - பிறந்த குழந்தைகளை பட்டுத் தொட்டிலிட்டு எண்ணெய் தொட்டு வைத்து கழுத்தில் கறுப்புப் பாசி போடுதல்.

345. ராராட்டுப் பாடுதல். – தாலாட்டுப் பாடுதல். இது பற்றி நிறைய எழுதலாம்.
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆராரோ
யாரடிச்சா நீ அழுதே,
அடிச்சாரச் சொல்லி அழு.
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே.
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே.

மற்றும் நிறையப் பாடல்கள் உண்டு. கிடைக்கும்போது பகிர்கிறேன்.

346. . பிள்ளை பிறந்தது கேட்டல். – ஒரு சில்வர் வாளியில் ஓரிரு சீப்பு வாழைப்பழம் இரண்டு தேங்காய் வைத்துக்கொண்டு போய் பிள்ளை பிறந்தது கேட்டு வருவார்கள். 

செவ்வாய், 24 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.



 321. ஆடிச்சீர் - திருமணம் முடிந்த முதல் மூன்று வருடங்களுக்கு ஆடி மாதத்தில் வழங்கப்படும் சீர். ஆனால் இப்போதெல்லாம் முன்பே ஏதோ பணமாகக் கொடுத்து விடுகிறார்கள் . அல்லது இது இப்போது நடைமுறையில் இல்லை எனலாம். 

322. விளையாட்டுப் பொட்டி வேவு - பிள்ளை பிறந்ததும் எடுக்கப்படும் வேவு. விளையாட்டுச் சாமான்களைப் பரப்புவார்கள். வெள்ளி வேவுக் கடகாத்தில் பச்சரிசி தேங்காய் வைத்து ஆயா வீட்டில் இருந்து வேவு இறக்குவார்கள். இதற்கு அப்பத்தா வீட்டில் பலகாரம் செய்வார்கள். 

323. பொங்கல் சீர் :- சிலர் பொங்கல் சீரை வேவாகவும் எடுப்பதுண்டு. 

324. வேவு :- வீட்டு நிலை வாசலில் நடுவீட்டுக் கோலம் போடப்பட்டிருக்கும், அதன் முன் ஸ்லேட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். இந்த ஸ்லேட்டு விளக்கை அந்த வீட்டில் உள்ள திருமணமாகப்போகும் பையன்/பெண்ணின் அப்பத்தாவோ அத்தை முறை உள்ளவர்களோ ஏற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். அதன் முன் வேவு இறக்கும் பங்காளிகள் தலையில் தலைப்பா கட்டி வேவு இறக்குவார்கள். 

325. மாமவேவு :- இது திருமணத்தன்று ஆயா வீட்டில் இருந்து முதல் பையன் அல்லது பெண் திருமணத்தன்று திருமணத்துக்கு முன் வேவு எடுப்பார்கள். இதில் பரங்கிக்காய் , இலைக்கட்டு, பச்சரிசி, தேங்காய், வெல்லம் போன்றவையும் சீராக எடுத்து வரப்படும். 

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


சனி, 14 மே, 2016

சாட்டர்டே போஸ்ட். ஆணென்ன பெண்ணென்ன , கார்ப்பரேட் யுகம் பற்றிக் கருணாகரன்.

பெ. கருணாகரன் 
புதிய தலைமுறையின் இணையாசிரியர், அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின என்ற நூலின் ஆசிரியர், இன்னும் சில கவிதை, கதை , கட்டுரை நூல்கள் எழுதியவர் , பல்வேறு இலக்கிய விருதுகள்  வாங்கியவர் என்பதையெல்லாம் விட முகநூலில் எனது மதிப்பிற்குரிய நண்பர் கருணாகரன்.  இவரது தினப்படி போஸ்டையும் கர்ணாவின்  ( மழைக் கவிதை ரொம்ப ஸ்பெஷல் ) கவிதைகளையும் அவ்வப்போது படிப்பதுண்டு. சினிமாப்பாடல் மெட்டுகளில் உடனடியாகப் பாடல் இயற்றும் இன்ஸ்டண்ட் கவிஞர் !

சிரியஸ் மற்றும் சீரியஸான விஷயங்களையும் அநாயாசமாகத் தொட்டுச் செல்லும் இவரது எழுத்து. பதின் பருவப் பிள்ளைகளின் பிரச்சனையாகட்டும், இணைய உலகப் பயன்பாடாகட்டும் இயற்கைப் பேரிடராகவோ, அரசியல் அக்கப்போராகவோ இருக்கட்டும் இன்னும் பலப்பல விஷயங்களையும் தன்னுடைய பாணியில் தருவதில் தனித்துவமிக்கவர்.  மிக எளிமையானவர், மிக இனிமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.  நேர்பட உரைப்பதில் சிறந்தவர்.

