எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

281. கல்யாணம் எழுதிக் கொள்ளுதல். - இன்னாரின் மகனை/பேரனை  இன்னாரின் மகளுக்கு/பேத்திக்குத் திருமணம் செய்ய நாள் குறித்து நோட்டில் எழுதிக் கொள்ளுதல்.பெரும்பாலும் பெண் மற்றும் மாப்பிள்ளையின் வீட்டார் கூடி இருக்க, இருவரின் அப்பத்தா வீட்டு ஐயாக்கள் எழுதிக் கொள்வார்கள்.

 282. பேசி முடித்துக் கொள்ளுதல் - பெண் பார்த்தபின் இரு வீட்டாரும் கூடிப் பேசி நிச்சயம் செய்து கொள்வது.

283.  முறைச்சிட்டை எழுதுதல் - திருமண  முறைகளை நோட்டுகளில் எழுதிக் கொள்ளுதல்.

 284 . கல்யாணம் சொல்லுதல் - திருமணத்துக்கு  முதலில் அப்பா அம்மா சகோதர சகோதரி எல்லாரையும் வேவுக்கடகத்தில் தேங்காய் பழம் வைத்து அழைத்து பின் அனைவரையும் அழைத்தல் .இதற்கு அவரவர் பெரிய வீட்டில் சாமி அறையில் நடுவீட்டுக் கோலம் போட்டு வைத்திருப்பார்கள். வருபவர்கள் தடுக்கில் அமர்ந்து தலைப்பா கட்டி திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பார்கள். 


285. முகூர்த்தக் கால் ஊன்றுதல் - திருமணத்துக்கு  ஒரு வாரம் அல்லது 4 நாள்/ 3 நாள் முன்பு முகூர்த்தக் கால் ஊன்றுவார்கள். அதன்பின் திருமணம் முடியும்வரை நல்லது கெட்டதுக்கு விசாரிக்கப் போகமாட்டார்கள்.

286. நடுவீட்டுக் கோலமிடுதல்  - நடுவீட்டிலும் நடையிலும் நடுவீட்டுக் கோலம் இடுவார்கள். பெரும்பாலும் பங்காளி வீட்டுப் பெண்கள் வந்து சட்டம் வைத்துக் கட்டம் போட்டு கோலக்கூட்டைக் கரைத்துத் துணி கொண்டு  கோலமிடுவார்கள்.


287. தும்பு பிடித்தல். - மங்கல நிகழ்வை ஆரம்பிக்க கோலமாவைக் கொண்டு வீட்டில் உள்ள பாரம்பரியமான ஏடு எழுத்தாணியைச் சுற்றி இருக்கும் தடிமனான நூல்கயிறால் நனைத்துக் கோபுரம் போலத் தும்பு பிடிப்பார்கள். பங்காளி வீட்டுப் பெண்டிர் இதில் முக்கியத்துவம் வகிப்பார்கள். ஒருவர் கயிறை இரு பக்கமும் வைத்துப் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ட்வைன் நூலைப்போல இழுப்பார்கள். சாமி வீட்டின் சுவற்றில் இது வரையப்படும். ஒரு சதுரமும் அதனுள் ஒரு இண்டூ போன்ற க்ராஸ் கோடுகளும் மேலே கோபுரம் போன்ற வடிவமைப்பும் வரையப்படும்.அந்தச் சாமி வீட்டில் இறைவனை எழுந்தருளச் செய்யும் முயற்சியாக வரையப்படுவது இது.

288. மணை போடுதல். - வீட்டில் இருக்கும் மகளிர் அனைவருமே சாமிவீட்டின் முன்பு கோலம் இட்டு அதன் மேல் செங்கல் வைத்து ஊருணியில் இருந்து எடுத்து வந்த செம்மண் வைத்து  சந்தனம் குங்குமம் பூவும் வைத்து சங்கு ஊதி கோலமிட்ட மனையைக் கொண்டு  ( குட்டையான உயரம் உள்ள இருவர் அமரக் கூடிய நீளமான  பெஞ்ச் அல்லது அலங்காரப் பலகை )  வந்து வைத்து மணவறையை அலங்கரிப்பார்கள். பெண் வீட்டில் இரட்டை மணையும் மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மணையும் போடுவார்கள்.

289. அரசாணிக்கால் ஊன்றுதல். - அரசன் ஆணையின்படி திருமணம் செய்வதாக அரசாணிக்காலை ஊன்றுவார்கள்.அரசன் +ஆணை + கால்.இதைப் பங்காளி வீட்டு ஆண்கள் கட்டுவார்கள்.

290. கிலுவைக் கம்பு பாலைமரம் கட்டுதல்- அரசாணிக்காலில் கிலுவைக்கம்பும் பாலைக்கம்பையும் கட்டுவார்கள். ( பால் உள்ள மரம் வம்ச விருத்திக்காகக் கட்டுவது ) எந்தச் சூழ்நிலையிலும் தழைக்கும் கிலுவைக் கம்பும் பாலை மரமும் போல மணமக்கள் செழித்தோங்கி வாழ வேண்டும் என்று கட்டுவது.இதுவும் பங்காளி வீட்டு ஆண்கள் கட்டுவது.

291. சாமான் பரப்புதல்.- மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் பெண்வீட்டார் சாமான் பரப்புவார்கள். தங்கள் பெண்ணுக்குச் சீர்வரிசையாகவும் மேலும் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் வைப்பது போலும் சில பெண் வீட்டார் சாமான் பரப்புவது உண்டு. பெண்ணுக்கு மாமியார் வீட்டில் இருந்து சாமான் பரப்புவார்கள்.

