எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

நாலு புள்ளியில் ஐம்பத்தைந்து கோலங்கள்.

நாலு புள்ளி நாலுவரிசையில் கோலங்கள் போட்டு அனுப்புங்க அக்கா என்று ஸ்ரீதேவி செல்வராஜன் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். ( போன வருடம் ) . புள்ளைக்குக் கல்யாணமானபுதுசு. என் முகநூல் தங்கையான அவர் என் முகநூல் நண்பரான உதயாவை மணந்திருந்தார். புள்ள வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியுதோ இல்லயோ கண்ணுக்கு அழகா கோலமாட்டும் வாசல்ல போட்டு அஸ்பெண்டை தாஜா பண்ணுவோம்னு கேட்டிருந்துச்சு போல :)

கொசுறா ஒரு புள்ளிக் கோலமும் போட்டு அனுப்பினேன். காலை பிஸியில் ஏதோ ஒரு புள்ளிய வைச்சுக் கோலம் போட்டுடலாம்ல. ஃப்ளாட் வாசல்கள்ல அவ்ளோதானே இடம் இருக்கும் :) :) :)

இப்போ அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு பிறந்திருக்கா. இந்த இனிப்பான தருணத்துல அவங்கள வாழ்த்துறதோட இந்தக் கோலங்களையும் பகிர்கிறேன்.

அப்புறம் முக்கியமான விஷயம். உதயசங்கர் கோலங்களுக்காக ஒரு வெப்சைட்டே வைச்சிருக்கார் :)

சாட்டர்டே போஸ்டுக்காக ப்ராமி கல்வெட்டுக்கள் பத்தியும் ப்ராமி எழுத்துருக்கள் பத்தியும் கேட்டிருந்தேன். முன்னேயே பிஸி. இப்போ பாப்பா வேற வந்தாச்சா. என்ன சொல்ல. அதுனால மெயில்ல கிடைச்சத இங்கே போட்டிருக்கேன். நீங்களும் அவர் வெப்சைட்ஸ் பக்கம் போயிப் பாருங்க. !

அருமையா கோலம் போட சொல்லித்தராங்க. !

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )

தேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – பதினைந்து , நெய் – கால் கப்,, பாதாம் + முந்திரி  – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – முக்கால் கப் , பால்பவுடர் – முக்கால் கப் , ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.

வியாழன், 29 டிசம்பர், 2016

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து பரிசு பெறணுமா. பின் வருவதைப் படிச்சுக் கலந்து வெற்றி வாகை சூடுங்க. வாழ்த்துகள். :) போட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி முதுவை ஹிதயத்துல்லா சார் .

 

////மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்


காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் -

கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1

சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை உள்ள புகைப்படங்களை ஒரு நண்பரின் பாரம்பரிய இல்லத்தில் காண நேர்ந்தது. அதில் இருந்த உயிர்த்துடிப்பும் வாழ்வும் அதைப் புகைப்படம் எடுக்கத் தூண்டியது.

விதம் விதமான ஓவியங்களின் பாணி அவை வரையப்பட்ட வண்ணக் கலவைகள் மற்றும்  லேசாய்ப் பழுக்காய் ஏறிய டிசைன் சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.

புகைப்படங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலை உணர்த்துபவை.

அவை ஒரு நாட்டின் இனத்தின் மக்களின் வாழ்க்கையைப் பதியம் செய்திருப்பவை.

அன்றைய கலாச்சாரம்,நாகரீகம், பண்பாடு, வீடுகள், அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த உடைகள், நகைகள், விழாக்கள், இறைவழிபாடு ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

நம் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்பதையும் உணர்த்துகின்றன. 

என்னைக் கவர்ந்த சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

இங்கே சில வெளிநாட்டு வாழ்வியல் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. மலேயா, மியான்மர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்ந்திருந்தபோது வாங்கியவையாகவோ வரையப்பட்டனவாகவோ இருந்திருக்க வேண்டும்.

உடையணிந்திருக்கும் பாணியும் பூக்களும் பழங்களும் இவர்கள் கற்பனை மாந்தர்களோ, ரிஷி பத்தினிகளோ, கந்தர்வர்களோ, யட்சிகளோ  என எண்ணத் தோன்றுகிறது.
நிலையில் கண்ணாடியில் எனாமலில் வரையப்பட்ட லெக்ஷ்மியும் யானைகளும்.

நதிக்கரையோரம் காத்திருக்கும் ஆங்கில மாதுவும் ஜப்பானியப் பெண்ணும். காத்திருத்தல் எங்கும் ஒன்றுதான் போல. :)
இன்னொரு புகைப்படத்தில் தூரத்தே தெரியும் கோட்டையும் அதைக் கடந்து கழுதையின் மேல் சுமை ஏற்றி வரும் பெண்ணும்.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.

601. கைப்பெட்டி/கைப்பொட்டி  - கணக்கு வழக்குகள் வைத்திருக்கும் பெட்டி ., மேசையாகவும் உபயோகப்படும். கணக்குச் சிட்டைகள், நோட்டுகள்,  பேரேடுகள், பேனா, பென்சில், குண்டூசி குத்தும் ஸ்பான்ச், ரூபாய் நோட்டுகள், சில்லரைக்காசுகள், வங்கி பாஸ்புத்தகங்கள், செக் புத்தகங்கள்.  ( திருமணம் மற்றும் குடிபுகும் சமயங்களில் - மாமப் பட்டில் முடியும் காசு, மாமப் பட்டு , நூல் கண்டு, மஞ்சள், குங்குமம், வெள்ளிக்காசு, சின்ன நோட்டு,மொய் கொடுக்க கவர்கள், பேனா, முறைதலை கொடுக்கும் நோட்டு, முறைக்குக் கொடுக்கும் பணக் கவர்கள், கணக்குச் சிட்டைகள்,பணம் ) ஆகியன இருக்கும். 

