எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூலை, 2015

செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும்.

97.அரிசி அளக்கும் படிதான் இது. இதில் க்ரோஷா நூலைக் கொண்டு பின்னல் வேலைப்பாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் விளிம்பிலும் கீழேயும் கலர் தகடுகளால் பட்டி அடித்திருக்கிறார்கள். திருமணச் சீரில் வைப்பதற்காக இந்த அலங்காரம். :)
98. இது ஒரு சின்ன பாட்டில். இதில் பாசி வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.அதுக்குள்ளே வேறு கலர் பாசிகளையும் கோர்த்து டிசைன் செய்திருக்கிறார்கள். !

99. இதுவும் பாசியால் பின்னப்பட்ட ஒரு நாய்க்குட்டி.அல்லது ஆட்டுக்குட்டியா :)  ( நரம்பில் பாசி கோர்த்துச் செய்யப்படுவது ). கால் வால்  கழுத்து போன்றவற்றில் ப்ளூ கலர் பாசி கொண்டு பார்டர் அமைத்திருக்கிறார்கள். :)

100. நாங்கள் விளையாடிய ஊஞ்சல். இது பாட்டி வீட்டில் இன்னும் இருக்கிறது. :) இதைப் போல் எங்கள் ஆயாவீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடித்தான் உத்தர வளையத்தைத் தொடுவோம். :) தொட்டில் போன்ற ஷேப்பில் இருக்கும் :)
101. ஓலையில் பின்னப்பட்ட வண்ண மணிபர்சுகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கும் வண்ணம் செய்யப்பட்டுள்ளன. நான்கு பர்சுகளும் அதன் டிசைன் , பட்டி, பார்டர் போன்றவை அழகு. :)
102. இதை மரவை என்று சொல்வோம். விருந்தினர் வந்தால் தின்பண்டங்கள்.குளிர்பானங்கள் கொடுக்கப் பயன்படுத்துவோம். இதன் ஓரத்தில் கைப்பிடி இருக்கும் இடத்தில் ஒயரால் பின்னப்பட்டுள்ளது. பெரும்பாலான மரவைகள் செய்கோன்/ரெங்கோனில் இருந்து கொண்டு வந்தவையாக இருக்கும்.

103. தேக்கு நாற்காலிகள். இன்றைக்கு இந்த நாற்காலிகள் எல்லாம் ஆர்டர் கொடுத்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். சாதாரண மர ஃபர்னிச்சர் கடைகளில் இம்மாதிரி சேர்கள் எல்லாம் இல்லவே இல்லை. அப்போது இருந்த தச்சர்களின் வேலைப்பாட்டில் இன்றும் கம்பீரமாகத் திகழ்கிறது இந்த நாற்காலி. கை வைத்துக் கொள்ளப் பிடிப்பும் பின்புறம் தலைசாய்ந்து கொள்ள இருக்கும் செதுக்கலும் அழகு மட்டுமல்ல வசதியும் கூட.
104. பனையோலை விசிறி. வெய்யிலுக்கு உகந்த நண்பன். கரண்ட் இல்லாத போது இதில் விசிறினால் ஆசுவாசம் :) ஓரம் எல்லாம் அழகாக நறுக்கப்பட்டு அங்கங்கே நூலால் அழகுற இணைக்கப்பட்டிருக்கிறது.
மரவைகளில் விளக்கு, பிள்ளையார்,  சத்தகம். குட்டி பித்தளை விளையாட்டுச்  சாமான்கள், ( குடம், காரியர், டம்ளர், செம்பு, தூக்கு, சம்படம், ஸ்பூன், கரண்டி, இருப்புச் சட்டி, விளக்கு முள்ளுவாங்கி ) & பித்தளைப் பெட்டி.

இதில் ஒன்று ஓவியம் தீட்டப்பட்ட மரவை. ( மரவை  - மரத்தில் செய்யப்படுவது. சிலது ப்ளாஸ்டிக்கிலும் விக்குது  இப்போது )
105. பாய்ச்சுருட்டு :- மர ஸ்டாண்ட்

இதில் மெத்தைகள், தலையணைகள், பாய்கள் ஆகியவற்றை அடுக்கி வைப்பார்கள். திருமணச் சீராக வரும் மெத்தைகள் ( 5), தலையணைகள் (21). பர்மாப் பாய்கள்/ மெத்தைப் பாய்கள் ( இரட்டைப் பாய்கள் ) ( 5 ) கோரம் பாய்கள் ( 11 ) ஆகியவற்றை இதில் அடுக்கி வைப்பார்கள்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
 
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்




4 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது சகோதரி....ஊஞ்சல்,இருந்தது -துளசி

    கீதா: எங்கள் வீட்டில் அந்தத் தொட்டில், காரைக்குடி மரக்கால், அப்புறம் அந்த மணிப்பெர்ஸ், பாசியில் செய்யப்படும் நாய்குட்டி (எங்க வீட்டுல நாய்குட்டிதான் !!) இருந்தது....பழைய நினைவுகளை மீட்டன.

    பொருட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன இல்லையா...ஓல்ட் இஸ் கோல்ட்...

    சகோதரி இன்றைய எங்கள் இடுகை நண்பர் ஸ்ரீராமின் தந்தையின் புத்தகமான தூறல்கள் பற்றி எழுதிய இடுகைக்கு உங்கள் கவிதை - நீரின் பயணம் - வாழ்க்கைப் பயணம் போல் பொருந்தி வந்தது போல் தோன்றியதால் அதை மேற்கோள் காட்டியுள்ளோம்....உங்களையும் சொல்லி, உங்களிடம் கேட்காமலேயே அஹஹ் மிக்க நன்றி...இனி முன்னதாக உங்களிடம் சொல்லி உங்கள் அனுமதி கேட்டு விடுகின்றோம்....தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...அந்தக் கவிதை மிகவும் பல அர்த்தங்களைச் சொல்லி அருமையாக இருந்ததால்....

    பதிலளிநீக்கு
  2. ஆம் டிடி சகோ

    நன்றி துளசி & கீத்ஸ். ஆம் ஓல்ட் இஸ் கோல்ட். :)

    உங்களுக்கு எல்லா ரைட்ஸும் உண்டு கீத்ஸ் & துள்சி. கேரி ஆன் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...