எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

216. எசகேடு - இடைஞ்சல்

217. ஊருணி, ஊரணி,கம்மாய்  - குளம்

218. வெள்ளன்ன - விடியக்காலம்பற

219. நொண்ணன் - உன் அண்ணன்

220. நோத்தா - உன் ஆத்தா

221. நொப்பச்சி - உன் அப்பச்சி

222. தெங்கணம் - அரை வேக்காடு. சமய சந்தர்ப்பம் தெரியாமல் நடந்து கொள்பவர்களைக் குறிப்பது. குறிப்பாகப் பெண் குழந்தைகளை. :)

223. ஒச்சம்- குறை. ( கை கால் போன்ற உடலுறுப்பில் குறை ) பொண்ணுக்கு ஒச்சம் ஏதுமில்லையே என்று திருமண சமயத்தில் விசாரிப்பார்கள்.

224 . புட்டா மாவு.- நம்ம பாஷைல பவுடர். ( டால்கம் பவுடர் )

225. கழுசடை - கீழ்த்தரமான

226. கடகால் - வாளி- கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் வாளி.

227. வழுவட்டை - நறுக்கென்று சேதி சொல்லாமல் வழ வழ கொழகொழ என்று பேசுபவரைச் சாடுவது. சரியான வழுவட்டை என்று..

228. பிரிசுபிடிப்பது, பிருசுபுடி - பிகு செய்வது , தான் செய்ய வேண்டியஒரு செயலைச் செய்ய மற்றவர்கள் தன்னை அளவுக்கதிகமாகத் தாங்கிக் கேட்கவேண்டும் என நினைப்பது. கெஞ்சி கொஞ்சியபின் செய்வது.

229. மலுக்கிக்குவா - இதுவும் பிகு செய்வதுதான்.

230. மெனக்கெட்டு - வலிய வந்து,செய்யும் வேலையை விட்டுட்டு வந்து அடுத்தவருக்காக உதவுவது,

231.. ஆத்தீ - ஒரு செயல் நிகழந்தவுடன் அச்சத்திலோ ஆச்சர்யத்திலோ விஷயத்தின் வீரியம் பொறுத்துச் சொல்லப்படும் வார்த்தை. அடியாத்தீ அப்பிடியா  என்றும் சொல்வதுண்டு.

232. . ஆத்தாடி, ஆத்தாடீ  -ஒரு விஷயம் அவசரமாய் நிகழ்கிறது அல்லது நிகழப் போகிறது . அல்லது நிகழ்ந்த ஒரு விஷயத்தை நிகழ்காலத்தில் கூறும்போது சொல்லப்படும் ஒரு வார்த்தை. அதிர்ச்சியிலும் சொல்லப்படும் வார்த்தை.

233. . கூதரை - புரியாமல் சேதி கேட்டு செயல் செய்வது ( ரெண்டுங்கெட்டான்)

234. பொக்குன்னு- அவசரமாக. சீக்கிரமாக ( பொக்குன்னு வேலை பார்த்திருவா )

235. பொக்கை வாய்ச் சிரிப்பு  - பல் இல்லாத ஒருவரின் சிரிப்பு, வயதானவர்களின் / குழந்தைகளின் சிரிப்பு.

236. ஊத்தை.- பல்லில் இருக்கும் அழுக்கு, அதே ஒரு மனிதரின் கீழ்ப்பட்ட குணத்தையும் குறிக்க அது ரொம்ப ஊத்தைப் பிடிச்சது என்பார்கள். உடல் சம்பந்தமான சுத்தமின்மை உள்ளவர்களையும் குறிக்கும்.

237. மொதும்பி - ஊறி.  பருப்பு வகையறாக்களை நீரில் போட்டால் ஊறி மொதும்பி நிற்கும். அதே போல பஞ்சு அடைத்த தலையணைகள் மெத்தைகள் நீரில் ஊறிவிட்டால் மொதும்பி நிற்கும். அதை வெய்யிலில் காயவைத்து எடுப்பார்கள். ஒரு பொருள் அதிகமாகி விட்டாலும் அதை மொதும்பிப் போச்சு என்பார்கள்.

238. அசமஞ்சம் - சோம்பேறி. மஞ்சத்தில் படுத்துக் கொண்டு அசையாமல் இருப்பவர். :)

239.பொச கெட்ட - உணவு குறித்து அதீதமான ஆசையுள்ள. அல்லது ஏதேனும் ஒரு பொருள் குறித்து - தனக்கு உரியது இல்லாத ஒரு பொருளை அடைய ஆசை கொண்டு நடந்து கொள்வது பொசகெட்டதனம் எனப்படும்.

240. இஞ்சே -பெண்களைக் கூப்பிடுவது. சில ஊர்களில் சில சமயங்களில் கணவன் மனைவியை ஆசையுடன் விளிப்பதும் கூட. :)

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



6 கருத்துகள்:

  1. ஆஹா, செட்டிநாட்டு வார்த்தைகள் பலவும் அறிய முடிந்தன. இதில் பாதிக்குமேல் நான் ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்ள முடிந்தது..... நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. நிறைய வார்த்தைகள் அறிய முடிந்தது...பதிவர் கில்லர்ஜியின் பதிவில் பல வார்த்தைகள் இடம் பெறும் தேவகோட்டைக்காரராச்சே!! இங்கு நீங்கள் சொல்லியதிலிருந்து அர்த்தமும் அறிய முடிந்தது. இஞ்சே எனும் வார்த்தை இலங்கைத் தமிழிலும் உண்டு போலத் தோன்றுகின்றதே!

    பதிலளிநீக்கு
  6. நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். அப்படியா. கில்லர்ஜியின் பதிவுகளைப் பார்க்கிறேன் :) ஆம் சகோ இஞ்சே என்ற வார்த்தை இல்லை அது இஞ்சாருங்கோ என்ற வார்த்தை. இஞ்சே என்பதை இங்கே என்பதற்கு உபயோகிப்பார்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...