602. ஐந்தொகை., பேரேடு..-- கணக்கு வழக்குகளை குறிக்கும் முறை. ஐந்தொகை என்பது எழுதி இருக்கும் வரவு செலவு இருப்புக் கணக்கு விபரங்களை வகைதொகையாகப் பிரித்து அதன் வகை வாரியாகத் தனித்தனிப் பக்கங்களில் எழுதுவது. பேரேடு என்பது மொத்தமாகக் குறித்து வைத்துக் கொள்வது.

603. பற்று வரவு  - ஒருவர் ன்னுடைய கணக்கில் கடன் வாங்கி இருந்தால் அு பற்று. அத் திரும்பச் செலுத்திக் கணக்கை நேர் செய்ால் அு பற்றுவு.  

604. கொண்டு விக்கப் போதல்/கொண்டு விற்றல். - முதல் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யக் கல்கந்த வெளிநாடு செல்லுதல்.

 605. கண்டாங்கி. -  புடவை. சீலை, சரிகைக் கண்டாங்கி என்றால் பட்டுச் சேலை.

606. பாட்டையா - ஐயாவின் தந்தை., அப்பாவின்/அம்மாவின் தாத்தா. 

607. கொள்ளுப் பேரன் பேத்தி. - பேரன் பேத்தியின் குழந்தைகள். , மகன்/மகளின் பேரன்பேத்திகள்.

திங்கள், 26 டிசம்பர், 2016

சரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.

 மன்னை சதிரா என்று அறியப்படும் பிரபல எழுத்தாளரான சரஸ்வதி ராஜேந்திரன் மேம் அவர்கள் எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு விமர்சனம் அளித்துள்ளார்கள். முகநூலில் எனது புத்தகப் பக்கத்தில் அவர் கொடுத்ததை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். :)




///Saraswathi Rajendran சிவப்புப்பட்டுக்கயிறுஒரு பார்வை 

படைப்பாளியின் வாழ்க்கை அன்பவங்கள் நேர்பதிப்பாகவோ
மறைமுகப்பதிவாகவோ இருக்கலாம். அதை கலை நயத்துடன் அவர் வெளியிடும் பாங்கில்தான் படைப்புத்திறன் பளிச்சிடுகிறது. அவருடைய பாதிப்பின் ஆழம்,அழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடாய் அருமையான சொற்களில் வந்து விழும் பிரதிபலிப்பாய் பரிணமிக்கிறது
சிவப்புப்பட்டுக் கயிறு.


சனி, 24 டிசம்பர், 2016

கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

என் குழந்தைகள் அணிந்திருந்த கவுடு இது. இதைக் கண்டிகை என்றும் தெய்வீக மணி என்றும் உருத்திராக்கம் என்றும், ருத்ராக்ஷம் என்றும் சொல்கிறார்கள். இப்படி வெள்ளியாலோ தங்கத்தாலோ பிடித்து இருந்தால் ருத்ராக்ஷத்திற்குக் கவுடு என்று பெயர். !

என் குழந்தைகள் சிறியவர்களாய் இருந்தபோது  சிவப்பு/கருப்புக் கயிறு கட்டி கண்டத்தில் படும்படி இதை அணிவித்திருந்தேன். அவர்கள் பாட்டையா ருத்ராக்ஷத்தில் வெள்ளிபிடித்துப் போடும்படிக் கொடுத்திருந்தார்கள். குழந்தைகள் சில வருடங்கள் அணிந்திருந்தார்கள். அந்த சிவப்புக் கயிறு ஒரு முறை அறுந்தபின் (டெல்லியில் பள்ளிப்பருவம் )  அதன்பின் அணிவிக்கவில்லை. :(  இது ஐந்துமுக ருத்ராக்ஷம். ஓம் நமசிவாய என்று ஒரு முறை காலையில் சொல்வதுண்டு.

கண்டத்தில் எப்போதும் படுவதால் ஞாபக சக்தி பளிச்சிடும், சளி போன்ற உடல்நலக் கோளாறுகள் அண்டாது. ருத்ராக்ஷத்தில் பட்டு மேனியில் படும் நீர் மருத்துவ சக்தி கொண்டது என்று சொன்னார்கள்.
ருத்ரனின் கண்களில் இருந்து தோன்றியது என்றும் கண்ணீர்தான் ருத்ராக்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். ருத்ராக்ஷ மரங்களில் இருந்து விளைந்த பழங்களே ருத்ராக்ஷ மணிகள் என்கிறார்கள். ஹரித்துவார் ரிஷிகேஷ் சென்றபோது அங்கே நிறைய ருத்ராக்ஷ மாலைகள் விற்பனையில் இருந்தன. ஆனால் சுத்தபத்தமாகப் போடவேண்டும் என்று சொன்னதால் வாங்கவில்லை. வீட்டில் இருக்கும் ருத்ராக்ஷமாலை ஐயப்பன் கோயிலுக்குப் போகும்போது போட்டுக் கொள்வார்கள். சிலர் இதில் சிறு ருத்ராக்ஷங்களாகப் பொறுக்கி தங்கம் பிடித்துப் போடுவதுண்டு. நெல்லி அளவுள்ள பெரிய ருத்ராக்ஷங்களே சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
ஒன்றுமுதல் 21 முகங்கள் வரை கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு. அவற்றை அணிந்தால் பாவம் போகும், கோள்களின் கொடுமை அடங்கும், மும்மலம் நீங்கும், நோய் நொடி தீரும், லெக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கண் திருஷ்டி போக்கும், வியாபாரத்தை அதிகரிக்கும், பார்ப்பது புண்ணியம் அணிவது அதைவிடப் பலமடங்கு புண்ணியம் தரும், என சிவமஹா புராணம், பத்மபுராணம் , தேவி பாகவதம், சிவரகஸ்யம், திருக்கோட்டூர் புராணம் ஆகியன சொல்கின்றன.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

அங்காடித் தெருவில் ஆயர் பிறந்தார். !