இவரிடம் நமது வலைத்தளத்துக்காக சாட்டர்டே போஸ்ட் ஒன்று எழுதித்தரும்படிக் கேட்டவும் அரசியல் நிலவரங்களால் அரக்கப் பரக்க வேலை செய்து கொண்டிருக்கும் இந்நிலையிலும் நட்புக்காக இதை எழுதிக் கொடுத்துள்ளார். மிகச் சீரிய சிந்தனை ஆனால் முடிவில் எனது கருத்தையும் சொல்கிறேன் கருணா.

/// கருணா, இன்று உங்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு விஷயத்தை முகநூலில் பதிவிடாமல் எனக்காக என் வலைத்தள சாட்டர்டே போஸ்டுக்குத் தாருங்கள். இப்பவே. :) ///

நாலு பாரா போதும் ப்ளீஸ் எனக் கேட்டுக் கொண்டவுடன் எட்டுப் பாராவே எழுதி அனுப்பி விட்டார். நன்றி கருணா.

வியாழன், 12 மே, 2016

இளமைத்தமிழ் போட்டிகள்.

முகநூல் நண்பர் திரு. ராஜு ரமேஷின் பக்கத்தில்  திரு பாலு மணிமாறன் அவர்கள் பகிர்ந்திருந்தை இங்கே போட்டிருக்கிறேன். பங்குபெறுங்க. பரிசு பெறுங்க.
 
////சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி போட்டிகளோடு இளமைத்தமிழ்.காம். மாதம்தோறும் $450 ரொக்கப்பரிசு! உங்கள் பிள்ளைகளையும், உங்களுடைய நண்பர்களின் பிள்ளைகளையும் பங்கேற்கச் சொல்லி ஊக்கமூட்டுங்கள்! நன்றி!!
www.ilamaithamizh.com



செவ்வாய், 10 மே, 2016

முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.

முளைப்பாரி தயாரித்தல்:- நவதானியங்களை திருமணத்துக்கு இரு நாட்கள் முன்பே ஒரு செம்புத் தவலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறப் போடுவார்கள். 

பாரடைஸ் லாஸ்ட் & பாரடைஸ் ரீகெயின் - கம்பனும் ஜான் மில்டனும். - இராமகிருஷ்ணானந்தா.

/////இன்று (7-5-2016) அன்று காரைக்குடி கம்பன் கழகத்தின் மே மாதக் கம்பன் திருவிழா மாலை ஆறுமணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமிகு கவிதா அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் காரைக்குடி கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இவ்விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பணிகள் பற்றிச் சிறப்புடன் உரைத்தார். சந்திர மண்டலத்தில் மனிதன் செல்லும் காலம் வந்தால் அந்தக் காலத்தில் தமிழ் அமைப்பு ஒன்று அங்குத் தொடங்கப்பெற்றால் அது காரைக்குடி கம்பன் கழகத்தின் கிளைக் கழகமாகத் தான் இருக்கும் என்றார். அந்த அளவு இலக்கியப் பணிகளைக் காரைக்குடி கம்பன் கழகம் ஆற்றிவருகிறது. என்றார் அவர். ////

திரு வேதானந்தா ஓமெனும் பிரணவம் ஒலிக்கப் பேசியது இன்னும் கணீரென்று காதுக்குள் ஒலிக்கிறது. நவநீத கைவல்யம் என்னும் தலைப்பில் திருக்கோயிலூர் மடத்தில்  உரையாற்ற வந்திருந்த வேதானந்தா சுவாமிகள்,  தவத்திரு ஊரன் அடிகள், சின்மயா மிஷனின் துறவி திரு இராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் ஆகியோர் தங்கள் உரைகளால் நேற்றையப் பொழுதைச் சிறப்பித்திருந்தனர்.

சனி, 7 மே, 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். - ஸ்கூல்பையனின் தொட்டால் தொடரும் குறும்பட அனுபவங்கள்.


கார்த்திக் சரவணன் சென்னையில் வசித்து வருகிறார். ஸ்கூல் பையன் என்றவுடன் ஸ்கூல் போறவர்கிட்ட பேட்டி எடுத்துட்டேன்னு நினைக்காதீங்க. இவர் திருமணமானவர். அன்புக்கும் ஆசைக்குமா ரெண்டு சுட்டி குட்டீஸும் இருக்காங்க. இவர் முகநூல் நண்பர் மட்டுமல்ல. வலைப்பதிவ சகோதரரும்கூட.

