எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 செப்டம்பர், 2011

குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

குமுதம் .. எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெயர். வங்கிகள்., பல்கலைக்கழகங்கள்., கோயில் திருப்பணிகள்., தமிழிசைச் சங்கம்., சினிமா., எனப் பல துறைகளிலும் வேரோடிய நகரத்தார் பதிப்பங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். நிறைய புத்தக நிறுவனங்கள் ( வானதிபதிப்பகம்., மணிமேகலை., மணிவாசகர்., செல்வி ) என பதிப்பங்களுக்கு நடுவில் தேவி ப்ரஸ் என்பதும் குமுதம் ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடமாகும். இன்றைய குமுதம் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் தேவி ப்ரஸ் இருந்திருக்கிறது.



குமுதம் நிறுவனர்கள் எஸ் ஏ பி அவர்களும்., யவண்டம் ( அன்றைய ரெங்கோனில் யவண்டம் என்ற ஊரில் கொண்டு விக்கச் சென்றதால் இந்தப் பெயர்) வைரவன் செட்டியார் அவர்களும் சின்னத்தா பெரியத்தா மகன்கள். வைரவன் செட்டியார் புதுவயலுக்கு பிள்ளை வளர வந்து விட்டார்கள். இருந்தாலும் இருவருக்கிடையேயும் அன்பும் தொடர்பும் இருந்தது. எஸ் ஏ பி அவர்களின் கல்லூரி (திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜ்) நண்பர் பார்த்தசாரதி. இவர்கள் மூவரும் சேர்ந்து குமுதம் பத்ரிக்கையைத் தொடங்கினார்கள். இது வைரவன் செட்டியாருக்கு சொந்தமான தேவி பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்டது.


தொடர்ந்து சில உடல் நலக்குறைவுகளால் அதில் கவனம் செலுத்த முடியாமல்., தன்னுடைய பிள்ளைகளையும் கேட்காமல் அதில் இருந்து வெளிவந்துவிட்டார்கள் வைரவன் செட்டியார் அவர்கள்.


இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



9 கருத்துகள்:

  1. அக்கா, வேர்களைக் குறித்த பெருமிதங்களை அழகாய்ப் பதிந்திருக்கிறீர்கள், இந்த மற்றும் சென்ற இரண்டு இடுகைகளிலும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. //இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!
    //

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதானே பார்த்தேன்!!

    ”சும்மா” ன்னா சும்மாவா பின்னே!

    பின்னனியில் பிரபல பத்திரிகை உலகமே உள்ளதே.

    அதனால் தான் ’சும்மா’ பிச்சு உதறுகிறீர்களோ!

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையாக பகிர்ந்திருக்கீங்க தேனக்கா..

    இன்றைக்கும் அது அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகையாச்சே..

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் புரிந்தது. தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா என்றால்..? தம்பி மனைவியின் பாட்டியின் அப்பா என்பது பொருளா? குழப்பமாயுள்ளது சிஸ்டர்.

    பதிலளிநீக்கு
  5. பாரம்பர்யம் கொண்ட ஏதோ ஒரு பெரிய குடும்பத்தின் வேர்களைக் கொண்டவர் நீங்கள் என்பதை உங்களின் சில பதிவுகளைப் படித்ததுமே உணர்ந்துகொண்டேன். அந்த வேர்கள் குமுதம்வரையிலும் செல்லுவதறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.
    விபரங்களுக்கு மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஹுசைனம்மா

    நன்றி கோபால் சார்

    நன்றி ராஜா

    நன்றி சாந்தி

    நன்றி கணேஷ்

    நன்றி அமுதவன்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...