”தந்தானைத் துதிப்போமே” என்ற பாடல்தான் நான் முதன் முதலில் கேட்ட கிறிஸ்துவ பாடல். அம்மாவின் தோழி காந்தி டீச்சர் ( நடனம் சார் மனைவி ) கூட்டிச் சென்ற ஒரு பெந்தகொஸ்தே சர்ச்சில் இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு ஞாயிறு. காலை திருப்பலியாக இருக்கலாம். அதன் பின் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், ஃபாத்திமா காலேஜிலும்  சர்ச்சில் முழந்தாளிட்டு அமர்ந்து ப்ரேயர் செய்ததுண்டு. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். :) IN THE NAME OF THE FATHER, AND OF THE SON , AND OF THE HOLY SPIRIT, AMEN. !

தினம் நடக்கும் திருப்பலியில் நமக்கும் நன்மை (அப்பம்)  தரமாட்டார்களா என ஏங்கியதுண்டு. ஞானஸ்நானம் செய்யாதவர்கள் நன்மை வாங்கினால் வாயில் ரத்தம் வரும் என்று கிறிஸ்துவத் தோழி சொன்னதைக் கேட்டுப் பயந்ததுண்டு. :)

நற்கருணை வீரன் படித்துப் புளகாங்கிதம் அடைந்ததுண்டு. இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா என யோசித்ததுண்டு. எல்லா மதங்களும் இஸத்தில் முடிய கிறிஸ்துவம் மட்டும் இன்ஃபினிட்டி என்பது போல கிறிஸ்டியானிட்டி என முடியும் என என் ஆசிரியை ஒருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டதுண்டு. CHOIR GIRLS  கூடப் பாட முயற்சித்ததுண்டு. :)

அல்லேலூயா அல்லேலூயா..

ஆற்றலாலும் அல்ல அல்ல
சக்தியாலும் அல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

கிறிஸ்துமஸுக்கு சில நாட்கள் முன்னான இரவில் கியாஸ் லைட் வெளிச்சத்தில் வீடு வீடாகக் கூட்டமாகப் பாடி வரும் கேரல்ஸை ரசித்ததுண்டு. கிறிஸ்துமஸ்தாத்தா எனக்கு ஏதும் பரிசு வைத்திருப்பாரோ என்றும் யோசித்ததுண்டு.

சென்னை ராயப்பேட்டையில் இருந்தபோது ஷெரில் அம்மா கிறிஸ்துமஸ் அன்று கொடுத்துவிடும் ஹனி கேக்குகள் சுவையானவை. வாழைப்பழ டாஃபி, ஃப்ரூட் கேக், சிக்கன்/மட்டன் பிரியாணியின் சுவை அட்டகாசம்.

ஒரு முறை விஜிபி கோல்டன் பீச் சென்ற போது உலக உருண்டைக்குள் ஏறிப்பார்த்தால் எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவம் பரவி இருப்பதைப் போட்டிருந்தார்கள். அதற்கு அங்கே வந்த கிறிஸ்துவப் பெண்கள் உலகம் பூரா நம்ம மதம்தான் இருக்குன்னு சொல்றாங்க என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் குளிர்காலத்தில் என்றாலும்  கார்ட்ஸ், கிஃப்ட்ஸ், கிறிஸ்துமஸ் மர ( பைன் , ஃபர்) மர அலங்காரங்கள், தொப்பிக்குள்/சாக்ஸுக்குள் பரிசுகள்,கேக்குகள், சாக்லெட்டுகள் , உறவினர் வருகை என ஒவ்வொருவர் இல்லத்திலும் களை கட்டும். 

மன்னார்குடிக்கு எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் எல்லாம் சுவாமிமலை, சிக்கல், எட்டுக்குடி, எண்கண், நாகூர், வேளாங்கண்ணி சென்று தரிசித்து வராமல் அவர்கள் ட்ரிப் முடியாது. ஜாதி மதம் கடந்து கடவுளர்களை வணங்கி வளர்ந்திருக்கிறோம். :)

நாங்களும் குடும்பமாக வேளாங்கண்ணி, மைசூர் செயிண்ட் ஃபிலோமினா சர்ச், கோவா செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச், கோவை புனித அந்தோணியார் சர்ச் சென்றதுண்டு.

வேளாங்கண்ணி சிலுவைப் பாதையில் சிலர் செபம் சொல்லிக்கொண்டு வருவார்கள். 

மங்கள் வார்த்தை செபம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மேய்ப்பரின் வருகையைச் சுட்டி அக்கம் பக்கம் ஒளிரும் நட்சத்திரங்கள்

வானவில் தொலைக்காட்சியில் பேட்டி.

சென்னையிலிருந்தபோது 2012 இல் வானவில் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டியை எனது முகநூல் நண்பர் அரவிந்த் ரத்னவேல் எடுத்து அனுப்பி இருந்தார். எப்போது ஒளிபரப்பப்பட்டது எனத் தெரியவில்லை.

அதன் வீடியோவையும் புகைப்படத்தையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பேட்டியில் என்ன சொன்னேன் என்பதே மறந்துவிட்டது. ஆனால்

அப்பாவுக்கு மகள்
கணவருக்கு மனைவி
குழந்தைகளுக்குத் தாய்
அதன்பின் நான் யார் நான் யார்

புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.

