எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

தென் தமிழ்நாட்டுச் சமையல் விருந்துகளில் செட்டிநாட்டுக் கைப்பக்குவத்துக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தஞ்சாவூர் தாட்டிலையில் கூட்டுக்கறி, துவட்டல், பச்சடி, மண்டி, மசியல், பிரட்டல், சிப்ஸ், கட்லெட், ஊறுகாய், அப்பளம், கலவை சாதம், அக்கார அடிசில், புலவு, தயிர்ப்பச்சடி, இனிப்பு, முக்கனிகள், கெட்டிக் குழம்பு , சாம்பார், இளங்குழம்பு/தண்ணிக் குழம்பு, சூப், மோர்க்குழம்பு, ரசம், தயிர், பாயாசம் ( பழப் பாயாசம்/பாதாம் கீர் ) என மதியச் சாப்பாடு ப்ரமாதமாக இருக்கும்.

விருந்து மட்டுமல்ல விருந்தோம்பலிலும் செட்டி நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். வீட்டின் வாயிலில் வரவேற்பதில் இருந்து முறைகளில் சடங்குகள் செய்ய விட்டு விடாமல் அழைப்பதில் இருந்து உணவருந்தும் இடத்தில் ஒவ்வொருவரையும் விசாரித்து ஒவ்வொரு பதார்த்தத்தையும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்குப் பிரியத்தோடு பரிமாறுவார்கள். இதற்குப் 301. பந்தி விசாரணை என்று பெயர்.

முதலில் சில ஸ்பெஷல் பலகாரங்களைப் பார்ப்போம்.

302. பாதாம் அல்வா. இனிப்புகளின் அரசன். இன்னும் இங்கே தம்ஃப்ரூட் அல்வா, காரட் அல்வா எல்லாம் ஃபேமஸ்.

303. கல்கண்டு வடை. தீபாவளிப் பலகாரம்.
304. கந்தரப்பம். திருமண வைபவத்தின் முதல் நாள் இரவில் கட்டாயம் இடம் பெறும் இனிப்பு.

305. மாவுருண்டை. மாலை நேர இனிப்பு. எங்கள் ஆயா மரவையில் வைத்துக் கொடுப்பார்கள்.
சீடைக்காய், சீப்புச்சீடைக்காய் தவிர 
அதிரசம், முறுக்கு வடை,
மாவுருண்டை, தேன்குழல்,
மனகோலம், முறுக்கு வடை இவையே சரியான ஜோடி. இவை திருமணப் பலகாரங்களும் கூட. பழனி பாத யாத்திரையின்போது கட்டாயம் இவைகளில் ஒன்றாவது கிடைக்கும்.

306. “கந்தப் பலகாரம்” என்ற தலைப்பில் 

“ கந்தனின் பூ முகம் மாவுருண்டை
அவன் காலடித் தண்டையோ முறுக்குவடை “ என்று பழநி வேலன் பாமாலையில் ஒரு பாடல் கூட உண்டு. இங்கே மாவுருண்டையைக் கிண்ணத்தில் நிரப்பி அச்சடித்திருக்கின்றார்கள்.
307. ரெங்கோன் புட்டு. இது திருமண வைபவத்தின் முதல் நாள் மாலை 308. இடைவேளைப் பலகாரத்தில் பரிமாறப்படும் இனிப்பு.
309. ஆடிக்கூழ்/ கும்மாயம். இதற்கு 310. சொல்லிக் கொள்ளும் பலகாரம் என்று பெயர். ஒரு வைபவம் முடிந்த அன்று மாலை இந்தக் கும்மாயம் பூரி/மினி ஊத்தப்பம் மற்றும் தூள் பஜ்ஜியுடன் பரிமாறப்படும். 
311. இது படைப்புப் பாற்சோறு. படைத்த மறுநாள் இதுபோல் வெட்டிப் புள்ளிகளுக்கு ஏற்பப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.
312. தூள் பஜ்ஜி/ வெஜ் பஜ்ஜி, இது மாலைப் பலகாரம் . காரம். எடவேளைப் பலகாரம். :)
313. சீடைக்காய். வீட்டில் மாலை நேரத்தில் வழங்கப்படும் பலகாரம். ஸ்நாக்ஸ்.
314. வறுத்த முந்திரி. இது 315. பெண்ணழைத்த வீட்டில் இரவு விருந்தில் கட்டாயம் இடம் பெறும், மற்றுமுள்ள முக்கிய விருந்து விசேஷங்களுக்கும் மாலைப் பலகாரத்தில் இது இடம்பெறும்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

9 கருத்துகள்:

  1. செட்டி நாட்டு சமையல்களும், விருந்து உபசாரமும் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமோ! அதிலெல்லாம் நீங்கள் மிகவும் பிரபலமானவர்கள் ஆச்சே !!

    ஐட்டம் 302, 312, 314 ஆகிய மூன்று மட்டும், ஒவ்வொன்றிலும் 4-5 கிலோ வீதம் எனக்கு என்று ஒதிக்கி வைத்துவிட்டுச் சொல்லுங்கோ, உடனே புறப்பட்டு ஓடி வந்துவிடுகிறேன். :)))))))

    பாதாம் அல்வா பார்க்கவே அப்படியே வழிச்சு முழுங்கணும் போல ஜோரா இருக்குது. :)

    தூள் பஜ்ஜியும், வறுத்த முந்திரியும் என் ஆல் டைம் ஃபேவரைட் ஐட்டம்ஸ் :)

    பசியைக் கிளப்பிவிடும் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சர்க்கரை நோயாளியின் கண்முன் இத்தனை இனிப்புகளா? வாயூறச்செய்யும் படங்கள்... இந்த வகை வகையான உணவுக்காகவே ஊருக்கு வரவேண்டும்போல் உள்ளது தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. நாவில் நீர் சுரக்கிறது!!! சகோ...அது சரி ஆடிக் கூழ்/கும்மாயம் சொல்லிக் கொள்ளும் பலகாரம் என்பதன் கீழ் இருக்கும் படம் கும்மாயம் கோதுமை ஹல்வா போல இருக்கிறதே.....சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. ahaaa,akka naavuruthe..ungalin rangoon puttu palamurai seithachu.....superrr!!

    பதிலளிநீக்கு
  5. அஹா பாராட்டுக்கு மிக்க நன்றி விஜிகே சார் !

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கீதா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் நெய்யை விட்டுக் கொட்டியிருக்காங்க சகோ:)

    நன்றி டா மேனகா.. அஹா !

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...