அவர் முதன் முதலில் சென்றவருடம் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டிருந்தார். தொட்டால் தொடரும் குடிப்பழக்கம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருந்த படம் அது. அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அந்தக் குறும்படம் எடுத்த அனுபவங்களை எழுதித்தரச் சொன்னேன்.

 மனுஷன் உடனேயே எழுதித்தந்துட்டாரு. ஒரு ப்லாகரோட கஷ்டம் இன்னொரு ப்லாகருக்குத்தான் தெரியும்கிறது எவ்ளோ உண்மை  ( அதுதாங்க புதுசு புதுசா போஸ்ட் போட்டு ப்லாகை உயிர்ப்போட ஓடியாட விடுறது :) ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ். இத ஃபேஸ்புக்குல எல்லாம் போடாம சுட சுட ப்லாகுல சுட்டுப் போட்டுக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ் சரவணன். சரி ஸ்கூல் பையன்னு ப்லாக் பேர் வைச்சிக்கிட்டதுக்காக இன்னும் ஸ்கூல்பேகை முதுகைவிட்டு இறக்காம இருக்கது கஷ்டமாயில்ல :) :) :)

////கார்த்திக் உங்க குறும்பட அனுபவங்களை என் ப்லாகுக்காக எழுதி அனுப்ப முடியுமா
சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன். அதுக்காக

இதுல ஒவ்வொரு ஃபோட்டோவையும் க்ளிக் பண்ணீங்கன்னா அதுக்கு பக்கத்துல இருக்க லிங்க் ல அவங்க எழுதியதைப் படிக்கலாம்.  :) https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.859819344032079.1073741842.100000120633183&type=3

ஜாலிகார்னர் & சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன் அதுக்கு நீங்க ஒரு கட்டுரை வடிவில் உங்க குறும்பட அனுபவங்களை எழுதி இங்கே போடுங்க எடுத்துகுறேன் சனிக்கிழமை அதாவது நாளை போடணும். இப்ப ஃப்ரீயா இருந்தா எழுதி அனுப்ப வேண்டுகிறேன் உங்க புகைப்படமும், ஆர்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வேணும்.
முடிந்தால் மாலைக்குள் அனுப்புங்க

அடடா, இப்போ முடியாதே... எட்டு மணிக்குள் அனுப்பினால் போதுமா? அப்பிடின்னு கேட்டவர் நைட்டு டாண்ணு எட்டுமணிக்கு அனுப்பிட்டாரு. 
 
பதில் :- அதிகப்படியான சொந்த அனுபவங்கள் மற்றும் சில சிறுகதைகளையே வலையேற்றியிருக்கும் எனக்கு குறும்படம் பற்றிய அனுபவங்களைப் பகிரக் கேட்டிருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மற்றொரு பக்கம் வியப்பாக இருக்கிறது. எடுத்திருப்பது ஒரே ஒரு குறும்படம். அதை குறும்படம் என்று சொல்வதைவிட ஒரு சின்ன கான்செப்ட் என்று சொல்வதே தகும். இயக்குநர் கேபிள் சங்கர் தனது “தொட்டால் தொடரும்” படத்துக்கான வெளியீட்டுக்கு முன்னர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, “தொட்டால் தொடரும்” என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் இருக்கவேண்டும் என்பதே.

வெள்ளி, 6 மே, 2016

அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.

741. Populism - a worth reading article written by Jemo in 15 th Apr. Dinamalar.

742. யார் இந்த பெரியவர்.. ஏன் எல்லாரும் அவர் மாதிரி அவதாரம் எடுத்து ரெண்டு ரெண்டு தரம் வந்து படுத்துறீங்க.. எனி ரீசன்..:)

743. மறைக்க மறைக்க
முகம் இருளடைந்துவிடுகிறது
பொழுது சாயச் சாய
பொய்ச்சவுக்கைகள் விரித்தாடும்போது
சூரியனும் கீறல்தோற்றத்தோடு.

744.நல்லவராய் இருப்பவர்களுக்கெல்லாம் சிலுவை உண்டு.. கல்லறையின் மேல் பாறைகளும் உண்டு.. மலரைப் போல அவர் பூத்தெழுந்தார்..

#நம்பிக்கை கொள்வோம்.. நம்மின் நன்மைகள் நம்மை விட்டு விலகுவதுமில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை.

745. நாம் சிலருக்கு வள்ளலாக இருக்கிறோம். நமக்கு சிலர் வள்ளலாக இருக்கிறார்கள்.

#PAY IT FORWARD..

Related Posts Plugin for WordPress, Blogger...