1161. திரும்ப குழந்தையா ஆயிட மாட்டோமா
.
.
. குளிர்ல சாக்ஸ், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் எல்லாம் போட்டு பெட்ல உக்கார்ந்துகிட்டு அம்மா கையால சுட சுட நரசுஸ் காஃபி வாங்கிக் குடிக்கமாட்டமா.. நாமளே போட்டுக் குடுத்துட்டு குடிக்க வேண்டியதா இருக்கு.. ---- நான் போறேன்பா காரைக்குடிக்கு. ( ஹைதையில் எழுதியது :)

1162. குளிர் ரொம்பப் படுத்தி எடுக்குதே.. உங்கூர்லயும் அப்பிடித்தானா.

1163. ஃபேஸ்புக்கில் டைப் பண்ணுவது மூலமாக நிறையப் பேர் படித்து நண்பர்களாகிறார்கள். இவர்களே பென் ஃப்ரெண்ட்ஸாக இருந்தால் நம் கையெழுத்தைப் படித்தால் விடு ஜூட்தான்.

1164. ராகு அனைவரையும் நண்பராக்குவார். சனி அவர்களைப் பகைவர்களாக்குவார்.. பாஸ் உங்க ரெண்டு பேருக்கும் பகடைக்காயா நாந்தான் கிடைச்சேனா..

1165. துக்கம் போய் மர்மம் வந்திருக்கு. #தமிழ்நாடு_சீரியல்_சீசன்_2

1166. Man.. Vain Insect..

1167. ////சுபா வள்ளி

எத்தனை அவ்வையார்கள் என்ற ஆராய்ச்சி ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டாலும் நம் கண்முன் வருவது கே.பி.சுந்தராம்பாள் மட்டும் தான் ... எத்தனை கவிதாயினிகள் வந்தாலும் தாமரை போன்ற சிலரே நிலைத்து நிற்கும் பேர்வாங்கும் பெண் கவிதாயினிகள் ..... எத்தனை பெண் எழுத்தர்கள்
தங்களின் திறமையை வெளிப்படுத்தும் இவ்விடம் அவ்வகையில் என் மனதில் வருபவர்கள்... இவர்கள் Thenammai Lakshmanan Kirthika Tharan Rajeswari Jayakumar சினிமா விமர்சனத்த பிச்சு உதறுவாங்க Achi Poorani Prema Vaduganathan Prema Mohan Nivetha Nivi Raji Krish ஆக்சுவலா இவரிடம் உள்ள பொறுமையை விட இவரின் கணவரின் பொறுமை பிடிக்கும் ஸ்மைலிங் பேஸ்ம்பாங்களே Krish Rajsekar Sindhya Ragunathan Visha Mahesh இன்னும் பல தோழிகள் .... தொடரட்டும் இவர்களின் எழுத்துக்கள்... ////

செவ்வாய், 20 டிசம்பர், 2016

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.

திருமணம் என்பது ஒரு கோட்டை வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேறத் தவிக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. எந்த விஷயத்திலும் நீயா நானா என்று வலுவாக முழு எதிர்ப்போடு ஆண் பெண் இருவரும் சண்டையிடும் பந்தம் இந்தக் கணவன் மனைவி உறவுதான். 

இரண்டு வேறு வேறு குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றிணையும்போது பல்வேறு கருத்து மாறுபாடுகளைச் சந்திக்க நேர்கிறது. அன்றைய திருமணங்களில் பெரும்பகுதியும் பெண் ஆணைச் சார்ந்து இருந்ததால் கருத்துவேறுபாடுகள் முடங்கிப் போய்விட்டன. விட்டுக் கொடுத்து போதல் பெண்ணின் கடமையாகவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்றோ ஆண் பெண் இருவரும் இணையர்கள். இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள். எனவே யார் விட்டுக் கொடுப்பது எனப் பட்டிமன்றங்கள். 

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணமோ இருமணம் ஒன்றிணையாவிட்டால் அதிருப்தி, அக்கறை இன்மை, சுயநலம், ஈகோ, சலிப்பு, வெறுப்பு,  கோபம், வெறுமை, விரக்தி, சண்டை ஆகியன தலை எடுக்கத் துவங்கி விடுகின்றன. 

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஜாதி மதம் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெற்றோர் செய்யும் திருமணங்களில் பெற்றோர் கட்டாயத்துக்காகத் திருமணம் செய்யும் ஜோடிகள் அதன் பின் ஒருவருக்கொருவர் பிடித்தமில்லாமல் தங்கள் தங்கள் கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறார்கள்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பும் விழைவும் வேறாக இருப்பதால் வெறுப்புக் கூடிவிடுகிறது. 

திங்கள், 19 டிசம்பர், 2016

கூடை கூடையாய்த் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

கூடை கூடையாய்த் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.









கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி

 

மெல்லிய உருவம், உறுதியான குரல், தீர்க்கமான பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி இதுதான் விஜி என்ற விஜயலெக்ஷ்மி.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

சனி, 17 டிசம்பர், 2016

ஆனந்த விகடனில் கவிதை.

காலம் கடந்தும் ஜெயித்த கவிதை என்று சொல்லலாம்.

