எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி  போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.

210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் )  - என்றாலும் 211. முருகனுக்காக  கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.

ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!

இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம்.  அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.

இது இடது பக்கம் இரண்டாவதா  நடுவில் இருக்கும் சிற்பம். இவர் காளிங்கனின் மேல் மதங்க நர்த்தனமாடும் கிருஷ்ணர். ! வலது கையில் சாட்டை ஏந்தி இடது கையில் காளிங்கனின் வாலைப் பிடித்து வலது பாத்தை காளிங்கனின் சிரசின் மேல் ஊன்றி மதங்க நர்த்தனமாடும் இக்கோலம் புதிது. பாம்பின் உடலும், கிருஷ்ணரின் அணியாரங்களும் உடைகளும் வளைகளும் அழகா செதுக்கப்பட்டிருக்கு.

இது இடது பக்கம் மேலே மூன்றாவதா இருக்கும் சிற்பம். இவர் 214. வெண்ணை திருடும் கண்ணன். பக்கத்தில் உறியிலிருக்கும் பானைகள். தவழும் கோலம் இடது கையில் தாழி வலது கையில் வெண்ணை, குட்டித் தொந்தி குலுங்க தங்க அரணாக் கொடி என அழகு வடிவம்.

இவர் போன்ற சந்தான கோபால கிருஷ்ணர். மன்னார்குடியில் இருக்கும் ராஜ கோபால சுவாமி கோயிலில் ஸ்பெஷல். காலை வாயில் வைத்தபடி ஆலிலையில் துயிலும் அழகு கோபாலர் ஒரு தொட்டிலில் வடிக்கப்பட்டிருப்பார் அவரை மடியில் வைத்து தாலாட்டினால் குழந்தைப் பேறு உண்டாகும் என்று ஐதீகம். 

இது நிலைச்சிற்பம். நட்ட நடு செண்டர்ல செதுக்கப்பட்டிருக்கார் இவர். இவர் கருடனா சித்திர குப்தனா என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஏனெனில் இறக்கைகளும் கூர் மூக்கும் கருடன் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் முன்புறம் இருக்கும் தட்டு போன்ற அமைப்பு குழப்பினாலும் நெற்றியில் இருக்கும் நாமமும் உருவ அமைப்பும் சுற்றிலும் இருக்கும் கோபாலர்களும் கிருஷ்ணர்களும் இவர் பெரிய திருவடியே என்ற முடிவுக்கு வரச் செய்கின்றன. !!!
இது வலது புற மேல் சிற்பம். திரும்ப வெண்ணை உண்ணும் கண்ணன். ஏணியிலேறி  உறியைப் பிடித்து  தாழியிலிருந்து வெண்ணெயைக் கையிலெடுத்து ருசிக்கும் கோலம். தாழிகளும் கண்ணனும் தங்கநிறத்தில் ( பெயிண்ட் ) மின்னுவது கொள்ளை அழகு :)

இது வலது புற நடுச்சிற்பம். குழலூதும் கண்ணன். பொதுவா வீடுகளில் குழலூதும் கண்ணன் படம் வைக்க மாட்டாங்க. ஏனெனில் அது கோகுலத்தில் ( கஷ்டப்பட்ட காலமாம் ) மாடுமேய்த்த கோலத்தில் இருப்பதால் இதை ஓவியமாக வைத்தால் கஷ்டம் வந்துவிடும் என்ற ( மூட ) நம்பிக்கை. ! ஆனால் இங்கே ஒரு தச்சர் அழகா வடிவமைச்சுட்டார். இந்த வீட்டுக்காரங்களுக்கு வறுமை என்பதே வந்ததில்லை :)  கீழே குழலோசையை கோமாதா ஒன்னு கனிவோடு கேட்டு மகிழ பக்கத்தில் ஒரு சுண்டெலி சைஸில் கன்னுக்குட்டி ஒண்ணு தவ்விக் குதிக்குது. ! ( ரொம்ப நாளா அது சுண்டெலின்னே நினைச்சிருந்தேன் சரியா பார்க்காம. இன்னிக்குத்தான் அது கன்னுக்குட்டின்னு கண்டுகொண்டேன் :)  .
இது வலது புற கீழ்ச் சிற்பம். திரும்ப 215. அன்னம் போன்ற அண்ட பேரண்டப் பட்சி. ஒரு வேளை இவை இரண்டும் இந்த நிலைக்கதவுக்கும் வீட்டுக்கும் கடவுள் சிற்பங்களுக்கும் காவலா இருக்குதோ என்னவோ.:)

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



11 கருத்துகள்:

  1. உங்களது இப்பதிவுகளைக் கொண்டு ஒரு முனைவர் பட்ட ஆய்வே மேற்கொள்ளலாம் போலுள்ளது. நுணுக்கமாக அதே சமயம் அதிகமான செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு விளக்கமும் எங்களையும் சிந்திக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  3. செட்டிநாட்டின் கலாசாரத்தை மிக அழகாக கானத்தருகிரீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அடேயப்பா... எவ்வளவு நுணுக்கமான கலைநயமும்.. அழகு வடிவமும்... பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. நேரில் பார்க்க வாய்ப்பில்லாத என்போன்றோர்க்கு இவ்வரிய காட்சிகளைப் படத்துடன் காட்டி விளக்கியுமிருப்பதற்கு நன்றி தேனம்மை..
    \\இடது கையில் தாழி வலது கையில் வெண்ணை, குட்டித் தொந்தி குலுங்க தங்க அரணாக் கொடி என அழகு வடிவம்\\ உங்கள் வர்ணனைகள் இன்னும் அழகு சேர்க்கின்றன. நேரமொதுக்கு மற்றப் பதிவுகளையும் பார்க்கிறேன்பா.

    பதிலளிநீக்கு
  5. அழகான பதிவு.

    //நட்ட நடு செண்டர்ல செதுக்கப்பட்டிருக்கா//இது போனறவற்றை தாங்கள் தவிர்களாமே (நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாவிடில்)

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! என்ன ஒரு அழகு! பிரமித்து கலைநயத்தைக் கண்டு வியந்தோம்..சகோ

    பதிலளிநீக்கு
  7. கலைநயம் அக்கா... நம்மூர் சிறப்பே சிறப்பு...

    பதிலளிநீக்கு
  8. அண்ட பேரண்டப் பக்ஷி.....

    அருமையான சிற்பங்கள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக படம் எடுத்துப் பகிர்ந்தமை நன்று.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அஹா மிக்க நன்றி ஜம்பு சார் !

    நன்றி டிடி சகோ

    நன்றி செந்தில்குமார்

    நன்றி கீத்ஸ்

    நன்றி சுரேஷ் சகோ

    கவனத்தில் கொள்கிறேன் பாஸ்கர்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...