292.  மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்கள் - மாப்பிள்ளைக்கு உடைகள், டேப்ரெக்கார்டர், ஃபான் மற்றும் காஸ்மெட்டிக்ஸ், டிவி, கோட் சூட், அலங்காரப் பொருட்கள், டேபிள் சேர், சூட்கேஸ், செருப்பு, போன்ற பொருட்கள் வைக்கப்படும்.

293. பெண்ணுக்கு ( மாப்பிள்ளை வீட்டில் ) வைக்கும் சாமான்கள் - பெண்ணுக்கு பட்டுப்புடவைகள், சிந்தடிக் காட்டன் புடவைகள், சுடிதார்கள், நைட்டிகள், உள்ளாடைகள் காஸ்மெட்டிக்ஸ், செருப்பு, சூட்கேஸ், குளிக்கும் சில்வர் அண்டா எல்லாம் வைக்கப்படும்.இதில் தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளிப்பாத்திரங்களும் வைப்பதுண்டு.

294. மாமியாருக்கு வைக்கும் சாமான்கள். - இதற்கு சிலர் பணமாகக்கூட வாங்கிக் கொள்கிறார்கள். இதில் முன்பு கோலம் போட்ட அடுப்பு பானை., கோலக்கூட்டு, அலுமினியம் பேசின் சம்படங்கள் போனவை வழங்கப்பட்டன. இப்போது காஸ் அடுப்பாக வாங்கிக் கொள்கிறார்கள்.

295. பெண்ணுக்குத் தாய் வீட்டில் கொடுக்கும் சீர்வரிசை சாமான்கள் :-/ பெண்ணுக்குப் பரப்பும் சாமான்கள். :-  ஊசி முதல் கப்பல் வரை வசதிக்குத் தகுந்தபடி கொடுப்பதுண்டு. இப்போது இதெல்லாம் குறைந்து விட்டது . இருவருமே உத்யோகத்தில் இருப்பதாலும் , மேலும் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதாலும் , திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு வாடகை சாமான்களே எடுத்துக் கொள்வதாலும் பெரும்பகுதியான சாமான் பரப்புதல் குறைந்துவிட்டது. வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டும் கொடுக்கின்றார்கள்.

296. கொழு மேளம்/ கொழுமி மேளம் வாசித்தல் :- திருமணத்துக்கு முதல் நாள் மேள வாத்தியக்காரர்கள் வந்திருந்து சிறிது நேரம் கொழுமி மேளம் வாசிப்பார்கள். மங்கல இசை.

297. வீட்டுப் படைப்பு - முன்னோர்கள் , சாமிவீட்டுச் சாமிகளை வணங்குதல். அடைக்கியாத்தா, மெய்யாத்தா, அக்கினியாத்தா போன்ற தெய்வங்களை வணங்குதல். போழையில் இருக்கும் துணிகளையும் புதுத்துணிகள் வாங்கியும் துவைத்துக் காயவைத்து நகைகள் பூக்கள் மாலைகள் வைத்து அலங்கரித்துப் படையல் போடுதல். முன்னோர் தெய்வங்களைத் துணைக்கழைத்து ஆசி வழங்குமாறு வேண்டுதல்.

298. கால் மோதிரம் அணிவித்தல்  ( கா மோதிரம் ) -  மாப்பிள்ளையின் தாய் மாமா திருமணத்துக்கு முதல் நாள் மாலை மாப்பிள்ளைக்குக் கால் மோதிரம் அணிவிப்பார்கள். இது ஒரு ஒற்றை மிஞ்சி . தடிமனாகக் கடினமாக இருக்கும். திருமணம் முடியும் வரை கால் மோதிரம் போட்ட  மாப்பிள்ளை வெளியில் செல்லக் கூடாது. இரண்டாவது விரலில் அணிவிப்பார்கள்.

299. கழுத்துரு வாங்கப் போதல் - பெண்வீட்டில் கழுத்துரு உருப்படிகளை வாங்கப் போவது. தாலிக்கான உருப்படிகள். இது 32 இருக்கும். இதில் குச்சி, தும்பு, துவாலை, பிள்ளைத்தாலி என்பனவும் இருக்கும். எட்டாம் நம்பர் நூல் வாங்கி ஊறவைத்த விரளி/கஸ்தூரி மஞ்சளில் உரசிக் கோர்த்து  முறுக்கி அதில் இரு வரிசைகளாகக் கோர்ப்பார்கள்.

300 . கழுத்துருவுக்கு பொன் தட்டுதல் - திருமணத்துக்கு முதல் நாள் அல்லது திருமணத்தன்று காலை கழுத்துருவுக்குப் பொன் தட்டுவார்கள். ( பொற்கொல்லர் பொன் தட்டுவார் - சாஸ்திரத்துக்காக ) கழுத்தீர் முன்பே/ முதல் நாளே. கோர்க்கப்பட்டிருக்கும். 



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

7 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தகவல்கள். சில பெயர்கள் வேடிக்கையாகவும், சிரிப்பூட்டுவதாகவும் உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. அடேயப்பா எத்தனை சடங்குகள் மலைக்க வைக்கின்றன.தகவல்கள் அருமை சீர் வரிசை பற்றி கேள்விபட்டிருக்கிறேன் .சடங்குகைப்பொழுது தெரிந்து கொண்டேன்-சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்

    நன்றி சரஸ் மேம்

    நன்றி பாஸ்கர்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...