எனது முகநூல் தோழி திருமதி கீதா இளங்கோவன் அவர்கள்  21.12.2016 ஆனந்தவிகடனில் ஆண்பால் பெண்பால் அன்பால் என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் என்னுடைய “ தீட்டு “ கவிதையையும் குறிப்பிட்டு கௌரவம் அளித்திருக்கிறார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

இங்கிவரை யாம் பெறவே.. – 2



இங்கிவரை யாம் பெறவே.. – 2

நமக்காகத் தங்கள் வாழ்நாள் பூரா பணிபுரியும் சிலரை நாம் மறக்கவே முடியாது. மன்னார்குடியில் எங்கள் வீட்டில் பணிபுரிந்த நீலாக்கா என்பவரை மறக்க முடியாது. மிக அன்பானவர். ஈழத்தமிழர். தினமும் வந்து வீடு துடைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவரைப்பதும் பாத்திரம் தோய்ப்பதும் துணி துவைப்பதுமாக இருப்பார். அவருக்கு ஒரு மகன் , ஒரு மகள். முதல் திருமணத்தில் ஒரு மகளும் , அடுத்த திருமணத்தில் ஒரு மகனும் இருந்தார்கள். மகன் நை நை என்று அழுதுகொண்டே இருப்பான். இன்று அந்தப் பையன் மிகப் பெரும் ஃபோட்டோகிராஃபராக இருக்கிறான். 

அம்மா வீட்டில் காளிமுத்து அக்கா( சரோஜா அக்கா ) சிலகாலம் பணிபுரிந்தார். எங்கள் ஆயாவைப் போல எங்கள் அம்மா அப்பாவும் வேலை செய்பவர்களைப் பிள்ளைகளாகவே பாவிப்பார்கள். அவர்கள் குடும்ப நல்லது கெட்டதுக்கெல்லாம் உடனிருப்பார்கள். இவர்களின் பிள்ளைகளின் படிப்பு கல்லூரி, திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.தோடு கொலுசு, ோடு, வையல், செயின், சைக்கிள் வாங்கவும், பிரசவம், கண் வைத்தியத்துக்கும், வேலையில் சேரப் பணம் கட்டவும் உதவுவார்கள்.  

துணி துவைக்கப் பழனி அண்ணனும் சரசக்காவும் வருவார்கள். குடியின் காரணத்தால் பழனி அண்ணன் இயற்கை எய்திவிட தற்போது சரசக்கா வந்து செல்கிறார்கள். வெள்ளை என்றால் அப்படி ஒரு வெள்ளை இருவரையும் போலத் துவைக்க நம்மாலும் முடியாது , எந்த அட்வான்ஸ்டு வாஷிங் மெஷினாலும் முடியாது. 

மாசமாக இருக்கும் போது எண்ணெய்த் தண்ணீர் ஊற்றவும் குழந்தைப் பேறின் பின் கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டவும் முத்தி அக்கா வருவார்கள். வெந்நீர், வாசனைத்தூள், சீயக்காய்த்தூள், கஷாயம், அக்காவுக்குக் காஃபி, பிள்ளைக்கு உரசிக் கொடுக்க மருந்து, என்று என் தாயார் தயாராக வைத்திருப்பார்கள். “ தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது “ என்று எனது அம்மாவை சிலாகிப்பார்கள் முத்தி அக்கா. மூப்பின் காரணத்தால் கண் பார்வை மட்டுப்பட்டு கடைசிக்காலத்தில் வீட்டிலேயே இருந்தார்கள். 

வியாழன், 15 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.

581. கோயில் மாலை வருதல். - முறையான அங்கீகாரம். ஒன்பது கோவில்கள் உண்டு. அவை நகரச் சிவன் கோயில்களாகவும் இருக்கும். மாப்பிள்ளை பெண் இருவர்  சார்ந்த கோயிலிலும் இருந்து மாப்பிள்ளை பெண் இருவருக்கும் கோயில் மாலை வந்தால்தான் அவர்கள் கோயில் புள்ளியாக அங்கீகரிப்படுவார்கள். முதலில் அந்த மாலையைத்தான் மாப்பிள்ளையும் பெண்ணும் அணிவார்கள்.

582. வாழைப்பழம் தடவுதல் :- திருமணச் சடங்குகளில் ஒன்று. திருப்பூட்டி முடிந்ததும் மாப்பிள்ளைக்கு மச்சினன் கொழுந்தியாளும் மணப்பெண்ணுக்கு நாத்தனார் கொழுந்தனார்களும் வாழைப்பழத்தை வாயில் ஊட்டுவதாகத் தடவி விடுவார்கள் . ( இன்றைய பர்த்தே பார்ட்டிகளில் கேக்கை அப்புவது போல :) 

583. சாப்பாடு போடுவது :- திருப்பூட்டி முடிந்ததும் மணவறையில் மாப்பிள்ளை அமர்ந்திருக்க பெண் சாப்பாடு போடுவார். ஒரே பாத்திரத்தில் புதிதாகச் சமைத்த சாதம் குழம்பு கறி எல்லாவற்றையும் ( ஐயர் சொல்லச் சொல்லப் ) பெண் போட  மாப்பிள்ளை அதை ஆட்காட்டி விரலால் தொடுவார். அதன்பின் கைகழுவ மாப்பிள்ளைக்கு அதிலேயே தண்ணீரை ஊற்றுவார் மணப் பெண். இது ஒரு சடங்கு மட்டுமே. சில ஊர்களில் மாப்பிள்ளைக்கு இலை போட்டு முட்டை எல்லாம் அவித்து வைத்துப் பரிமாறுவார்கள்.

584. தலைச்சீலையில் முடிவது :- பெண்ணிடம் ஒரு வெற்றிலை பாக்கைக் கொடுத்து இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

585. சதுர ஆலாத்தி & நீராலாத்தி:-  இட்லியில் மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் விட்டுப் பிசைந்து நான்கு சிவப்புக் கூம்புகளாகச் செய்து அதில் திரியைச் செருகி வைப்பார்கள். பெண்ணழைக்கும்போது சதுர ஆலாத்தி எடுப்பது வழக்கம். நீராலாத்தி என்பதில் மஞ்சள், சுண்ணாம்பை நீரில் கலந்து அதில் வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு மாப்பிள்ளை பெண்ணைச் சுற்றி ஆலாத்தி எடுத்து திருஷ்டி கழியட்டும் என்று கொட்டுவது வழக்கம்.

586. காப்பு அவிழ்த்தல் :- திருமணத்தன்று காலை பகவணம் செய்து ஐயர் கொடுக்கும் காப்பைக் கட்டுவார்கள். (காப்பு என்பது சிவப்புப் பட்டுத் துண்டில் ஒரு சிறிய வெள்ளிக் காசை முடிந்து மணிக்கட்டில் கட்டுவது.) முதலில் மணமகனுக்கும் பின் மணமகளுக்கும் மணையில் அமர்ந்து சடங்குகள் செய்யும்போது அவரவர்  மாமக்காரர்கள் கட்டுவார்கள்.

புதன், 14 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-


பொருட்காட்சி :-

குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா எங்கேபோறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப்போய் என்னசெய்வீங்க
ராட்டினத்தில்ஏறி உலகைச்சுத்திப் பார்க்கப்போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்னசெய்வீங்க
பலூன்பொம்மை பஞ்சுமிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்னபின்னே என்னசெய்வீங்க
பஃபூன்மாமா பல்டிஅடிப்பதை பார்த்துச்சிரிப்பேங்க.

பல்டிஅடிப்பதை பார்த்தபின்னே எங்கேபோவீங்க
குட்டியானை, சிங்கவித்தை பார்த்துரசிப்பேங்க.

அம்மாகையைப் பிடித்துக்கொண்டு சென்றுவாருங்க
அழகாய்ப்பொருட் காட்சித்திடலை ரசித்துவாருங்க


இங்கிவரை யாம் பெறவே…



இங்கிவரை யாம் பெறவே…

நன்றி அறிவித்தல் நாள் என்று உலகெங்கும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில் வருடம் 365 நாளும் நமக்கு சேவைசெய்து வரும் சிலருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதவே போதாது. 

தேவதைகள் உபதேவதைகள் என்று கேள்விப்பட்டிருப்போம். என் ஆயாவைச் சுற்றி இருந்த, இருக்கும் உபதேவதைகள் சிகப்பி அக்கா, ராமாயி அக்கா, பாக்கியத்தக்கா, சித்ரா, பாண்டி அக்கா, பாக்கியம். இதில் சிகப்பி அக்கா சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேல் எங்கள் ஆயாவீட்டில் பணிபுரிந்திருப்பார். அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்து ருசிவரச் சமைப்பார். 

பெயருக்கேற்றார்போல சிகப்பாக இருப்பார் சிகப்பி அக்கா. குவர்த்த் ண்டட்டி மாட்டி இருப்பார். அவர் சிகப்புக்கும் அழுக்கும் அு ரொம்பப் பத்ாக இருக்கும். ாமாயி அக்கில் கிறு மாட்டி உருண்டக் ண்ணாடி போட்டிருப்பார். மூவக்கும் உள்ள ஒற்றுமை என்னென்றால் முன்கொசுவம் வத்ுச் சேலை கட்டாமல் பின்கொசுவம் வத்த் ட்டுச் சுற்றாகக் கட்டி இருப்பார்கள். மூவுமே அள்ளி முடிந்தண்டை போட்டிரப்பார்கள். எளிமை என்பன் உருவங்கள்.

தினப்படி சமையல் போகத் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பதும், சீடைக்காய் உருட்டுவதும், பத்தி வளவுகளில் உப்புக்கண்டம், ஊறுகாய் வத்தல் வரளி என்று எதையாவது காயவைத்து எடுப்பதுமாக இருப்பார்கள் ஆயாவும் சிகப்பி அக்காவும். 

அமயம் சமயம் என்றால் வீடு மெழுகித்தரவும் மெஷினுக்குப் போய்வரவும் பலகாரம் செய்தால் உதவி செய்யவும் என்று ராமாயி அக்கா வருவார். 

செவ்வாய், 13 டிசம்பர், 2016

நடந்துசென்ற நடாவும் விளாசித் தள்ளிய வர்தாவும்.

வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் கடகடன்னு ஆடுது வீட்டுக்குள்ளேயே இரைச்சலாய் டெடரா இருக்கு என்று என் பக்கத்துவீட்டுக்காரரின் மகள் தொலைபேசியில் சொன்னார். அதற்குச் சிறிது நேரம் கழித்து வீட்டில் முன்பக்க பால்கனி ஜாலி வழியாக மழைத்தண்ணீர் விசிறி அடித்து வீட்டின் ஹால் மற்றும் கிச்சன்  & பெட்ரூம் பால்கனி வழியாக வீடெல்லாம் தண்ணீர் என்று என் மகன் ஃபோன் செய்தார்.

அலைபேசி கோபுரங்கள் பாதிக்கப்பட்டதால்  வாட்ஸப்பிலும் தகவல்கள் இல்லை. பவர் பாங்க் இருந்தாலும் இன்னும் எத்தனை நாள் கழித்து கரண்ட் வருமோ அதுவரை அத்யாவசியத் தகவல் பரிமாற்றத்துக்காக சேமித்து வைக்கும்படியும் அவ்வப்போது ஆன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் சொல்லி இருக்கிறோம்.

இரவில் ஒரே கொசுக்கடியும் குளிரும் தாக்கியதாகவும் சரியாக உறங்கவில்லை என்றும் சொன்னார்கள். ஃப்ளாட் வீடுகளில் இருப்பவர்களை விட தனி வீடுகளில் வசிக்கும் இன்னும் சில உறவினர்களிடமிருந்து தகவல் இல்லை. ஃபோன் செய்தால் கட் ஆகிறது. வீட்டைச் சுற்றி ஒரே தண்ணீர் என்று சொன்னார்கள். சென்ற வருடம் வெள்ளம் மூழ்கடித்தது போல் இந்த வருடம் புயல் விளாசித் தள்ளி வருகிறது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்று அறிவித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 172 கிமீ வேகம் வரை அடித்திருக்கிறது. இதில் மழையிலும் புயலிலும் நனைந்தபடி ஒவ்வொரு சானலிலும் தொகுப்பாளர்கள் செய்தி சேகரித்து அனுப்பி  அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள். 

நடா தாக்கும் என்று பயந்திருந்தபோது அது குறைந்த காற்றழுத்தம் கொண்டதாக மாறிக் கடந்துசென்றுவிட்டது. ஆனால் வர்தா நேற்று சென்னையையும் இன்று கர்நாடகத்தையும் நாளை கோவாவையும் தாக்கும் என்று செய்திகள் வருகின்றன.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கே ஜி எனர்ஜி



கே ஜி எனர்ஜி

டாக்டர்களை வந்தனை செய்யுங்கள் நிந்தனை செய்யாதீர்கள் என்று கோவை கேஜி  ஹாஸ்பிட்டலின் இயக்குநர் இன்று லோட்டஸ் ந்யூஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

1340 ஊழியர்களின் பேரை மட்டுமல்ல தனது ஊழியர் ஒவ்வொருவரின் பேரையும் பிரிமிஸஸின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு எக்ுப்மெண்டிஸின் பேரையும் அதன் பயன்களையும் கூட ஞாபகத்தோடு சொல்லி வியக்க வைத்தார். 

2016 வீடியோ.


2016 வீடியோவாம். தாங்க்ஸ் ஃபேஸ்புக் :) ஃபேஸ்புக்குல ரொம்ப சாதிச்சிட்டமோன்னு பார்த்தா எல்லார் டைம்லைன்லயும் அவங்க அவங்க வீடியோ இருக்குப்பா. செம பல்பு. ஹிஹி. எனி ஹவ் தாங்க்ஸ் மார்க் & ஃப்ரெண்ட்ஸ் :) 26,485 லைக்ஸ் போட்டுருக்கனாம். அதிலயும் எத்தனை லைக்ஸ், எத்தனை ஹார்ட்டு, எத்தனை வாவ், எத்தனை சோகம், எத்தனை கோவம்னு எண்ணி ,எண்ணி வைச்சி ஆச்சர்யப்படுத்துறாங்கப்பா :)


 இது இன்னொரு முகநூல் பக்கத்திலிருந்து.. இரண்டும் நானே. தமிழுக்கு ஒண்ணு இங்கிலீஷுக்கு ஒண்ணு :) முகநூல்படைப்புப் பக்கம் ஒண்ணு. ஆக மொத்தம் மூணு இருக்கு. பட் ரெண்டுக்குத்தான் வீடியோ ஆப்ஷன் இருக்கு :) இதுல 3147 லைக் போட்டிருக்கேன். அதிகம் ஆப்செண்ட் ஆயிட்டேன் போல :)




சனி, 10 டிசம்பர், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.

561. சேயத்தக்கன இருக்கா - திருமணம் செய்யத் தகுந்த வயதில்/பக்குவத்தில் இருக்கா எனப் பெண்ணைக் குறிப்பிடுவது.

562. ஒணரவைக்கணும் - உலரவைத்தல். துணி அல்லது வற்றல் வரளியை உலர/காயவைப்பதைக் குறிக்கிறது.

563. சீமைச் சமத்தி - கெட்டிச் சமத்தி.மிகத் திறமையான பெண்களை சீமைச் சமத்தி என்பார்கள். அவ சீமைச்சமத்தி . அம்புட்டையும் வித்துப்புட்டு வந்திருவா எனச் சொல்வதுண்டு.

564. அம்புட்டு, ஒம்புட்டு, எம்புட்டு = அம்புட்டு - அவ்வளவு, எம்புட்டு - என்னுடையது, ஒம்புட்டு - உன்னுடையது.

565. அவுகவுட்டு ,எவுகவுட்டு,இவுகவுட்டு = அவகவுட்டு - அவர்களுடையது, எவுகவுட்டு - எவர்களுடையது, இவுகவுட்டு - இவர்களுடையது. ( சார்ந்தது )

வெள்ளி, 9 டிசம்பர், 2016

மீனு எத்தனை மீனு :- ( குழந்தைப் பாடல்கள் )

மீனு எத்தனை மீனு :-

தங்க மீனு தேவதை மீனு
பூக்கொண்டை மீனு ஆபரண மீனு
கத்தி மீனு பென்சில் மீனு
கப்பி மீனு நெத்திலி மீனு

ப்ளாசம் மீனு ப்யூட்டி மீனு
டைகர் மீனு ரைடர் மீனு
சக்கர் மீனு ஃபைட்டர் மீனு
ஆஸ்கார் மீனு அரோவணா மீனு

எத்தனை மீனு  எத்தனை மீனு
அழகுக்கு மீனு அமைதிக்கு மீனு.
கண்ணுக்குப் பயிற்சி மனதுக்கு அமைதி
வீட்டுக்கு இதமா தொட்டி மீன் வளர்ப்போம்.

வியாழன், 8 டிசம்பர், 2016

ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.

1141.தினம் ஒரு கைப்பிடி போதும் மன அழுத்தம் தவிர்க்க.

1142. எல்லா ATM களும் பாதுகாப்பானவைதானா.. பெண்கள் செல்ல அஞ்சும் இடங்களாக மாறி வருகின்றன . ANY TIME MONEY என்பது ANY TIME MURDER... என்பதாக.. ஹ்ம்ம்ம்

1143. NANUM EN THANGAI DAISY KETATHAIYEE KETKA VIRUMBUKIREN.. YAAR ANTHA KARUPPU AADUGAL .. ENNA EEN SELECT SEITHEENGKA ANBU ULANGKALEE..

1144. கத்தி எடுத்துக் குத்திக்கிட்டாலும் சேர்ந்து வாழ்வோம்.. ஹிஹிஹி

1145. திடீர்னு ப்லாகர் டேஷ்போர்டு ஏன் மாறிடுச்சு. கண்ணுல பச்சைக்கலரைத் தேய்ச்சது போல இருக்கே ..புரியாமப் புரியாம வருது. :)

1146. உலகம் விட்டு உலகம் கடத்தும் வாசிப்பு சுகமானது.

#வாங்கின புக் எல்லாம் ஒண்ணொன்னா படிக்க ஆரம்மிச்சுட்டனாக்கும் :)

1147. நாமல்லாம் இப்ப தம்ஸ் அப் ஃப்ரெண்ட் ஆயிட்டோம். #ப்ராண்ட்_அம்பாஸடர்ஸ்

ஓட்ஸ் ஹனி பர்ஃபி. கோகுலம், GOKULAM KIDS RECIPES.

ஓட்ஸ் ஹனி பர்ஃபி.


புதன், 7 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயும் முன்னவர் சோவும்

ஜெ ,சோ இருவரும் எனக்கு மிகப் பிடித்த ஆளுமைகள். முதல்வர் ஜெயின் மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்ட மறுநாளிலே அவரது வெல்விஷர் சோ அவர்களும் மறைந்தது யதேச்சையான ஒற்றுமை.

ஜெ - தைரியம் என்பதை மனதில் பச்சை குத்திய பெயர்.  சோ - பத்ரிக்கை உலகில் என்னைக் கவர்ந்த மனிதர்.  தைரியமாகக் கருத்துக்களை முன் வைத்தவர். பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

இருபெரும் துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவரையும் எனக்கு மிகப் பிடிக்கும். அசைக்கமுடியாத மாபெரும் தலைவியாக, பெண்களின் உந்துசக்தியாக,  அனைவரின் பேரன்பையும் பெற்றவராக, தன்னம்பிக்கையுடன் செயலாற்றுபவராக,  தன்னிச்சையாக தீரத்துடன் செயலாற்றுபவராக இன்னும் பலவாக இருந்த ஜெ , அன்னை இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு எனக்குப் பிடித்த தலைவியாவார். தனித்திருந்து மாணவியர் நலனுக்காக வாழ்ந்த எங்கள் கல்லூரி முதல்வர் சகுந்தலா போல, எங்கள் பேராசிரியைகள் போல தன் சாதனைகளாலும், மக்கள்நலப் பணிகளாலும் என்னுள் பிரமிப்பை விளைவித்தவர் ஜெ அம்மா.

திங்கள், 5 டிசம்பர், 2016

நூல் உலகத்தில் அன்னபட்சியும் பெண்பூக்களும்.

எனது மூன்றாவது நூலான அன்னபட்சியும் நான்காவது நூலான பெண்பூக்களும் நூல் உலகம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட்டில் கிடைக்கிறது. ஸ்டாக் இருக்குதுன்னு போட்டிருக்காங்க. இவை இரண்டும் கவிதை நூல்கள். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கணும்னா இதில் ஆர்டர் செய்யுங்க. இரண்டு மூன்று நாளில் ஆன்லைன் டெலிவரி செய்வதாகப் போட்டிருக்காங்க.

வாங்கி வாசிச்சிட்டுக் கருத்தைச் சொல்லுங்க.


அன்ன பட்சி.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80


இது பற்றி ஷானின் விமர்சனம் இங்கே கனவு தேசத்தில். !!!

அன்ன பட்சி – தேனம்மை லெக்ஷ்மணன்

இவர்களுக்கும் நன்றி :) 

அன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.

நன்றி நன்றி நன்றி :)

1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்

2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.

3. திரு இரத்னவேல் ஐயா.

4. திருமதி பத்மா & திரு இளங்கோ

5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.

6. புதிய தரிசனம்.

7. திரு செல்வகுமார்

8. திருமதி அகிலா புகழ்.

9. திரு பால கணேஷ்

10. திருமதி கலையரசி, வலைச்சரம். 


பெண் பூக்கள்.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மைலெக்ஷ்மணன்
பதிப்பகம்: புதிய தரிசனம் (Puthiya Tharisanam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60


பெண்பூக்கள் பத்தி விமர்சனம் செய்த விஜிகே சார், ஸ்ரீராம், ரத்னவேல் ஐயா ஆகியோருக்கும் நன்றி :)

”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.



சனி, 3 டிசம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய விமர்சனம். எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய எங்கள் ப்ளாகின் ஸ்ரீராமின் விமர்சனப் பார்வை.

இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன.  தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை.      இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது.  ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும்.  ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.  

தொட்டிச் செடி வளர்ப்போம் :- ( குழந்தைப் பாடல்கள் ).

தொட்டிச் செடி வளர்ப்போம் :-

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.

பறவைக்கூட்டம் காப்போம். :- ( குழந்தைப் பாடல்கள். )

பறவைக்கூட்டம் காப்போம். :-


கோடைக்காலம் வருகுது.

கொள்ளை வியர்வை பெருகுது
குடியிருக்க இடமில்லாமல்
கீச்சுக்கூட்டம் அலையுது.


ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்
குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.

கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்
பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.


வெள்ளி, 2 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( குழந்தைப் பாடல் ).

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா
கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கும் ஆங்கிலமும் அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்.

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அம்மாவும் நண்பர்களும் அருதுணையாய் இருப்பர்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.



100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


டிஸ்கி:- இதையும் பாருங்க

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.



Related Posts Plugin for WordPress, Blogger...